Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைதிரியின் புதிய அமைச்சரவையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவாராம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Ranil_maithiree-350-seithy.jpg

புதிய அமைச்சரவையின் பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

   

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை நிறுவ உள்ளதாகவும் தற்போதைய அமைச்சரவை கலைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இன்று அல்லது நாளை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வார் எனவும் புதிதாக ஒருவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://seithy.com/breifNews.php?newsID=124281&category=TamilNews&language=tamil

என்னத்தை எதிர்பார்கிறது? அதை தன் அவங்கள் ஆரம்பத்திலேயே சொல்லிண்ட்டங்களே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணே தனிய நின்று புலம்புறீங்க. சாணக்கியர் சம்பந்தனோட கலந்தாலோசிட்டு புலம்புறது. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தரும் கலைஞர் றேஞ்சுக்கு வந்திட்டார் போல   :D

  • கருத்துக்கள உறவுகள்

மைதிரியின் புதிய அமைச்சரவையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவாராம்!

 

மைத்திரி -: சொன்னபடி பிரதமர் பதவியை  தந்திட்டன்

அதனால ஐனாதிபதி ஆட்சியை ஒழித்தபின்னர் பிரதமர் பதவியைக்கேட்கப்படாது

அது எனக்குத்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியின் ரகசிய ஒப்பந்தப்படி சுமந்திரனுக்கும் மந்திரி பதவி உண்டு.

இந்த தேர்தலில் சம்பந்தர் ஐயாவின் சாணக்கியம் பல விடயங்களில் பயன்பட்டுள்ளது .தேர்தலை தமிழர்கள் புறக்கணித்திருந்தால் சர்வதேசம் தமிழர்களை கைவிட்டிருக்கும் .மாறுதல்கள் வரும் சிறிய ஆறுதல்களை தமிழருக்கு தரும் மைத்திரியின் வெற்றி தெரிந்தவுடன் ,மைத்திரி சம்பந்தர் ஐயாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கூட்டணி முயற்சி செய்ய வேண்டும்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கூட்டணி முயற்சி செய்ய வேண்டும்.

இந்த விடயம் ஏற்கனவே கதைக்கப்பட்டது ,TNA இதற்கும் முன்னுரிமை கொடுக்கும் ,சுமந்திரன் சில வாரங்களுக்கு முன் கனடா வந்தபொழுதும் இது விடயமாக கதைத்தனாங்கள் .

சட்டத்தரணி தவராசா விடமும் இது பற்றி கதைத்துள்ளோம் .

ஏதோ நடப்பவை நல்லவையாகவிருக்க வேண்டும். சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கூட்டணி முயற்சி செய்ய வேண்டும்,வன்னி மக்கள் வறுமைக்கோட்டுக்கு வெளியே வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப 06.21 க்கு நடந்த பதவியேற்பில உந்த முஸ்லிம் காங்கிரஸ் அவன் இவன் எண்டு தேவையில்லாத ஆக்களுக்கெல்லாம் இழுத்துப் போட்டு பேர் சொல்லி நன்றி சொன்ன மைத்திரி த.தே.கூட்டமைப்புக்கு ஒரு வார்த்தை சொல்லேல்ல .. நன்றி கெட்ட மத்திரி ..

:D :d :D

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஏற்பு விழா முடிந்து வெளியில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி சொன்னதன் மூலம் நீங்க எல்லாம் என்னோட செருப்பு மாதிரி வீட்டுக்கு வெளிய நிக்க வேண்டிய ஆக்கள் என்று சொல்லாமல் சொல்லிட்டார் ....:D

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஏற்பு விழா முடிந்து வெளியில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி சொன்னதன் மூலம் நீங்க எல்லாம் என்னோட செருப்பு மாதிரி வீட்டுக்கு வெளிய நிக்க வேண்டிய ஆக்கள் என்று சொல்லாமல் சொல்லிட்டார் .... :D

 

அவ்வாறு நினைத்தால்

இப்போதைக்கு தேர்தல் வராது என்று அர்த்தம்

 

அடுத்து வரும் தேர்தலில் 

ஆட்சியை நிர்ணயிப்பவர்களாக தமிழர்களே இருக்கப்போகிறார்கள் என்பதை புரிந்து கொண்டிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஏற்பு விழா முடிந்து வெளியில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி சொன்னதன் மூலம் நீங்க எல்லாம் என்னோட செருப்பு மாதிரி வீட்டுக்கு வெளிய நிக்க வேண்டிய ஆக்கள் என்று சொல்லாமல் சொல்லிட்டார் .... :D

