Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார் – மற்றுமொரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலித்து 21.07.2009 அன்று கே.பியை தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரிலான கும்பல் உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையின் வனப்பகுதிகளில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் தங்கியிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியை சிங்களப் படைகள் கைப்பற்றிய சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அம்பாறை மாவட்டத் தளபதி நகுலனுடன் சிங்களப் படைகளிடம் சரணடைந்த தென்தமிழீழத்திற்கான கட்டளைத் தளபதி ராம், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைப்பதற்குத் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு இணங்கிய நிலையில் சிங்களப் புலனாய்வுப் பிரிவினரால் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முஸ்லிம் வணிகர் ஒருவராக வேடமிடப்பட்டு போலியான கடவுச் சீட்டில் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட ராம், அங்கிருந்தவாறே கே.பியை தலைவராகக் கொண்ட ‘தலைமைச் செயலகம்’ என்ற குழுவை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்.

அப்பொழுது இந்தியாவில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவும், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைச் செயலகப் பொறுப்பாளராகவும் கடந்த காலங்களில் விளங்கிய சுரேஸ் அல்லது அமுதன் (தற்பொழுது இலண்டனில் மாறன் என்ற பெயரில் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை இயக்குபவர்), மலேசியாவில் தங்கியிருந்த ராமு.சுபன் (தற்பொழுது இலண்டனில் வசிப்பவர்), ஐரோப்பாவில் தங்கியிருந்த விநாயகம் அல்லது அறிவழகன் (தற்பொழுது பிரான்சில் வசிப்பவர்), இலண்டனில் தங்கியிருந்த கே.பி.ரெஜி ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட ராம், இவர்களின் உதவியுடன் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை உருவாக்கினார்.

இதன் பின்னர் 2009 ஓகஸ்ட் 5 அன்று கே.பியின் கைது நாடகம் நிறைவுற்றதும் அவருடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட ராம், பொலனறுவையில் உள்ள சிங்களப் படை முகாம் ஒன்றில் இருந்தாறு ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை இயக்கியதோடு, இதன் ஊடாக சிறிது காலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளின் அன்றாட செயற்பாடுகளையும் கண்காணிப்பிற்கு உட்படுத்தி வந்தார்.

அக்காலப் பகுதியில் தமது செயற்பாடுகள் பற்றிய நாளாந்த அறிக்கைகளையும், வாராந்த – மாதாந்த கூட்டங்களில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்களின் விபரங்களையும் வழங்குவதற்குப் பின்னடித்த, அல்லது உரிய நேரத்திற்கு வழங்கத் தவறிய வெளிநாட்டுக் கிளைப் பிரதிநிதிகளைக் கடிந்து கொண்ட ராம், அவர்களுக்கு இயக்க நடைமுறை பற்றி தொலைபேசி மூலம் (காட்டில் இருப்பதாகக் கூறிக்கொண்டு) நீண்ட ‘கொள்கை விளக்கங்களையும்’ வழங்கினார். 

இதனால் ராம் மீது சந்தேகம் கொண்டு செயற்பாட்டாளர்கள் சிலர் விசாரணைகளை மேற்கொண்ட பொழுதே சிங்களப் படைகளின் பிடியில் அவர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விளைவாகவே 2009 நவம்பர் 27ஆம் நாளன்று அம்பாறையின் வனப்பகுதிகளில் இருந்து உரையாற்றுவதாகக் கூறி ராம் வெளியிட்ட ஒலிவடிவ அறிக்கை புலம்பெயர் தேசங்களில் பிசுபிசுத்துப் போனது.

எனினும் மலேசியாவில் இருந்தவாறே ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பலை ராம் உருவாக்கியமை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளமை, அக்கும்பலின் தோற்றுவாயில் மேலும் மறைந்திருக்கக்கூடிய மர்மங்கள் பற்றிய கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளையும், விளையாட்டு விழாக்களையும் நடத்தியும், விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற கும்பலுக்குப் பக்கபலமாக நின்றும் ‘தலைமைச் செயலகம்’ என்ற கும்பல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
'தலைமைச் செயலகம்' என்ற கும்பல் முதன்முதலாக வெளியிட்ட அறிக்கை:
 
தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள். 
21 - யூலை – 2009.
 
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே,
 
எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது. ஈடு செய்ய முடியாத - கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத - மிகப்பெரிய இழப்புக்களை, எம்மினம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் - தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமை. ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணிற்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்து விட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
இத்தகைய நிலையில் - வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள்-ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.
 
போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும், பாதைகளும் காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.
 
எமக்கு முன்னாலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளி வந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட - நீண்ட - விரிவான –ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு-முடிவுக்கு அமைய - தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.
 
எமது போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
 
தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்ததாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்;று குவித்ததாலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்று விட்டதென்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம். எம் பெருந்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தியுள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்த கட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.
 
நன்றி.
 
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
 
இவ்வண்ணம்,
நிறைவேற்றுச் செயற்குழு சார்பாக,
திரு.சுரேஸ்(அமுதன்),
திரு.ராம். தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
 
21_July_LTTE_English_Page_1.jpg
21_July_LTTE_English_Page_2.jpg

 

  • Replies 93
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதை வெளியிட்டது எந்த கும்பல்?.......:D

  • கருத்துக்கள உறவுகள்

http://sathirir.blogspot.fr/2009/11/blog-post_22.html

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66371

 

திகதிகளை  கவனிக்கவும். அடடா இத்தனை முட்டாளா இருந்திட்டமே என்று நீங்கள் யோசித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல நன்றி வணக்கம்

 

:)   :)   :)

 

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருமையில்லை 5 வருசமா பலரை  முட்டாள்களாக்கியிருக்கிறம் என்கிற சின்ன சந்தோசம்.அவ்வளவுதான். விடை பெறுகிறேன் நன்றி வணக்கம். மின் மினி

 

ஐந்து வருசமாய்.... நீங்கள் தமிழனை, சிங்களவனுக்கு, காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் சாத்திரி.

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.

 

அனைத்துலகத் தொடர்பகத்தினருக்கு தாழ்மையானதும் அவசரமானதுமான பகிங்க வேண்டுகோள்...
இவ்வாறான துரோகி எதிர் தியாக அரசியலுக்கான செய்திகளை  உங்கள் ஊடக கட்டமைப்பு ஊடகங்களில் வெளிவர அனுமதிப்பதும் அதை ஊக்குவிப்பதும் உங்களுக்கு நீங்களே மாட்டிக்கொள்ளும் தூக்கு கயிறு என்பதைதயவு செய்து மறந்து விட வேண்டாம்.
உங்கள் ஊடக கட்டமைப்பை நீங்கள் அவசரமாக மறுசீரமைப்பு செய்து ஒழுங்கமைக்கவில்லை என்றால் சிறீலங்கா அரசு உங்கள் விரலைவைத்தே உங்கள் கண்ணை குத்தும். இது 100 வீத உண்மை.சிறீலங்கா அரசின்  ஆட்கள் உங்கள் ஊடக கட்டமைப்புக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நான் ஆதாரபூர்வமாக தெரிந்து கொண்டு தான் இந்த கருத்தை கூறுகிறேன்.
விடுதலைப்புலிகள் மேற்குலக நாடுகளில் அதிதீவிரமாக இயங்குகிறார்கள்.ஏனையோரை அச்சுறத்தும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான சான்றுகளை மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு முன்னர் உருவாக்குவது என்ற நிகழ்ச்சி நிரலின் ஓரங்கம் தான் இந்தசெய்திகளை வெளியிட வைப்பிப்பது என்ற உண்மையை தயவு செய்து மறந்துவிட வேண்டாம். மை

5 வருடம் அல்ல 15 வருடமாக கிட்ட தட்ட 2000 இல் இருந்து

எலி ஒண்டு ஏன் குறுக்கும் நெடுக்குமாக அம்மணமாய் ஓடுது எண்டு தான் எனக்கு விளங்க இல்லை... !!! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எலி ஒண்டு ஏன் குறுக்கும் நெடுக்குமாக அம்மணமாய் ஓடுது எண்டு தான் எனக்கு விளங்க இல்லை... !!! 

 

இவர்கள்... எலிகள் அல்ல,

பொறுக்கித் தின்னிகள்.

 

சிங்களவன், இந்தியன் எறியும்..... எலும்புகளுக்காக,

எதையும்... செய்யத் துணிந்தவர்கள்.

இவர்கள்... எலிகள் அல்ல,

பொறுக்கித் தின்னிகள்.

