Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு சேறு பூசும் சுமந்திரன்

Featured Replies

போரின் போது அரசபடைகள் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு நடவடிக்கைகள் இனப்படுகொலை என்றால் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மக்களால் தெரிசெய்யப்பட்டவர் அல்ல என்பதும் திரு சம்பந்தனால் இறக்குமதி செய்யப்படடவர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

ஏற்கனவே அவர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்போதுமே பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லையெனவும் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் களமாடிய காலத்தில் அரசியல் உறக்கத்திலும் உல்லாச வாழ்விலும் மிதந்துகொண்டிருந்த இவர் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடும் அதேவேளையில் விடுதலைப்புலிகளுக்கும் சேறுபூசமுனைந்துள்ளார். விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை ஏன் வடக்கை விட்டு வெளியேற்றினர் என்பதை அவர்கள் அப்போதே தெளிவாக விளங்கியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் வந்தாறுமூலை, சந்துருகொண்டான், புதுக்குடியிருப்பு, கொக்கட்டிச்சோலை, வீரமுனை, உடும்பன்குளம் எனப் பல்வேறு பகுதிகளிலும், முஸ்லிம் ஊர்காவற்படையினர் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து தமிழ் மக்கள் மீது பெரும் பெரும் படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல நூறு தமிழர்கள் சுட்டும் வெட்டியும் உயிருடன் எரித்தும் கொல்லப்பட்டனர்.

இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபக் கனலை எழுப்பியது. இந்நிலையில் வடக்கில் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரம் ஏற்படும் நிலை உருவாகியது. எனவே முஸ்லீம்களுக்கு ஏற்படக்கூடிய பேரழிவைத் தடுப்பதற்காகவே விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றினர்.

வரலாறு இப்படியிருக்க சுமந்திரன் அந்த சம்பவத்தை இனச் சுத்திகரிப்பு என வர்ணிக்கிறார். தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் ஐக்கியப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்வதில் சிங்களப் பேரினவாத சக்திகளும் அவர்களின் அடிவருடிகளான றிசாட் பதியுதீன், அன்வர் போன்றவர்களும் முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமையை பாவித்துவருகின்றனர். இப்போது சுமந்திரனும் அதேபாணியில் முஸ்லீம்களுக்காகக் கண்ணீர் வடிப்பதாகக் காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகிறார்.

மஹிந்தவுடனும் கோத்தபாயவுடனும் நல்லுறவு கொண்டாடி வரும் சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்த முனைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்படும் எவரையும் தமிழ் மக்கள் மன்னித்துவிடப் போவதில்லை. அப்படியான நிலையிலும் சுமந்திரன் விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் வகையிலும், விடுதலைப் புலிகளின் அடையாளங்களை இல்லாமற் செய்வதிலும் அக்கறை காட்டி வருகிறார் என்றால் அவர் முழுத் தமிழ் மக்களையும் முட்டாள்களாக்க முனைகிறார் என்றுதான் அர்த்தம்.

இவர் தற்சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் அது தனது புலி எதிர்ப்புக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே முழங்குவார். எனவே சுமந்திரனுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் எமது விடுதலைக்காக எமது போராளிகளும், மாவீரர்களும், மக்களும் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு எதிரான வாக்குகள் என்றே அவர் ஆதாரப்படுத்துவார். இலங்கையின் சுதந்திரதினத்தில் தான் கலந்துகொண்டதையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டதை தான் வரவேற்றதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் எனவும் பிரச்சாரம் செய்வார்.

எனவே தமிழ் மக்கள் சுமந்திரனுக்கு ஒரு விருப்புவாக்கைக்கூட வழங்கக்கூடாது. தமிழ் மக்கள், துரோகிகள் எந்த வேடத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதைச் சுமந்திரனுக்கு மட்டுமல்ல முழு உலகுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

http://tamilleader.com/?p=50633

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் சுமந்திரனின் கடந்த கால பின்வாசல் சிங்கள பேரின சார்பு... அரசியல் பிரவேசத்தை தடுத்தார்கள். அப்படிப்பட்ட சுமந்திரனிடமும் அவருக்கு துதிபாடும் சம்பந்தனிடமும் விடுதலைப்புலிகள் பற்றி நல்லபிப்பிராயத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

