Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் தான் குழப்புகின்றனரென்றால் கூட்டமைப்பிலுள்ளவர்களும் குழப்புகின்றனர்! - சுமந்திரன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
suresh-sumanthiran-400-seithy-news.jpg

கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சிரேஸ்ட பத்திரிகையாளர்கள் சிலரிடம் மனம் விட்டு பேசிய சுமந்திரன் தனது கவலையினை வெளியிட்டுள்ளார். நான் அரசுடன் பேசி பல நல்லவிடயங்களை செய்துவருகின்றேன். அந்தவகையில் அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியலை பெற்றுக்கொண்டுள்ளேன். அதே போன்று காணாமல் போனோர் தொடர்பிலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

   

ஆனால் சுரேஸ் போன்றவர்கள் தேவையற்றவற்றை கிழறுகின்றனர். கோத்தா முகாம் தொடர்பினில் சாட்சிகளை நிறுத்தப்போவதாக சவால்விடுகின்றார். இப்பிடி செய்தால் அரசு கோபம் கொண்டுவிடும். பிறகு எதையும் செய்யமுடியாது. புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் தான் குழப்புகின்றனரென்றால் கூட்டமைப்பிலுள்ளவர்களும் குழப்புவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களில் சுமார் 700 பேர் வரையினில் திருகோணமலையினிலுள்ள கோத்தா தடுப்பு முகாமெனும் இரகசிய முகாமினில் வைக்கப்பட்டிருந்ததாக சுரேஸ்பிறேமச்சந்திரன் அம்பலப்படுத்தியிருந்தார். எனினும் அவ்வாறு ஏதுமில்லையென அரசு வாதிட்டுவரும் நிலையினில் சாட்சியங்களுடன் அம்பலப்படுத்த தயாராக இருப்பதாக அவர் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://seithy.com/breifNews.php?newsID=128554&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் குனிஞ்சு போனால்தான் என்ன என்கிறார்.. நியாயம்தானே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியும் கொழுந்து விட்டு எரியப்போகிறது .......  :D

  • கருத்துக்கள உறவுகள்
சுமந்திரன் இப்போதான் தெளிவாகவும் ராஜதந்திரமாகவும் நகர்கிறார்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
சிங்களவர்கள் அடிக்கும்போது ..... நாங்கள் கதறி அழுதால் ...
அவர்கள் எதோ துன்பம் செய்ததுபோன்று ...
ஒரு குற்ற உணவர்வை அவர்களுக்கு ஏற்படுத்தாதா ? 
  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தல் இவருக்கு சரியான பாதையை காட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

8252_1_thumb_sumanthiran.jpg

 

இலங்கை அரசின் உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையுடனேயே நடக்க வேண்டும்.  இல்லையேல் மகிந்த ஆட்சிக்கு ஏற்பட்ட நிலையே இந்த ஆட்சிக்கும்  ஏற்படுமென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன்,  காணாமல் போனோர் தொடர்பான   பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லைன்றும் குற்றம் சாட்டினார்.

 

 

காலையில் பேசியதை 
மதிய உணவோடு தமிழன் மறந்திடுவான்.
 
சுமந்திரன் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
மிகவும் கவனமாக ஓவரு அடியையும் எடுத்துவைத்து 
அரசியல் வாகை சூடுகிறார்.
அளவிற்கு அதிகமான தீர்வு கிடைத்தால் ....
தமிழர்கள் முஸ்லீம்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் 
என்று ஆசை படுகிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுமந்திரன் மீது நல்ல மதிப்பு இருந்தது...

தற்பொழுது யாழில் இவரை ஆதரித்து எழுதுவோரைப்பார்க்கும் போது ..

சரியல்ல என்று தோன்றுது...

Edited by விசுகு

சுமந்திரன் அடுத்த கட்ட அரசியலுக்கு போய்விட்டார் .

 

புழுதி வாரி தூற்றி அரசியலில் இருப்பவர்கள் எப்பவும் தூற்றிக்கொண்டே தான் இருப்பார்கள் .


அது விளங்க கொஞ்ச அரசியலும் அறிவும் தேவை . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவுக்கு இணக்க அரசியல் செய்ய  யாராலும் முடியாது.
விட்டால் மகிந்த அன்ட் கோவிற்காகவும் வழக்காடி வெல்வார்

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன அடுத்த கட்டம்? எங்களுக்கும் சொல்லலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
இப்ப என்றாலும் உங்களுக்கு விளங்கி இருக்கு.
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அடுத்த கட்ட அரசியலுக்கு போய்விட்டார் .

புழுதி வாரி தூற்றி அரசியலில் இருப்பவர்கள் எப்பவும் தூற்றிக்கொண்டே தான் இருப்பார்கள் .

