Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தானே தலைவர் என்கிறார் மகிந்த – உடைகிறது சுதந்திரக் கட்சி

Featured Replies

தானே தலைவர் என்கிறார் மகிந்த – உடைகிறது சுதந்திரக் கட்சி JAN 11, 2015 | 16:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

SLFP-300x198.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே உள்ளதாகவும், தானே கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு டர்லி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவித்த அவர்,

”என்னுடன் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்று எண்ணிப் பாருங்கள்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நானே என்று 42 மத்திய குழு உறுப்பினர்கள் மீள உறுதி செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, பெரும்பான்மை வாக்குகள் மூலம், கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்‌ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றார்.

http://www.puthinappalakai.net/2015/01/11/news/2790

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை உடைக்கப் போய்.. இப்ப எல்லாரும் உடையினம். :lol::D

புலிகளை உடைச்சது ரணில். இப்ப இவர்களை உடைப்பதும் ரணில். எம்மை அழிக்க முடியாது என்று அராஜகம் செய்த இரண்டு கூட்டத்தை அழிச்ச பெருமை ரணிலுக்குத்தான் போகும். 

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு உள்வீட்டுக்க நிறைய பூதங்கள் உள்ளன. ஏலவே கட்சியை விட்டு செயலாளர் ஓடிவிட்டார். சஜித் பிரேமதாச.. கரு ஜெயசூரிய என்று உள்ளுக்குள் பல முரண்பாடுகள். சிறீலங்காவின் அரசியல் கேடுக்கெட்ட நிலையில் உள்ளது. அதனால் தான் தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய சூழல். இதில ரணில் வீழ்த்தினாராம்.. புடுங்கினாராம்.

 

அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்.. சோனியாவின் பழிவாங்கல் அயலுறவுக் கொள்கை.. சீனாவின் தென்மண்டல விரிவாக்கம்.. இதற்குள் பதுங்கிக் கொண்டு சொறீலங்கா புலிகளை இராணுவ ரீதியில் வீழ்த்தியது. ஆனால் புலிகளை அரசியல் ரீதியில் வீழ்த்த முடியவில்லை என்பதை சிங்களமே ஒத்துக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் உள்ளவரை புலிகளை அரசியல் ரீதியில் வீழ்த்த முடியாது.

 

புலிகள் தங்களை யாரும் அழிக்க முடியாது என்று இருந்த அமைப்பினரும் அல்ல. சில பேருக்கு புலி என்றாலே கிலி.

 

தேசிய தலைவர் 2008 மாவீரர் தின உரையில் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறினார். தமிழ் மக்களின் போராட்டம் எனி புலம்பெயர் மக்களின் கையில் என்று. புலிகள் ஒன்றும்.. கண்ணை மூடிக்கொண்டு போராட்டம் செய்யவில்லை. அவர்களுக்கு அவர்களின் பலம் பலவீனம் தெரியும். சம்பந்தன் போன்ற சர்வாதிகாரிகள் தான் புலிகளை தவறாக விளங்கி வைச்சுக் கொண்டு.. தவறான செய்திகளை ஊடகங்களுக்கும் வெளிநாட்டு தூதரகங்களுக்கும்.. வழங்கி வருகிறார்கள். சம்பந்தன் 81 வயசாகியும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமற்ற சுத்தச் சர்வாதிகாரியாக இருக்கிறார். அவர்களை விட புலிகள் எவ்வளவோ மேல். 

 

