Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடிக்கு விக்கி வாழ்த்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Narendra%20Modi.jpg?itok=jydmCYf6
 

இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதிகிட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆரோக்கியமான கொள்கை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்" என்றும்

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

 

''உங்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம். பலம்பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

 

http://www.eelanatham.net/articles/2014/05/16/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Narendra%20Modi.jpg?itok=jydmCYf6
 

இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதிகிட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆரோக்கியமான கொள்கை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்" என்றும்

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

 

''உங்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம். பலம்பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

 

http://www.eelanatham.net/articles/2014/05/16/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

 

 

அதே தாடி

அதே துண்டு

அதே பொட்டு

 

பார்க்கலாம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே தாடி

அதே துண்டு

அதே பொட்டு

 

பார்க்கலாம்.........

 

இப்படியானவர்களின் சிந்தனா சக்தி எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பார்கள் பார்க்கலாம்.

வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் அத்துடன் விட்டுவிடாமல்

உடன் இந்திய விஜயத்தை மேற்கொள்ள வேண்டும்.

புதிய பாரதப் பிரதமருடன் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக

ஆராயவேண்டும் 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில் ஒரு அறிக்கை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அட மகிந்தாவுக்கு முதல் இவர் அறிக்கை விட்டிட்டார். மகிந்தாவுக்கு கோபம் வரப்போகுது...டக்கிளஸ் அறிக்கை விடப்போகிறார் எங்கன்ட பிரச்சனையை நாங்கள்தான் தீர்க்க வேணும் என்று....:D

மோடியை போல் தான்  எங்கள் முதல்வரும்  மக்களின் அமோக  வெற்றியை பெற்றவர்.   பார்ர்பம் மோடி என்ன யோசிக்கிறார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

இப் பொழுதுதான் முதலசை;சர் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.சரியான அறிக்கை விளைவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் கொஞ்சம் நாளையில், மோடிக்கான தூற்றல் நம்மவரிடமிருந்து பறக்கப் போகுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடியுடன் பேசுவோம்: மாவை

mavai_0.jpg?itok=wu85E5Zx

 

எமது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் புதிய அரசாங்கம் ஆதரவு வழங்கும் என எதிர்பார்ப்பு எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக புதிய இந்திய அரசாங்கத்துடன் பேசுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

 

மோடி தலைமையில் பாரதீக ஜனதாகட்சி ஆட்சியமைக்கக் கூடிய பலத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தவெற்றியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துவதோடு எமது பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவரிடம் இந்திய தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

இந்திய அரசியலில் பெரியளவுமாற்றம் ஏற்படும் எனபொதுவாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமே தற்போது மோடி தலைமையில் பாரதீக ஜனதாகட்சி ஆட்சியமைக்கக் கூடிய பலத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த வெற்றியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துவதோடு எமது பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம். இலங்கைத் தமிழர்களினுடைய பிரச்சினையிலும் ஒரு மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்திய நாட்டில் ஆட்சி அமர்வு இடம்பெற்றதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமரையும் இங்குள்ள அரசியற் கட்சித் தலைவர்களையும் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளோம்.

 

நாம் மட்டக்களப்பிற்கு வழமையான விஜயத்தைத்தான் மேற்கொண்டுள்ளோம் விசேடமாக அம்பாறை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்காக வந்துள்ளோம். கல்முனை நாவிதன்வெளி, காரைதீவு, திருக்கோயில், ஆலையடிவேம்பு, பொத்துவில் போன்ற பிரதேசங்களுக்கு சென்று மக்களுடன் சிறு சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளோம்.

 

இதுவே எமது விஜயத்தின் நோக்கம். மேலும் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தற்போது இந்தியாவில் தான் இருக்கின்றார்.

 

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் புதிய அரசாங்கம் ஆதரவு வழங்கும் என எதிர்பார்ப்பு எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது. அந்த நம்பிக்கையை அவர்கள் நிறைவேற்றுவார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக புதிய இந்திய அரசாங்கத்துடன் பேசுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அத்துடன் இந்தியத் தூதரகத்துடனும் நாம் சந்திப்பினை மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றோம். என்றார்.

