Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காளை மாட்டைத் துரத்தும் கறவை மாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிளம்
காளை இது...
தலைக்கனம்
இருந்தது நேற்று வரை..!!
 
கண்கள் செய்த
சதியால்
சித்தம் குழம்பிய காளை..
காலை ஒன்றில்

சுபமுகூர்த்த வேளையொன்றில்
கறவை ஒன்றின்
கழுத்தில் ஏற்றியது நாண்.!!
 
அடுத்த நொடியே
காளையது...
நான் எனும்.. திமிரிழந்தது.
அடுத்த மணியில்
காளை எனும் உணர்விழந்தது.
அடுத்த நாளில்
அடிமாடாய் போனது
அதன் நிலை..!
 
காலக் கழிவினில்
அடிமாடு
நிலையும் கழிய

பூம்பூம் மாடாக..
கூடிப் பெருத்த கறவைக் கூட்டம்
கூட்டமாகிப் பெருகி நின்று
துரத்துது..!!
 
தனித்துவிட்ட
நேற்றைய காளை..
கிழடாகி
தோலுக்கும் தசைக்கும்
பெறுமதியற்று
சுடலை ஏகுது..!
 
இதுவே
கலியுகத்தில்
காளைகளாய்
திமிரெடுத்த உயிர்களின்
வாழ்க்கை எனும்
வட்டமாகும்..!!!
 
வேண்டுமா எனியும் இந்த நிலை..
புதிதாய் ஓர் விதி செய்வோம்..
பொலிகாளைகளாய் ஆனாலும் ஆவோமே..
கறவைக்கு அடிமாடாய்
ஆகோம் எனும்
உறுதி செய்வோம்..! :lol::)
 

Spoiler
(இன்றைய சம்சாரிகளின் வாழ்க்கை வட்டத்தை அவதானித்ததில் இருந்து ஓர் கற்பனை.) :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கையோ நல்லா அடிவாங்கியிருக்கு  போல இந்த காளை....!

  • கருத்துக்கள உறவுகள்

காயடிபட்ட காளையின் ஓலம்

  • கருத்துக்கள உறவுகள்

காளையரே என்னாச்சு? :D

  • கருத்துக்கள உறவுகள்

காயடிபட்ட காளையின் ஓலம்

 

doubt.png :D  :lol:  :icon_idea:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ நல்லா அடிவாங்கியிருக்கு  போல இந்த காளை....!

 

நாங்க காளையில்ல... சிங்கம். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். :lol:

 

அப்புறம்.. இது ஊரில ஒருத்தர் காளைன்னு சுற்றிக்கிட்டு திரிஞ்சாரு..

 

இப்ப என்னடான்னா.. பொண்டாட்டி கறவை மாட்டுக்கு பயந்து பம்பிக்கிட்டு திரியுறாரு..! அவரை கண்டம்.. (யாழிலும் அவரைப் போல பலர் இருக்கினம்.. அதை வெளில சொல்ல பயந்து பம்பிக்கிட்டு திரியினம் என்பதும் எங்களுக்குத் தெரியும்).. சும்மா கிறுக்கிவிட்டம். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கறவை மாடுகளில் பால் கறக்க சக்தியற்ற‌ காளையின் புலம்பல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறவை மாடுகளில் பால் கறக்க சக்தியற்ற‌ காளையின் புலம்பல்

 

கறவை மாடுகளில் பால் கறக்க.. சக்தி தேவையில்லை. பால் கறக்கும் உபகரணம் இருந்தால் போதும். நீங்கள் இன்னும் கற்கால சிந்தனையில் இருக்கிறீர்கள் போலுள்ளது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க காளையில்ல... சிங்கம். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். :lol:

 

அப்புறம்.. இது ஊரில ஒருத்தர் காளைன்னு சுற்றிக்கிட்டு திரிஞ்சாரு..