சிறீலங்கா மேற்கு நாட்டு இளைய தலைவர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேர்தலில் தோற்றால் கூட கட்சித் தலைமையை விட்டு ஒதுங்கும் பாங்கை பிரிட்டன் போன்ற மேற்கு நாட்டு அரசியலில் காண முடிகிறது. ஆனால்.. சம்பந்தன்.. ரணில்.. மகிந்த.. போன்றவர்கள்..????! தோல்வி மேல் தோல்வி கண்டாலும்.. பதவியை விட்டு இறங்க மறுக்கும் சர்வாதிகாரிகளாக இருக்கிறார்கள்.  இதனை போராளி அமைப்புக்களுக்கு பிரயோகிக்க முடியாது. அங்கு தலைமைத்துவம் என்பது ஒட்டுமொத்த போராளிகளின் இயக்க சக்தி. சனநாயக... அரசியல் கட்சிகளில் மக்களே அவற்றின் இயக்கும் சக்தி. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருக்கிற தேசிய அரசாங்கமும் சித்திரை மாசம் நாடளுமன்றத்தேர்தலுடன் எல்லாம் உடையும்.சந்திரிகா ஒருபக்கம் ரணில் ஒருபக்கம்,மகிந்த ஒருபக்கம்,என்று உடையும். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையைக் கைப்பற்ற சந்திரிகா போட்ட திட்டம்தான் இந்தக் கூட்டு .

புலிகளை உடைச்சது ரணில். இப்ப இவர்களை உடைப்பதும் ரணில். எம்மை அழிக்க முடியாது என்று அராஜகம் செய்த இரண்டு கூட்டத்தை அழிச்ச பெருமை ரணிலுக்குத்தான் போகும்.

சரிதான் தெனாலி புலிகளை அழிச்சது ரணில் தான் என்று ரணில் பெருமைப்படலாம். ரணிலின் சந்ததி பெருமைப்படலாம். ஆனால் ரணிலின் பேரனின் கொத்தடிமையாக உங்கள் பேரன் இருக்கப்போவதை எவ்வளவு ஜாலியாக யாழ்களத்தில் பெருமையடிக்கின்றீர்கள். அங்குதான் உங்களுக்குள் அசல் தமிழன் இருக்கிறான். உங்களுடன் நானும் இணைந்து கொள்ளுகின்றேன். ஏனென்றால் எனது பேரனும் ரணிலின் பேரனின் கொத்தடிமைதான். நானும் நீங்களும் ஒரு ஜாதி. அடிமை ஜாதி. ஜா ஜாலி. கொண்டாடுவோம் வாங்க.

சரிதான் தெனாலி புலிகளை அழிச்சது ரணில் தான் என்று ரணில் பெருமைப்படலாம். ரணிலின் சந்ததி பெருமைப்படலாம். ஆனால் ரணிலின் பேரனின் கொத்தடிமையாக உங்கள் பேரன் இருக்கப்போவதை எவ்வளவு ஜாலியாக யாழ்களத்தில் பெருமையடிக்கின்றீர்கள். அங்குதான் உங்களுக்குள் அசல் தமிழன் இருக்கிறான். உங்களுடன் நானும் இணைந்து கொள்ளுகின்றேன். ஏனென்றால் எனது பேரனும் ரணிலின் பேரனின் கொத்தடிமைதான். நானும் நீங்களும் ஒரு ஜாதி. அடிமை ஜாதி. ஜா ஜாலி. கொண்டாடுவோம் வாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருக்கும் கிழடுகள் ஒய்வு எடுக்காது விட்டால்...  :huh: சித்திரை மாசம் நாடளுமன்றத்தேர்தலுடன் தமிழ்த் தேசியக் கூட்டணியும் உடையும். :(

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான் தெனாலி புலிகளை அழிச்சது ரணில் தான் என்று ரணில் பெருமைப்படலாம். ரணிலின் சந்ததி பெருமைப்படலாம். ஆனால் ரணிலின் பேரனின் கொத்தடிமையாக உங்கள் பேரன் இருக்கப்போவதை எவ்வளவு ஜாலியாக யாழ்களத்தில் பெருமையடிக்கின்றீர்கள். அங்குதான் உங்களுக்குள் அசல் தமிழன் இருக்கிறான். உங்களுடன் நானும் இணைந்து கொள்ளுகின்றேன். ஏனென்றால் எனது பேரனும் ரணிலின் பேரனின் கொத்தடிமைதான். நானும் நீங்களும் ஒரு ஜாதி. அடிமை ஜாதி. ஜா ஜாலி. கொண்டாடுவோம் வாங்க.