 

http://www.eelanatham.net/articles/2014/05/16/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

 

இன்னும் கொஞ்சம் நாளையில், மோடிக்கான தூற்றல் நம்மவரிடமிருந்து பறக்கப் போகுது.

 

பின்ன கேடு செய்தால்.. வைச்சுக் கொஞ்சுவாங்களாக்கும்.

 

நீங்க கொஞ்சி என்ன கெஞ்சிக்கிட்டே வாழ்த்து முடிப்பீர்கள். அது உங்கள் வழக்கம்..! அதனை உரிமை வேண்டும் மனிதர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதே தாடி

அதே துண்டு

அதே பொட்டு

 

பார்க்கலாம்.........

 

இதிலும்... எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்வு பெற்றால், சந்தோசம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் கூடுதலாய் எல்லா இந்திய தலைவர்களுக்கும் பஞ்சபுராணம் படிச்சிட்டம்......இப்ப மோடிதான் பாக்கி.........அவருக்கும் கிட்டடியிலை திருச்சிற்றம்பலம் சொல்லுவம் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன் மாதிரி... சும்மா... கூவிக் கொண்டிருக்காமல்,
நடக்க வேண்டிய... அலுவலை.. டக்கெண்டு, ரகசியமாய் பாருங்கப்பா...

மன்மோகனுக்கும் இதே தாடி இருக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கூடுதலாய் எல்லா இந்திய தலைவர்களுக்கும் பஞ்சபுராணம் படிச்சிட்டம்......இப்ப மோடிதான் பாக்கி.........அவருக்கும் கிட்டடியிலை திருச்சிற்றம்பலம் சொல்லுவம் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு... :lol:

காங்கிரஸ் கட்சி தனி ஊழல் மட்டுமே செய்யும்.
பாரதிய ஜெனதா கட்சிக்கு கொஞ்சம் இந்திய பற்று உண்டு .....
 
அணுகுண்டு வெடிப்பு 
பாகிஸ்தானுடன் பேச்சு 
என்று இந்தியாவின் வளர்ச்சி பிராந்தியத்தின் அசைவிலும் உண்டு என்று எண்ணுபவர்கள்.
எதையாவது செய்வார்கள் ....  இன்பமா துன்பமா எனபதை பொருத்துதான் பார்க்க வேண்டும்.
 
சீனா கொழும்பை விழுங்கி கொண்டிருப்பதால் ..................... இவர்களுக்கு ஒரே  தெரிவு தமிழர்கள்தான்.

காங்கிரஸ் கட்சி தனி ஊழல் மட்டுமே செய்யும்.

பாரதிய ஜெனதா கட்சிக்கு கொஞ்சம் இந்திய பற்று உண்டு .....

அணுகுண்டு வெடிப்பு

பாகிஸ்தானுடன் பேச்சு

என்று இந்தியாவின் வளர்ச்சி பிராந்தியத்தின் அசைவிலும் உண்டு என்று எண்ணுபவர்கள்.

எதையாவது செய்வார்கள் .... இன்பமா துன்பமா எனபதை பொருத்துதான் பார்க்க வேண்டும்.

சீனா கொழும்பை விழுங்கி கொண்டிருப்பதால் ..................... இவர்களுக்கு ஒரே தெரிவு தமிழர்கள்தான்.

உண்மைதான், இந்த உண்மை எங்கட ஆக்களுக்கு விளங்குதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
///நீங்க கொஞ்சி என்ன கெஞ்சிக்கிட்டே வாழ்த்து முடிப்பீர்கள். அது உங்கள் வழக்கம்..! அதனை உரிமை வேண்டும் மனிதர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது.///
 
 
உரிமை வேண்டும் மனிதர்களும், இப்போது இந்தியாவிடம் கொஞ்சிக் கெஞ்சித்தான் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.