Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் நீதிமன்ற ஜுரரர்கள் சபைக்கு யாழ்ப்பாணத் தமிழர் நியமனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும்.

டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும்.

   

சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத் தூதுக்குழு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இத்தூதுக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=140949&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...!

அதென்ன 'யாழ்ப்பாணத்' தமிழர் ? ஈழத்தமிழர் அல்லது இலங்கைத் தமிழர் என்று சொன்னால் என்னவாம்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் நம்ம தடிப்பு குறைஞ்சிடுமே?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண மைய "வாதத்திற்கு" மருந்தில்லை

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் .... முதலாவது.... ம்ம்ம்

விளையாட்டோ, மகிழ்வுக்கு உரியதோ இல்லை. தயவு செய்து அவரிடம் விசாரித்து, கேஸ் விபரம் போட்டு விடாதீர்கள். பிரச்னை ஆகி விடும்.

இங்கே UK இல் வாக்காளர் அட்டையைப் பார்த்துக் லொட்டரி போட்டுக் கூப்பிடுவினம். வந்தால் போகத்தான்  வேண்டும்.  சுத்த ஏலாது. சுத்தினால் கிரிமினல் குத்தம். வேலை இடத்தில் சட்டப் படி லீவு தர வேண்டும். தவிர்க்க முடியாத காரணம் இருப்பின், சொன்னால்,  ஓகே அடுத்த கேசுக்கு வரவேண்டும், 6 மாதம்,  ஒரு வருஷம் தள்ளி வைக்கிறோம் என்று சொல்வார்கள்.

உதில பிரச்னை என்னெண்டால், யாரோ ஒருவரின் சுதந்திரம்: ஒரு நிரபராதி கூட தண்டனை பெறக் கூடாதே என வரும் ஆதங்கம்: Stress.

மேலும் வழக்கு விசாரணையில் அலெர்ட் ஆக இல்லாவிடில் போச்சு. ஜட்ஜ் ஐயா நாற அடிச்சிடுவார். வழக்கு முடியும் முன்னர், வீட்டில துணையுடனோ, பிள்ளையள் உடனோ கேஸ் விபரம் கதைக்கக் கூடாது.

ஒரு ஜுரி, பிரதிவாதி, முகத்தைப் பார்க்க கொலை காரர் மாதிரித் தான் இருக்கு. இப்பவே, guilty என்று முடிவு செய்து விட்டேன் என்று   facebook கமெண்ட் போட, அவர் நீக்கப் பட்டதுடன், இரு மாத சிறைத்தண்டனையும் வழக்கும் மீண்டும் புதிதாக ஆரம்பித்தது, £2m நட்டதுடன்.

ஒரே ஒரு வழி தான் அண்மையில் நண்பர் ஒருவர் சொல்லித் தெரிந்து கொண்டேன்: ஐயா, நம்ம இங்கிலிஸ் அப்படி, இப்படி என்று சொன்னால் தப்பலாம். எப்படி, இப்படி என்று விசாரிக்க நேர மில்லை. அதால, சரிதான் போய்யா என்று விட்டு விடுவார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் உது உங்களுக்கு இப்பவா தெரியும், இங்கிலிஷ் தெரியாது என்றும் தப்பிக்கலாம் அல்லது முந்தி கேசில் மனநலம் சரியில்லை மறதி இருக்கு என்று சொல்லியிருந்தால் அதைச் சுட்டிக் காட்டி தப்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் .... முதலாவது.... ம்ம்ம்

விளையாட்டோ, மகிழ்வுக்கு உரியதோ இல்லை. தயவு செய்து அவரிடம் விசாரித்து, கேஸ் விபரம் போட்டு விடாதீர்கள். பிரச்னை ஆகி விடும்.

இங்கே UK இல் வாக்காளர் அட்டையைப் பார்த்துக் லொட்டரி போட்டுக் கூப்பிடுவினம். வந்தால் போகத்தான்  வேண்டும்.  சுத்த ஏலாது. சுத்தினால் கிரிமினல் குத்தம். வேலை இடத்தில் சட்டப் படி லீவு தர வேண்டும். தவிர்க்க முடியாத காரணம் இருப்பின், சொன்னால்,  ஓகே அடுத்த கேசுக்கு வரவேண்டும், 6 மாதம்,  ஒரு வருஷம் தள்ளி வைக்கிறோம் என்று சொல்வார்கள்.

உதில பிரச்னை என்னெண்டால், யாரோ ஒருவரின் சுதந்திரம்: ஒரு நிரபராதி கூட தண்டனை பெறக் கூடாதே என வரும் ஆதங்கம்: Stress.