 

 

இப்ப 06.21 க்கு நடந்த பதவியேற்பில உந்த முஸ்லிம் காங்கிரஸ் அவன் இவன் எண்டு தேவையில்லாத ஆக்களுக்கெல்லாம் இழுத்துப் போட்டு பேர் சொல்லி நன்றி சொன்ன மைத்திரி த.தே.கூட்டமைப்புக்கு ஒரு வார்த்தை சொல்லேல்ல .. நன்றி கெட்ட மத்திரி ..

:D :D :D

 

 

பிரிட்டிஷாரிடம் இருந்தான சுதந்திரத்துக்கு முன்பிருந்தே.. உந்த தமிழ் அப்புக்காத்து அரசியல்வாதிகளுக்கு சிங்களவனுக்கு செருப்பாய் இருந்து தேஞ்சு போறதில்... ஒரு பெரிய போலிக் கெளரவம் உள்ளது. அதற்காகவே தமிழ் மக்களின் உரிமைகளை தாரைவார்த்திருக்கிறார்கள். அதன் வழியில் வந்த.. சம்பந்தன்.. சுமந்திரன் வகையறாக்களிடம் வேற எதனை எதிர்பார்க்க முடியும்.

 

மக்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வாக்களிக்க.. சம்பந்தன் வகையறாக்கள் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டு தமிழ் மக்களின் கொஞ்ச நெஞ்ச அபிலாசைகளையும்.. மைத்திரியின் காலடியில் கைவிட்டு சரணாகதி அடைவதை தவிர அங்கின ஒரு சாணக்கியமும் இல்லை..!!

 

இதை தான் ஊரில்.. வாய் பார்த்தவள்.. வறுத்துக் குத்தினாளாம் என்பார்கள். :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறு நினைத்தால்

இப்போதைக்கு தேர்தல் வராது என்று அர்த்தம்

அடுத்து வரும் தேர்தலில்

ஆட்சியை நிர்ணயிப்பவர்களாக தமிழர்களே இருக்கப்போகிறார்கள் என்பதை புரிந்து கொண்டிருப்பார்

அவர் தான் சொல்லிட்டாரே தனக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாக ஆசை இல்லை என்று

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் சொல்லிட்டாரே தனக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாக ஆசை இல்லை என்று

 

அடுத்த தவணைக்கு ஜனாதிபதி ஆக்கல்லை என்றால்.. அப்ப 5 வருடங்கள் பதவியில் இருப்பாரோ. அப்ப 100 நாள் மட்டும் தான்.. ஜனாதிபதி எண்டது.. விடுகதையா...??! :lol::icon_idea::rolleyes:

 

இப்பொழுது தமிழீழம் அகன்று விட்டது. அதில் முஸ்லீம்களும் இணைந்து விட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது தமிழீழம் அகன்று விட்டது. அதில் முஸ்லீம்களும் இணைந்து விட்டார்கள்

பேசாமல் ஜிகாத் தொடங்கி விடலாம் போலிருக்கே! 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தமிழீழம் அகன்று விட்டது. அதில் முஸ்லீம்களும் இணைந்து விட்டார்கள்

இதை exaggerated interpretation என்று சொல்லலாம்! மகிந்தவை வீட்டுக்கனுப்பத் தமிழர்கள் வாக்களித்தார்கள். முஸ்லிம் பொதுமக்களுக்கும் அந்த ஆசை இருந்தாலும், கடைசி நேரம் வரை மகிந்தவிடம் முஸ்லிம் தலைமை உரிக்கப் பார்த்து இயலாமல் கட்சி தாவினார்கள். இந்த இணைவு தேர்தலுக்கு மட்டுமானது எண்டு யாருக்கும் விளங்கும் போது நீங்களும் இன்னும் சிலரும் இதை ஏதோ சுயாட்சி, தனி ஈழத்திற்கிடையிலான தேர்வு மாதிரிப் பார்ப்பது எனெண்டு விளங்கவில்லை. இந்த தேர்தல் வெற்றிக்கு ஆங்கில சிங்கள ஊடகங்களில் பின்னோட்டம் போடும் மகிந்த எதிர்ப்பாளர்கள் கூட "ஈழம் கேட்டால், அடிப்பம்,மூடிக் கொண்டிருங்கோ""என்று தான் எழுதுகிறார்கள்! இது எதைக் காட்டுது? உங்களுக்கு மட்டும் ஏன் இது ஈழ நிராகரிப்பாகத் தெரியுது எண்டு சொன்னால் நாங்களும் தெளிவடையலாமே?

