Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்மை காப்பாற்றுபவர், என 30வருடமாக நினைத்த பாதுகாவலனை அழித்தபின் அவர்களிடம் எதனை எதிர்பார்க்கலாம்? - மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என முன்னரே எனக்கு தெரிந்திருந்தது" ககானி வீரக்கோன் -- விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்செய்திகள்-

Mahi%20President_CI.jpg

 

தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தான் முன்னரே உணர்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30 வருடங்களாக  தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள்  நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?


தங்களுக்கு விடுதலையை வழங்கும் என அவர்கள் எதிர்பார்த்த அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா? என்றும் கேள்விஎழுப்பியுள்ளார்.


சிலோன் ருடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மக்கள் உங்களை பெருளவில் சந்திக்கவரும் போது என்னகருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு நான் தோற்கடிக்கப்பட்டதாக கருதவில்லை, மக்கள் என்னை இன்னமும் நேசிக்கின்றனர், குறிப்பாக சாதாரணமக்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நான் பதவிவிலகி மூன்று மாதங்களாகின்றன ஆனால் இன்னமும் தினமும் அவர்கள் பேருந்துகளில் வந்து என்னை பார்த்துச்செல்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜனவரி 8 ம் திகதிக்கு பின்னர் அவரது வாழ்க்கை எப்படியுள்ளது என்ற கேள்விக்கு நான் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை,ஏனென்றால் மக்கள் இன்னமும் தங்கள் பிரச்சினைகளுடன் என்னை நாடி வருகின்றனர்,நான்; பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது, அனேகமானவை மத நிகழ்வுகள், ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் இல்லை என்பதை தவிர நான் வேறு வித்தியாசம் எதனையும் உணரவில்லை.


பொதுமக்களின் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு மதகுருமாரும், பொதுமக்களும் என்னை அழைப்பது எனது தவறா? ஊடகவியலாளர்கள் என்னை தேடி வருவது எனது தவறா? சிலர் விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக என்மீது உண்மையான அக்கறையுள்ளவர்களை நான் ஏன் காயப்படுத்தவேண்டும்.


கடந்த காலங்களிலும் இவ்வாறான விமர்சனங்கள் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டன,2005 தேர்தலில் போட்டியிட்ட வேளை ஆலயங்களுக்கு சென்று மலர்களை வழங்குவதால் மாத்திரம் வெற்றிபெற முடியாது என குறிப்பிட்டனர். அவர்களது விமர்சனத்தையும் மீறி நான் வெற்றிபெறவில்லையா?இவர்கள் என்மீதான அச்சத்தால் என்மீது சேற்றை வாரியிறைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.


பத்து வருடத்திற்கு முன்னர் நீங்கள் பயணித்த அதேபாதையிலேயே பயணிக்கிறீர்கள் என்பது இதன் அர்த்தமா? மீண்டும் அரசியலுக்கு வரப்போகின்றீர்களா என்ற கேள்விக்கு


இதனை தீர்மானிப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பொறுத்தவிடயம். அவர்கள் தாங்கள் பொதுமக்களை செவிமடுக்கப் போகின்றனரா, பொதுமக்கள் கோருவதை வழங்கப்போகின்றனரா என்பதை தீhமானிக்க வேண்டும்.


நான் ஓய்வுபெற்றதாக இதுவரை தெரிவிக்கவில்லை, அவ்வாறு சிந்திப்பதாக தெரிவிக்கவுமில்லை என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள் என்றும் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இலங்கையின் பெருமளவான மக்கள் அவரிற்கு எதிராக வாக்களித்ததை சுட்டிக்காட்டிய வேளை ராஜபக்ச சதித்திட்டம் என்பது சதிதிட்டமே, நீங்கள் அதனை எப்படி வெற்றியாக காண்பிக்க முயன்றாலும் அது  சதியே என்று தெரிவித்துள்ளார்.


