Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக் கோருகிறார் முன்னாள் அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக் கோருகிறார் முன்னாள் அமைச்சர்
789a775161ff9c7a365e9c7b38e72e81.jpg
மக்களின் கருத்தறியும் உரிமையை பாதுகாக்க தமிழ் ஊடகங்கள் எதிர்காலத்தில் மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  தலைமையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
மேலும் , வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
 
எமது மக்களின் முன்னுரிமைக்குரிய கோரிக்கைகளை முன்வைத்தே கடந்த அரசாங்கங்களுடன் நாம் பணியாற்றி வந்துள்ளோம். முன்னர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. 
 
எனினும் முழுமையடையாத கோரிக்கைகளையும் மற்றும் செய்து முடிக்கவேண்டிய கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். 
 
குறிப்பாக சில தமிழ் ஊடகங்கள் எதிர்காலத்திலாவது மாற்றுக்கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு மதிப்பளிப்பதனூடாகவே தமிழ் மக்களிடையே கருத்தறியும் உரிமையை பாதுகாக்க முடியும்.
 
எனவே எதிர்காலத்திலாவது ஊடகங்கள் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் 15 அம்சக்கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளோம். எனவே அவற்றை புதிய ஜனாதிபதி செய்து முடிப்பார் என்று நம்புகின்றோம் என்றும் அவர் மேலும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். 
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=620203824521123707#sthash.6dGHLCGc.dpuf

 

மாற்றுக்கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளித்தமையால் தான் நிமலராஜனை கொன்று அவர் தந்தையையும் சுட்டுக் காயப்படுத்தினார் இந்த முன்னால் அமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

கன சாத்தான்கள் வேதம் ஓதுறகாலம்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்கள் வேதம் ஓதுறகாலம்

வலியும் காச்சலும் வந்தால் தான் தெரியும். குற்றவாளிகளுக்கு கருத்து சுதந்திரம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மாற்றுக்கருத்துகளுக்கும் மதிப்பளிக்கக் கோருகிறார் முன்னாள் அமைச்சர்

 

 
இதை ஏன் இப்ப சொல்லுறார்?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் செய்த துப்பாக்கி அரசியல் என்றோ ஒருநாள் இவரை கவிழ்த்து விடும் என்பது நியதி. இப்போது கவிழ்த்து விட்டது. மக்களை அச்சப்பட வைத்து, அரசியலோ, நிர்வாகமோ நடத்திய யாரும் நிலைத்ததில்லை. மக்களே கவிழ்த்து விடுவார்கள். ஆட்களே அட்ரஸ் இல்லாது போய் விடுவார்கள். மேலே போன சிலருக்கு நினைவு நாளாவது இருக்கும், நாலுபேராவது தீபம் ஏற்றி நினைவுகூர்வார்கள்.  சிலருக்கு அதுவும் கிடைக்காது.. அது அவரவர் செய்த பாவ புண்ணியத்தால் கிடைப்பது. டக்கிக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும் இது.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் இவர் சந்தில சிந்து பாட வந்திட்டார்......:D

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. இவர் வைக்கிறதெல்லாம் மாற்றுக்கருத்தாமில்ல. அப்ப மக்கள்   இவர் மீது வைத்திருக்கும் மாற்றுக் கருத்தை இவர் மதிக்கிறாரா..??! தீவகத்தில்.. கூட்டமைப்பினரை நாரந்தனையில் வைத்து வெட்டி அடித்து விரட்டியவர் தானே இவர். :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹ்ம்ம் இவர் சந்தில சிந்து பாட வந்திட்டார்...... :D

சந்து என்று இருந்தால் சிந்து பாடலாம் அல்லவா அண்ணே.. எங்களுக்கும் பொழுது போக வேண்டாமா? சூப்பர் பொழுதுபோக்கு இங்கேதானே... வாய்விட்டு சிரிக்கிறோம்.. இதையாவது விடுங்க.. போட் ஏறி உங்களை கொதிக்க வைக்க மாட்டோம்.!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க போட் ஏறினாலும் இனி உள்ள விடுற அளவுக்கு இல்லை அண்ணே......நடுக்கடல்ல வைச்சு கட்டி இழுத்திட்டு போய் இந்தோனேசியா பக்கம் விடுறாங்க எண்டா பாருங்களேன் அண்ணே.....:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க போட் ஏறினாலும் இனி உள்ள விடுற அளவுக்கு இல்லை அண்ணே......நடுக்கடல்ல வைச்சு கட்டி இழுத்திட்டு போய் இந்தோனேசியா பக்கம் விடுறாங்க எண்டா பாருங்களேன் அண்ணே..... :D

நமக்கு போட் தேவையில்லை அண்ணை.. 86-ம் ஆண்டில் இருந்து உங்க நாட்டுக்கு 9 தரம் வந்திட்டன். இனியும் வரலாம். நமக்கு எல்லா கதவும் திறக்கும். உங்க அரசாங்கத்தின் விருந்தினராகவே 2 தடவை வந்திருக்கிறேன். வோட் போட்ட  உங்களுக்கு தாங்ஸ் (86-ல் நீங்க அங்கிருந்தீர்களா தெரியாது. அநேகமாக அப்போதுதான் டேட்டி கன்ட்ரி இலங்கையில் பிறந்திருப்பீர்கள். இருந்தாலும் எம்மை அழைத்த ஆஸ்திரேலிய அரசுகளுக்கு வோட் போட்டவர்களுக்கு தாங்ஸ்.)