அது விளங்க கொஞ்ச அரசியலும் அறிவும் தேவை . :icon_mrgreen:

அது என்ன அடுத்த கட்டம்? எங்களுக்கும் சொல்லலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன அடுத்த கட்டம்? எங்களுக்கும் சொல்லலாம் தானே

இது விளங்குவது கொஞ்சம் கஷ்டம் ....
முயற்சி செய்து பாருங்கள்.
 
ஒட்டாத வண்டியில் ஏறி ... உலகை சுற்றி அடிக்கிறது மாதிரி.
வண்டி அப்படியே நிற்கும் 
நாங்கள்தான் காட்சிகளை ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும். 
 
சையிட்டிலே பாருங்கள் என்ன அழகான பூங்கா.....
ஐயோ மிஸ் பண்ணி விட்டீர்கள்.
முன்னுக்கு வரும் அழகான நீர்வீழ்ச்சி  இதையாவது கவனமாக பாருங்கள்.
வாவ் எவளவு  தண்ணீர் ..... இரவு பகலாக இப்படியே பயந்துகொண்டே இருக்குமா ??  

சுமந்திரன் அடுத்த கட்ட அரசியலுக்கு போய்விட்டார் .

 

புழுதி வாரி தூற்றி அரசியலில் இருப்பவர்கள் எப்பவும் தூற்றிக்கொண்டே தான் இருப்பார்கள் .

அது விளங்க கொஞ்ச அரசியலும் அறிவும் தேவை . :icon_mrgreen:

கடைசி வசனம் பலர் வாசிக்கவில்லை போலிருக்கு . :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அடுத்த கட்ட அரசியலுக்கு போய்விட்டார் .

 

புழுதி வாரி தூற்றி அரசியலில் இருப்பவர்கள் எப்பவும் தூற்றிக்கொண்டே தான் இருப்பார்கள் .

அது விளங்க கொஞ்ச அரசியலும் அறிவும் தேவை . :icon_mrgreen:

யாழில் எழுதுபவர்களில் சுத்த அரசியல் சூனியம் என்றால் நீங்கள் தான் .மற்றவர்களை சீண்டுவதற்கு மட்டுமே எழுதுகிறீர்கள் ,நீங்கள்  சொல்லுகின்ற  தெளிவான அரசியலை  முதலில் நீங்கள் எழுதப்பழகுங்கள் .பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

எவன் தான் தான் அறிவாளி என்கிறானோ அவனே முழு முட்டாள்

உங்களுக்கு அறிவிருந்தால் நெஞ்சில் தில் இருந்தால் உங்கட கட்ட அரசியலை கட்டம் கட்டமாக எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மற்ற எல்லாம் குதிரைகளையும் விட்டிட்டு சுரேஸ் குதிரையில ஏறீட்டினமே?

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

எவன் தான் தான் அறிவாளி என்கிறானோ அவனே முழு முட்டாள்

உங்களுக்கு அறிவிருந்தால் நெஞ்சில் தில் இருந்தால் உங்கட கட்ட அரசியலை கட்டம் கட்டமாக எழுதுங்கள்

அவர் எழுதுவார் ...

அதை வாசிச்சு புரியும் அறிவு உள்ளவர்கள் யாரும் உலகில் இல்லை.

அப்போ எழுதி என்ன பலன் ?

7ஆம் அறிவு சூரியாவைதான் வாசிக்க கூட்டி வரணும்.

இல்லை என்றால் புத்தகத்தை அப்படியே சூ விட்குதான் ஷிப் பண்ணனும்.

நியானி: நீக்கப்பட்ட கருத்துக்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கே தெரியாவில்லை / புரியவில்லை அவர் எங்க நிக்கிறாரென.

  • கருத்துக்கள உறவுகள்

'செய்தி' இணையத் தளம் வெளியிட்டு உள்ள செய்தி எந்தளவு உண்மைத் தன்மை என்று ஆராய்ந்து தான் அனைவரும் கருத்து எழுதுகின்றீர்களா?

கிளு கிளுப்பை ஊட்ட பல இணையத்தளங்கள் நம் மத்தியில் உலாவுகின்றன. தீர ஆராய்ந்து வாசிப்பதே சிறந்தது.

என்னைப் பொறுத்த வரை கொழும்பு தமிழ் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே தற்போதைய நம்பிக்கைக்கு உரிய செய்திகள் ஆகும்.

புலம்பெயர் ஊடகங்களின் செய்திகளை நம்பி வாசித்து தயவு செய்து உங்கள் நேரத்தினை வீணடிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனுக்கு அரசியல் அறிவு இல்லை என்பவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையோ என நினைக்கத்தோன்றுகிறது.

சுமந்திரன் யாருக்கோ என்னமோ சொன்னராம், அதை இவர்கள் கேட்டு செய்தி போட்டார்களாம்.

இதைத்தான் ஊடகப் பாலியல்தொழில் என்பது.