மேலும் வழக்கு விசாரணையில் அலெர்ட் ஆக இல்லாவிடில் போச்சு. ஜட்ஜ் ஐயா நாற அடிச்சிடுவார். வழக்கு முடியும் முன்னர், வீட்டில துணையுடனோ, பிள்ளையள் உடனோ கேஸ் விபரம் கதைக்கக் கூடாது.

ஒரு ஜுரி, பிரதிவாதி, முகத்தைப் பார்க்க கொலை காரர் மாதிரித் தான் இருக்கு. இப்பவே, guilty என்று முடிவு செய்து விட்டேன் என்று   facebook கமெண்ட் போட, அவர் நீக்கப் பட்டதுடன், இரு மாத சிறைத்தண்டனையும் வழக்கும் மீண்டும் புதிதாக ஆரம்பித்தது, £2m நட்டதுடன்.

ஒரே ஒரு வழி தான் அண்மையில் நண்பர் ஒருவர் சொல்லித் தெரிந்து கொண்டேன்: ஐயா, நம்ம இங்கிலிஸ் அப்படி, இப்படி என்று சொன்னால் தப்பலாம். எப்படி, இப்படி என்று விசாரிக்க நேர மில்லை. அதால, சரிதான் போய்யா என்று விட்டு விடுவார்கள்.

நானும் ஒரு தடவை 'நிலாக்' காட்டினேன்!

இரண்டாம் தடவை தப்ப முடியவில்லை! வேலையிலிருந்து விடுப்புத் தருவார்கள்!

நல்ல அனுபவம்...! சந்தர்ப்பம் கிடைத்தால் போய்ப்பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நாமு, புங்ஸ், மீரா,

நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள்.

சட்டத்தில் கொமென் லா ஜூரிஸ்டிக்சன், சிவில் லா ஜூரிஸ்டிக்சன் என்று இரு வகைப் படும் ( இதை சிவில் லா, கிரிமினல் லா பகுப்புடன் குழப்பக் கூடாது) இங்கிலாந்தும் அதன் வழி வரும் சட்டத்தை பின்பற்றும் நாடுகளும் கொமென் லா ஜீரிஸ்டிக்சன் நாடுகள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சிவில் ஜூரிஸ்டிக்சன்.

இரண்டு முறைகளுக்கும் படிமுறை (procedure ) யில் பாரிய வேறுபாடுகள் உண்டு.

மொமென் லா நாட்டில் இருக்கும், வாக்காளர் அட்டை லொத்தர் மூலம் தெரியப்படும், ஜூரர்கள் இல்லை,சிவில் லா நாடுகளில் இருக்கும் ஜூரர்கள்.

இந்த ஜூரர்கள் கிடத்தட்ட English lay magistrate ற்கு நிகரானவர்கள். அதாவது சட்டம் பயிலாத ஆனால் சிவில் சமூக பிரதிநிதிகளாய் இருப்பவர்களை அடிமட்ட நீதிபதிகளாய் நியமிக்கும் முறை.

ஆகவே இது ஒன்றும் அப்பாடக்கரான விடயம் இல்லை ஆயினும், இங்கிலாந்தில் ஜூரர் ஆவது போல ரொம்பச் சாதாரண விடயமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாமு, புங்ஸ், மீரா,

நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள்.

சட்டத்தில் கொமென் லா ஜூரிஸ்டிக்சன், சிவில் லா ஜூரிஸ்டிக்சன் என்று இரு வகைப் படும் ( இதை சிவில் லா, கிரிமினல் லா பகுப்புடன் குழப்பக் கூடாது) இங்கிலாந்தும் அதன் வழி வரும் சட்டத்தை பின்பற்றும் நாடுகளும் கொமென் லா ஜீரிஸ்டிக்சன் நாடுகள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சிவில் ஜூரிஸ்டிக்சன்.

இரண்டு முறைகளுக்கும் படிமுறை (procedure ) யில் பாரிய வேறுபாடுகள் உண்டு.

மொமென் லா நாட்டில் இருக்கும், வாக்காளர் அட்டை லொத்தர் மூலம் தெரியப்படும், ஜூரர்கள் இல்லை,சிவில் லா நாடுகளில் இருக்கும் ஜூரர்கள்.

இந்த ஜூரர்கள் கிடத்தட்ட English lay magistrate ற்கு நிகரானவர்கள். அதாவது சட்டம் பயிலாத ஆனால் சிவில் சமூக பிரதிநிதிகளாய் இருப்பவர்களை அடிமட்ட நீதிபதிகளாய் நியமிக்கும் முறை.

