Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்

Featured Replies

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்
[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 12:53.54 AM GMT ]
rayyyap.jpg
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. 

தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர்.

யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம்பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், யுத்தம் நடந்து முடிந்த பின் தமிழ் மக்களை அப்போதைய மஹிந்த அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது என்று உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தார்.

இதனால் இலங்கை அரசாங்கத்திற்கும் குறிப்பாக இலங்கை இராணுவத்தின் மீது காணப்பட்ட போர்க்குற்ற விசாரனைகள் அதிகரித்த நிலையில் காணப்பட்டது.

இந்தநிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள் சுகவீனம் அடைவதற்கு முன்னர் மன்னாரில் இருந்து கொழும்பிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்து தமிழ் மக்களுக்கு இலங்கை அரசினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கூறச் சென்றார்.

கொழும்பிற்குச் செல்லும் வழியில் மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு இராணுவம் அழைத்த மன்னார் ஆயர் மற்றும் அருட்தந்தை ஒருவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது குறித்த இருவருக்கும் இராணுவத்தினரால் தேனீர் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் ஆயர் அவர்கள் கொழும்பு நோக்கி சென்று மறுநாள் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திக்கச் செல்லும் போது மன்னார் ஆயர் அவர்கள் திடீர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார்.

மன்னார் ஆயருடன் சென்று தேனீர் அருந்திய மற்றை அருட்தந்தை சில தினங்களுக்கு பின் திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார்.

இந்த சம்பவங்கள் மன்னார் மக்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtyJSaSVjv1B.html#

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது நாட்டில்??:(

என்ன நடக்குது நாட்டில்??:(

என்ன நடக்காது அந்த நாட்டில்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது நாட்டில்??:(

இப்படி நடக்காவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பொய் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழில் தமிழர்களுக்குள்ளேயே செய்தி போட்டு குசிப் பட்டுக் கொண்டிருக்காமல் மன்னார் நீதி மன்றத்துக்கு இதை மனுவாக தெரியப் படுத்தினால் குறைந்த பட்சம் இறந்த குருவின் உடலைத் தோண்டியெடுத்து பகுப்பாய்வாவது செய்ய வைக்கலாம். இதை யாரும் செய்ய மாட்டார்கள். பயம் அல்லது உறுதியான தகவல் மூலம் இல்லாமை காரணங்களாக இருக்கலாம்!  

  • கருத்துக்கள உறவுகள்

 உது போன்ற ஒரு செய்தி முன்பொருமுறை எனது உறவினர் கூறியிருந்தார். அதாவது அப்போதைய அரசாங்கம் முக்கியமான ஒரு தருண்ணத்தில் எமது தலைவர்களுக்கு விருந்தளித்தார்களாம், பிற்பாடு அதிகமாக குரல் கொடுத்த இரு தலைவர்கள் மிக  குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இறந்தார்கள் என்று பெயர் குறிப்பிட்டு சொன்னார். அப்போது அது அவரின் பிரமை என்று நான் சிரித்தேன். அப்போ அவர் சொன்னார் முக்கியமான  பிரச்சனை, விவாதம் நடக்கும்  வேளையில் இலங்கை அரசாங்கம் அடிக்கடி தேநீர் விருந்துக்கு எமது தலைவர்களை அழைக்கும். அதோடு அவர்களது குரலும் அடங்கி விடும் என்று சொல்லி தனது காரணத்தை நியாயப்படுத்தினார். அது உண்மையாய் இருக்குமோ.....? என்று எண்ண தோன்றுகிறது. இது பற்றி தெரிந்தவர்கள் யாராவது இன்னும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சம் & சும் எவ்வளவு(தே ) தண்ணியடிக்கினம் அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை ..........புலம் பெயர்ந்த வாலுகளின் ஆட் களுக்கு மட்டும் ஏன் அப்படி நட க்குது என்று கேட் கபோயினம்... 

இராணுவ முகாமில் தேநீர் அருந்தியதால் ஆயர் சுகயீனம்: பொய்யான செய்தி
 
 

article_1442565020-aaaaa.jpg-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்குச் சென்று தேநீர் அருந்திய நிலையிலே அவர் திடீர் உபாதைக்கு உள்ளாகியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'மன்னார் மறைமாவட்ட ஆயரும் அருட்தந்தை ஒருவரும் கொழும்புக்குச் செல்லும் போது, மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அதன் போது அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தேநீரை அருந்திய நிலையிலே மன்னார் மறைமாவட்ட ஆயர் திடீர் சுகயினமடைந்ததாகவும் மற்றைய அருட்தந்தை உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தி, உண்மைக்கு புறம்பானது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்தந்தை, மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்குச் செல்லவில்லை. அவருக்கு ஏற்பட்டது திடீர் சுகவீனம் என்பது வைத்தியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மன்னார் ஆயர், தேநீர் அருந்திய நிலையில் சுகயீனம் எற்பட்டது என்பதனை மன்னார் ஆயர் இல்லம் முற்றாக மறுக்கின்றது' என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை மேலும் கூறினார். 

 

- See more at: http://www.tamilmirror.lk/154478#sthash.3fjY5Ae2.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இது பொய்யான செய்தி என்றால்... பொய்யான செய்தியைக் கொடுத்தவரைப் பிடித்து தண்டிக்கவேண்டும். அப்படித் தண்டித்தால் அடுதவரும் பெய்யான செய்திகளைக் கொடுக்கத் தயங்குவார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்,

இப்படி வதந்திகளை காவித்திரிவதால் முன்புன் நிர்வாக குட்டு வாங்கியும் தொடர்ந்தும் செய்கிறார்கள்.

இது பொய்யான செய்தி என்றால்... பொய்யான செய்தியைக் கொடுத்தவரைப் பிடித்து தண்டிக்கவேண்டும். அப்படித் தண்டித்தால் அடுதவரும் பெய்யான செய்திகளைக் கொடுக்கத் தயங்குவார்கள்.   

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யாரை, எப்படி தண்டிப்பது?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யாரை, எப்படி தண்டிப்பது?:unsure:

அவர் சொல்கிறார் தமிழ்வின்னின் இந்தப் பொய்யான செய்தியை (யாழ் களத்துக்கு) கொடுத்தவரைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதாக! 

Edited by வாலி

இவற்றை நம்ப ஒரு கூ ட்டமும் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்க இன்னொரு கூட்டமும் இருக்கும் வரை இவை தொடரும் .:grin:

நன்றி வாலி விளக்கத்திற்கு:) அது  நிர்வாகம் சம்மந்தபட்ட விடயம்.

ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியான இணையத்தில் இருந்து விளையாட்டு செய்தியை கூட இணைக்க விரும்புவதில்லை.

இவற்றை நம்ப ஒரு கூ ட்டமும் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்க இன்னொரு கூட்டமும் இருக்கும் வரை இவை தொடரும் .:grin:

100 வீதம் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.