Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்கு பதினாறு.., எனக்கு இருபத்தியிரண்டு...!

Featured Replies

அடியே,

உன்னத்தானடி

ஒருக்கா பாரடி

ஒரு பதிலாச்சும் சொல்லடி

ஒன்பது மாசமா துரத்திரனடி

உன் தோழியவாச்சும் கண்ணுல காட்டேன்டி

வயசு போன வாலிப பசங்களோட சேர்ந்து குறும்பு காட்டி உசுப்பேத்துறேயடி

பேசாப் பொருள பேசி வெக்கப்பட வைக்கிறயடி

வெள்ளிக் கிழமை விரதத்தை முடிச்சு வைக்காதேயடி

ஊருக்கு முன்னே ஊர் கதை சொல்லி வரும் கிழவியடி நீ

வெட்டுற எடத்துல வெட்டி, குட்டுற எடத்துல குட்டி, தட்டுற எடத்துல தட்டிக் கொடுக்குற தங்கமே

இணையக் கடலில மூழ்கவிடாம நல்ல கரை சேர்க்க வந்த நாவாய் பெண்ணே

பல்பொடி தேடும் முன்னே பாய்ந்து வருவேன் உனை பார்த்து சிரிக்கத்தானே

நாடு கடந்தவரை நாட்டிலினைக்கும் நறுமுகை நீயே

காலத்தின் கருவூலம் கட்டாயம் விதைக்க வேண்டும் வரலாறு, பாதுகாத்து பறைசாற்றி சொல்லிவிடடி

பதினாறில் பருவமெய்திய பருவமங்கையவள் யாழ் நரம்புகளில் எங்கள் வாழ்நரம்புகள் பொருந்தியுள்ளது.

உன்னில் அம்புவிட்டு பார்க்கதான் அத்துனை ஆசை பிறர்க்கு, இருந்துவிட்டு போகட்டுமென தடை விலக்கி கொள்வாயா?

ஏற்கனவே ஈரய்ந்து மாதம் தாமதம்,இல்லையெனில்

குவக்குவா குவக்குவா சொல்ல ஆள் இருந்திருக்கும் இந்நேரம்...!

வீணை பெண்ணை பெண் கேட்க யாரிடம் கேட்க வேண்டும்?

உன்னிடமே கேட்கிறேன்

உனக்கு பதினாறு

எனக்கு இருபத்தியிரண்டு

ஆஹா ஒஹோ சொல்லுமளவு சோடி பொருத்தம்

மாநாய்க்கன் மகளே! மணக்க சம்மதமா?

கைக்கிளை பாட விடாமல் கடிதம் கிடைத்ததும் பதில் சொல்லடி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்புடன்

ராஜன் விஷ்வா..!

  • தொடங்கியவர்

மாடு காசாப்பு கடைக்கு போய் எட்டி எட்டி பாக்குது... :( நடக்கட்டும் :D

(தம்பீ பாவம் அண்ி, அக்காஸ்)

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

வீணை பெண்ணை பெண் கேட்க யாரிடம் கேட்க வேண்டும்?...

 

வீணைப்  பெண்  மறுவீடு செல்ல அல்ல

கட்டிக் காத்து நிற்கும்  பூமித்தாய்.

 

 

புனை கவிதைக்கு நன்றி ...

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ்களத்துக்கான 16 ஆவது பிறந்ததின பாடலா? மைனர் பெண்ணை டாவடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது..  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணை பெண்ணை பெண் கேட்க யாரிடம் கேட்க வேண்டும்?

உன்னிடமே கேட்கிறேன்

உனக்கு பதினாறு

எனக்கு இருபத்தியிரண்டு

ஆஹா ஒஹோ சொல்லுமளவு சோடி பொருத்தம்

மாநாய்க்கன் மகளே! மணக்க சம்மதமா?

கைக்கிளை பாட விடாமல் கடிதம் கிடைத்ததும் பதில் சொல்லடி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்புடன்

ராஜன் விஷ்வா..!

இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காது

யாழைக் கட்டுறதுக்கு இன்னும் ஒருத்தரும் பிறக்கேல்லை

 

அவள்  எங்கள் செல்லக் குழந்தை

மோகன் அண்ணாவின் தங்கப்பதுமை

அவளின் அழகுக்கு ஆயிரம் பேர் வருவார்கள்

ஆனாலும் நாங்கள் அண்ணன் தம்பிகள் மாமன் மச்சான்கள்

சித்தப்பன் பெரியப்பான்மார் எல்லாரும்

கோடிப் பேரை விசாரித்துத் தான் பெண்ணைக் கொடுப்பம்

சட்டுப்புட்டென்டு இப்படியெல்லாம் கேட்கக்கூடாது  விஸ்வா :D

 

 

இப்படிக் கேட்கவும் ஒரு தில் இருக்கோணும் தான்

வாழ்த்துக்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அடியே யாழு  எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் திரியிறாங்கள்.... :lol:

 