 

பாதுகாப்பாக வெளியேறி விட்டார் எண்றும்...  பிறகு அப்பிடியே பல்டி அடித்து தகவல் பிழை அவர் வீரச்சாவடைந்து விட்டார் எண்டும் அறிக்கை விட்ட  வெளியக புலநாய்வு பிரிவு யார் எண்டு எல்லாம் கேக்க மாட்டீங்களா....??  :)

 

யாரை எண்டு நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை தானே....?? 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பாக வெளியேறி விட்டார் எண்றும்...  பிறகு அப்பிடியே பல்டி அடித்து தகவல் பிழை அவர் வீரச்சாவடைந்து விட்டார் எண்டும் அறிக்கை விட்ட  வெளியக புலநாய்வு பிரிவு யார் எண்டு எல்லாம் கேக்க மாட்டீங்களா....??  :)

 

யாரை எண்டு நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை தானே....?? 

 

 

உங்களுக்கு

கனக்க  விடயம் தெரிந்திருக்கிறது

ஆனால் எழுதுவதில்லை

 

எனக்கும் சில  விடயங்கள் தெரியும்

ஆனால் எழுதுவதில்லை

காரணம் குழம்பிக்கிடப்பது நம்ம குட்டை

கொஞ்சம்  காலத்தில் தெளியும்

தெளியணும்

அதுவரை நாமும் அதற்குள் இறங்காதிருப்பதே

இன்றையநிலையில் ஆகக்குறைந்த மக்கள் சேவை.

பார்க்கலாம்

எதுவரை என்று....... :(  :(  :(

இனித்தான் இங்கொருவர் போராட்டத்தில் இறங்க  போறார் . எல்லாரும் ஓடிவாங்கோ . :icon_mrgreen:

குண்டு எறியும் போது பார்த்து எறியுங்கோ குழந்தை பிள்ளைகள் கவனம் .

 

 

இனித்தான் இங்கொருவர் போராட்டத்தில் இறங்க  போறார் . எல்லாரும் ஓடிவாங்கோ . :icon_mrgreen:

குண்டு எறியும் போது பார்த்து எறியுங்கோ குழந்தை பிள்ளைகள் கவனம் .

 

அதை நீங்கள் சொல்லுறீங்கள் எண்டதுதான் கொடுமை...  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

83 லை இருந்து பாக்கிறம் கப்பலிலை ஆயுதம் வருகுது , அரசியலிலையும்  இராணுவ ரீதியிலையும் பறந்து பறந்து அடிப்பியள் எண்டு.. 

 

கடைசியா மற்றவையை மட்டம் தட்டுகிற அளவிலை மட்டும் தான் உங்கட போராட்டம் எல்லாம் நிக்கிது....  

இனித்தான் இங்கொருவர் போராட்டத்தில் இறங்க  போறார் . எல்லாரும் ஓடிவாங்கோ . :icon_mrgreen:

குண்டு எறியும் போது பார்த்து எறியுங்கோ குழந்தை பிள்ளைகள் கவனம் .

 

நீங்க இறங்கின போராட்டம் தொடங்கிட்டுதா?  நீங்கள் இன்னும் இறங்கிய கிணத்துக்குள்ளதானே நிக்கிறியல்?  முதல்ல உங்கட போராட்டத்தை ஒழுங்காப் பாருங்கோ.  பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்.  நீங்களும்தானே என்னென்னவெல்லாமே செய்ய முனைந்தீர்கள்.  உங்களால் ஒரு அடியேனும் நகர முடிந்ததா?  ஏதாவது ஒன்றையேனும் உருப்படியாகச் செய்துவிட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்.  அரைகுறையில் கைவிட்டு விட்டு வந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லாதீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருமையில்லை 5 வருசமா பலரை  முட்டாள்களாக்கியிருக்கிறம் என்கிற சின்ன சந்தோசம்.அவ்வளவுதான். விடை பெறுகிறேன் நன்றி வணக்கம். மின் மினி

 

ஒருநாளைக்கு ஒரு முடிவு பிறக்கும் அப்ப தெருவில நாயும் காகமும் கொத்திதின்னும் அப்ப தெரியும் பெருமை. ஆடாதடா ஆடாதடா மனிதா றெம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவா மனிசா.

சாஸ்திரி புழுகை ஒரு  நேர்மையான ஊடகவியலாளனான குருபரனும் நம்பினதுதான் ஏமாற்றம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138937#entry1002581

ஒவ்வொரு ஊரிற்கும் ஒவ்வொரு வெடிப்புழுகன் இருப்பதை அறிவோம். இங்க யாழுக்கும் ஒரு வெடிப்புழுகன். காலம் தான் காப்பாற்ற வேணும்.

