Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரம் குறள் ஆற்றுவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சிறியண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி...பாராட்டுக்கள்...தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி...பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரமென்பது எதிரி சரணடையுங்கால்

போரறம் காத்து நிக்கும் செயல்.

போரில் சரணடையும் எதிரிகளையும் ஜெனிவா விதிகளின் படி காத்து நிற்பதுவே மாவீரத்தின் இலக்கணமாகும்.

Edited by goshan_che

குறள் 2

 

தன்னுயிர்  விடும் போதும் தோழன்  

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வீரம் .

 

தன் சாவை கூட பொருள் படுத்தாது தம் தோழர்களை பாதுகாப்பா அனுப்பும் பண்பை கொண்டு இருத்தவர்கள் புலி வீரர் .

  • கருத்துக்கள உறவுகள்

குறள் 2

 

வெஞ்சினம் கொண்டு வேங்கைகள் ஆனோர்

அஞ்சினும் அகன்று ஓடார்

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மாவீரர் குறள்கள்.
யாழ் களத்திலும், ஜூனியர் வள்ளுவர்கள் உள்ளது பெருமையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறள் - 3

 

இருள்புகு ஒளியாய் தவ

கரும் புலி உடலொளிர்வர் தெய்வ

 

உரை: தெய்வத்துக்கு சமனாகி.. இருளை அகற்றும் ஒளியாக தவத்திரு கரும்புலிகள் தங்கள் உடல்களால் ஒளி ஏற்றுவர்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மாவீரர் குறள்கள்.

யாழ் களத்திலும், ஜூனியர் வள்ளுவர்கள் உள்ளது பெருமையாக உள்ளது.

 

பல யாழ் கள கவிஞர்கள் இதில் பங்கேற்காமை ஏமாற்றம் அளிக்கிறது.  வருகிறார்கள் போகிறார்கள்.. இங்கு பங்களிக்க தயங்குகிறார்கள்.. ஏனோ..???! :(:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பல யாழ் கள கவிஞர்கள் இதில் பங்கேற்காமை ஏமாற்றம் அளிக்கிறது.  வருகிறார்கள் போகிறார்கள்.. இங்கு பங்களிக்க தயங்குகிறார்கள்.. ஏனோ..???! :(:rolleyes::icon_idea:

 

வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறோம்????

 

புதிய முயற்சி

 

1,

மெய்யழி மேன்மை கொள் விளக்கு

இமை துஞ்சாமாந்தர் இலக்கு

 

( தன்னைத் தானே அழித்து தன்னை சூழ உள்ள பகுதிக்கு வெளிச்சத்தைத்தரும் மெழுகுவர்த்திக்கு ஒப்பானதாக ஈழமென்னும் இலக்கு நோக்கிய பயணத்தில் உறங்காமல் தம்மை ஆகுதியாக்கி தான் சார்ந்த சமூகத்திற்கு விடியல் என்னும் வெளிச்சத்தை தருவதாகும்)

 

 

2,

தம்மோர் குலம் போற்றத்துலங்கும்

தமை ஈந்தார் வாழ்வு

 

( தான் சார்ந்த சமூகத்திற்காக தன்னை ஆகுதியாக்கிவரின் தியாகத்தை அந்தச் சமூகமானது   மேன்மையுடையதாகவும் வணக்கத்திற்குரியதாகவும் கொள்ளும்)

 

3.

மண்ணுக்கு மணம் தந்தார் மாண்பு மார்

புண்ணேறி மாலைகள் சூடும்

 

( மண்ணை நேசித்து அதனைச் சுவாசித்து அதற்காகவே வாழ்ந்து அதன் நிமித்தம் மார்பில் காயப்பட்டு சரியும்போதும் அந்த மண்மீதாக கொண்ட காதல்  அந்த மாவீரத்திற்கு மாலை சூடும்.)

  • கருத்துக்கள உறவுகள்

வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறோம்????

 

புதிய முயற்சி

 

இது, புதிய முயற்சி அல்ல... வல்வை சகாறா.

அனுபவ முதிர்ச்சி. :)

  • கருத்துக்கள உறவுகள்

பல யாழ் கள கவிஞர்கள் இதில் பங்கேற்காமை ஏமாற்றம் அளிக்கிறது.  வருகிறார்கள் போகிறார்கள்.. இங்கு பங்களிக்க தயங்குகிறார்கள்.. ஏனோ..???! :(:rolleyes::icon_idea:

 

தவறு உங்கள் பக்கம் தான்.... நெடுக்ஸ்.

ஒரு திரி, ஆரம்பிக்கும் போது... பார்ப்பவர்கள் அதிகம்.

அந்த, உற்சாகத்தில்... கருத்து எழுதுபவர்கள் அநேகம்.

அதிலும், நீங்கள் கட்டுப்பாட்டை... அறிவித்ததால்,

இதனை, விட நன்றாக... ஒன்றை எழுதலாமே...

என்று, எழுத வந்ததை... மறந்து விட்டு போய்விடுவார்கள். :)

 

தாராள மயமாக்கல் கொள்கையை....

எழுத்துத் துறையில், நிச்சயம் அமுல் படுத்த வேண்டும்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குறள் 2

 

வெஞ்சினம் கொண்டு வேங்கைகள் ஆனோர்

அஞ்சினும் அகன்று ஓடார்

 

சுமோ,

குறள் எழுதினால்... போதாது.

அதற்கு, பொழிப்புரையும் எழுதினால் தான்....

எம்மைப் போன்ற... படிப்பறிவற்ற, பள்ளிக்கூடம் போகாத, பாமர மக்களுக்கு, விளங்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன்.

நல்லதொரு முயற்சி...

பாராட்டுக்கள்...

தொடருங்கள் ....  

  • கருத்துக்கள உறவுகள்

நெய்விளக்கேற்றினால் அணையுமே! அணையாது மெய்விளக்கேற்றினார் புகழ்! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ எண்ணெய் விட்டு ஏற்றிடும் விளக்கானது விரைவில் அணைந்து விடும்(எண்ணெய் முடிந்தலோ அல்லது காற்றினாலோ அல்லது நீராலோ) ஆனால்( மெய்)உடலையே விளக்காக்கி ஒளிதந்தவர்களின் புகழ் எக்காலத்திலும் அழியாது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறை அழிக்கினும் கனன்று சுடர்தரும் நெஞ்சறை அழியாது காண்!!! ------------------------------------------------------------------------------------------------------------------------------கல்லறைகளை அழித்தாலும் எம்நெஞ்சங்களில் எரியும் விடுதலைத் தீயினால் நாம் ஏற்றிடும் தீபங்களை அழிக்க முடியாது.

வரிகளைப் 2 வரிகளாகப் பரித்து எழுதினாலும் பதிவேற்றும் போது ஒன்றாகச் சேர்ந்து விடுவதை எவ்வாறு தடுக்கலாம்??????

                  தியாகத்தை மெய்யாக்கி தம் மெய்யை
                  தியாகம் செய்தார் வாழ் உலகு
 

  • கருத்துக்கள உறவுகள்

தோன்றில் மாவீரர் போல் தோன்றுக

அஹிதலில் தோன்றிலில் தோன்றாமை நன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.