சுமந்திரன் மீது சேறடிக்க வேண்டும் என்பதற்காக சுமந்திரன் கூட்டத்தின் பின் மனம் விட்டுப்பேசினார், மலசல கூடத்தில் வாய்விட்டுப் பாடினார் என்று கதை புனைவார்கள். இதை நம்பி பந்தி எழுதவும் ஒரு கூட்டம்.

இனி வருவார்கள் இதை விட பெரிய மேதாவிகள், சுமந்திரன் இப்படி பேசவில்லை என்பதை நிரூபியுங்கள் என்று உலகமகா தத்துவம் பேசியபடி.

காலக்கொடுமைடா சாமி.

அர்ஜூனுக்கு அரசியல் அறிவு இல்லை என்பவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையோ என நினைக்கத்தோன்றுகிறது.

சுமந்திரன் யாருக்கோ என்னமோ சொன்னராம், அதை இவர்கள் கேட்டு செய்தி போட்டார்களாம்.

இதைத்தான் ஊடகப் பாலியல்தொழில் என்பது.

சுமந்திரன் மீது சேறடிக்க வேண்டும் என்பதற்காக சுமந்திரன் கூட்டத்தின் பின் மனம் விட்டுப்பேசினார், மலசல கூடத்தில் வாய்விட்டுப் பாடினார் என்று கதை புனைவார்கள். இதை நம்பி பந்தி எழுதவும் ஒரு கூட்டம்.

இனி வருவார்கள் இதை விட பெரிய மேதாவிகள், சுமந்திரன் இப்படி பேசவில்லை என்பதை நிரூபியுங்கள் என்று உலகமகா தத்துவம் பேசியபடி.

காலக்கொடுமைடா சாமி.

நீ பலமாக தில்லாக இருந்தால் தான் எதிர்யும் கொஞ்சமாவது தர நிற்பான் . சுரேஷ் சொன்னதில் என்ன பொய் இருக்கின்றது . உண்மைதான் இதில் சுமந்திரனுக்கு என்ன பிரச்சனை . இவருடைய உறவுகள் காணாமல் போயிருந்தால் தான் அவருக்கு அதன் வலி தெரியும் .
 
சும்மா மானம்  கெட்டு பிழைப்பை நடத்துவதக்கு பெயர் புத்தியான அரசியல் .
 
நீங்களும் உங்களுடைய விளக்கமும் .....
  • கருத்துக்கள உறவுகள்

இவரும் சம்பந்தரும் சொல்வதை கேட்டு தலையாட்டிக்கிட்டு இருக்கனும் என்று தான் இவர் விரும்பிறார் போல. அது ஒரு காலம்.. அந்தக் காலம் மலையேறி பல தசாப்தங்கள் கடந்தாச்சு.. மிஸ்டர் சுமந்திரன். இன்னும் சேர் பொன்.. இராமநாதன்.. பொன்னம்பலம் காலத்துக் கனவில் மிதக்க வேண்டாம். சிங்களவரும் மாறி விட்டார்கள். தமிழர்களும் மாறி விட்டார்கள்.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அட இதைதான் Good cop (சுமந்திரன்), bad cop (சுரேசு) நிலைப்பாடு எண்டுறது.

ஆர் குத்தினாலும் அரசி வரட்டும்.:D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனுக்கு அரசியல் அறிவு இல்லை என்பவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையோ என நினைக்கத்தோன்றுகிறது.

சுமந்திரன் யாருக்கோ என்னமோ சொன்னராம், அதை இவர்கள் கேட்டு செய்தி போட்டார்களாம்.

இதைத்தான் ஊடகப் பாலியல்தொழில் என்பது.

சுமந்திரன் மீது சேறடிக்க வேண்டும் என்பதற்காக சுமந்திரன் கூட்டத்தின் பின் மனம் விட்டுப்பேசினார், மலசல கூடத்தில் வாய்விட்டுப் பாடினார் என்று கதை புனைவார்கள். இதை நம்பி பந்தி எழுதவும் ஒரு கூட்டம்.

இனி வருவார்கள் இதை விட பெரிய மேதாவிகள், சுமந்திரன் இப்படி பேசவில்லை என்பதை நிரூபியுங்கள் என்று உலகமகா தத்துவம் பேசியபடி.

காலக்கொடுமைடா சாமி.

அர்ஜுனின் அரசியல் அறிவிற்கும் ...
மனிதனின் அடிப்படை அறிவிற்கும் ...
அப்படி என்ன சமன்பாட்டை நீங்கள் புதிதாக நிறுவி இருக்கிறீர்கள் ?
மனித மூளை அர்ஜுனின் அரசியல் அறிவால்தான் இயங்குகிறதா ?
அப்போ அர்ஜுன் அவர்கள் பிறக்குமுன்பு மனிதர்களின் அடிப்படை அறிவு செயலில் இருக்கவில்லையா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.