அதை நீங்கள் சொல்லுறீங்கள் எண்டதுதான் கொடுமை...  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

83 லை இருந்து பாக்கிறம் கப்பலிலை ஆயுதம் வருகுது , அரசியலிலையும்  இராணுவ ரீதியிலையும் பறந்து பறந்து அடிப்பியள் எண்டு.. 

 

கடைசியா மற்றவையை மட்டம் தட்டுகிற அளவிலை மட்டும் தான் உங்கட போராட்டம் எல்லாம் நிக்கிது....  

போராட்டம் பிழையாக போகுதேன்றால் தொடரக்கூடாது ,அதை விளங்க அறிவு தேவை .அது விளங்காத படியால் தான் இவ்வளவு உயிர் அழிவுகளும் வந்தது .

முப்பது வருடமாக மற்றவன் உயிரையும் உடமையையும் அழித்ததான் மிச்சம் .இப்ப மைனஸ் கொண்டுவந்து விட்டிருக்கு .

புலிகள் புளொட் மாதிரி இயக்கங்ள் இருப்பதிலும் பார்க்க இல்லாமல் போவதே நல்லது .

எங்களுக்கு இருபதுவருடங்களுக்கு முதல் விளங்கியது இன்னமும் சிலருக்கு விளங்கவில்லை .

நீங்க இறங்கின போராட்டம் தொடங்கிட்டுதா?  நீங்கள் இன்னும் இறங்கிய கிணத்துக்குள்ளதானே நிக்கிறியல்?  முதல்ல உங்கட போராட்டத்தை ஒழுங்காப் பாருங்கோ.  பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்.  நீங்களும்தானே என்னென்னவெல்லாமே செய்ய முனைந்தீர்கள்.  உங்களால் ஒரு அடியேனும் நகர முடிந்ததா?  ஏதாவது ஒன்றையேனும் உருப்படியாகச் செய்துவிட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்.  அரைகுறையில் கைவிட்டு விட்டு வந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லாதீர்கள்.  

ஒரு அடி அல்ல ஒரு அங்குலம் கூட நாங்கள் நகரவில்லை .ஆனால் நூறு மைல்கள் பின்னுக்கு கொண்டுவந்து விடவில்லை .இவ்வளவு போராளிகளையும் பொதுமக்களையும் காவு கொடுக்கவில்லை .அரசாங்கம் போட்ட பெட்டிக்குள் நின்று வெள்ளை கொடி பிடிக்கவில்லை .

இதிலும் பார்க்க போராட்டம் தொடங்காமலே இருந்திருக்கலாம் .

போராட்டம் பிழையாக போகுதேன்றால் தொடரக்கூடாது ,அதை விளங்க அறிவு தேவை .அது விளங்காத படியால் தான் இவ்வளவு உயிர் அழிவுகளும் வந்தது .

முப்பது வருடமாக மற்றவன் உயிரையும் உடமையையும் அழித்ததான் மிச்சம் .இப்ப மைனஸ் கொண்டுவந்து விட்டிருக்கு .

புலிகள் புளொட் மாதிரி இயக்கங்ள் இருப்பதிலும் பார்க்க இல்லாமல் போவதே நல்லது .

எங்களுக்கு இருபதுவருடங்களுக்கு முதல் விளங்கியது இன்னமும் சிலருக்கு விளங்கவில்லை .

 

இருபது வருடங்களுக்கு முன்னரே விளங்கினபடியால்தான் 2011இல் இரண்டாவது ஆட்டம் தொடங்கினீர்களா?  உயிர்ப்பலி இல்லாத ஒரு போராட்டத்தைக் குறிப்பிடுங்கள் பார்க்லாம்.  உலக யுத்தங்கள் அனைத்தும் உங்களின் முன்னைய பிரபஞ்சத்திலா நடந்தன?  

 

 

 

ஒரு அடி அல்ல ஒரு அங்குலம் கூட நாங்கள் நகரவில்லை .ஆனால் நூறு மைல்கள் பின்னுக்கு கொண்டுவந்து விடவில்லை .இவ்வளவு போராளிகளையும் பொதுமக்களையும் காவு கொடுக்கவில்லை .அரசாங்கம் போட்ட பெட்டிக்குள் நின்று வெள்ளை கொடி பிடிக்கவில்லை .

இதிலும் பார்க்க போராட்டம் தொடங்காமலே இருந்திருக்கலாம் .

