Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களில் 32 சதவீதமானவர்கள் வாழ்க்கை துணையை விட்டு விலக திட்டம் - புதிய ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது  வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
article-2677981-04C761A5000005DC-909_634
அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 
இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய 1160 தனி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 
பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்கள் விவாகரத்து தொடர்பில் 2.18 சதவீத வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.    
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா தப்பிச்சன் 40 வந்திட்டுது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா தப்பிச்சன் 40 வந்திட்டுது. :lol:

எதுக்கும் ஆத்துக்காரரை கேட்டுப்பாருங்கோ அவர் இப்பவும் ஐடியா வச்சிருக்கிறாரோ தெரியேல்ல
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஆத்துக்காரரை கேட்டுப்பாருங்கோ அவர் இப்பவும் ஐடியா வச்சிருக்கிறாரோ தெரியேல்ல

அவருக்கும் 43 ஆகீட்டுது அப்பிடி ஐடியா இருக்கிறமாதிரி தெரியேல்ல. அப்பிடி ஏதும் இருந்தாலும் சொந்த செலவில எல்லாத்தையும் குடுத்து அனுப்பீடுவன் அண்ணோய்.

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் தொடர்ந்து தரித்து நிற்பது என்பது முடியாத காரியமாகத் தான் இருக்கிறது காரணம்...பிரச்சனைகள் உருவாகிக்கொள்வதற்கு திருமணம் செய்தவர்கள்,செய்யாதவர்கள் என்று இல்லை.
என்னைப் பொறுத்த மட்டில் தேவை அற்ற பிரச்சனைகள் எல்லாம் வந்து சேரும் இடம் முகநூல்.கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் கோவம் வராதவர்களுக்கே வந்து சேர்ந்துவிடுகிறது..அந்தக் கோவத்திலிருந்து ஆரம்பித்து நட்புக்களுக்கிடையில் அன்பாக, பழகுபவர்களுக்கிடையில் கூட பிரிவினைகளை உண்டு பண்ணிவிடுகிறார்கள்.
எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்ற ஒன்று இருக்காமல் இருக்காது ஆனால் அந்த தீர்வு சுய நலம் சார்ந்ததாக ஒரு தலைப் பட்சமானதாக இருக்க கூடாது.

பொழுது போக்கிற்காக நாலுவகை கதைகளையும் சொல்லிக் கொண்டு இருந்துட்டு, ஒருத்தி வந்து திடீர் என்று ஒரு படத்தை போட்டு மூன்றெத்து சொல்லைச் சொன்னால் அதன் பின்,தொடர்ந்து பேசுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாத நிலையில் தான் இருக்க வேண்டி இருக்கிறது..

பிரிவினைகளை ஏற்படுத்துவற்கு முதல் காரணிகளாக இருப்பவர்கள் பெண்கள்.என்ட கண்ணால  கண்ட காட்சிகள் நிறைவே இருக்கிறது..இப்படியான உறவுகள் ஏற்படுத்தும் குழப்பங்களால் இயற்கையாகவே அரை,குறை உயிரோடு,வாழ்வோடு போராடிக் கொண்டு காலத்தை நகர்த்திக் கொண்டு இருப்பவர்களுக்கு மேலதிக மனத் தாக்கத்தை தான் இவ்வாறன உறவுகள் குடுக்கிறார்கள்.நட்புக்களுக்கு இடையில்,பிரிவுகள் ஏற்படுதற்கு ஆய்வுகள் மேற்கொண்டு தான் கண்டு பிடிக்க வேணும் என்று இல்லை.சாதரணமாக கொஞ்ச நேரம் போய் இருந்து ஒரு அழகான படத்தைப் போட்டுட்டு இருந்தாலே புரியும்.அதற்கு கணவன்,மனைவியாகவோ,இல்லைக்  காதலன்,காதலியாகத் தான் இருக்க வேணும் என்று இல்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கலியாணவீட்டுக்கு போனனான். பரவாயில்லாத சனம்......

ஒரு கொஞ்ச ஆக்களை எனக்கு தெரியவேயில்லை....நைசாய் விசாரிச்சு கொண்டு போன இடத்திலைதான் தெரிஞ்சுது....அவையள் பேஸ்புக் பிரண்ட்/சொந்தங்களாம்..... :o

 

கிளிஞ்சுது போ லம்பாடி லுங்கி  :lol:  :D

 

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் உங்கை கன சனத்துக்கு உரித்து சொந்தத்தை விட பேஸ்புக்கு சொந்தம் முக்கியமாய்ப்போச்சு  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கலியாணவீட்டுக்கு போனனான். பரவாயில்லாத சனம்......