 

இப்ப என்னடான்னா.. பொண்டாட்டி கறவை மாட்டுக்கு பயந்து பம்பிக்கிட்டு திரியுறாரு..! அவரை கண்டம்.. (யாழிலும் அவரைப் போல பலர் இருக்கினம்.. அதை வெளில சொல்ல பயந்து பம்பிக்கிட்டு திரியினம் என்பதும் எங்களுக்குத் தெரியும்).. சும்மா கிறுக்கிவிட்டம். :D:)

 

 

 

நீங்கள் என்ன கதை விடுறீங்கள் ,  நாங்கள் எங்கை பம்மிக் கொண்டு திரியிறம். அதுவும் பட்டப் பகலில் 13 : 38 க்கு பம்பலாய் கணணியில் தட்டிக் கொண்டிருக்கிறம் தெரியேல்லையா. சும்மா சுவுன்ட் விடாதைங்கோ , மனிசி எழும்பப் போகுது...! :huh::)

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சுவுன்ட் விடாதைங்கோ , மனிசி எழும்பப் போகுது...! :huh::)

 

ஆமா>>...... அப்புறம் காளைஎல்லாம் கறவையாகிவிடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா>>...... அப்புறம் காளைஎல்லாம் கறவையாகிவிடும்

 

கறவை எல்லாம் காளை ஆகிவிடும். இதைத்தான் மறுதலை.. பம்முதல்.. என்பார்களோ. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கறவை எல்லாம் காளை ஆகிவிடும். இதைத்தான் மறுதலை.. பம்முதல்.. என்பார்களோ. :D:lol:

 

கறவையும் காளையும் பம்மிச்சென்றால் பிறகென்ன......கன்று தான் ....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறவையும் காளையும் பம்மிச்சென்றால் பிறகென்ன......கன்று தான் .... :D

 

அட இதுக்கும் பம்முதல் தானா பெயர். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் சதி செய்யுது எண்டால் மூளைக்கு எங்கை போச்சுது புத்தி? இதுக்குத்தான் சொல்லுறது தாய்தகப்பன்/ பெரியவர்கள் பேசி செய்து வைக்கோணுமெண்டு :icon_idea:  இதுக்கை இப்ப டேட்டிங் டாட்டிங் வேறை :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

காலக் கழிவினில்

அடிமாடு

நிலையும் கழிய

பூம்பூம் மாடாக..

கூடிப் பெருத்த கறவைக் கூட்டம்

கூட்டமாகிப் பெருகி நின்று

துரத்துது..!!

 

 

கவிஞர் மிகவும் மனம் நொந்துபோய் இக்கவியை எழுதியுள்ளார் போலுள்ளது. :o

 

Spoiler

பிற்குறிப்பு:

அந்தக் காலங்களில் நாங்கள் கன்றுக் குட்டியாக இருக்கேக்கையே கறவை மாடுகளைக் கணக்குப்பண்ணின ஆட்களாக்கும் :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண் சதி செய்யுது எண்டால் மூளைக்கு எங்கை போச்சுது புத்தி? இதுக்குத்தான் சொல்லுறது தாய்தகப்பன்/ பெரியவர்கள் பேசி செய்து வைக்கோணுமெண்டு :icon_idea:  இதுக்கை இப்ப டேட்டிங் டாட்டிங் வேறை :lol:  :D

 

தேடிப் பிடிச்சால் என்ன.. தேடாமல் கட்டி வைச்சால் என்ன.. கறவை கறவை தான். அது அதின்ர குணத்தை காட்டாமல் போகாது. :lol::icon_idea:

கவிஞர் மிகவும் மனம் நொந்துபோய் இக்கவியை எழுதியுள்ளார் போலுள்ளது. :o

 

Spoiler

பிற்குறிப்பு:

அந்தக் காலங்களில் நாங்கள் கன்றுக் குட்டியாக இருக்கேக்கையே கறவை மாடுகளைக் கணக்குப்பண்ணின ஆட்களாக்கும் :D

 

ஊர் உலக.. நடப்பை பார்த்து நொந்து தான்.. எழுதினது. :lol:

கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட எல்லாம் யாழ் உறவுகளுக்கும் நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிளம்

காளை இது...

தலைக்கனம்

இருந்தது நேற்று வரை..!!

 

கண்கள் செய்த

சதியால்

சித்தம் குழம்பிய காளை..

காலை ஒன்றில்

சுபமுகூர்த்த வேளையொன்றில்

கறவை ஒன்றின்

கழுத்தில் ஏற்றியது நாண்.!!