 

உங்களைப் போன்ற இயலாதவர்களுக்குத்தான் நூறு மைல்கள் பின்னுக்குச் சென்றதாகத் தோன்றும்.  ஆனால், உண்மையான அக்கறை உள்ளவனுக்கு, அரசியல் தெரிந்தவனுக்கு அதனை எப்படி நிரப்புவது என்பது விளங்கும்.  உங்களின் இந்த நையாண்டிகளுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.  உங்களின் ஆயுள் கெட்டி என்றால் இருந்து அனுபவித்துவிட்டுச் செல்லுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்ப்பலி இல்லாத ஒரு போராட்டத்தைக் குறிப்பிடுங்கள் பார்க்லாம்.  ?

உங்களது இந்த கேள்விக்கு பதில் கிடைக்காது போனால் படிப்பவர்கள் உயிர்பலி இல்லாத போராட்டங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். ஆகவே இந்த பதில்.

1983 இல் ஆரம்பித்து 1986 இல் முடிவுக்கு வந்த பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இரத்தம் சிந்தாத புரட்சி அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த சர்வாதிகாரி மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அமரிக்காவில் புகலிடம் கோர வைத்தது. இந்த புரட்சியை அடுத்து திருமதி அகினோ நாட்டின் அதிபரானார். அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சில கொலைகள் இடம் பெற்றிருந்தாலும் இலங்கையில் போல பெரும்தொகையில் 3௦ ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்களத்திலும், வாழ்விடங்களிலும் மக்கள் தொகை தொகையாக கொல்லப்பட்ட புரட்சியாக அது அமையவில்லை. இது உலகின் பல இரத்தம் சிந்தாத புரட்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

1989 இல் போலந்தில் சோவியத் சார்பு கொம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் ஆட்சி லேக் வலேசா தலைமையில் அமைக்கபப்ட்டதும் இரத்தம் சிந்தாத புரட்சி மூலமேயாகும்.

இதே போல இராணுவ ஆட்சியை கவிழ்த்து பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ ஆட்சிக்கு வந்ததும் இரத்தம் சிந்தாத புரட்சி மூலமேயாகும்.

அராபிய வசந்தம் என்று அழைக்கப்படும் ஆட்சி மாற்றங்கள், கிழக்கு ஜெர்மனி கொம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது போன்றவையும் இரத்தம் சிந்தாத போராட்டங்கள் மூலமேயாகும். இந்த போராட்டங்களில் சில உயிர் இழப்புகள் இருந்திருக்கலாம், ஆனால் அவை இலங்கையில் தமிழரின் உயர் இழப்புகளுடன் ஒப்பிடும் போது மிக சொற்பமானவை.

இதில் குறிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒரு அம்சம், இவை வெற்றி பெற்ற இரத்தம் சிந்தாத போராட்டங்கள். இலங்கை தமிழரின் போராட்டம் பெருமளவு உயர் இழப்புகளை கண்டும் இன்றும் வெற்றி பெற முடியாத போராட்டமாகவே இருக்கிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி போராட்டங்கள் சர்வாதிகாரிக்கு எதிரான போராட்டங்கள் , கம்யீனிசத்துக்கு எதிரான போராட்டங்களே. ஒரு இனம் விடுதலையை இரத்தம் சிந்தாமல்  சுதந்திரம் பெற்றுள்ளதா? சில தோல்வி கண்டுள்ளன. சில வெற்றி பெற்றுள்ளன, இன்னும் சில 50 வருடங்களுக்கு மேலாக போராடிக்கொண்டு இருக்கின்றன.


போராட்டம் பிழையாக போகுதேன்றால் தொடரக்கூடாது ,அதை விளங்க அறிவு தேவை .அது விளங்காத படியால் தான் இவ்வளவு உயிர் அழிவுகளும் வந்தது .

முப்பது வருடமாக மற்றவன் உயிரையும் உடமையையும் அழித்ததான் மிச்சம் .இப்ப மைனஸ் கொண்டுவந்து விட்டிருக்கு .

புலிகள் புளொட் மாதிரி இயக்கங்ள் இருப்பதிலும் பார்க்க இல்லாமல் போவதே நல்லது .

எங்களுக்கு இருபதுவருடங்களுக்கு முதல் விளங்கியது இன்னமும் சிலருக்கு விளங்கவில்லை .

