Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு
adf0f4acfc94828e75d2cd2a783f89cd.jpg

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

 
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை 9ஆக இருந்தது. 
 
எனினும் இம்முறை நடபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உறுப்பினர்களின்  எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
 
வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரமே உறுப்பினர்களில் குறைப்பு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு உறுப்பினரால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=311193823221795115#sthash.TA6Nxjf5.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்பிடியும் இந்த முறை தேர்தலில் கூட்டமைப்புக்குள் பெரிய அடிதடி இருக்கு 7 ல யார் யார போட்டியிடுறது என்று.....

எப்பிடி கண்டிப்பா திருமதி மகேஸ்வரன் மீண்டும் வருவா....அப்பிடியே டக்கி மாமா கட்சிக்கு ரெண்டு போனாலும் கூட்டமைப்புக்கு 3 இல் இருந்து நாலு தான்

அரோகரா

கடந்த வருடம் யாழ் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டு அது இலங்கை வர்த்தமானியிலும் வெளியாகி இருந்தது. இம் முறை பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கான பா.உ. க்களின் எண்ணிக்கை தலா ஒன்றால் குறைக்கப்பட்டு மாத்தறை, யாழ்ப்பாண மாவட்டங்களின் எண்ணிக்கை தலா ஒன்றால் கூட்டப்பட்டு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி வாரிப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் நடைபெற்றால் டக்ளஸ், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு வடபகுதியில் ஆசனங்கள் கிடைக்காது கூடப் போகலாம்.

தொகுதி வாரிப் பிரதிநித்துவ முறையினை கொண்டு வரும் உத்தேசம் மைத்திரிபாலவின் 100 நாள் திட்டத்துக்குள் வருகின்றது. ஆனால், இத்திட்டத்தினை கொண்டு வருவதற்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்குமா என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதி வாரி நல்லதா கூடாதா 

தொகுதி வாரி நல்லதா கூடாதா 

 

இலங்கை போன்ற நாடுகளுக்கு கூடாது. இதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமிழர்கள் செறிவா வாழும், ஆனால் பெரும்பான்மையாக வாழா இடங்களில் கிடைக்க மாட்டாது. இதன் மூலம் கொழும்பு, திருகோணமலை, பதுளை, நுவரேலியா,  போன்ற இடங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தமிழர்களும் முஸ்லிம்களும் வருவது பாதிக்கப்படும். அத்துடன் சிறுகட்சிகளின் கொள்கைகளை விரும்புகின்றவர்களும் புறக்கணிக்கப்படுவர். விகிதாசார முறைப்படி வரும் போது 20 வீதத்துக்கு கிட்ட எடுக்கின்றவர்கள் கூட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறலாம்

 

ஆனால், சிங்கள பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தால் என்ன பயன் கிடைக்கப் போகின்றது, எல்லா அழிவுகளுக்கும் இந்த சிங்களப் பாராளுமன்றமே காரணம் என்று நீங்கள் எதிர் கேள்வி கேட்டால், நான் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதிவாரி தேர்தல்தான் நல்லது. விகிதாசார தேர்தல் மூலம் வடகிழக்கு மக்களுக்கு நன்மை எதுவுமில்லை, தொகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்படாவிட்டால் யாழ் தேர்தல் மாவட்டத்துக்கு 11 உறுப்பினர்கள் கிடைக்கும்.

சில வருடங்களின் முன் வித்தியாதரன் இதை பற்றி விரிவாக ஒரு ஆக்கம் எழுதியதாக நினைவு. 

தற்போது இருக்கும் மாவட்ட அடிப்படையிலான விகிதாசார தேர்தல் முறையால் தமிழர்கள் இலாபம் அடையவில்லை. ஆக அம்பாறை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரை இழக்க நேரிடலாம். மற்றயபடி நன்மையே.

 

அனால் முஸ்லிம் காங்கிரஸ் இதுக்கு உடன்படுமா? இதனால் அதிகம் பாதிகப்பட்ப்ப்போவது அவர்களின் பிரதிநிதித்துவம் தான்.

 

அதே நேரத்தில் சிறுகட்சிகள் மற்றும் கொழும்பு தமிழ் பிரதிநித்துவமும் இல்லாமல் போகலாம். அவர்களுக்கு மாகானசபையும் நகரசபையுமே கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது. 

 

இந்த மாற்றத்தினால் தமிழர்கள் அதிகம் அலட்ட தேவையில்லை. காரணம் கிழக்கு மாகான சபைக்கு தமிழர்களே அதிகம் தெரியு செய்யப்படலாம் அதோடு வடக்கு மாகாணம் நூறுவீதம் தமிழ் பிரதிநித்துவத்துடன் இயங்கலாம்.

விகிதாசார முறையும், தொகுதிவாரி முறையும் கலந்த ஒரு தேர்தல்முறையை கொண்டு வருவதாகவே மைத்ரி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜேர்மனியில் உள்ள முறை சிறப்பாக இருக்கும்.

60 சதவீதம் தொகுதிவாரிப் பரிதிநிதிகளையும் 40 சதவீதம் விகிதாசாரப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய முறை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்தநேரத்தில் தொகுகள் மீள நிர்ணயம் செய்யப்படுமா என்பது தெரியவில்லை. அப்படி மீளநிர்ணயம் செய்யப்படும் பட்சத்தில் தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. 

