Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
• “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா?
 
"கசப்பான உண்மைகளையும் மறைக்காமல் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியை பெற்று தருவார்கள்"- வியட்நாம் தந்தை கோசிமின்
 
26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசி மின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார்.
 
ஆனால் இன்று மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூறிவருகிறார்கள்.
 
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது
 
(1) தமிழ் மக்களை பிரபாகரன் வருகைக்காக காத்து இருக்க வைக்கின்றது.
 
(2) தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தலைமை உருவாவதைத் தடுக்கிறது.
 
(3) தமிழ் மக்கள் இன்னொரு போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தடுக்கிறது.
 
(4) கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுகிறது.
 
(5) மகிந்த ராஜபக்ச இதனைக் காட்டி தேர்தலில் தொடர்ந்து வெல்ல வழி செய்கிறது.
 
(6) ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த இடம் அளிக்கிறது.
 
(7) தமிழ் மக்கள் பல்லாயிரம் பேரைக் கொல்ல கொடுத்துவிட்டு தான் மட்டும் தப்பி சென்றுவிட்டார் என பிரபாகரன் மீது சிலர் விமர்சனம் செய்ய இடம் கொடுக்கிறது.
 
(8) தனது மகன், மகள், மனைவி எல்லாரும் இறந்துவிட தான் மட்டும் தப்பிச் செல்லும் அளவிற்கு பிரபாகரன் சுயநலமானவரா? என சிலர் கேட்டு கொச்சைப்படுத்த வைக்கின்றது.
 
(9) பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது இலங்கை இந்திய அரசின் நோக்கங்களுக்கே அதிகம் துணை செய்கிது.
 
(10) மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. நட்டமே அதிகம்.
 
பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு உதவவில்லை. மாறாக அது எதிரிக்கே அதிகம் துணை செய்கிறது.
 
மக்களை நம்புவோம்.
மக்களுக்கு உண்மைகளை கூறுவோம். 
மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் ..
 
FB

 

 

அதே நேரம்....
 
இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் ஏற்படாமல் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை வழங்குங்கள் என்று "வல்லரசுகள்" இலங்கையை அழுத்தம் கொடுக்கவும் பிரபாகரன் உயிரோடிருத்தல் தேவைப்படுகிறது.
 
இலங்கை அரசோ மஹிந்தவோ கொத்தபாயவோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்லவில்லை. இலங்கை இந்திய அரசுகள் தமிழ் மக்களின் பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ என்ற தகவலில் தங்கி இருக்கவில்லை. அவர்களுக்கு உண்மை தெரியும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

அதே நேரம்....
 
இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் ஏற்படாமல் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை வழங்குங்கள் என்று "வல்லரசுகள்" இலங்கையை அழுத்தம் கொடுக்கவும் பிரபாகரன் உயிரோடிருத்தல் தேவைப்படுகிறது.
 
இலங்கை அரசோ மஹிந்தவோ கொத்தபாயவோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்லவில்லை. இலங்கை இந்திய அரசுகள் தமிழ் மக்களின் பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ என்ற தகவலில் தங்கி இருக்கவில்லை. அவர்களுக்கு உண்மை தெரியும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அதே நேரம்....
 
இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் ஏற்படாமல் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை வழங்குங்கள் என்று "வல்லரசுகள்" இலங்கையை அழுத்தம் கொடுக்கவும் பிரபாகரன் உயிரோடிருத்தல் தேவைப்படுகிறது.
 
இலங்கை அரசோ மஹிந்தவோ கொத்தபாயவோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்லவில்லை. இலங்கை இந்திய அரசுகள் தமிழ் மக்களின் பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ என்ற தகவலில் தங்கி இருக்கவில்லை. அவர்களுக்கு உண்மை தெரியும்.

 

 

அவசரப்படாமல் , பதட்டப்படாமல் , ஆறுதலாக நான்குவரியில் நறுக்கென சொல்லியிருக்கின்றீர்கள்.
 
இதுதான் அத்திவாரத்தின் பலம்.
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  அண்ணா

 

மிகவும் அவதானமாக

ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய  விடயம்...

கொஞ்சம் எழுதணும்

 

ஆனால் கவனமாக எழுதணும்

எழுதுவேன்

அமைதியான சூழல்  வேண்டும்

எம் தலைவனைப்பற்றி  பேச...................

உயர்ந்த தாயகப்பற்று  வேண்டும்

அவரது இருப்பு பற்றி  அலச...........

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடக்கும்போது புலிகள் இல்லாவிட்டால் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றது இந்தியா.. இன்று இந்தியா எந்த மூலையில் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

 

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என அமெரிக்காவும் அதன் கைப்பாவை ஐநாவும் இப்போது வரிசையில் முன்னுக்கு வந்துள்ளன. இவற்றால் என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம்.

 

 

மக்களை நம்புவோம்.

மக்களுக்கு உண்மைகளை கூறுவோம். 

மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள்.

 

மக்கள் அங்கு 1948 இல் இருந்து வாழ்ந்துகொண்டுதான் வருகிறார்கள். இனிமேல் என்ன சிறப்பான வெற்றியை ஈட்டித் தரப்போகிறார்கள்?

போர் நடக்கும்போது புலிகள் இல்லாவிட்டால் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றது இந்தியா.. இன்று இந்தியா எந்த மூலையில் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

 

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என அமெரிக்காவும் அதன் கைப்பாவை ஐநாவும் இப்போது வரிசையில் முன்னுக்கு வந்துள்ளன. இவற்றால் என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம்.

 

 

 

மக்கள் அங்கு 1948 இல் இருந்து வாழ்ந்துகொண்டுதான் வருகிறார்கள். இனிமேல் என்ன சிறப்பான வெற்றியை ஈட்டித் தரப்போகிறார்கள்?

