Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 04:06.18 PM GMT ]
maiththiri.jpg
இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதுடன்  அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தை இன்று பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வாழும் சிலர் இன்னமும் ஈழக்கனவுடன் செயற்படுகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது என குறிப்பிட்டார்.

நாட்டின் இறைமை, மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகம் என்பவற்றை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட தாம் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

 

tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்கிற அளவிற்கு நாம் வந்தால்
நீங்கள் கொடுப்பது
கொடுக்காதது பற்றி யாரும் அலட்ட போவதில்லை.

 

அடக்குமுறை தொடருமட்டும்
அதற்கு எதிரான போர் இருந்து கொண்டே இருக்கும்.
இதில் எதை தொடர்வது என்பது பற்றி நீங்கள் தேர்வு செய்யலாம்.

 

இப்போதிருக்கும் தமிழர் தலைமையில்  அரைக்கும் சம்பலை
எப்போது அரைக்க முடியாது.
அது சம்பல் அரைக்க ஸ்பெசலாக தயாரித்தது....

  • கருத்துக்கள உறவுகள்

கனவுக் குழுக்கள் தங்களுக்குள்ளேயே கனவு கண்டு புலம்பவேண்டியதுதான் என்கிறார் மகிந்த :D

கனவுக் குழுக்கள் தங்களுக்குள்ளேயே கனவு கண்டு புலம்பவேண்டியதுதான் என்கிறார் மகிந்த :D

நீங்க இன்னும் மகிந்தவை பற்றித்தான் கனவு காணுறீங்க போல

  • கருத்துக்கள உறவுகள்

செல்வநாயகத்தின் ஈழக்கனவு பலிக்காது என்றார்கள்...

 

பின் அமிர்தலிங்கத்தின் ஈழக்கனவு பலிக்காது என்றார்கள்..

 

பின்.. புலிகளின் ஈழக்கனவு பலிக்காது என்றார்கள்..

 

இப்ப இவர் புலம்பெயர் தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது என்கிறார்...

 

ஆனால்.. இவர்களால் ஈழக்கனவை அழிக்கவே முடியவில்லை என்ற யதார்த்தம் இன்னும் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. ஈழக்கனவை.. இலங்கைத் தீவில்.. தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை தராமல் எவரும் அழிக்க முடியாது. இந்த யதார்த்தத்தை சிங்களவர்கள் புரிந்து கொண்டு செயற்படும் வரை ஈழக்கனவு பல்வேறு வடிவங்களில் வாழும் வளரும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் தொடரும்.........

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக் கனவு தொடரும் வரை சிங்களவர்களின் நிம்மதிக்கும் உத்தரவாதம் இல்லை என்பதை சிங்களக் கத்துக்குட்டி அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் சரி. :icon_idea:

கனவுகள் தொடரும்.........

தனக்கு விருப்பமான அபிலாசைகளை கனவுகாண்பது இவ்வுலகிலே எல்லா மனிதர்களதும் வழமை. அதனால் உங்களுக்கென்ன பிரச்சனை. மற்றவர்களின் விடயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு அவர்களை சீண்டி இன்பம் காண்பது உங்கள் வக்கிர கனவு. அந்த கனவை யாழில் உங்கள் சீண்டல் கருத்துக்கள். மூலம் இனிதே செய்து இனபம் காணுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ஓம், என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் எங்களுக்கும் கனவு வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாமே யாழ் uniல் மினக்கெட்டு வந்து கனவு காண்க ,கனவு காண்க என்று போதிக்கின்றார் மைத்ரி கனவு பலிக்காது, பலிக்காது எண்டுறார் யாரைய்யா நம்புறது ஒ... ய் கூப்பிடு இந்தியன் சவுத் புளக்கை :)

நியானி: மேற்கோள் ஒன்றும் அதற்கான சீண்டும் பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

அது ஏன் சிங்களவனை விட பல தமிழர்கள் ஈழம் அமையக் கூடாது என்பதில் அக்கறையாய் இருக்கீனம் என்பது தான் புரியவில்லை. அதனா இவர்கள் தமிழர்களா என ஒரு சந்தேகம் ஏற்படுது. அதை விட தமிழ் ஈழ கனவை மாற்றுக்கருத்து என்ற பெயரில் அவமதிப்பவர்களையும் அவர்களது கருத்தையும் ஏன் யாழ் களம் விட்டு வைக்கிறது ?

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நியாயமான கேள்விகள் டாஷ்.

பதில் கிடைத்ததும் எனக்கும் அறியத்தரவும்.

இவர்களிடம் எல்லாம் 100% தமிழர் என்று டிஎன் ஏ ஆதாரம் வாங்கி கொண்டுதான் யாழ் இனி கருத்தெழுத விடவேண்டும் என்பது என் பணிவான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கான மாற்றீடு இல்லாதவரை தமிழீழக்கொள்கை சாகாது. அவை தந்தை செல்வா போன்றவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வாக சொல்லப்பட்டது. கனவு காண்பவர்கள் தமிழருக்கான தீர்வு என்ன என்பதை சொல்லுங்கள் பார்க்கலாம். 13 என தொடங்கினீர்கள் அழுதுடுவேன் ஆமா. :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை கேட்பதும் கையை விடுவதும் 

சிங்கள் அரசியல்வாதிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.