 

 

20 வருடத்துக்கு முதல் புளட் தங்களுக்குள் அடிபட்டு அழிந்தது பரகசியம். அந்தக்குழுவில் இருந்து நீங்கள் தப்பியது இரகசியம். 20 வருடங்களுக்கு முன் புலிகள் தோற்பார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?? ஒரு உதாரணம் தர முடியுமா?  உங்களை போல் விழுந்த மாட்டுக்கு குறி சுட ஒருவராலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அடி அல்ல ஒரு அங்குலம் கூட நாங்கள் நகரவில்லை .ஆனால் நூறு மைல்கள் பின்னுக்கு கொண்டுவந்து விடவில்லை .இவ்வளவு போராளிகளையும் பொதுமக்களையும் காவு கொடுக்கவில்லை .அரசாங்கம் போட்ட பெட்டிக்குள் நின்று வெள்ளை கொடி பிடிக்கவில்லை .

இதிலும் பார்க்க போராட்டம் தொடங்காமலே இருந்திருக்கலாம் .

 

நீங்கள் எப்போ போராடினீர்கள் அங்குலம் பின்னால் வர?? :D இதற்குள் ஆயுதத்தை கை விட்டு விட்டோம்  என்ற கதை விடுதல் வேறு? போராடாமலே ஆயுதப்போராட்டத்தை கை விடுகிறோம் என்று சொன்ன ஆட்கள் நீங்கள் தானே? போராடாமல் உங்களுக்கு விளங்கி விட்டதா?  :icon_mrgreen:

உங்களது இந்த கேள்விக்கு பதில் கிடைக்காது போனால் படிப்பவர்கள் உயிர்பலி இல்லாத போராட்டங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். ஆகவே இந்த பதில்.

1983 இல் ஆரம்பித்து 1986 இல் முடிவுக்கு வந்த பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இரத்தம் சிந்தாத புரட்சி அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த சர்வாதிகாரி மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அமரிக்காவில் புகலிடம் கோர வைத்தது. இந்த புரட்சியை அடுத்து திருமதி அகினோ நாட்டின் அதிபரானார். அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சில கொலைகள் இடம் பெற்றிருந்தாலும் இலங்கையில் போல பெரும்தொகையில் 3௦ ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்களத்திலும், வாழ்விடங்களிலும் மக்கள் தொகை தொகையாக கொல்லப்பட்ட புரட்சியாக அது அமையவில்லை. இது உலகின் பல இரத்தம் சிந்தாத புரட்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

1989 இல் போலந்தில் சோவியத் சார்பு கொம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் ஆட்சி லேக் வலேசா தலைமையில் அமைக்கபப்ட்டதும் இரத்தம் சிந்தாத புரட்சி மூலமேயாகும்.

இதே போல இராணுவ ஆட்சியை கவிழ்த்து பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ ஆட்சிக்கு வந்ததும் இரத்தம் சிந்தாத புரட்சி மூலமேயாகும்.

அராபிய வசந்தம் என்று அழைக்கப்படும் ஆட்சி மாற்றங்கள், கிழக்கு ஜெர்மனி கொம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது போன்றவையும் இரத்தம் சிந்தாத போராட்டங்கள் மூலமேயாகும். இந்த போராட்டங்களில் சில உயிர் இழப்புகள் இருந்திருக்கலாம், ஆனால் அவை இலங்கையில் தமிழரின் உயர் இழப்புகளுடன் ஒப்பிடும் போது மிக சொற்பமானவை.

இதில் குறிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒரு அம்சம், இவை வெற்றி பெற்ற இரத்தம் சிந்தாத போராட்டங்கள். இலங்கை தமிழரின் போராட்டம் பெருமளவு உயர் இழப்புகளை கண்டும் இன்றும் வெற்றி பெற முடியாத போராட்டமாகவே இருக்கிறது.

 

அமெரிக்க ஆதரவோடை  பிலிப்பீன்சை மக்கள் ஸ்பானில காலணித்துவ ஆதரவு கொண்ட  மாக்கோசை வெளியேற்றினார்கள் எனும் மேற்கத்திய திரைக்கதையை மட்டும் சொல்கிறீர்கள்...  இதில் இருந்து தெரிவது  உங்கள் ஊரில் யாரும் பிலிப்பீனர்கள் இல்லை போலும்...  

 

யாராவது கிடைத்தால் பிலிப்பீனில் இருந்து ஏன் பெருமளவான மக்கள்  மேற்குநாடுகளுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர் என்பதை கேட்டு கொள்ளுங்கள்... 

 

பிலிப்பீன்ன் பெரும்பகுதி இன்னும் விடுதலை அடையவில்லை....  இப்போதும்  போர் நடந்துகொண்டு இருக்கிறது எண்டு சொன்னால் நம்புவீர்களா....?? 