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என அமெரிக்காவும் அதன் கைப்பாவை ஐநாவும் இப்போது வரிசையில் முன்னுக்கு வந்துள்ளன. இவற்றால் என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம்.

 

மஹிந்தவுக்கும் இந்தியாவுக்கும் இப்போது மீண்டும் புலிகள் தேவைப்படுவது போல அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கும் புலிகள் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அப்போது தலைவர் மீண்டும் வருவார். தமிழீழம் மலரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்குள்... "ஒட்டுக்குழு உறுப்பினர்கள்" வந்து, வாந்தி எடுக்காதது... ஆச்சரியமாக உள்ளது.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனது இருப்பு இப்போது தேவைப்படுவது, ஒட்டுக்குழு, ஒட்டுண்ணிகுழு, புலிக்காய்சல் வாந்தியெடுப்பவர்கள், கொத்தபாயா, மகிந்து, டக்ளஸ், கருணா, தவிர யாழ் களத்திலும் சிலருக்குத் தேவைப்படுகிறது. மற்றப்படி தமிழீழ விடுதலைக்காக யார் ஒரு துரும்பைத்தன்னும் கிள்ளிப்போடுகிறார்களோ, அவர்களும் பிரபாகரன்கள்தான்.

 

மாறாக,வசைபாடுபவர்கள் அனைவரும் தொழுதுண்டுவாழும் ஒட்டுக்குழுக்களே.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராய்ச்சி என்றுதான் முடிந்து அடுத்த கட்டத்திற்கு நகரப்போகிறீர்களோ?

 

ஸ்சப்பா...இந்த தமிழனத்தை எண்ணி கண்ணை சுற்றுதே! :unsure:

 

ஆறிய புண்ணை சொறிவதில் என்ன இன்பமோ? :o

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் இருக்கிறார் அல்லது இல்லை என்று சொல்லி மக்களை குழப்பி சூடு காய்பவர்கள் புலம்பெயர்ந்த புலிகளுக்காக வேலை செய்தவர்கள்.இதனை தமது அரசியலுக்கு பயன்படுத்தும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் உள்ளனர்.
 
எதிரியின் நடவடிக்கைகளை பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம்.
 
ஏன் பிரபாகரன் தான் மீண்டும் வந்து போராட வேண்டும்? ஏனைய தமிழருக்கு போராட அறிவு இல்லையா? கை கால்கள் தான் இல்லையா?
 
தலைவர் வருவார் போராடுவார்.நாங்கள் எங்களின் அலுவலை பார்ப்போம் என்றிருக்கும் வரை எமக்கு எப்போதும் விடிவு இல்லை.
 
முன்பு புலிகள் போராடி தமிழீழம் பெற்று தருவார்கள் என்று விட்டு தங்களின் கருமங்களை பார்த்தவர்கள் இன்று பிரபாகரனின் வரவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்களாம். இப்படி ஒரு மக்கள் கூட்டம் உலகில் எங்கும் இல்லை என்று மட்டும் அடித்து சொல்லுவேன்.

பிரபாகரன் இருக்கிறார் அல்லது இல்லை என்று சொல்லி மக்களை குழப்பி சூடு காய்பவர்கள் புலம்பெயர்ந்த புலிகளுக்காக வேலை செய்தவர்கள்.இதனை தமது அரசியலுக்கு பயன்படுத்தும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் உள்ளனர்.

 

எதிரியின் நடவடிக்கைகளை பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம்.

 

ஏன் பிரபாகரன் தான் மீண்டும் வந்து போராட வேண்டும்? ஏனைய தமிழருக்கு போராட அறிவு இல்லையா? கை கால்கள் தான் இல்லையா?

 

தலைவர் வருவார் போராடுவார்.நாங்கள் எங்களின் அலுவலை பார்ப்போம் என்றிருக்கும் வரை எமக்கு எப்போதும் விடிவு இல்லை.

 

முன்பு புலிகள் போராடி தமிழீழம் பெற்று தருவார்கள் என்று விட்டு தங்களின் கருமங்களை பார்த்தவர்கள் இன்று பிரபாகரனின் வரவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்களாம். இப்படி ஒரு மக்கள் கூட்டம் உலகில் எங்கும் இல்லை என்று மட்டும் அடித்து சொல்லுவேன்.

சபாஷ் நுனாவிலன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபாகரன் இருக்கிறார் அல்லது இல்லை என்று சொல்லி மக்களை குழப்பி சூடு காய்பவர்கள் புலம்பெயர்ந்த புலிகளுக்காக வேலை செய்தவர்கள்.இதனை தமது அரசியலுக்கு பயன்படுத்தும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் உள்ளனர்.
-----

 

தமிழ்நாட்டு அரசியல்வாதி.... என்றால்,

முதலில்... கறுப்புக் கண்ணாடி கருணாநிதி என் ஞாபகத்துக்கு, வருகின்றார்.

நான்... நினைப்பது, தப்பா? :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியல்வாதி.... என்றால்,

முதலில்... கறுப்புக் கண்ணாடி கருணாநிதி என் ஞாபகத்துக்கு, வருகின்றார்.

நான்... நினைப்பது, தப்பா? :rolleyes:

 

நீங்கள் தப்பு தப்பாக நினைக்கிறீர்கள். :)  :)

நுணா ,விடுமுறைக்கு போட்டுவந்து தெளிவாயிட்டார் .

  • கருத்துக்கள உறவுகள்

நுணா ,விடுமுறைக்கு போட்டுவந்து தெளிவாயிட்டார் .

 

நுணாவின் கருத்துக்கள்....

விடுமுறைக்கு முன்பும், பின்பும்... ஒரே மாதிரியானவை.

இதில்... சந்தேகம் வேண்டாம் அர்ச்சுன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.