200px-Bos_taurus_taurus_turd.jpg

சுமந்திரன் இனியும், விடுதலைப் புலிகளுக்கு, சேறு பூசினால்....
சுமந்திரனுக்கும், சம்பந்தனுக்கும், "சாணி" கரைத்து.... பூசப்படும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய, தமிழக , சிங்கள (உயரினவாத) பேரினவாத, தமிழ்த்தேசிய எதிர்ப்பு மற்றும் அழிப்பவாத துணையர்களான தமிழரசியல்(?) ஆளர்களனெ அனைவரும் அழிக்கப்பட்ட புலிகளின்றி  ஏன் அரசியல் செய்ய முடியாதுள்ளது? உங்களிடம் சொந்த அரசியல் இல்லையா? அல்லது அது மக்களிடம் எடுபடாதா?  இதனைத்தான் அரசியல் வங்குரோத்துத்தனம் என்பதா? ஒரு இனத்தின் அழிவில் தமது வாழ்வைச் சுபபோகமாக்கிட முனையும் சுயநலமிகளின் முகமூடிகள் நிலைத்தாக வரலாறு இல்லை. 
 காக்கை வன்னியன் முதல் கதிர்காமர்வரை..... காறி உமிழப்படும் ஒரு இரண்டகப்பிறப்புகளாய் வரலாறு பதிந்துள்ளது.... தமிழினத்தின்தின் விடியல்வரை இது நீடிக்கவே செய்யும்.... காளான்களும் தொடரந்து முளைக்கும்  ஆனால் விடுதலை என்பது  தொடர்ச்சியானது. அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் விடுதலையை விழிப்புநிலையிலே வைத்திருக்கும் என்பதை உலகம் கண்டும் கடந்தும் வருகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முறையும் தமிழ் வேட்பாளர்கள் வடபகுதி முஸ்லிம் களின் வெளியேற்றம் தொடர்பாக கருத்துக்களை கூறிவார்கள். ஆனால் முஸ்லிம் களால் தமிழருக்கு ஏற்பட்ட அநீதி பற்றி மறந்தும் கூட முஸ்லிம்களிடம் கேட்கமாட்டார்கள். 

"கிழக்கு மாகாணத்தில் வந்தாறுமூலை, சந்துருகொண்டான், புதுக்குடியிருப்பு, கொக்கட்டிச்சோலை, வீரமுனை, உடும்பன்குளம் எனப் பல்வேறு பகுதிகளிலும், முஸ்லிம் ஊர்காவற்படையினர் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து தமிழ் மக்கள் மீது பெரும் பெரும் படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல நூறு தமிழர்கள் சுட்டும் வெட்டியும் உயிருடன் எரித்தும் கொல்லப்பட்டனர்."

ஒரு நல்ல தமிழன் தன்  இனத்தின் பெயரால் என்னொரு இனத்துக்கு எதிராக நடந்த அநியாயத்தை அம்பலப்படுதுவான். போராடுவான். மாறாக மோசமான தமிழன் அதை மூடி மறைப்பான் அல்லது நியாயப்படுத்துவான். அதே போலவே நல்ல முஸ்லீமும்  நல்ல சிங்களவனும் தன்னுடைய இனத்தின் பெயரால் அடுத்த இனத்துக்கு நடந்த அநீதியை அம்பலப்படுத்துவான். அதுக்கு எதிராக போராடுவான். அதுவே இன ஐக்கியத்துக்கான ஒரே மார்க்கம். அதை சுமத்திரன் செய்திருந்தால் அவரே நல்ல தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதேமாதிரி சுமந்திரனுடன் டீல் பண்ணும் நேர்மையான சிங்களவனை அல்லது முஸ்லிமை காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு சுமந்திரன் சேறு பூசாட்டி உலகம் பூரா தலையில் வைத்துக் கொண்ணாடி இருக்கும்.

1999 இல் சும் அரசியலில் அ ஆ சொல்ல முதலே உலகம் புலிகளின் போக்கை அடையாளம் கண்டுவிட்டது.

சுமந்திரன் உள்ளதை உள்ளபடி சொகிறார்.