எனக்கும் கொண்டாட்டம் ரொம்ப பிடிக்கும் ....
நானும் வரேன் ..........

தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருக்கும் கிழடுகள் ஒய்வு எடுக்காது விட்டால்...  :huh: சித்திரை மாசம் நாடளுமன்றத்தேர்தலுடன் தமிழ்த் தேசியக் கூட்டணியும் உடையும். :(

அதுக்குபிறகு .... வார மே 19இல்  யாழ்பாணத்தில் ரணிலிக்கு பெரிய சிலை வைப்போம்.
வருடா வருடம் தமிழரை காத்த தெய்வத்திற்கு காவடி ஆட வசதியாய் இருக்கும். 

சரிதான் தெனாலி புலிகளை அழிச்சது ரணில் தான் என்று ரணில் பெருமைப்படலாம். ரணிலின் சந்ததி பெருமைப்படலாம். ஆனால் ரணிலின் பேரனின் கொத்தடிமையாக உங்கள் பேரன் இருக்கப்போவதை எவ்வளவு ஜாலியாக யாழ்களத்தில் பெருமையடிக்கின்றீர்கள். அங்குதான் உங்களுக்குள் அசல் தமிழன் இருக்கிறான். உங்களுடன் நானும் இணைந்து கொள்ளுகின்றேன். ஏனென்றால் எனது பேரனும் ரணிலின் பேரனின் கொத்தடிமைதான். நானும் நீங்களும் ஒரு ஜாதி. அடிமை ஜாதி. ஜா ஜாலி. கொண்டாடுவோம் வாங்க.

 

இதில கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. எனது பேரனுக்கு முதல் இப்ப எனது தம்பி பலவந்தமாக பிடிக்கப்பட்டு ராணுவத்தோட போராட அனுப்பப்பட மாட்டான் என்று நான் ஆறுதல் அடைகிறன். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அங்க தமிழர் கொத்தடிமைகளா இருக்கிறார்கள் என்று படம் ஓட்டப்போறீங்க? 

இதில கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. எனது பேரனுக்கு முதல் இப்ப எனது தம்பி பலவந்தமாக பிடிக்கப்பட்டு ராணுவத்தோட போராட அனுப்பப்பட மாட்டான் என்று நான் ஆறுதல் அடைகிறன். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அங்க தமிழர் கொத்தடிமைகளா இருக்கிறார்கள் என்று படம் ஓட்டப்போறீங்க? 

 

\யாருங்க இங்க படம் ஓட்டிதுங்க.  அப்ப 1977 ல் சம்பந்தன் ஐயா இங்க வந்து உரத்த குரலில் முழங்கினாரே. அடிமையாக வாழ விருப்பமில்லையென்றால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். சிங்கள கட்சிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் அடிமையாக வாழ்வதை ஏற்றுகொள்வதாக அமையும் என்றாரே. அப்ப சம்பந்தன்  ஐயா சும்மா ரீல் விட்டார் என்கிறீங்களா?  அப்ப  ரீல் விட்ட பசங்கள நம்பி நாங்கள் ஏமாந்துட்டம் என்றுறீங்களா?  பாவம் நீங்களும் நானும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. எனது பேரனுக்கு முதல் இப்ப எனது தம்பி பலவந்தமாக பிடிக்கப்பட்டு ராணுவத்தோட போராட அனுப்பப்பட மாட்டான் என்று நான் ஆறுதல் அடைகிறன். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அங்க தமிழர் கொத்தடிமைகளா இருக்கிறார்கள் என்று படம் ஓட்டப்போறீங்க? 

 

 

எதிர்கால தமிழ் சந்ததிக்கு சுதந்திரம் கிடைத்து சுபீட்சத்துடன் வாழ்வார்கள் என எதை வைத்து சொல்கிறீர்கள் ?
 