 

அடுத்த நொடியே

காளையது...

நான் எனும்.. திமிரிழந்தது.

அடுத்த மணியில்

காளை எனும் உணர்விழந்தது.

அடுத்த நாளில்

அடிமாடாய் போனது

அதன் நிலை..!

 

காலக் கழிவினில்

அடிமாடு

நிலையும் கழிய

பூம்பூம் மாடாக..

கூடிப் பெருத்த கறவைக் கூட்டம்

கூட்டமாகிப் பெருகி நின்று

துரத்துது..!!

 

தனித்துவிட்ட

நேற்றைய காளை..

கிழடாகி

தோலுக்கும் தசைக்கும்

பெறுமதியற்று

சுடலை ஏகுது..!

 

இதுவே

கலியுகத்தில்

காளைகளாய்

திமிரெடுத்த உயிர்களின்

வாழ்க்கை எனும்

வட்டமாகும்..!!!

 

வேண்டுமா எனியும் இந்த நிலை..

புதிதாய் ஓர் விதி செய்வோம்..

பொலிகாளைகளாய் ஆனாலும் ஆவோமே..

கறவைக்கு அடிமாடாய்

ஆகோம் எனும்

உறுதி செய்வோம்..! :lol::)

 

Spoiler
(இன்றைய சம்சாரிகளின் வாழ்க்கை வட்டத்தை அவதானித்ததில் இருந்து ஓர் கற்பனை.) :lol:

 

 

காளை  ஒன்று 

கண்ணடி பட்டது

கட்டிக்கொண்டது

 

கவனமாக

கட்டுண்டு வாழ்ந்ததில்

கருவில் நாலு 

கடவுளார் தந்தது

 

காளை

கணவனாகி

காலத்துக்கு ஏற்ப தகப்பனாகி

கனவானாய்

கை எடுத்துக்கும்பிடும்  குடும்பதலைவனாகி

கரகோசம் வாங்கி  நிற்க...

 

காளை  கண்ணடியால்

கட்டிக்கிட்டதே

காரணமாம்...........

 

Spoiler
(இன்றைய இம்சாரிகளின் வாழ்க்கை வட்டத்தை அவதானித்ததில் இருந்து ஓர் கற்பனை.)  :lol: 

கட்டழகை காட்டி வர

கண்டு மயங்கி போனதென்ன

மயங்கி விழி வீழந்ததினால்-நீ

மண்டி யாட்டு அழுவதென்ன ..?


கட்டழகை காட்டி  வர

கண்டு மயங்கி போனதென்ன .?

மயங்கி விழி வீழ்ந்ததினால் -நீ

மண்டியிட்டு போனதென்ன ..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. கன்றுகள் மேலேயே பெலிட்டை பாவிக்கிற காளை நீங்க. கறவைக்கு.. மூக்கணாங்கயிறு போட்டிருக்கமாட்டீங்கன்னு நம்பாமல் இருக்க முடியாது. ஆனால் இன்றைய காளைகள் அப்படியல்ல. சுதந்திரமான அன்பை புரிந்துணர்வை எதிர்பார்த்துப் போய்.. இறுதியில் அடிமாடாய்.. பூம்பூம் மாடாகும் நிலை..! :)

 

வன்னி மைந்தன் அண்ணா.. மீண்டும் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி..! :)


இருவரின் கவி வரிகளுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும். :icon_idea:

நன்றி நெடுக்கால போவானே ..ஆமா நீங்க  மட்டும் எப்படி  இங்க தொடர்ந்து ..?

 

எல்லாம் அரசியல்  போல இருக்கே ... :D :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கால போவானே ..ஆமா நீங்க  மட்டும் எப்படி  இங்க தொடர்ந்து ..?