ஒரு நல்ல தமிழன் தன்  இனத்தின் பெயரால் என்னொரு இனத்துக்கு எதிராக நடந்த அநியாயத்தை அம்பலப்படுதுவான். போராடுவான். மாறாக மோசமான தமிழன் அதை மூடி மறைப்பான் அல்லது நியாயப்படுத்துவான். அதே போலவே நல்ல முஸ்லீமும்  நல்ல சிங்களவனும் தன்னுடைய இனத்தின் பெயரால் அடுத்த இனத்துக்கு நடந்த அநீதியை அம்பலப்படுத்துவான். அதுக்கு எதிராக போராடுவான். அதுவே இன ஐக்கியத்துக்கான ஒரே மார்க்கம். அதை சுமத்திரன் செய்திருந்தால் அவரே நல்ல தமிழன்.

எந்த ஒரு முஸ்லிமாவது தமிழருக்கு செய்த பிழைகளை பகிரங்கமாக ஒத்துக்கொண்டு இருக்கிறீர்களா

 

எங்க தமிழன்ட குடிசையை பிடுங்கி மடம் கட்டலாம் எண்டு திரியிற கூட்டம் நீதி கதைக்க வந்துட்டுது்

நல்ல மக்களின் செய்திகளை பர்ர்க்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் சிறுபான்மையினர்தான். அவர்களுடைய குரலை பாரிய செய்தி நிறுவனங்கள் இருட்டடிப்பு  செய்யலாம். ஆனாலும் நீங்கள் விரும்பினால் அறிந்து கொள்ளலாம். நீங்கள் மோசமான இனவாதிகளை தேடித் திரிந்தால் அவர்கள்தான் கிடைப்பார்கள். நல்லவர்கள் உங்கள் பார்வைக்கு தெரியவே மாட்டார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மக்களின் செய்திகளை பர்ர்க்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் சிறுபான்மையினர்தான். அவர்களுடைய குரலை பாரிய செய்தி நிறுவனங்கள் இருட்டடிப்பு  செய்யலாம். ஆனாலும் நீங்கள் விரும்பினால் அறிந்து கொள்ளலாம். நீங்கள் மோசமான இனவாதிகளை தேடித் திரிந்தால் அவர்கள்தான் கிடைப்பார்கள். நல்லவர்கள் உங்கள் பார்வைக்கு தெரியவே மாட்டார்கள் . 

ஒரு  நல்ல முஸ்லீமை தேடுகிறேன்.

உங்கள் வாழ்வில் யாரரவது முஸ்லிமுடன் உறவு உண்டா. அல்லது வெறும் செய்திகளை வைத்து முஸ்லிம் களை பற்றி அபிபிராயம் கொள்கீர்களா . உங்களை ஆத்திரமூடுமாயின் நான் வாதத்தை முடித்துக் கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் எந்த இனத்திலும் நல்லவரை கண்டு கொள்ளலாம். நான் பட்டியல் போட  முன்வரவில்லை. இனவாதமே  இனவாதத்துக்கு தீனி  போடும். உங்கள் உணர்வுகளுக்கு விக்ரமபாகுவை விட பொது பல சேனா தீனி போடுமானால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்வில் யாரரவது முஸ்லிமுடன் உறவு உண்டா. அல்லது வெறும் செய்திகளை வைத்து முஸ்லிம் களை பற்றி அபிபிராயம் கொள்கீர்களா . உங்களை ஆத்திரமூடுமாயின் நான் வாதத்தை முடித்துக் கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் எந்த இனத்திலும் நல்லவரை கண்டு கொள்ளலாம். நான் பட்டியல் போட  முன்வரவில்லை. இனவாதமே  இனவாதத்துக்கு தீனி  போடும். உங்கள் உணர்வுகளுக்கு விக்ரமபாகுவை விட பொது பல சேனா தீனி போடுமானால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

நான் கேட்ட நல்ல மனிதரை இலங்கையில் முதலில் காட்டுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இத்தனைபேரும் சேர்ந்து ஒரு நல்ல தமிழனை ஏன் ஹசனுக்கு இனம் காட்டக் கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மக்களின் செய்திகளை பர்ர்க்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் சிறுபான்மையினர்தான். அவர்களுடைய குரலை பாரிய செய்தி நிறுவனங்கள் இருட்டடிப்பு  செய்யலாம். ஆனாலும் நீங்கள் விரும்பினால் அறிந்து கொள்ளலாம். நீங்கள் மோசமான இனவாதிகளை தேடித் திரிந்தால் அவர்கள்தான் கிடைப்பார்கள். நல்லவர்கள் உங்கள் பார்வைக்கு தெரியவே மாட்டார்கள் . 