ஆதாரம்

http://www.reuters.com/article/2014/03/27/us-philippines-rebels-idUSBREA2Q1W220140327

 

இரசியாவை பற்றி எல்லாருக்கும் தெரியும்...   ஸ்ராலினும் லெனினும் செய்த கொலைகளே இண்டுவரை பல கம்யூனிச நாடுகளின் கொள்கையாக இருக்கிறது...  

 

பாக்கிஸ்தான் விடுதலை அடைந்தது  எண்டா எங்களை நம்ப சொல்கிறீர்கள்... 

 

நீங்கள் சொல்லும் கதை  கலைஞர் உண்ணாவிரதம் இருந்ததால் தான் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது எண்டதை போண்ற ஒண்றுதான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது இந்த கேள்விக்கு பதில் கிடைக்காது போனால் படிப்பவர்கள் உயிர்பலி இல்லாத போராட்டங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். ஆகவே இந்த பதில்.

1983 இல் ஆரம்பித்து 1986 இல் முடிவுக்கு வந்த பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இரத்தம் சிந்தாத புரட்சி அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த சர்வாதிகாரி மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அமரிக்காவில் புகலிடம் கோர வைத்தது. இந்த புரட்சியை அடுத்து திருமதி அகினோ நாட்டின் அதிபரானார். அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சில கொலைகள் இடம் பெற்றிருந்தாலும் இலங்கையில் போல பெரும்தொகையில் 3௦ ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்களத்திலும், வாழ்விடங்களிலும் மக்கள் தொகை தொகையாக கொல்லப்பட்ட புரட்சியாக அது அமையவில்லை. இது உலகின் பல இரத்தம் சிந்தாத புரட்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

1989 இல் போலந்தில் சோவியத் சார்பு கொம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் ஆட்சி லேக் வலேசா தலைமையில் அமைக்கபப்ட்டதும் இரத்தம் சிந்தாத புரட்சி மூலமேயாகும்.

இதே போல இராணுவ ஆட்சியை கவிழ்த்து பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ ஆட்சிக்கு வந்ததும் இரத்தம் சிந்தாத புரட்சி மூலமேயாகும்.

அராபிய வசந்தம் என்று அழைக்கப்படும் ஆட்சி மாற்றங்கள், கிழக்கு ஜெர்மனி கொம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது போன்றவையும் இரத்தம் சிந்தாத போராட்டங்கள் மூலமேயாகும். இந்த போராட்டங்களில் சில உயிர் இழப்புகள் இருந்திருக்கலாம், ஆனால் அவை இலங்கையில் தமிழரின் உயர் இழப்புகளுடன் ஒப்பிடும் போது மிக சொற்பமானவை.

இதில் குறிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒரு அம்சம், இவை வெற்றி பெற்ற இரத்தம் சிந்தாத போராட்டங்கள். இலங்கை தமிழரின் போராட்டம் பெருமளவு உயர் இழப்புகளை கண்டும் இன்றும் வெற்றி பெற முடியாத போராட்டமாகவே இருக்கிறது.

 

 

உங்களிடமிருந்து இப்படி எழுத்தை எதிர்பார்க்கவில்லை

ஒரு அடிமைப்பட்ட இனத்தின் விடுதலையை

ஒரு பெரும் இனச்சுத்திகரிப்பு முகம் கொடுக்கும் ஒரு இனத்தை

எதனுடன் ஒப்பிடுவதே என்பதே தெரியாததால்  தான் நாம் புலிகளை  எதிர்க்கின்றோமா???

அல்லது புலிகளை  வசை  பாட எதையெல்லாம் கொட்டுகின்றோமா என்பதை  உங்கள் இந்த எழுத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இனி  நித்திரையாய்  நடிப்போரை எழுப்பி...

வேண்டாம்

நேரம் பொன்னானது........ :(  :(  :(

போராட்டம் பிழையாக போகுதேன்றால் தொடரக்கூடாது ,அதை விளங்க அறிவு தேவை .அது விளங்காத படியால் தான் இவ்வளவு உயிர் அழிவுகளும் வந்தது .

முப்பது வருடமாக மற்றவன் உயிரையும் உடமையையும் அழித்ததான் மிச்சம் .இப்ப மைனஸ் கொண்டுவந்து விட்டிருக்கு .

புலிகள் புளொட் மாதிரி இயக்கங்ள் இருப்பதிலும் பார்க்க இல்லாமல் போவதே நல்லது .

