Jump to content

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம் )


Recommended Posts

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம்)

 
10014925_840819795944674_2033617915_o.jp

நெற்கொழு தாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன் . என்னுடன் கூடப் பயணித்த கொழுவனை பற்றி மற்றையவர்கள் அக்குவேறு ஆணிவேறாக ஆக்கபூர்வமாக விமர்சித்த பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்றயவர்கள் நெற்கொழு தாசன் என்று அழைத்தாலும் நான் அவரை "கொழுவன்" என்றே அழைப்பது வழக்கம். அதற்கு காரணமும் இல்லாமலும் இல்லை. அவர் கவிதைகளுக்கான சொற்களை கொழுவுவதில் வல்லவர் .

நெற்கொழுதாசனின் கவிதை தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காத்திரமான கவிதைகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அனால் அவரின் பல கவிதைகள் " ஒப்பாரி கவிதைகள் " என்ற வகையிலேயே எனக்குத் தெரிகின்றது. சோகம் அல்லது பிரிவாற்றாமை என்பது வாசகர்களை கவரும் உத்திதான். ஆனால் ஒருவர் ஒப்பாரி வகையான கவிதைகளை தொடர்ந்தும் தந்து கொண்டிருப்பாரானால் அது வாசகர்களிடையே ஆரம்பத்தில் கவர்ந்தாலும், அது காலப்போக்கில் வாசகர்களிடையே ஒரு வித சலிப்பை ஏற்படுத்தி விடும் .உதாரணமாக

"இவர்களுக்கிடையில் நானும்.... "

"வன்மங்களையும், வக்கிரங்களையும் தோல்களாக்கி, 
அகதிப் போர்வைகளால் மூடிக்கொண்டவர்களின் ஊர்க் கதைகளாலும் 
ஏக்க விளிப்புக்களாலும் 
அரைகுறைத் தூக்கங்களாலும் 
நீண்ட தொடரூந்துகளும் 
நிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன.... 
என்னையும் சுமந்துகொண்டு... "


என்ற கவிதையில் ,புலம் பெயர் நாட்டில் உள்ள ஒருவனது இருப்பு பற்றிய ஆவேசம் வலிகளாக வெளிவருகின்றது . ஆனால் அந்த வலியை சொன்னால் மட்டும் போதுமா ?? அந்த வலியை வெற்றியாக்க வேண்டிய நம்பிக்கை தரும் கவி வரிகளை தவற விடுகின்றார் .

மேலும்

நாளை நானும்... ,  

"பரவுகின்ற வெறுமை 
தின்னத்தொடங்குகிறது 
ஒவ்வொன்றாக.... 
நான், 
இழந்து கொண்டிருக்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாக அந்த 
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை. நாளை, 
நானும் கூடு திரும்பாவிட்டால் ..." 
 

என்ற கவிதையில் தனது இருப்பு பற்றிய உறைநிலையையே காட்ட விழைகின்றார் . இந்த இரண்டு கவி வரிகளிலும்  , தான் இனி வருங்காலத்தில் எப்படி இருப்பேன் என்ற நம்பிக்கை தரும் ஒர்ம வரிகளை என்னால் அடயாளப்படுத்த முடியவில்லை. இதற்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன் . எனது மதிப்புக்கு உரிய வ ஐ செ ஜெயபாலன் ஒரு கவிதையில் தனது இருத்தல் பற்றி இப்படி குறிப்பிடுவார்,

"இயற்கை மரணம்
எம்மை அழைக்கும் வரை
மூக்கும் முழியுமாக
வாழவே பிறந்தோம் !!


என்று. இது தான் இருத்தலுக்கான நம்பிக்கையான எதிர்வுகூறல் .

என்னைப் பொறுத்த வரையில் , நெற்கொழுதாசன் ஒரு குறிப்பிட்ட வகையான பாடுபொருளுக்குள் தன்னை அமிழ்தாது பல்முனை பாடுபொருள்களை கொண்டு கவி புனைய வேண்டும் . அதே வேளையில் எழுத்துச் சமசரங்களுக்கு இடம் கொடுக்காது மனதில் பட்டதை வெளியே கொண்டு வருகின்ற மனத்துணிவு இருக்க வேண்டும் . ஏனெனில் கூனிக் குறுகி , குழைந்து வளைந்து எழுதுபவர்கள் எல்லாம் காத்திரமான படைப்பாளியாக முடியாது .

