Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2025இல் இந்தியா சிதறலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும்போது ஈழத்தீவில் தமிழர்கள் இருக்கமாட்டார்கள். எல்லோரையும் சிங்களவர்கள் ஒன்றில் விரட்டியடித்திருப்பார்கள் அல்லது சிங்களவர்களாகவே மாற்றியிருப்பார்கள். இலங்கையில் தமிழ் பேசுவது முஸ்லிம்களாக இருப்பார்கள் <_<

 

 

இல்லை

மறுக்கின்றேன்

காலம் பதில் சொல்லும்...........

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

அது நாங்கள் அதுவரை செய்யப் போகும் அரசியலில் தங்கியுளது.

இருப்பை தக்க வைக்கும், குடியேற்றத்தை முடக்கும் சமயோசித "நாணல் அரசியலை மேற்கொண்டால் எமக்கான சூழல் வரும் வரை முகிழ்திருக்கலாம்.

அடிதடி, கொடிபிடி அரசியல் செய்தோமாயின் நீங்கள் சொல்வதே நடக்கும்.

நடக்க போகாத ஒரு விடயத்திற்கு இவ்வளவு வியாக்கியானங்களா ?

பொழுது போகாவிட்டால் ,

சீனா அமெரிக்காவை பிடிக்கும் போது தமிழர்களை நிலை என்ன ?

உலகில் உள்ள பனி முழுக்க உருகி கடலானால் தமிழன் அதற்குள் சுழி ஓடுவானா இல்லையா ?

இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் உரையாடலாம் .

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 


முப்பது வருட பழக்கம் இப்பவும் போகுதில்லை இலகுவில் போகாது . 

முப்பது வருசத்துக்கு முதல் இருந்த சத்துருக்களை பற்டி சிலர் இப்பவும் போட்டு இழுத்தோண்டு திரியினம்..அதுக்க :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருப்பவர்கள் இந்தியா உலகின் பெரிய சக்தியாக வருவதைக் கவனிக்காமல் இருப்பவர்கள்தான்.

அநேகமான இந்தியர்கள் தாம் இந்தியர்கள் என்பதைப் பெருமையாகக் கருதுபவர்கள். அந்த உணர்வைக் குறைக்கக் கூடிய விடயங்கள் எதுவென்றாலும் அதனை முளையிலேயே கிள்ளியெறிய சரியான திட்டமிடலோடு செயற்படும் கொள்கையைக் கொண்ட கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது.

காலிஸ்தான், அசாம், டார்லிஜிங், மிசோராம், தெலுங்கானா என்று தொடங்கிய கிளர்ச்சிகள் எல்லாம் எவ்வாறு இல்லாமல் போயின என்று அறிந்தால் இந்தியா உடைவது கற்பனையில்தான் என்று புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.worldology.com/Europe/Europe_Articles/causes_soviet_collapse.htm

இதில் சோவியத் யூனியன் உடைந்ததுக்கான காரணங்களில் சிலவற்றை எழுதியுள்ளார்கள். 'எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்' என்பதுபோல ஒரு ஐந்து வருட காலத்தில் எல்லாம் உடைந்து கொட்டிவிட்டது.

இவற்றில் இருந்து இந்திய ஆட்சியாளர்கள் பாடம் படித்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தோன்றவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை உடைக்க வேண்டிய அவசியம்  மேற்குலகிற்கு இன்னும் வரவில்லை. அப்படியொரு அவசியம் வந்தால் அதற்காக மேற்குலகம் அதிகம் உழைக்க வேண்டியதில்லை. ஒரு வருடம் போதுமானது.  :D

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு இந்தியாவிலிருந்து பிரியும் நிலை வருமெனின்,  இந்திய ஆழும் வர்க்கமானது, அதனைத் தடுப்பதற்காக ' அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும்' கூட நியாயப்படுத்தும்!

 

பார்ப்பனிய மனநிலையைப் புரிந்தவர்களுக்கு 'இது' நன்றாக விளங்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமாவது பிரிவதாவது. வெரோசூசு இருந்தால்தானே!

20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுக்கு இதுவரை மத்தி எந்தப் பதிலும் சொல்லவில்லை! தமிழகம் இந்தியாவின் அடிமை மாநிலம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமாவது பிரிவதாவது. வெரோசூசு இருந்தால்தானே!

20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுக்கு இதுவரை மத்தி எந்தப் பதிலும் சொல்லவில்லை! தமிழகம் இந்தியாவின் அடிமை மாநிலம்!

 

 

எல்லை மீறி வந்தால் சுடுவார்கள்தானே என்று கூறியதும் நீங்கள் தானே?? பிறகு ஏன் மத்தி  இந்தக் கொலை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்கிற கவலை ?? :D

இந்தியா பிரிவதற்கான வலுவான காரணங்கள் இருந்தாலும் கூட,ணாது நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் தற்போதைக்கு இல்லை. சீனாவின் கொட்டத்தை அடக்குவதற்கு இன்று மேற்குலகிற்கு மிகவும் இன்றியமையாதது வலுவான இந்தியா. ஆகா மேற்குலகு நிச்சயம் இந்தியா பிரிவதை விரும்பாது.

 

சோவியத் ராச்சியம் பிரிந்தது மேற்குலகின் விருப்பத்திற்காகவே. ஒன்றுபட்ட சோயியத் யூனியனை உடைத்துவிட்டால் பனிப்போரில் தமது பலத்தை அதிகரித்துவிடலாம் என்கிற மேற்குலகின் திட்டமே சோவியத் பல துண்டுகளாகப் பிரியக் காரணமாகியது. 

 

இன்றைக்கு இந்தியா மேற்குலகின் செல்லப்பிள்ளை, ஆகவே அது ஒன்றாக இருப்பதைத்தான் மேற்குலகு விரும்பும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமாவது பிரிவதாவது. வெரோசூசு இருந்தால்தானே!

20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுக்கு இதுவரை மத்தி எந்தப் பதிலும் சொல்லவில்லை! தமிழகம் இந்தியாவின் அடிமை மாநிலம்!

 

நடக்கும் என்பார் நடக்காது....

நடக்காதென்பார் நடந்து விடும்

 

எல்லாம் ஆண்டவன் பாத்துப்பார் விட்டுடுங்கோ ..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.