ராஜன் விஷ்வா கற்பனையில் இங்குள்ளவர்களைத் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டீர்கள்...கற்பனைதான் கவிஞனின் பேராயுதம்.... இந்தக்கவிதைவரிகளை அடுத்த வருடம் நீங்கள் வாசிக்கும்போது ஆகா இதன் மொழிநடையை இப்படியும் செம்மைப்படுத்தலாமே என்று உங்களுக்குள் இருக்கும் கவிஞன் நிச்சயம் சண்டை பிடிப்பான். ஏனெனில் உங்கள் கற்பனையின் வேகத்திற்கு மொழிநடையும் உடன் வரும்போது மிகப்பிரபலமான கவிஞராக இனம் காணப்படுவீர்கள். இப்போதே எதிர்காலத்தில் பேசப்படப்போகும் கவிஞனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :rolleyes:

  • தொடங்கியவர்

வீணை பெண்ணை பெண் கேட்க யாரிடம் கேட்க வேண்டும்?...

வீணைப் பெண் மறுவீடு செல்ல அல்ல

கட்டிக் காத்து நிற்கும் பூமித்தாய்.

புனை கவிதைக்கு நன்றி ...

கருத்திற்கு நன்றிகள்
  • தொடங்கியவர்

இது யாழ்களத்துக்கான 16 ஆவது பிறந்ததின பாடலா? மைனர் பெண்ணை டாவடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.. :icon_idea:

மணமான பெண்கள், மகள் வயது பெண்கள், மாற்றான் வீட்டு பெண்கள், வயது போன பெண்கள் யாரையும் டாவடிக்க மாட்டேன் என்ற ஒப்பந்தத்திற்கு வர தயாரா அண்ணே :icon_idea:
  • தொடங்கியவர்

இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காது

யாழைக் கட்டுறதுக்கு இன்னும் ஒருத்தரும் பிறக்கேல்லை

அவள் எங்கள் செல்லக் குழந்தை

மோகன் அண்ணாவின் தங்கப்பதுமை

அவளின் அழகுக்கு ஆயிரம் பேர் வருவார்கள்

ஆனாலும் நாங்கள் அண்ணன் தம்பிகள் மாமன் மச்சான்கள்

சித்தப்பன் பெரியப்பான்மார் எல்லாரும்

கோடிப் பேரை விசாரித்துத் தான் பெண்ணைக் கொடுப்பம்

சட்டுப்புட்டென்டு இப்படியெல்லாம் கேட்கக்கூடாது விஸ்வா :D

இப்படிக் கேட்கவும் ஒரு தில் இருக்கோணும் தான்

வாழ்த்துக்கள்

இத்தனை பேர் சம்மதம் வாங்கி வரக்கே அறுபதாம் கல்யாணமில்ல பண்ணனும் :D வாழ்த்திற்க்கு நன்றிகள்.
  • தொடங்கியவர்

அடியே யாழு எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் திரியிறாங்கள்.... :lol:

ராஜன் விஷ்வா கற்பனையில் இங்குள்ளவர்களைத் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டீர்கள்...கற்பனைதான் கவிஞனின் பேராயுதம்.... இந்தக்கவிதைவரிகளை அடுத்த வருடம் நீங்கள் வாசிக்கும்போது ஆகா இதன் மொழிநடையை இப்படியும் செம்மைப்படுத்தலாமே என்று உங்களுக்குள் இருக்கும் கவிஞன் நிச்சயம் சண்டை பிடிப்பான். ஏனெனில் உங்கள் கற்பனையின் வேகத்திற்கு மொழிநடையும் உடன் வரும்போது மிகப்பிரபலமான கவிஞராக இனம் காணப்படுவீர்கள். இப்போதே எதிர்காலத்தில் பேசப்படப்போகும் கவிஞனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :rolleyes:

அடியே யாழு... உன் சின்னம்மா வந்திருக்கா நீ செத்தேடி...

என்னபத்தி கேட்டா எதும் சொல்லிடாதே...

அடிச்சுகூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதே...

கவிஞர்கள் சண்டைக்கு வரப் போகிறாங்கள் இந்த பெடியனை கவிஞன் என்டு சொன்னதுக்கு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 அவள் உங்களுக்கு  கடிதம் தாற அளவுக்கு வந்திட்டுதோ? இரவுபகலாய் இவளுக்கு பின்னாலை நாயாய் பேயாய் திரியிற நாங்கள் என்ன இளிச்சவாயளே? விடமாட்டம் lol2.gif
 
ராஜன் விஷ்வா கவிதை அந்தமாதிரி.....வாழ்த்துக்கள்.thumbup1_zps850b96f6.gif
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.... அந்த வயது அப்படித்தான் இருக்கும்!  :D

 

கவிதை, எங்களையும் அந்த வயசுக்குத் தூக்கிக்கொண்டு போகுது! :o

 

வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அவளை விட்டு இவருக்கு ரக்‌ஷாபந்தன் கட்டினாத்தான் அடங்குவார்...! :lol::)