 

எல்லாம் அரசியல்  போல இருக்கே ... :D :D

 

அது ஒன்றும் பெரிய விடயமல்ல. யாழை ஆதரிக்கிற உறவுகள் எப்போதும் யாழோடு இருக்காங்களே. :)

 

அரசியலுக்க அரசியல்.. கவிதைக்க கவிதை.. இப்படி இருந்திட்டா.. ஒரு பொல்லாப்பும் இல்லை. ஒன்றுக்க மற்றதைக் கலக்க வெளிக்கிட்டால் தான் பிரச்சனை. :lol::D

அப்டிங்களா சார் புரிஞ்சு போச்சு ..அப்பா நான் நினைக்கிறான் ..இன்னியோட நம்ம ஆயுள் முடிஞ்சு போச்சு

எண்டு.,..இவங்களை நினைக்க

 

லண்டனுக்கு இளையராஜா கமல் வந்த போது ஒண்டு சொன்னார் ..

 

 

நீ என் முதுக சொறிய  நான்  உன் முதுக சொறிய ..எண்டு அது தான் நினைவுக்கு வருது ..

யாழ்தனது பழமையை மாற்றாதவரை   அது மேல் செல்ல இயலாது ..என்னையும் அடக்கி  தாங்க பார்த்தாங்க  ஆன  முடியல

பாய்ச்சல்கள் தொடந்து கிட்டே இருக்கு ..

 

 

 

சுதந்திரம்  இல்ல அத்தேசம் சுடுகாட்டுக்கு சரிங்க ..எனக்கு மட்டும் இங்க இருந்த பல அறிவார்ந்த பலர் எனக்கு கிடைச்சிருந்தா முதல் தர முதலாளி வர்கத்தில

கருத்துக்களம் மேலும் சில காலமா செல்ல காணமல் போயிடும் ..

 

நீங்க யாரா இருந்திடாலும் போங்க ஆணாஅன்று நீ செய்தவைகள் இன்றும் என் நினைவுகளில் உன்னை மீட்டிய படி அதற்கு மீள உந்தனுக்கு நன்றிகள்

காளை என்றால் ஸ்ரோங்கா இருக்க வேணும். ( எப்பவும் ) !!

 

My Way or HWY   :)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்டிங்களா சார் புரிஞ்சு போச்சு ..அப்பா நான் நினைக்கிறான் ..இன்னியோட நம்ம ஆயுள் முடிஞ்சு போச்சு

எண்டு.,..இவங்களை நினைக்க

 

லண்டனுக்கு இளையராஜா கமல் வந்த போது ஒண்டு சொன்னார் ..

 

 

நீ என் முதுக சொறிய  நான்  உன் முதுக சொறிய ..எண்டு அது தான் நினைவுக்கு வருது ..

யாழ்தனது பழமையை மாற்றாதவரை   அது மேல் செல்ல இயலாது ..என்னையும் அடக்கி  தாங்க பார்த்தாங்க  ஆன  முடியல

பாய்ச்சல்கள் தொடந்து கிட்டே இருக்கு ..

 

சுதந்திரம்  இல்ல அத்தேசம் சுடுகாட்டுக்கு சரிங்க ..எனக்கு மட்டும் இங்க இருந்த பல அறிவார்ந்த பலர் எனக்கு கிடைச்சிருந்தா முதல் தர முதலாளி வர்கத்தில

கருத்துக்களம் மேலும் சில காலமா செல்ல காணமல் போயிடும் ..

 

நீங்க யாரா இருந்திடாலும் போங்க ஆணாஅன்று நீ செய்தவைகள் இன்றும் என் நினைவுகளில் உன்னை மீட்டிய படி அதற்கு மீள உந்தனுக்கு நன்றிகள்

 

அண்ணே.. இந்தக் கருத்தப் பார்க்கிறப்போ.. யாழும் மாறேல்ல.. நீங்களும் மாறேல்லேன்னு தான் தோனுது. :):icon_idea:

காளை என்றால் ஸ்ரோங்கா இருக்க வேணும். ( எப்பவும் ) !!

 

My Way or HWY   :)  

 

காளைகள் பல.. கலியாணத்து அன்றே கறவைகளின் மேக்கப்பில்.. கவுந்து போய்விடுகின்றனவே.அப்புறம் எங்க.. ஸ்ராங்காகிறது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே.. இந்தக் கருத்தப் பார்க்கிறப்போ.. யாழும் மாறேல்ல.. நீங்களும் மாறேல்லேன்னு தான் தோனுது. :):icon_idea:

 

 

ஒரு முடிவோடதான்

மீளவும்  கால் பதிக்கிறார் போலுள்ளது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.