சிறுபான்மையினத்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை புறக்கணித்ததே உங்களின் தோல்விக்கு காரணம் என கருதவில்லையா என்ற கேள்விக்கு- நான் இந்த வாக்காளர்களை சாதரணமாக கருதினே என குறிப்பிடுவது தவறான விடயம், முஸ்லீம்களின் வாக்களை இழப்பது குறித்தே நான் அதிக கவலை கொண்டிருந்தேன்,


தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என முன்னரே எனக்கு தெரிந்திருந்தது என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஏன் முஸ்லீம்களின் வாக்குகளை இழப்பதை தவிர்க்க முடியவில்லை என்ற கேள்விக்கு பொதுபலசேனா போன்ற சில அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லீம்மக்கள் என்னை பற்றியும், எனது அரசாங்கம் பற்றியும் பிழையான அபிப்பிராயத்தை கொண்டிருந்தனர். எதிர்கட்சியினர் இதனை சரியாக மதிப்பிட்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர் என குறிப்பிட்டுள்ளார்.


முஸ்லீம்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் அமைச்சரவையில் ஆராய்ந்தவேளை அமைச்சர் சம்பிக்க ரணவக்க சீற்றமடைந்து பொதுபலசேனா மீது சிறுவிரல் கூட படக்கூடாது என தெரிவித்தார்.சம்பிக்கவும் அந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை நான் மிகவும் தாமதமாகவே புரிந்துகொண்டேன்.


நான் வீதிகளை அமைத்தாலும், தங்கத்தை வாரியிறைத்தாலும் தமிழர்களின் ஒரு வாக்கு கூட கிடைக்காமல் செய்வேன் என ஒரு தமிழ் அரசியல்தலைவர் எனது முகத்திற்கு நேரே சபதம் செய்தார் அதனால் தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என்பதை நான்உணர்ந்திருந்தேன். என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் ஏன் உங்களை இவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு


கடந்த 30 வருடங்களாக  தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள்  நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?


தங்களுக்கு விடுதலையை வழங்கிய அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா?


மேலும் தமிழ் குடும்பங்களில் ஒருவராவது வெளிநாட்டில் இருக்கின்றனர், இதனால் அவர்கள் இயல்பாகவே புலம்பெயர்ந்த அமைப்புகளின் செல்வாக்கில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ககானி வீரக்கோன் -- விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்செய்திகள்-

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118357/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஏன் உங்களை இவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு

கடந்த 30 வருடங்களாக  தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள்  நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

தங்களுக்கு விடுதலையை வழங்கிய அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா?

மேலும் தமிழ் குடும்பங்களில் ஒருவராவது வெளிநாட்டில் இருக்கின்றனர், இதனால் அவர்கள் இயல்பாகவே புலம்பெயர்ந்த அமைப்புகளின் செல்வாக்கில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மகிந்தருக்கு இப்ப தான் உது விளங்கி இருக்குது. சம்பந்த சுமந்திரருக்கு மிக விரைவில் இது விளங்கும்.  :icon_idea:  :lol:

அண்ணே , ராணுவ பலம் அழிக்கப்பட்டது உண்மைதான் அது உலக நாடுகள் சேர்ந்து செய்த யுத்தம் . சும்மா அலட்டிக்க கூடாது. மற்றது தலைமையை அழித்தீர்களா ? உணமையகவா ? எத்தனை காலத்திக்கு இப்படி சொல்வீர்கள் .
 
ஏனப்பு இப்பவும் உயர் பாதுகாப்பு வலயம் ?
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு ஸ்ராரிஜி யுத்த கேம்.. விளையாடிக் கொண்டிருந்தேன்.. கம்பியூட்டரில்... ஆன் லைனில் இணைத்து..விளையாடலாம். 

 

குறைந்த வளம்..படைப்பலத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக வெற்றியைப் பொறுவது தான் இலக்கு. யாருடனும்... கூட்டுச் சேராமல் விளையாடி வந்தேன். 

 

எல்லாம் நல்ல படியாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சு. வளர்ச்சி அசுர வேகத்தில் அமைய.. எதிரிகள்.. கூட்டுச் சேர்ந்து  விளையாடினாங்க பாருங்க.. தொடர் தோல்வி. வளமும் குறைஞ்சு போச்சு. படையும் இல்லை. கேம் என்ற படியால்.. கம்பியூட்டரில் இருந்து அழிச்சிட்டு.. கம் என்று இருக்கிறன்.

 

இதையே... தான் தலைவரின் இடத்தில் வைச்சு யோசிச்சுப் பார்த்தன். 