ஒரு நல்ல சிங்கள மனிதனையோ அல்லது ஒரு நல்ல முஸ்லீமையோ
வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அரசியலை விட்டுத் தனிப்பட்ட ரீதியில் பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாக இருக்கலாம்.

ஆனால் இன அரசியல் என்று வரும்போது இந்த நல்ல மனிதர்கள் எல்லோரும் இனவாதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கின்றார்கள்.

தமிழன் மட்டுமே இணக்க அரசியலில் இறங்கி எத்தனை தரமும் அடி வாங்கிக்கொண்டிருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இத்தனைபேரும் சேர்ந்து ஒரு நல்ல தமிழனை ஏன் ஹசனுக்கு இனம் காட்டக் கூடாது?

வாழும் உதாரணமாக நீங்கள் இருக்கும் போது..,:grin: நாங்கள் ஏன் இன்னொருவரை தேடி அலைவான்:shocked:

நான் கேட்ட நல்ல மனிதரை இலங்கையில் முதலில் காட்டுங்கள் .

லண்டனில இருந்து தமிழ்நெட் வாசிச்சா இலங்கையில நல்ல முஸ்லிமை கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம். 90ம் ஆண்டு அடிச்சு துரத்தின அத்தனை ஆயிரம் முஸ்லிம்களில ஒரு நல்லவரை கூட உங்களுக்கு தெரியவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதனுக்கான வரைவிலக்கணத்தை மேலே ஹசன் தந்துள்ளார்.அதற்குள் போய் தேடுங்கள்,தெனாலி

புலிகள் நல்லவர்கள் வல்லவர்கள் என்று சொன்னால் மாத்திரம் அவர்கள் நல்லவர்கள் .

சுமந்திரன் சொல்லியா அல்லது முஸ்லிகள் சொல்லியா எமக்கு விடுதலை புலிகளை பற்றி தெரியவேண்டும் .

 

புலிகள் நல்லவர்கள் வல்லவர்கள் என்று சொன்னால் மாத்திரம் அவர்கள் நல்லவர்கள் .

சுமந்திரன் சொல்லியா அல்லது முஸ்லிகள் சொல்லியா எமக்கு விடுதலை புலிகளை பற்றி தெரியவேண்டும் .

 

அதனை சொல்வதற்கும் ஒரு இது வேண்டும் .....

புலி அடிச்சு துரத்தின 75000 முஸ்லிம்களில இருந்த பெண்கள் எதுவும் செய்யாத அப்பாவி ஆண்கள் குழந்தைகள் இவர்கள் செய்த தவறு என்ன அண்ணை? 

அவர்கள் செய்த வேலையால் இறந்த எத்தனை தமிழ் குடும்பம் என்பது உங்களுக்கு தெரியுமா அவர்களுக்கு என்ன சொல்லப்போகின்றீர்கள் ... எங்களுக்கு வடிந்தால் சட்னி முஸ்லிம்கள் என்றால் ரத்தமா ? நடுநிலை என்பது இதுவல்ல ...முதலில் வெளிச்சத்திக்கு வரவும் 

  • கருத்துக்கள உறவுகள்

முசுலீம்மாக பிறந்தார்களே இதை விட ஒரு காரணம் வேண்டுமா தெனாலி?

உங்களுக்கு அரி வரி அறிவு தெனாலி.

எவனாவது ஒருவனின் அடிமை என்று பெயரை மாத்திப் பாருங்கோ - அறிவு கொப்பளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தெனாலி பெண்களையும் குழந்தைகளையும் தவிர மற்ற எல்லோரையும் அடிச்சு துரத்தியிருக்க வேண்டும் என்கிறீர்களா? 

 

முசுலீம்மாக பிறந்தார்களே இதை விட ஒரு காரணம் வேண்டுமா தெனாலி?

உங்களுக்கு அரி வரி அறிவு தெனாலி.

எவனாவது ஒருவனின் அடிமை என்று பெயரை மாத்திப் பாருங்கோ - அறிவு கொப்பளிக்கும்.

பாரதிதாசன் என்று கூட அறிவாளிகள் தெளிவானவர்கள் உண்டு இவ்வுலகில் ....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையிலேயே தெரியாது யாழ் மாவட்ட முஸிலிம்கள் செய்த வேலை என்ன அதனால் இறந்தது எத்தனை பேர்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.