ஒரு கொஞ்ச ஆக்களை எனக்கு தெரியவேயில்லை....நைசாய் விசாரிச்சு கொண்டு போன இடத்திலைதான் தெரிஞ்சுது....அவையள் பேஸ்புக் பிரண்ட்/சொந்தங்களாம்..... :o

 

கிளிஞ்சுது போ லம்பாடி லுங்கி  :lol:  :D

 

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் உங்கை கன சனத்துக்கு உரித்து சொந்தத்தை விட பேஸ்புக்கு சொந்தம் முக்கியமாய்ப்போச்சு  :(  :(  :(

அந்த பேஸ்புக் சொந்தங்கள் காப்பிலி,வெள்ளை.ரொமானியன்கள். அல்பேனியர்களாய் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறன் கு.சாமியன்னேய் .நம்ம சனம் ஊர் நாகபூசனியம்மனுக்கு போய்வர பஞ்சிபட்டு லண்டனிலேயே அம்மனை கொண்டு வந்தாச்சு,அதே போல்  ஊரில் குடும்ப உறவுகளே இரண்டு நம்பருக்கு குறைவாக இல்லாமல் உற்றமும் சுற்றமும் கலாதியாய் வாழ்ந்த சமூகத்தில் வாழ்ந்துவிட்டு இங்கு உங்களுக்கு விளங்கும் சொல்லவே வேண்டாம் பாவம் விட்டுவிடுங்கள். :D

                                                                                                                                                                                                     இந்த முக நூல் ஆரம்பத்தில் பிடிக்காவிட்டாலும் சுவிசிலும், கனடாவிலும், அவுசிலும்,ஊரிலும் சொந்தங்கள் அருகாமையில் இருப்பது போன்ற பினைப்பு இதற்க்கு வேறையாய் முகநூல் வைத்திருந்தால் நல்லது அல்லாவிடின் லைக் பன்னுங்க பிச்சைகாரர்களின் தொல்லைதான் முன்னுக்கு வரும். :lol:

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தங்கள் படங்களை விதம்,விதமாக எடுத்துக் கொண்டு வந்து போட்டு மற்வைக்கு எடுப்புக் காட்டிக் கொண்டு இருக்கிறவைக்கு,யாலியாக இருக்க  விரும்பிறவைக்கு முகநூல் போன்றவை மிகவும் நல்லது போன்று இருக்கும்...மனிதன் இருக்கும் மட்டும் சந்தோசமாக வாழத் தான் வேண்டும் இல்லை என்று சொல்ல வில்லை...எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது தானே..
சில,பல வேண்டாத விடையங்களை காணும் போது,இது என்ன ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் அதிலிருந்து நாங்கள் அவர்களுக்கு பட்டிக் காடுகளாத் தான் தெரிவோம்.இப்படி நிறையப் பிரச்சனைகள் எழும் இடம் முகநூல்..எல்லாம் நாம் நம்பிக் கொள்பவர்கள் செய்யும் கைங்கரியம்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை வாசிக்க

சிரிப்பதா

அழுவதா எனத்தெரியவில்லை

 

நமது வீட்டை நாமே திறந்துவிட்டுவிட்டு

அடுத்தவன் வீட்டுக்குள்ளும்  நாம் கண்டபடி உள்நுழைந்து

எமது வீட்டுக்குள்ளும் கண்டதையும்

எமது சிறுசந்தோசத்துக்காக(பொழுது போக்கு?) அனுமதித்துவிட்டு....

எல்லாம் இறுகியபின்

நாமும அனுபவித்து முடிந்தபின்

என்னை  மட்டும் இனி சுத்தமாக விடு என்றால்..........??

முடிகிற  காரியமா இது........?

எல்லாம் நம் கையில்தான் உள்ளது.  நாம் எதையும் அளவோடு பயன்படுத்தினால் எமக்கேன் பிரச்சனை வரப் போகிறது?  சொந்தங்களோடு உறவாடுவதற்கு இது உதவுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  ஸ்கைப் முகப்புத்தகம் போன்றவற்றின் மூலம் நாமும் ஊரில் இருப்பது போன்றதொரு உணர்வைத் தருகிறது.  அதைவிட, விடுப்புப் பார்ப்பதற்கு இது மிகவும் உதவுகிறது என்பதும் முக்கியம்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:    நாம்தான் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.  

மூன்று வருசத்துக்கு முன் பேஸ் புக் என்ற ஒன்று என்னிடம் இருந்திச்சு. பின் அதை வீட்டுக்காரி எடுத்துக் கொண்டா. கிட்டத்தில் என் பெயரை கூகுள் பண்ணியபோது என் பேஸ் புக் முகவரியும் வந்திச்சு. ஒரு பப்ளிக்காக என்ன விசயம் தெரியுது என்று பார்த்தேன். ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் நான் யாழ்ப்பணத்தில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையில் படித்ததாக வருகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

முக நூல் கணக்கிருந்தும் கணக்கில் எடுப்பதில்லை
அதனால் இதுவரை எந்தப்பிரச்சனையும் இல்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் அளவோடு பாவிச்சால் பிரச்சனை இல்லை கண்ட பாட்டுக்கு எல்லோரையும் மு.புத்தகத்தில் அட் பண்ணினால் பிரச்சனை தான்.அத்தோடு மு.புத்தகம் சொந்தக்காரார்கள்,நண்பர்கள் எங்கே போயினம்,வாறீனம் என விடுப்பு பார்க்கவும் உதவும்:D

  • கருத்துக்கள உறவுகள்

சில,சில விடையங்கள் அவை,அவைக்கு ஏற்பட்டால் மட்டுமே அதன் தாக்கங்கள் புரியும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.