 

என்ன கேமில் மனித அழிவு.. பெரிசா தெரியல்ல. நிஜப் போரில் அதன் தாக்கம்.. என்பது எத்தனை மனங்களில்.. எத்தனை வகைகளில்..?!  :icon_idea:  :rolleyes:  :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் விளையாடிய gameஇப்பெயர் war of nations ஆ. அப்படியென்றால் எந்த world இல் விளையாடினிர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் விளையாடிய gameஇப்பெயர் war of nations ஆ. அப்படியென்றால் எந்த world இல் விளையாடினிர்கள்

 

இல்லை. இது வேற.  :)

இவளத்தையும் கேட்டவர்கள் அடிச்ச காசுகளை என்னசெய்தவர் எண்டு கேக்கலை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பொய் சொல்லுறார்.. தலைவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லவேயில்லை.. அவரது இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று பிபிசி சொல்லிவிட்டது. தமிழ்மக்கள் பிபிசி கேட்பதில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் முழு ஆதரவும் பிரபாபரனுக்கே இருந்தது, என்று எடுத்துக் கொள்ளலாமா? - முன்னாள் ஜனாதிபதியின் வாக்குமூலம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் முழு ஆதரவும் பிரபாபரனுக்கே இருந்தது, என்று எடுத்துக் கொள்ளலாமா? - முன்னாள் ஜனாதிபதியின் வாக்குமூலம்

இல்லை, கொஞ்சநேரம் காத்திருங்கள் இரண்டு மூணு பேர் வந்து விளக்கம் தருவார்கள்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ வந்துட்டேன் :)

முழு ஆதரவு என்று சொல்ல முடியாது சராசரியாக 1990 முதல் 2005 வரை 80%-85% இருந்தது என்பது என் கணிப்பு.

இண்டைக்கு சிலருக்கு மகிந்த சொல்லே மந்திரம்ஆகிவிட்டது ,நாளைக்கு அது கருணாநிதியாகவும் மாறலாம் :icon_mrgreen: 

 

கை வைக்க கூடத்தில் கை வைத்தால் 100% ஆதரவு இருந்தாலும்  வேலையில்லை அடி அடிதான் .கை வைக்க முதல் அதை யோசித்திருக்கவேண்டும் , அதை யோசிப்பதற்கு அது வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு சிலருக்கு மகிந்த சொல்லே மந்திரம்ஆகிவிட்டது ,நாளைக்கு அது கருணாநிதியாகவும் மாறலாம் :icon_mrgreen:

கை வைக்க கூடத்தில் கை வைத்தால் 100% ஆதரவு இருந்தாலும் வேலையில்லை அடி அடிதான் .கை வைக்க முதல் அதை யோசித்திருக்கவேண்டும் , அதை யோசிப்பதற்கு அது வேண்டும் .

நீங்க அதை வைத்து 3 தடவை எழுதின மாதிரியா? முதலில உங்களுட்ட இருக்கா என்று பாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலியளை பிபிசி தொடக்கம் வெள்ளைக்கார சனம் வரைக்கும் பயங்கரவாதியள் எண்டு சொல்லீட்டினம் எல்லோ......

மகிந்தவை போய் ஒருக்கா நலம் விசாரிக்க வேண்டும்

இண்டைக்கு சிலருக்கு மகிந்த சொல்லே மந்திரம்ஆகிவிட்டது ,நாளைக்கு அது கருணாநிதியாகவும் மாறலாம் :icon_mrgreen:

 

கை வைக்க கூடத்தில் கை வைத்தால் 100% ஆதரவு இருந்தாலும்  வேலையில்லை அடி அடிதான் .கை வைக்க முதல் அதை யோசித்திருக்கவேண்டும் , அதை யோசிப்பதற்கு அது வேண்டும் .

அட அட என்ன ஒரு விளக்கம் சும்மா பின்னிட்டிங்க போங்க .....
தமிழ் மக்களின் சுவாசம் தான் எங்கட தேசியதலைவர் ... இதை யாரும் சொல்லதேவையில்லை .... அது தானாக வந்தது .   உங்கட புளொட் மாதிரி தேசவிரோதகுமபலா அவர்கள் ? தமிழர்களின் எழிர்ச்சி கொண்ட ராணுவம் தான் புலிகள் .... உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து தானே அவர்களை அழிக்க முடிந்தது ... முதலில் உண்மையை ஒத்துகொளுங்கள் .   சும்மா விரோத கொள்கை என்று .... அலட்ட கூடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.