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

இவர் செய்த துப்பாக்கி அரசியல் என்றோ ஒருநாள் இவரை கவிழ்த்து விடும் என்பது நியதி. இப்போது கவிழ்த்து விட்டது. மக்களை அச்சப்பட வைத்து, அரசியலோ, நிர்வாகமோ நடத்திய யாரும் நிலைத்ததில்லை. மக்களே கவிழ்த்து விடுவார்கள். ஆட்களே அட்ரஸ் இல்லாது போய் விடுவார்கள். மேலே போன சிலருக்கு நினைவு நாளாவது இருக்கும், நாலுபேராவது தீபம் ஏற்றி நினைவுகூர்வார்கள்.  சிலருக்கு அதுவும் கிடைக்காது.. அது அவரவர் செய்த பாவ புண்ணியத்தால் கிடைப்பது. டக்கிக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும் இது.

 

எங்கேயோ இடிக்கின்றது அண்ணே...

 

நமக்கு போட் தேவையில்லை அண்ணை.. 86-ம் ஆண்டில் இருந்து உங்க நாட்டுக்கு 9 தரம் வந்திட்டன். இனியும் வரலாம். நமக்கு எல்லா கதவும் திறக்கும். உங்க அரசாங்கத்தின் விருந்தினராகவே 2 தடவை வந்திருக்கிறேன். வோட் போட்ட உங்களுக்கு தாங்ஸ் (86-ல் நீங்க அங்கிருந்தீர்களா தெரியாது. அநேகமாக அப்போதுதான் டேட்டி கன்ட்ரி இலங்கையில் பிறந்திருப்பீர்கள். இருந்தாலும் எம்மை அழைத்த ஆஸ்திரேலிய அரசுகளுக்கு வோட் போட்டவர்களுக்கு தாங்ஸ்.)

இதை வாசிக்கும் போது ஊரில் முன்பு புளுகர் பொன்னையா நாடகம் பார்த்த ஞாபகம் வருவதை என்னால் தடுக்க முடியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இழந்த பார்வையையும்- மக்கள் மீதான உணர்வையும் மீளப் பெற்றார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

 

"மக்களின் அனைத்து நிலங்களும் மீள கையளிக்கப்படவேண்டும்"

Douglas%20Devananda_CI.jpg

 

 
ஆட்­சி­மாற்றம் ஒன்றின் ஊடா­கவே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடியும் என்று வாக்­க­ளித்­துள்ள மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்­டத்­திற்கு நாம் ஆத­ர­வ­ளிப்போம்.
 
இதே­வேளை நீடித்த ஆட்­சி­யில்தான் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடியும் என்று நாம் கேட்டுக் கொண்­டதை ஏற்று வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு எமது நன்­றி­யையும் தெரி­வித்துக் கொள்­கின்றேன்
 
புதி­தாக தெரி­வு­செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கும் புதிய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்கவுக்கும் எனது வாழ்த்­துக்­களைத் தெரி­விக்கும் அதே­வேளை எமது மக்­களின் முன்­னு­ரி­மைக்­கு­ரிய கோரிக்­கை­களை முன்­வைத்தே கடந்த அர­சாங்­கங்­க­ளுடன் நாம் பணி­யாற்றி வந்­துள்ளோம்.
 
முன்னர் முன்­வைத்த கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்டு வந்­துள்­ளன. முழு­மை­ய­டை­யாத கோரிக்­கை­க­ளையும், செய்து முடிக்­க­வேண்­டிய கோரிக்­கை­க­ளையும் நீங்கள் நிறை­வேற்றித் தரு­வீர்கள் என்று நாம் நம்­பு­கின்றோம்.
 
இதே­வேளை குறிப்­பாக சில தமிழ் ஊட­கங்கள் எதிர்­கா­லத்­தி­லா­வது மாற்­றுக்­க­ருத்­துக்­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்க வேண்டும். அத­னூ­டா­கவே தமிழ் மக்­க­ளி­டையே கருத்­த­றியும் உரி­மையை பாது­காக்க முடியும்.ஈ.பி.டி.பி.யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு நடை­முறைச் சாத்­தி­ய­மான வழியில் செல்­வ­தற்கு 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­முறைப் படுத்­து­வதில் ஆரம்­பித்து, பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு­வுக்­கூ­டாக அதை மேலும் செழு­மைப்­படுத்தல்.
 