இதை exaggerated interpretation என்று சொல்லலாம்! மகிந்தவை வீட்டுக்கனுப்பத் தமிழர்கள் வாக்களித்தார்கள். முஸ்லிம் பொதுமக்களுக்கும் அந்த ஆசை இருந்தாலும், கடைசி நேரம் வரை மகிந்தவிடம் முஸ்லிம் தலைமை உரிக்கப் பார்த்து இயலாமல் கட்சி தாவினார்கள். இந்த இணைவு தேர்தலுக்கு மட்டுமானது எண்டு யாருக்கும் விளங்கும் போது நீங்களும் இன்னும் சிலரும் இதை ஏதோ சுயாட்சி, தனி ஈழத்திற்கிடையிலான தேர்வு மாதிரிப் பார்ப்பது எனெண்டு விளங்கவில்லை. இந்த தேர்தல் வெற்றிக்கு ஆங்கில சிங்கள ஊடகங்களில் பின்னோட்டம் போடும் மகிந்த எதிர்ப்பாளர்கள் கூட "ஈழம் கேட்டால், அடிப்பம்,மூடிக் கொண்டிருங்கோ""என்று தான் எழுதுகிறார்கள்! இது எதைக் காட்டுது? உங்களுக்கு மட்டும் ஏன் இது ஈழ நிராகரிப்பாகத் தெரியுது எண்டு சொன்னால் நாங்களும் தெளிவடையலாமே?

ஜஸ்டின் வேலையில் ரொம்ப பிசி போல ,யாழில் பல பதிவுகள் வாசிக்கவில்லை போலிருக்கு .எதிரணி கூட்டணி பற்றிய செய்தி வந்த நாட்கள் முதல் நான் எழுதிய பதிவுகளை முடிந்தால் ஒரு முறை வாசிக்கவும்.

இந்த தேர்தல் பற்றி மிக தெளிவாக எழுதிய சிலரில் நானும் ஒருவன் .

 

முன்னர் இல்லாத பழியை .ஒருவர் மீது சுமத்தி பின்னர் கொலை செய்துதான் வந்தோம் இப்போ நாங்கள் எழுதாததை சொல்லாதை எழுதியதாக சொல்லி முடக்கிவிட நடக்கும் முயற்சியா ?

யாழில் பதிவுகள் அப்படியே இருக்கு ஜஸ்டின் நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும் .

 

மேலே நான் பதிந்த கருத்து இலங்கை படத்தில் வாக்குகள் விழுந்திருக்கும் வரைபை வைத்து முன்னர் எப்போதும் இல்லாத வாறு தமிழ் ஈழம் புறம்பாக தெரிகின்றது .

 

நான் எழுதாத ஒன்றை நீங்களே கற்பனை பண்ணி அதற்கு பதில் வேறு எழுதியிருக்கின்றீர்கள் .

 

என்ன நடக்கின்றது என்ன எழுதினேன் என்று தெரியாமல் பச்சை வேறு விழுந்திருக்கு .கருத்தை பார்க்காமல் ஆளை பார்ப்பதால் வரும் வினை .

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தமிழீழம் அகன்று விட்டது. அதில் முஸ்லீம்களும் இணைந்து விட்டார்கள்

பெரிதாகி விட்டது என்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காணொளியை இணைக்க முடியுமாசுண்டல்.

அடுத்த தவணைக்கு ஜனாதிபதி ஆக்கல்லை என்றால்.. அப்ப 5 வருடங்கள் பதவியில் இருப்பாரோ. அப்ப 100 நாள் மட்டும் தான்.. ஜனாதிபதி எண்டது.. விடுகதையா...??! :lol::icon_idea::rolleyes:

 

ஐந்து வருடங்களுக்கும் இவர் தான் ஜனாதிபதி.ஆனால்  நிறைவேற்று அதிகாரம் மட்டும் இவரிடம் இல்லை.முன்பு எங்கள் சித்தப்பு வில்லியம் கோபலாவ மாதிரி என்று நான் நினைக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.