 

இந்த தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையினால் மலையகக் கட்சிகளிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். அனேகமாக நுவரெலியா மஸ்கெலியா தவிர்ந்த எந்த ஒரு தொகுதியிலும் அவர்களால் வெல்ல முடியாத நிலையேற்படலாம். அதே போல மூஸ்லிம்கட்சிகள், மனோ கணேசனின் கட்சி என்பவற்றிற்கும் பாதிப்பு ஏற்படலாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது இருக்கும் மாவட்ட அடிப்படையிலான விகிதாசார தேர்தல் முறையால் தமிழர்கள் இலாபம் அடையவில்லை. ஆக அம்பாறை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரை இழக்க நேரிடலாம். மற்றயபடி நன்மையே.

 

அனால் முஸ்லிம் காங்கிரஸ் இதுக்கு உடன்படுமா? இதனால் அதிகம் பாதிகப்பட்ப்ப்போவது அவர்களின் பிரதிநிதித்துவம் தான்.

 

அதே நேரத்தில் சிறுகட்சிகள் மற்றும் கொழும்பு தமிழ் பிரதிநித்துவமும் இல்லாமல் போகலாம். அவர்களுக்கு மாகானசபையும் நகரசபையுமே கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது. 

 

இந்த மாற்றத்தினால் தமிழர்கள் அதிகம் அலட்ட தேவையில்லை. காரணம் கிழக்கு மாகான சபைக்கு தமிழர்களே அதிகம் தெரியு செய்யப்படலாம் அதோடு வடக்கு மாகாணம் நூறுவீதம் தமிழ் பிரதிநித்துவத்துடன் இயங்கலாம்.

வடக்கு மாகாணம் நூறுவீதம் தமிழ் பிரதிநித்துவத்துடன் இயங்கலாம் என்பது நடக்கத்தான் போகிறது. ஆனால், அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான் விஷயம்.

 

இம்முறை வாக்களித்த புதிய வாக்காளர்கள் பலருடன் பேசினேன். அன்னம் சின்னத்துக்கு வாக்களித்ததாக சொன்னார்கள். என்ன காரணம் என்று கேட்டால், வீட்டில் போட சொன்னார்கள். அப்பாவுக்கு அல்லது அம்மாவுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்பதால் அன்னத்துக்கு போட்டார்கள். பெரும்பாலும் அரசு உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகள் அவர்கள்.

 

மைத்ரி கூறிய 10,000 சம்பள உயர்வு 2 பகுதிகளாக கொடுக்கப்படுகிறது.

 

முதல் பகுதி 5,000 ரூபா இந்த 30ம் திகதி. அடுத்த 5000 ரூபா எப்போது தெரியுமா? ஓகஸ்ட் மாதம்! அதாவது நாடாளுமன்ற தேர்தலின் பின்!! மீதியை யோசித்துக் கொள்ளவும்.

சில வருடங்களின் முன் வித்தியாதரன் இதை பற்றி விரிவாக ஒரு ஆக்கம் எழுதியதாக நினைவு. 

 

எனக்கும் இதில் எது நல்லது என்பதில் கேள்வி உள்ளது.
அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவரானபின் ஜெயவர்த்தனா தமீழர்கள் ஒருபோதும் எதிர்கட்சி தலைவராக வரமுடியாதபடி இம்மாற்றத்தை ஏற்படித்தியதாக ஒரு நினைவு. ஆனால் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்கள்தான் Kingmakersஆக வருவார்கள் என்பதை மறந்து விட்டார். தமிழர்களது இலட்சக்கணக்கான இடம்பெயர்வுகளின் பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை குறைவால் பாராளுமன்ற அங்கத்துவம் குறைகின்றது. 
 
விளக்கம் தேவை தயவுசெய்து இணைப்பை தரமுடியுமா?
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போன்ற நாடுகளுக்கு கூடாது. இதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமிழர்கள் செறிவா வாழும், ஆனால் பெரும்பான்மையாக வாழா இடங்களில் கிடைக்க மாட்டாது. இதன் மூலம் கொழும்பு, திருகோணமலை, பதுளை, நுவரேலியா,  போன்ற இடங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தமிழர்களும் முஸ்லிம்களும் வருவது பாதிக்கப்படும். அத்துடன் சிறுகட்சிகளின் கொள்கைகளை விரும்புகின்றவர்களும் புறக்கணிக்கப்படுவர். விகிதாசார முறைப்படி வரும் போது 20 வீதத்துக்கு கிட்ட எடுக்கின்றவர்கள் கூட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறலாம்

 

ஆனால், சிங்கள பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தால் என்ன பயன் கிடைக்கப் போகின்றது, எல்லா அழிவுகளுக்கும் இந்த சிங்களப் பாராளுமன்றமே காரணம் என்று நீங்கள் எதிர் கேள்வி கேட்டால், நான் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் :)

 

நன்றி நிழலி பதிலுக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

. ஆனால் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்கள்தான் Kingmakersஆக வருவார்கள் என்பதை மறந்து விட்டார். தமிழர்களது இலட்சக்கணக்கான . 
 
விளக்கம் தேவை தயவுசெய்து இணைப்பை தரமுடியுமா?

 

பயங்கர வாதத்தை ஒழிப்பதற்காக நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியை தெரிவு செய்தார்கள்...இப்பொழுது தமிழன் கிங்க்மேக்கராக இருப்பதால் மீண்டும் பிரதமர் ஆட்சி அமுல்படுத்துகிறார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.