இறுதியாக, இந்த நிகழ்வு யாரால் ஒழுங்கமைக்கப்பட்டது ?? என்பதனை விட அந்த நிகழ்வில் என்ன பேசப்பட்டது என்பதே முக்கியமாகின்றது . நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இருக்க பிரான்சின் மூத்த எழுத்தாளர்கள் " ரகசியத்தின் நாக்குகளை " காய்த்தல் உவத்தல் இன்றி விமர்சித்து இருக்கின்றார்கள் . இதே போன்று யாழ்ப்பாணத்தில் திருமலை கலாமன்றத்திலும் பல மூத்த படைப்பாளிகள் காய்த்தல் உவத்தல் இன்றி இவருக்கான விமர்சனங்களை தந்துள்ளார்கள். நெற்கொழுதாசனுக்கு ஓர் இலக்கிய அங்கீகரிப்பு இடம் பெற்று இருக்கின்றது . இந்த நிகழ்வானது மூத்த எழுத்தாளர்களுக்கும் வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கும் இடையில் ஓர்  இணைப்பு பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும் . மேலும் நெற்கொழு தாசனின் ஏற்புரையில் " தன்னை போல பல குண்டுமணிகள் பிரசுர வசதிகள் இன்றி இருக்கின்றார்கள் . அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இங்கு உள்ள மூத்த படைப்பளிகளுடைய கடமை " என்ற வேண்டுகோளுடன் விழா நிறைவுக்கு வந்தது .

மேலதிக படங்கள்:
 

 
10245425_853909097969077_1149169034_n.jp
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கோ...

 

Link to comment
Share on other sites

கோ ,

குக்கூ பார்க்க போனதின் திருப்தி அவர் பதிவில் தெரிகின்றது .

 

(ஒரு கல்யாண வீட்டிற்கு போய்வந்த பின் அங்கு நடந்த எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்க தக்க அங்கு சாப்பிட்ட சாப்பாட்டில் கத்தரிக்காய் குழம்பிற்கு உறைப்பு காணாது பருப்பிற்கு உப்பு காணாது என்று கதைப்பவர்களும் இருக்கின்றார்கள் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய மதிப்பீடு?

 

உங்களுக்கு உறைப்புக்காணாதா?

உப்புக்காணாதா?? :( 

 

குக்கூ  பார்க்க  வந்திட்டு

என்ன  கேள்வி.......?? :( 

Link to comment
Share on other sites

நன்றி  கோ...

 

எதற்கு நன்றி ஐயா ?? எமது கள உறவை ஆக்க பூர்வமான விமர்சனத்தை கொடுத்தது அவருக்கு ஊக்க மருந்தை கொடுப்பது எமது கடமையல்லவா ?? உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உறைப்புக்காணாதா?

உப்புக்காணாதா?? :( 

 

குக்கூ  பார்க்க  வந்திட்டு

என்ன  கேள்வி.......?? :( 

 

அதில்லை விசுகர், "சுய மதிப்பீடு" எண்டதும் நெற்கொழு தாசன் எழுதினதாக்கும் எண்டு நான் வந்து பாத்தன். கோ "என் மதிப்பீடு" எண்டு போட்டிருக்கலாம்!

Link to comment
Share on other sites

கோ ,

குக்கூ பார்க்க போனதின் திருப்தி அவர் பதிவில் தெரிகின்றது .

 

(ஒரு கல்யாண வீட்டிற்கு போய்வந்த பின் அங்கு நடந்த எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்க தக்க அங்கு சாப்பிட்ட சாப்பாட்டில் கத்தரிக்காய் குழம்பிற்கு உறைப்பு காணாது பருப்பிற்கு உப்பு காணாது என்று கதைப்பவர்களும் இருக்கின்றார்கள் )

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அர்ஜுன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

 

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

Link to comment
Share on other sites

சுய மதிப்பீடு?

 

தவறுக்கு வருந்துகின்றேன் சுட்டிக்காடியமைக்கு மிக்க நன்றி . கருத்துக்களத்தில் வாத்தியார் இல்லாத குறை இப்பதான் தெரியுது  :lol:  :D  :D  .வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி  :)  .

Link to comment
Share on other sites

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

 

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

 

உண்மையில் எனக்கு இந்த வரிகள் விளங்கவில்லை . எனது பார்வையில் ஓர் விமர்சனக் கண்ணோட்டத்தில் இந்த நிகழ்வை தந்திருக்கின்றேன். விசுகரோ அவரின் பார்வையில் தந்திருக்கின்றார் . என்னைப் பொறுத்த வரையில் இருவரின் கண்ணோட்டங்கள் வேறாக இருந்தாலும் , யாழின் சார்பில் கொழுவனை மேலும் ஊக்கபடுத்துவதில் முளுமையடைந்ததாகவே எண்ணுகின்றேன் . ஆக்கத்தைப் படித்து கருத்து தந்ததிற்கு மிக்க நன்றிகள் வல்வை சகாரா  :)  :)  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

 

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

 

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

 