  • தொடங்கியவர்

அவள் உங்களுக்கு கடிதம் தாற அளவுக்கு வந்திட்டுதோ? இரவுபகலாய் இவளுக்கு பின்னாலை நாயாய் பேயாய் திரியிற நாங்கள் என்ன இளிச்சவாயளே? விடமாட்டம் lol2.gif

ராஜன் விஷ்வா கவிதை அந்தமாதிரி.....வாழ்த்துக்கள்.thumbup1_zps850b96f6.gif

உங்கள யாரு கடிதம் கொடுக்க வேண்டாம் என்டு சொன்னா? கடிதம் கொடுக்கப்போயி அங்காள அகப்பை காம்பிலே அடி வாங்க ஏலாது அமைதியாய் இருக்கையுங்கோ என்டு தெரியாது நினைச்சையுங்களோ... :D

வாழ்த்திற்க்கு நன்றிகள் கு.சா அண்ணை.!

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன  எழுத என்று வந்தேன்......

 

 

அடியே யாழு  எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் திரியிறாங்கள்.... :lol:

 

ராஜன் விஷ்வா கற்பனையில் இங்குள்ளவர்களைத் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டீர்கள்...கற்பனைதான் கவிஞனின் பேராயுதம்.... இந்தக்கவிதைவரிகளை அடுத்த வருடம் நீங்கள் வாசிக்கும்போது ஆகா இதன் மொழிநடையை இப்படியும் செம்மைப்படுத்தலாமே என்று உங்களுக்குள் இருக்கும் கவிஞன் நிச்சயம் சண்டை பிடிப்பான். ஏனெனில் உங்கள் கற்பனையின் வேகத்திற்கு மொழிநடையும் உடன் வரும்போது மிகப்பிரபலமான கவிஞராக இனம் காணப்படுவீர்கள். இப்போதே எதிர்காலத்தில் பேசப்படப்போகும் கவிஞனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :rolleyes:

 

 

இதோ

கவிதாயினியால் வாழ்த்து

இதற்கு மேல்........

 

வாழ்க  வளமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: முடியல! எதிலயும் காதல் காமம் எண்டு பலான விஷயங்களைப் புகுத்தி விடுறாங்கள்! (ஏனெண்டா அப்படி எழுதினாத் தான் எட்டிப் பார்க்க ஒரு நாற்பது கடந்த வாசகர் கூட்டமொண்டு குழு மாடுகள் மாதிரி உலவுதுகள்! :icon_mrgreen: ). ஏன் யாழ் அன்னையே, யாழ் தங்கையே , யாழ் அக்கையே எண்டு எழுதக் கூடாது? (ஒரு மாற்றுக் கருத்துத் தான்! மற்ற படி கவிதை நல்லம்!)

  • தொடங்கியவர்

நான் என்ன எழுத என்று வந்தேன்......

இதோ

கவிதாயினியால் வாழ்த்து

இதற்கு மேல்........

வாழ்க வளமுடன்.

நன்றிகள் அண்ணா வாழ்த்திற்கு :)
  • தொடங்கியவர்

ம்ம்ம்.... அந்த வயது அப்படித்தான் இருக்கும்! :D

கவிதை, எங்களையும் அந்த வயசுக்குத் தூக்கிக்கொண்டு போகுது! :o

வாழ்த்துக்கள்!

எங்களுக்கும் காலம் வரும், அப்ப சொல்லுவம் வயசு போயிட்டு அந்த நினைப்பெல்லாம் தேவையா என்டு :D

நன்றிகள் வரவிற்க்கு :)

அவளை விட்டு இவருக்கு ரக்‌ஷாபந்தன் கட்டினாத்தான் அடங்குவார்...! :lol::)

ஹிஹி... ஆசையில் மண் அள்ளி போட்டுவிடாதிங்கோ சுவியண்ணை :)

நான் என்ன எழுத என்று வந்தேன்......

இதோ

கவிதாயினியால் வாழ்த்து

இதற்கு மேல்........

வாழ்க வளமுடன்.

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் :)
  • தொடங்கியவர்

:lol: முடியல! எதிலயும் காதல் காமம் எண்டு பலான விஷயங்களைப் புகுத்தி விடுறாங்கள்! (ஏனெண்டா அப்படி எழுதினாத் தான் எட்டிப் பார்க்க ஒரு நாற்பது கடந்த வாசகர் கூட்டமொண்டு குழு மாடுகள் மாதிரி உலவுதுகள்! :icon_mrgreen: ). ஏன் யாழ் அன்னையே, யாழ் தங்கையே , யாழ் அக்கையே எண்டு எழுதக் கூடாது? (ஒரு மாற்றுக் கருத்துத் தான்! மற்ற படி கவிதை நல்லம்!)

அனுஷ்கா தொப்புள் அழகா, தமன்னா தொப்புள் அழகா என்டு பட்டிமன்றம் நடாத்திவிட்டு அறியா சிறுவனின் கிறுக்கலில் பொருள் குற்றம் கண்டுபிடித்தல் சரியா அண்ணே ??? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.