தற்போதைய பீரிஸ் ரனிலோடு கும்மி அடித்த ஆள் தான். டக்ளஸ், ஹக்கீமும் அந்த பட்டியலுக்குள் தான் அடங்குவர்.
  • கருத்துக்கள உறவுகள்

\யாருங்க இங்க படம் ஓட்டிதுங்க.  அப்ப 1977 ல் சம்பந்தன் ஐயா இங்க வந்து உரத்த குரலில் முழங்கினாரே. அடிமையாக வாழ விருப்பமில்லையென்றால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். சிங்கள கட்சிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் அடிமையாக வாழ்வதை ஏற்றுகொள்வதாக அமையும் என்றாரே. அப்ப சம்பந்தன்  ஐயா சும்மா ரீல் விட்டார் என்கிறீங்களா?  அப்ப  ரீல் விட்ட பசங்கள நம்பி நாங்கள் ஏமாந்துட்டம் என்றுறீங்களா?  பாவம் நீங்களும் நானும்.

நீங்கள்தான் பாவம் ...
அவர் அரசியல் தெளிவு அடைந்துவிட்டார். அரசியல் தெளிவால் அடிமை விலங்கை உடைத்து வாழ்கிறார்.
 
நீங்களும் நாங்களும்தான் முட்டாள்தனமாக சிங்கள அராஜகத்திட்குள் மாட்டுபட்டது.
அவர்களுக்கு யாழ்தேவி வந்திட்டுது .....
  • கருத்துக்கள உறவுகள்

இவர் வென்றவுடன், சந்திரிகாவும் இப்படிதான் கட்சித் தலைமை தன்ற எண்டு நிண்டவோ.

அதிகாரம் கையில இருந்த படியால, அவவுக்கு, ஆப்படிச்சு, தலைமைய எடுத்தார்.

இந்த வேலைக்கு பழிவாங்கத் தான், அந்த மனிசி, மைத்திரியை வைத்து இவருக்கு ஆப்படிக்க, இந்தாள், ஒதுங்கிப் போகாம அலம்பறை பண்ணுது.

இவர் என்ன செய்தாரோ, அதை , அதிகாரம் இப்ப உள்ள (மைத்திரியை இயக்கும்) சந்திரிகா செய்யப் போறா.

இதைதான் ஆனைக்கு ஒரு காலம் எண்டால், பூனைக்கும் ஒரு காலம் எண்டுறது.

  • கருத்துக்கள உறவுகள்
பாெறுத்திருந்து பாருங்காே, கூச்சல் கும்மாளம் எல்லாம் முடிய, ஒவ்வாெருவா் ஒவ்வாெரு வழக்கு, சட்டம், கடமை. பழிவாங்கின குற்றச்சாட்டில்லாமல், மாவிலும் நாேகாமல்,மாங்காயிலும் தேயாமல், ஒவ்வாெரு பல்லாய் கழட்டப்பாேறாங்கள். பாென்சேகா, மங்கள, சந்திரிகா, ஷிராணி அடிபட்ட நாகங்கள்.
 மோ்வினைப் பற்றி தெரிந்தால் யாராவது சாெல்லுங்களேன்.
சுதந்திரக்கட்சி என்பது உண்மையில் பண்டாரநாயக்காவால் உருவாக்கப்பட்டது. அது அவர் வழி வந்த 
சந்திரிக்காவுக்கு போய் சேர்வதை மைத்திரி உறுதிப்படுத்த வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

சுதந்திரக்கட்சி என்பது உண்மையில் பண்டாரநாயக்காவால் உருவாக்கப்பட்டது. அது அவர் வழி வந்த 
சந்திரிக்காவுக்கு போய் சேர்வதை மைத்திரி உறுதிப்படுத்த வேண்டும்.