கு.சா அண்ணை இங்கு இணைக்கப்பட்ட படங்களில் இவ்விருவரும் இல்லை முகநூலில் பல பதிவுகள் நெற்கொழுவின் நூல் வெளியீடு தொடர்பாக பதியப்பட்டுள்ளன அவற்றில் ஒன்றில் இவர்கள் இருவரும் மிகத் தெளிவாகத் தெரிகிறார்கள் அத்தோடு இந்நூல் தொடர்பாக யாழுக்கு வெளியே நிறைய விடயங்கள் அறிய முடிந்தது அதனாலேயே நெற்கொழுவின் நூல் தொடர்பான ஒரு தெளிவான விமர்சனத்தை யாழில் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் முழுமையடையவில்லை என்று எழுதியிருந்தேன் பட்... கோமகன் தனது பார்வையையும், விசுகு தனது பார்வையையும் மட்டுமே எழுதியிருந்தார்கள் அவ்வளவே... ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

 

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

 

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

நன்றி அக்கா... என் தொண்டைவரை வந்து சிக்கி இருந்தவைகளை எழுதி இருக்கிறீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதிர் பார்த்த ஒன்று தான்..அதாவது ஒரு நிகழ்விற்கு அவர் வந்தார்,இவர் வந்தார் என்பதை விட,ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்ப்பது வழமை..அங்கே முதன்மை பெற்று இருந்தது ஒரு நூல் அதற்குள் என்ன விடையங்கள் அடக்கப்பட்டு இருந்தது..மற்றவர்களின் கணிப்பீடு எவ்வாறு இருந்தது பற்றிய விடையங்கள் தான் எமக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படுகிறது.

Link to comment
Share on other sites

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

 

அர்யூன் உங்களின் கருத்திடுகை என்பது நான் எழுதியதை எவ்வளவு தூரத்திற்கு விளங்கி இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கிறது. அங்கிடுதட்டி வக்காளத்து என்பதன் அர்த்தம் என்ன?, இங்கு புதுவைக்காக எப்படிப்பட்ட வக்காளத்து வாங்கப்பட்டு உள்ளது என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என் கருத்திடல் பற்றிய நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

 

Link to comment
Share on other sites

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

 

எனக்கு துணிவு இல்லை எண்டு சொன்ன முதல் ஆள் நீங்கள்தான் எண்டு நினைக்கிறன்  :unsure:  . எனக்கு இரட்டை நாக்குகள் கிடையாது என்பதை யாழ் கருத்துக்கள வரலாற்றை திருப்பி பாருங்கள்  :)  :)  . வரலாறு முக்கியம் அமைச்சரே :lol: :lol: :D .

Link to comment
Share on other sites

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

 

ஏன் இந்த கொலை வெறி  :lol:  :D  ? என்னட்டை கேட்டால் மெயிலிலை என்ரை படத்தை அனுப்புவன் தானே ஐயா  :)  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை இங்கு இணைக்கப்பட்ட படங்களில் இவ்விருவரும் இல்லை முகநூலில் பல பதிவுகள் நெற்கொழுவின் நூல் வெளியீடு தொடர்பாக பதியப்பட்டுள்ளன அவற்றில் ஒன்றில் இவர்கள் இருவரும் மிகத் தெளிவாகத் தெரிகிறார்கள் அத்தோடு இந்நூல் தொடர்பாக யாழுக்கு வெளியே நிறைய விடயங்கள் அறிய முடிந்தது அதனாலேயே நெற்கொழுவின் நூல் தொடர்பான ஒரு தெளிவான விமர்சனத்தை யாழில் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் முழுமையடையவில்லை என்று எழுதியிருந்தேன் பட்... கோமகன் தனது பார்வையையும், விசுகு தனது பார்வையையும் மட்டுமே எழுதியிருந்தார்கள் அவ்வளவே... ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

 

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

 

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

 

உங்களுடைய  கருத்துடனும்

வருத்தத்துடனும்

ஆவேசத்துடனும்  ஒத்துப்போகின்றேன்....

 

இந்த நடைமுறை மாற்றப்படணும் என்ற நிலையிலேயே  நானும் இருந்தேன்

இருக்கின்றேன்

இதற்காக பல முயற்சிகளையும்   செய்து தோற்றவன்  என்ற  வருத்தமும் உண்டு

இறுதியாக எமது  ஊர்ச்சங்கத்தினூடாக  

சில புத்தக  மற்றும் குறுவெட்டு வெளியீடுகளைச்செய்த போதும் கூட

கசப்பான அனுபவங்களே நடந்தேறின

அத்துடன்

மாற்றுவோம் என  ஒன்றிணைந்தவர்கள்

வெளியீட்டுக்கு கிடைத்த பணத்தை ஒரு சதமும் தெளியாது சென்றுவிட

ஒருங்கமைத்த  நாம் சுமையைச்சுமந்ததும் நடந்தேறியது.......