நீண்ட கால­மா­கவும் விசா­ர­ணைகள் இன்­றியும், குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­ப­டா­மலும், புனர்­வாழ்வு வழங்­கப்­பட்டும் சிறை­களில் வாடும் அனைத்து தமிழ் அர­சியல் கைதி­களையும் பொது மன்­னிப்பின் அடிப்­படையில் விடு­தலை செய்தல்.
 
மக்­களின் நிலம் மக்­க­ளுக்கே சொந்தம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காகப் பாது­காப்பு வல­யங்­க­ளாக அறி­விக்­கப்­பட்ட தனி­யா­ருக்குச் சொந்­த­மான அனைத்து நிலமும் உரி­ய­வர்­க­ளிடம் மீள ஒப்­ப­டைத்தல் புலம்­பெ­யர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைத் தாய் நாட்­டி­னதும் பிர­ஜை­களாக இருப்­ப­தற்கு இரட்டைக் குடி­யு­ரி­மையை இல­கு­ப­டுத்தல்.
 
வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் மக்­க­ளுக்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்தும் ஓமந்தைச் சோதனைச் சாவ­டியை முற்­றாக அகற்றல்.
 
வெளி நாட்­ட­வர்­களும், வெளிநாடு­களில் வாழும் இலங்கை மக்­களும் வட மாகாணம் நோக்கிப் பய­ணிப்­பதை தடுக்கும் அல்­லது நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் கட­வுச்­சீட்டு பரி­சோதனை முறை­மையை இரத்துச் செய்தல்.
 
யுத்த சூழலால் பாதிக்­கப்­பட்டு பொரு­ளா­தா­ரத்தில் நலிந்­து­போன மக்­களை தூக்கி நிமிர்த்த உத­வி­யி­ருக்கும் சமுர்த்திக் கொடுப்­ப­னவை மேலும் அதி­க­ரித்தல். சமுர்த்திப் பய­னா­ளி­களின் எண்­ணிக்­ கையும் அதி­க­ரிக்­கப்­ப­டுதல்.
 
யுத்­தத்­திற்குப் பின்னர் சொந்த வாழ்­விடம் திரும்­பிய மக்­க­ளி­னதும், மீள் குடி­யேற்றம் செய்­யப்­பட்ட மக்­க­ளி­னதும் வாழ்­வா­தா­ரத்தை மேலும் மேம்­ப­டுத்த உரிய திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல்.
 
யுத்த சூழலால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கில் வேலை­யற்று இருக்கும் எமது இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தகு­திக்­கேற்ப வேலை­வாய்ப்பை பெற்­றுக்­கொ­டுத்தல். சாத்­தி­ய­மான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு தொழில்­வாய்ப்­புக்­களை மேலும் ஏற்­ப­டுத்­துதல். சொந்தப் பொரு­ளா­தார வளர்ச்­சியில் எமது மக்கள் வாழுதல்.
 
எமது கடல் வளத்தை அழித்தும், சுரண்­டியும் எமது கடற்றொ­ழி­லா­ளர்­க­ளது வாழ்­வா­தா­ரத்தை சீர­ழிக்­கின்ற எல்­லை­தாண்­டிய மீன்­பி­டியில் ஈடு­ப­டு­கின்ற இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலைத் தடுப்­ப­தோடு, எமது கடற்றொ­ழிலை புன­ர­மைப்புச் செய்து நவீ­ன­ம­யப்­ப­டுத்தி எமது கடறறொ­ழி­லா­ளர்­களது வாழ்வை மேம்­ப­டுத்தல்.
 
விவ­சாய, உள்ளூர் உற்­பத்­திகள் மற்றும் கைத்­தொ­ழில்கள் என்­ப­வற்றை ஊக்­கு­வித்து ஒவ்­வொ­ரு­வரும் சுய பொரு­ளா­தார வளர்ச்­சி­ய­டைய நிதி­வளம் மற்றும் உள்­ளீ­டு­களை வழங்­குதல்.
 
நிலத்­தடி நீர் மோச­மாகப் பாதிப்­ப­டைந்­து­வரும் யாழ். மாவட்டம் உட்­பட குடி­நீ­ருக்குப் பாரிய நெருக்­க­டியைச் சந்­தித்­து­வரும் வட மாகா­ணத்தின் மக்கள் அனை­வருக்கும் பொருத்­த­மான பொறி­முறை ஊடாக சுத்­த­மான குடிநீர் வழங்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தல்.
 
முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்­பி­னர்கள் உட்­பட ஏனைய அமைப்­புக்­களின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் திட்டங்கள் தேவை.ஆட்சி உரிமை (விசேட ஏற்பாடு) சட்ட திருத்தத்தை மீளாய்வுக்கு உட் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வட மாகாணத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது.
 
முன்னாள் பொருளாதார அமைச்சின் விசேட நிதிக்கூடாக வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்குவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களில் இன்னும் இருபத்தி ஐந்து வீதமான பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அப்பொருட்களை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.