 

பண்டரனயக்கா தனது வீட்டை ஆழ அதை உருவாக்கி இருந்தால் .... நீங்கள் சொல்வது சரியானது.
நாட்டை ஆழ உருவாக்கினால் ... நாட்டில் இருக்கும் வல்லவர்கள்தான் தட்டி போவார்கள்.
  • தொடங்கியவர்

தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருக்கும் கிழடுகள் ஒய்வு எடுக்காது விட்டால்...  :huh: சித்திரை மாசம் நாடளுமன்றத்தேர்தலுடன் தமிழ்த் தேசியக் கூட்டணியும் உடையும். :(

அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள்.கூட்டணியில் உள்ள சிலர் அடிக்கடி கேள்வி கேட்பதால் அதிலும் முக்கியமான ஒரு சிலரை இந்த அரசின் அம்மணிக்கும் பிடிக்காதாம்.மொத்ததில் கூட்டணியை விட்டு விலகி தமிழரசுக்கட்சியாக இயங்க விருப்பம் என்று சிலர் கதைக்கின்றார்கள்

 

பண்டரனயக்கா தனது வீட்டை ஆழ அதை உருவாக்கி இருந்தால் .... நீங்கள் சொல்வது சரியானது.
நாட்டை ஆழ உருவாக்கினால் ... நாட்டில் இருக்கும் வல்லவர்கள்தான் தட்டி போவார்கள்.

 

உண்மையை சொல்லுங்கள்.
வாரிசு வழி அரசியல் எமக்கு புதிதா?
நேரு வழி குடும்ப அரசியல்...
கருநாநிதி குடும்ப அரசியல் என்று தொடரும் சாக்கடை
இலங்கையில் இருக்கக் கூடாதா?
  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையை சொல்லுங்கள்.
வாரிசு வழி அரசியல் எமக்கு புதிதா?
நேரு வழி குடும்ப அரசியல்...
கருநாநிதி குடும்ப அரசியல் என்று தொடரும் சாக்கடை
இலங்கையில் இருக்கக் கூடாதா?

 

 

இந்தியாவில் இருக்கிறது என்பதற்காக இலங்கையிலும்(குடும்ப அரசியல்) இருக்க வேண்டுமா? அப்படி குடும்ப அரசியலில் உங்களுக்கு  ஏன் விருப்பம்? மகிந்தவின் குடும்ப அரசியலில் நடந்ததை அறியவில்லையா?

இந்தியாவில் இருக்கிறது என்பதற்காக இலங்கையிலும்(குடும்ப அரசியல்) இருக்க வேண்டுமா? அப்படி குடும்ப அரசியலில் உங்களுக்கு  ஏன் விருப்பம்? மகிந்தவின் குடும்ப அரசியலில் நடந்ததை அறியவில்லையா?

பொது சனங்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு யார் மதிப்பளிக்கிறார்கள்? பதவிக்கு வரும் கட்சி அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் ஆட்டம் தான்.

 

மகிந்தா மட்டும் இல்லை.
சந்திரிக்கா, ஜனாதிபதியாக இருந்த‌ காலத்தில், தம்பி அனுரா பண்டாரநாயக்கா எதிர்கட்சி உறுப்பினர்.
தாய் சிறிமா பண்டார நாயக்கா பிர‌தமர். இப்படியான விநோதம் வேறு எங்காவது நட‌ந்தது உண்டா? 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருக்கிறது என்பதற்காக இலங்கையிலும்(குடும்ப அரசியல்) இருக்க வேண்டுமா? அப்படி குடும்ப அரசியலில் உங்களுக்கு  ஏன் விருப்பம்? மகிந்தவின் குடும்ப அரசியலில் நடந்ததை அறியவில்லையா?

 

குடும்ப அரசியலை ஒருசிலர் அல்ல தமிழர்களின் பிரதான வாழ்விடங்களான தமிழீழம், மத்தியமலைநாடு தொகுதிகளில் 323,660 இலட்சம் மக்களும், இலங்கை முழுவதுமாக 2.006,097  இலட்சம் மக்களும் விரும்பியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையை சொல்லுங்கள்.
வாரிசு வழி அரசியல் எமக்கு புதிதா?
நேரு வழி குடும்ப அரசியல்...
கருநாநிதி குடும்ப அரசியல் என்று தொடரும் சாக்கடை
இலங்கையில் இருக்கக் கூடாதா?

 

இருக்க கூடாதா ...... என்றால் ??
கூடாதது  கூடாதுதானே ...
 
இதற்கு என்ன பதிலை எதிர்பார்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.