அந்த  சோக  கீதத்தினை  இங்கு எழுத விரும்பவில்லை...

 

எனது திரியை  ஆரம்பிக்கும் முதலே

அது பற்றி  எழுதியிருந்தேன்......

 

...........................................................................................................................................................................................

நன்றி  தம்பி  நெற்கொழு.....

 

நான் எனது பார்வையில் என்று மட்டுமே  எழுதுவேன்

அது தங்களது  நூல் வெளியீட்டு விழாவின் பிரதிபலிப்பாக  இருக்குமே தவிர

நூலினைப்பற்றிய பார்வையாக இராது

அதனை வேறு எவராவது யாழில்  செய்தால் நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

ஏன் இந்த கொலை வெறி  :lol:  :D  ? என்னட்டை கேட்டால் மெயிலிலை என்ரை படத்தை அனுப்புவன் தானே ஐயா  :)  ?

 

பாவம் குமாரசாமியார் நித்திரை இல்லாமல் அலைய போறார் :D  :lol:

Link to comment
Share on other sites

நானும் எதிர் பார்த்த ஒன்று தான்..அதாவது ஒரு நிகழ்விற்கு அவர் வந்தார்,இவர் வந்தார் என்பதை விட,ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்ப்பது வழமை..அங்கே முதன்மை பெற்று இருந்தது ஒரு நூல் அதற்குள் என்ன விடையங்கள் அடக்கப்பட்டு இருந்தது..மற்றவர்களின் கணிப்பீடு எவ்வாறு இருந்தது பற்றிய விடையங்கள் தான் எமக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படுகிறது.

 

என்னால் முடிந்த அளவு இதில் செய்திருக்கின்றேன் . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யாயினி .

 

Link to comment
Share on other sites

நன்றி அக்கா... என் தொண்டைவரை வந்து சிக்கி இருந்தவைகளை எழுதி இருக்கிறீர்கள்..

 

வரவுக்கு மிக்க நன்றி சுபேஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற சனியன்று நான் பரீசிலுள்ள புத்தகக் கடைகளில்  இப் புத்தகத்தை  வாங்குவதற்காக (அறிவாலயம் , தமிழாலயம்) விசாரித்தேன். தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.

 

அப்படியே தமிழ்சூரியனின் சீடீயும்  ( லுன்னில்)  வாங்க முடியவில்லை...!

Link to comment
Share on other sites

 

 

அப்படியே தமிழ்சூரியனின் சீடீயும்  ( லுன்னில்)  வாங்க முடியவில்லை...!

சுவி அண்ணா சில நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட cd கள் வெளியே செல்லாதவாறு எதோ நடந்திருக்கு ........அலசி ஆராய்ந்து எனது எனேர்ஜிஜை விரயமாக்க விரும்பவில்லை .அதனால் நானே சமருக்கு  களத்தில் நேரடியாக இறங்குவதென்று தீர்மானித்துள்ளேன் .வெகு விரைவில் cd  உங்கள் நாட்டிற்கு கிடக்கும் அண்ணா .நன்றிகள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
    • ஏன் இந்த‌ ச‌ந்தேக‌ம் 😁 போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் எழுதின‌து ந‌ட‌ந்து விட்ட‌து அண்ணா தென் ஆபிரிக்க‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு என்று எழுதினேன்  அதோட‌ இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி குறைந்த‌ ஸ்கோர் அடிச்சும் தென் ஆபிரிக்காவுக்கு இல‌ங்கை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சிர‌ம‌த்தை கொடுத்தவை இலங்கை இன்னொரு விளையாட்டில் தோத்தா இவ‌ர்க‌ள் வெளிய‌ யாழில் ப‌ல‌ர் இல‌ங்கையால் புள்ளிக‌ளை இழ‌க்க‌ கூடும் எல்லா குருப்பிலும் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணி என்ற‌ கேள்விக்கு க‌ண்டிப்பாய் அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்காவை ம‌ற்றும் இல‌ங்கையை தான் தெரிவு செய்து இருப்பின‌ம்.............................. இல‌ங்கை குருப் 8க்கை வ‌ந்தாலும் க‌ட‌சி இட‌த்துக்கு தான் வ‌ர‌க் கூடும்......................................... 2014க்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌ அனைத்து உல‌க‌ கோப்பையிலும் இல‌ங்கை அணியின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்.......................................
    • ஓமோம் கந்தையர்! நீங்கள் இருக்கிற இடங்களிலை ஒரு ஜேர்மன்காரரை காணேலாது....எல்லாம் துருக்கி மற்றும் அரபு வசந்தக்காரர்கள் எல்லோ......அவையள் வேலை வெட்டிக்கு போகமாட்டினம். சாப்பிடுறதை தவிர வேறை வேலையும் இல்லை.....எனவே😛
    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.