 

தமிழர்கள் தாங்களாக கேட்கவில்லை.

சிங்களவர்களால் கேட்க வைக்கப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனவுக் குழுக்கள் தங்களுக்குள்ளேயே கனவு கண்டு புலம்பவேண்டியதுதான் என்கிறார் மகிந்த :D

மகிந்தவின் அடுத்த 6 வருட அரசாட்சி கனவு எப்படி கலைந்தது என நீங்கள் சொல்ல நாங்கள் கேட்க ஆசைப்படுகிறோம்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவெங்கும் ஒட்டுக்குழுக்கள் இருக்கும் தைரியத்தில் தான் இந்த வார்த்தை.வித்தியாவின் இறப்பு முள்ளி வாய்க்கால் அஞ்சலியை திசை திருப்பினாலும் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு ஒட்டு குழுக்களை காட்டி கொடுத்துள்ளது.

ஆங்கிலயேர் இலங்கையில் இருந்த மூன்று ராட்சியங்களை இணைத்திருக்காவிட்டால் நாங்கள் இப்பவும் தனி அலகாகவே இருந்திருப்போம் .. நாங்கள் கேட்பது எப்படி நாம் வாழ்ந்தோமோ அதனை எங்களிடம் விடச்சொல்லி .    
 
எங்கள் இருப்பை தான் நாம் கேட்கிறோம் .... புதிதாக கேட்கவில்லை ....
 
ஏன் எல்லோரும் புலிகள் தான் புதிதாக ஈழம் கேட்டதாக எதிர்மறை வாதங்களை எழுதுகின்றிர்கள் ...
நாங்கள் எப்படி வாழ்ந்தோமோ அதனை தான் புலிகள் கேட்டார்கள் ...
புலம்பெயர்ஸின்ட ஈழ கனவு வீக்கெண்ட் பார்ட்டிகளில பியருக்கு சைட் டிஷ் ஆ கதைப்பதற்கும் கொடி ஊர்வலத்திற்கு போய் கொத்து ரொட்டி சாப்பிட மட்டும் தான் பயன்படுது என்று மைத்திரிக்கு யாராவது விளங்கப்படுத்த வேண்டும். 
இதுவே மீண்டும் நாட்டில ஒரு போராட்டம் துவங்குது நீங்களும் உங்கட பிள்ளைகளும் போராட வாங்கோ என்று யாராவது கேட்டா புலம்பெயர்ஸ் இருந்த இடம் தெரியாது. 
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ நீங்கள் புலம் பெயர்ந்து போராடிக்கொண்டு பியர் அடிக்காமல் கருத்து எழுதுகீறீர்களா? போராட்டம் என்று வந்தால் உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைப்பீர்களா? அப்படியாயின் ஒரு வித்தியாசமான முதலாவது போராட்ட குணமுள்ள தமிழராக பார்க்கிறேன். :) :)

நான் வெளிநாட்டில இருந்து ஈழ கனவு கானவும் இல்லை. போராட்டம் நடந்து மற்றயவரின் பிள்ளைகள் சாகும் போது ஸ்கோர் கேட்டு விசிலடிக்கவும் இல்லை. இணையத்தில வந்து குந்திகொண்டு வெற்றி வேல் வீரவேல் கோசம் போடுவது எல்லாம் போராட்டம் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு ஜனாதிபதி கனவு பலிக்கும் போது ஏன் ஈழக்கனவு பலிக்காது..!! :lol:


தமிழர்கள் ஒற்றுமையாக.. முயன்றால் பலிக்கும். எப்பவோ பலிச்சிருக்கும். :icon_idea:


ஆனால்.. ஒற்றுமையாகத்தான் விடாதுங்களே.. தமிழர்களுக்குள்ளே உள்ள கீழ்மைத் தனங்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தானே தான் அப்படி இல்லை என்று certificate கொடுத்து மற்றவர்கள் அப்படி என்று புலம்பெயர் தமிழ்மக்களை பார்த்து திட்டி தீர்ப்பதே ஒரு சிலருக்கு வேலையாய் போச்சு. சரி திட்டி முடிச்சுதெல்லா. போய் ஒரு பியரே அடிச்சுட்டு படுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை கேட்பதும் கையை விடுவதும் 

சிங்கள் அரசியல்வாதிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.

 

தமிழர்கள் தாங்களாக கேட்கவில்லை.

சிங்களவர்களால் கேட்க வைக்கப்பட்டார்கள்.

 

புலம்பெயர் தமிழர்களின் கனவு பலிக்காது ஆனால் தாயக தமிழர்களின் கனவு பலிக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி

 

ஒருவரின் கனவுக்கே பயப்படும் ஐனாதிபதி  இவராகத்தான் இருப்பார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.