Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடிக்கும் என்றால் பிரிந்து செல்வதைத் தவிர எந்த வழியும் இல்லை! -அடைக்கலநாதன்

Featured Replies

தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை வழங்காது தொடர்ந்து இழுத்தடிக்கும் என்றால் சர்வதேசத்தின் பங்களிப்புடன்பிரிந்து செல்வதைத் தவிர எந்த வழியும் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து ஊடகம்  ஒன்றின்  கேள்விக்கு பதில் அளிக்கும் போது  இதனை அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு காணப்படும். எமது நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்குவோம். அவ்வாறு அவர்கள் எமது பிரச்சனைக்குத் தீர்வு வழங்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்போம்.

தொடர்ந்து தென்னிலங்கை தமிழ் மக்களை ஏமாற்றிவரும் என்றால் சர்வதேச உதவியுடன் பிரிந்து செல்வதன் மூலமே எமது பிரச்சனைக்கான தீர்வினைக் காணமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.http://www.pathivu.com/news/41631/57//d,article_full.aspx

இதை சனத்திட்டை சொல்ல முதல் போய் சுமந்திரனிட்டையும் சம்பந்தனிட்டையும் சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உதவியுடன் பிரிந்துசெல்லக் கிடைக்குமாக இருந்தால் ஓரளவு நம்பலாம். சர்வதேச உதவியுடன் என்றால் ஈழத்தில் கடைசித்தமிழன் சேடமிழுக்கும்வரை நடைபெறாத காரியம்.... :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை வழங்காது தொடர்ந்து இழுத்தடிக்கும் என்றால் சர்வதேசத்தின் பங்களிப்புடன்பிரிந்து செல்வதைத் தவிர எந்த வழியும் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து ஊடகம்  ஒன்றின்  கேள்விக்கு பதில் அளிக்கும் போது  இதனை அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு காணப்படும். எமது நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்குவோம். அவ்வாறு அவர்கள் எமது பிரச்சனைக்குத் தீர்வு வழங்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்போம்.

தொடர்ந்து தென்னிலங்கை தமிழ் மக்களை ஏமாற்றிவரும் என்றால் சர்வதேச உதவியுடன் பிரிந்து செல்வதன் மூலமே எமது பிரச்சனைக்கான தீர்வினைக் காணமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.http://www.pathivu.com/news/41631/57//d,article_full.aspx

ஆகா இப்பவே கண்ணை கட்டுதே... ஏங்க போய் முடியும் என்றுதான் விளங்கவில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடிக்கும் என்றால் பிரிந்து செல்வதைத் தவிர எந்த வழியும் இல்லை! -அடைக்கலநாதன்

 

சிங்களவனிடம் பாடம் படித்த பின்னர்தான் / குணம் தெரிந்துதான் ஆரம்பித்து வைக்கப்பட்டது ஒரு போராட்டம்.

அதை வாலறுந்த தமிழ் நரிகள் சிங்களத்துடன் சோரம் போய் அழித்து விட்டார்கள்.

இனிக்காவு கொடுக்க இளைஞர்களும் இல்லை! இருப்பவர்களும் நாட்டுப்பற்று இல்லாமல்தான் வளர்கிறார்கள் (சிங்களத்தின் உளவியல் யுத்ததினால்)

 

எண்டை ஐயோ அரசாங்கமே இல்லாத சொரிலன்காவில அரசாங்கம் இழுத்தடிக்குதாம் 

பிக்குமார் சொல்வதே அங்கு சட்டம்....தமிழ் மக்களை ஏமாற்றுவதே கூட்டமைப்பின் திட்டம் 

அதுசரி வடமாகாணசபை உறுப்பினர்களின் சத்தத்தை கானோம்  

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பொறுக்க.... எத்தினை திருகுதாளம் பண்ண வேண்டி இருக்கு.Smiley

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட தொல்லை தாங்க முடியல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோ ஆரம்பிச்ச நாளில் இருந்து இதைத்தான் சொல்லுறியள். அப்புறம் சிங்கள அரசின் சனநாய்க நீரோட்டத்தில் நீந்திறம் என்றும் மக்களுக்கு அறிக்கை விடுவியள். தேர்தல் என்ற ஒன்றுக்காக.. நித்தியானந்தாவை விடக் கேவலமா எல்லாம் சிலர் வேசம் போடுறாங்க. :innocent::grin:

இல்லை இல்லை அப்படி பேச சொன்னதே எங்கள் சம்பந்தன் சுமந்திரன் தான் ... அந்த காமெடி கும்பல் இதனையும் சொல்லும் இன்னும் சொல்லும் ...அப்புறம் சிங்களவனிடம் போய் .....கழுவும் .இதனை ராஜதந்திரம் என்று விளங்கத கொஞ்சம் இந்த யாழில் உளறுவார்கள் ...இப்படி எத்தனை எத்தனை கோமாளி கூத்துகளை பார்க்க வேண்டி யுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அடடா!!!ஆரம்பிச்சிட்டாங்க ஐயா!!ஆரம்பிச்சிட்டாங்க!!!!

 

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் ஐயா, மீண்டும் ஆரம்பத்தில் இருந்தா?

இளைனர்களை உசுப்பேத்த வேண்டாம். முதலில் நல்ல தலைமையை கண்டு உருவாக்குங்கள், அதுவே தீர்வின் முதல் படி.

ரெலோ ஆரம்பிச்ச நாளில் இருந்து இதைத்தான் சொல்லுறியள். அப்புறம் சிங்கள அரசின் சனநாய்க நீரோட்டத்தில் நீந்திறம் என்றும் மக்களுக்கு அறிக்கை விடுவியள். தேர்தல் என்ற ஒன்றுக்காக.. நித்தியானந்தாவை விடக் கேவலமா எல்லாம் சிலர் வேசம் போடுறாங்க. :innocent::grin:

2020இல் இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக வீழ்ச்சியடைய வைப்பது TELOவின் 50வருட திட்டமாக 1970களில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களே பிரேமதாசாவுடனும், சந்திரிக்காவுடனும் இணைந்து தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைத்தார்கள்.  இப்ப இப்படியொண்டை கூறுகின்றார்.


இப்படி மண்டையிலை மிளகாய் அரைப்பவர்கள் தான் எங்களுக்கு பிடுங்கிகொட்டப்போயினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.