எங்களுக்கு இருபதுவருடங்களுக்கு முதல் விளங்கியது இன்னமும் சிலருக்கு விளங்கவில்லை .

 

போராட்டம் பிழையாக போகுது எண்டால்  அதை மாற்றி சரியான வளியிலை கொண்டு போக வேண்டுமே ஒளிய  எதிர் பக்கமாக போய் நிண்டு கொண்டு ஊழை இடக்கூடாது...   

 

முதலிலை உங்களாலை ஒரு போராட்டத்தை செய்ய முடியவில்லை , அதை வளிப்படுத்தும் ஆற்றல் இருக்கவில்லை என்னும் தோல்வியை ஒத்துக்கொள்ள பழகி கொள்ளுங்கள்... 

 

போராட்டம் பிழையான பாதையில் போனதினால் போராட்டத்தை  நிறுத்தினீர்கள் சரி ...  அதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதனை உங்களால் சரி செய்ய முடிந்து இருக்கும்...??? 

 

கொலைகளையா....???   அப்படி எண்டால்  ஆயுத்த போராட்டம் ஆரம்பிக்க காரணமான  தமிழராட்ச்சி மானாட்டு தமிழர்கள் எந்த அமைபில் இருந்து ஆயுதம் ஏந்தினார்கள்...??   

 

உங்களாலை ஏதும் முடியாது வெறும் வானவெடி மன்னர் எண்டது எங்களுக்கு இத்தனை காலத்தில் தெரியாமல் இல்லை அண்ணை....  

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் இங்கொருவர் போராட்டத்தில் இறங்க  போறார் . எல்லாரும் ஓடிவாங்கோ . :icon_mrgreen:

குண்டு எறியும் போது பார்த்து எறியுங்கோ குழந்தை பிள்ளைகள் கவனம் .

http://www.youtube.com/watch?v=r4GAVaCfHg4#t=74

 

 

 

 

 

 

 

 

 

Edited by விசுகு

"இதில் குறிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒரு அம்சம், இவை வெற்றி பெற்ற இரத்தம் சிந்தாத போராட்டங்கள். இலங்கை தமிழரின் போராட்டம் பெருமளவு உயர் இழப்புகளை கண்டும் இன்றும் வெற்றி பெற முடியாத போராட்டமாகவே இருக்கிறது."

 

இந்த பச்சைக்குத்தான் பச்சை .

நானும் உலகமெல்லாம் சுழி ஓடி தேடுகின்றேன் புலிகளில் இருந்து   ஒரு அடிப்படை அரசியல் அறிவுள்ள ஒருவரை கூட சந்திக்கவில்லை . (அப்படியாரும் இருந்து இருந்தால் இந்திய இராணுவ மோதல் அல்லது ராஜீவ் கொலை நடந்திருக்குமா )

 

இரத்தத்திற்கு இரத்தம்தான் தீர்வு என்று தான் அனைவர் கருத்தும் இருக்கு .

போராட்டம் பிழையாக போனால் மாற்றி சரியான வழியில் கொண்டு போக எதையாவது காது கொடுத்து கேட்கும் நிலையில் எந்த தலைமை இருந்தது ,குறிப்பாக புலி தலைமையிடம் அது எள்ளளவும் இருக்கவில்லை (எரிக் சொல்கெய்ம் ,பொப் ரேயில்  இருந்து கோர்டன் வைஸ் வரை சொன்ன விடயம் இது.

இருபது வருடத்திற்கு முதல் தாயகத்தில் வந்த "பிராங்கஸ்டைன் " கட்டுரை இன்னமும் இருக்கு .(யாழ்பாண தமிழன்  ஒரு பிறந்கஸ்டனை உருவாக்கி எதிரியுடன் அடிபடவிடுகின்றான் கடைசியில் அது உருவாகியவனையும் அழித்து தானும் அழிந்துபோகும் ,  ஒரு வரி பிசகாமல் அது இன்று நடந்திருக்கு)

 

சுமந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய மிக சிறந்த உரை .ஒன்று வாசித்தேன் .நேரம் கிடக்கும் போது இணைத்துவிடுகின்றேன் .யதார்த்த அரசியல் என்றால் அதுதான் ,

அதைவிட்டு அண்ணை ஆயுள் கெட்டிஎன்றால் கொஞ்சம் பொறுங்கோ கனடாவில் இருந்துகொண்டு மந்திரத்தில் நாடு பிடித்து தாறன் என்று சொல்ல மாட்டன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.