ஆகவே இது ஒன்றும் அப்பாடக்கரான விடயம் இல்லை ஆயினும், இங்கிலாந்தில் ஜூரர் ஆவது போல ரொம்பச் சாதாரண விடயமுமில்லை.

 

புதிய விசயம் கோசன்,

கிரிமினல் வழக்குகள் தானே ஜுரர்கள்....

சிவிலுக்கு இல்லையே.... (UK ல்)

இங்கிலாந்தில் சாதாரணம்.

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்தவர் கொண்டுவந்த லெட்டரை மொழி பெயர்த்து சொல்ல, 'அட நாசமறுப்பு, என்னை கூப்புடிருகிறான்களே, இவங்களை என்னத்தை சொல்ல' என்று சிகிரட்டை எடுத்து, ஆகாசத்தைப் பார்த்து புகை விட்டுக் கொண்டிருந்தார் - வாழ்கையே போன மாதிரி....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

சிவில் என்பதற்கு சட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்தங்கள் உண்டு. ( ஒரு சொல் பல அர்த்தம் - அக்னியஷ்திரா வாசித்தால் டர் ஆயிடுவார் ?).

கிரிமினல் வழக்குகளில் தான் ஜூரர் இருப்பார்கள்.

மேலே சொல்லப் பட்டிருப்பது சிவில் லா ஜூரிஸ்டிக்சனில் நடக்கும் கிரிமினல் வழக்கில் இருக்கும் ஜூரரை பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜூரி காரர் ஒருமுறை எனது வீடிற்கு உள்ளேயே நெருப்பு வைத்துவிட்டார்கள் ......

எனக்கும் அழைப்பு  வந்தது ....போனேன்.
வந்தேன்.

வீட்டில் இருந்த பெண்: என்ன வழக்கு ?
நான் : யாரிடமும் இது பற்றி சொல்ல கூடாது என்று சத்தியம் கொடுத்துள்ளேன் 
பெண்: யாரிடமும் என்றால் ...? நான்தானே கேட்டேன். நான் யாரோவா ? 
நான் : ம்ம்ம் இல்லை நீங்க  யாரோ இல்லை .. நாட்டு சட்டத்திற்கு நான் நீங்க  எல்லாம் யாரோதானே ?
பெண்: என்னை விட சட்டம்தான் பெரிசா ?

இப்பிடியே தொடங்கி .....
ஒரு வாரம் மூச்சு பேச்சு இல்லதா படி செய்துவிட்டார்கள்.
பெண் கொஞ்சம் அடம்ஸ் ......
எனக்கும் கடமை உணர்வு கொஞ்சம் அதிகம் சத்தியத்தை மீறும் எண்ணம் இருக்கவில்லை.

வழக்கு நாலு நாள் நடந்தது எனக்கு முதல் நாளுடனேயே வெறுப்பாகி விட்டது 
சும்மா இருந்த என்னை கூப்பிட்டு வீடில் இருந்த நிம்மதியை கெடுத்த்து விட்டார்கள் நாதாரிகள் 
என்று எண்ணி கொண்டிருப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருணிக்கா அப்படி ஒன்றும் அடம் இல்லையே??

முன்பு சட்டம் பயின்றவர்களை, பொலீசாரை, நீதிபதிகளை, மொழி தெரியாதோரை, உடல் மன நலம் குன்றியோரக்கு விலக்கு நடைமுறையிருந்தது ஆனால் இப்போ சட்டத்தை பயின்றோரையும் கூப்பிடுமாறு சட்டத்தை திருதியுளனர்.

ஒரு தமிழ் செய்திவாசிப்பாளர், ஜூரி சேவைக்குப் போய் வந்து, ரேப் கேசை விலாவரியா பேஸ்புக்கில் எழுதித்தள்ளினார்.

பாவம் என்று யாரோ எழுதிய எச்சரிக்கையையும் எள்ளி நகையாடினார். இதை ஒத்த ரெண்டு வழக்குகளின் விபரத்தை தனி மடலில் தட்டி விட்டென்.

பேஸ்புக் கணக்கையே மூடிவிட்டார் ???

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருணிக்கா அப்படி ஒன்றும் அடம் இல்லையே??

முன்பு சட்டம் பயின்றவர்களை, பொலீசாரை, நீதிபதிகளை, மொழி தெரியாதோரை, உடல் மன நலம் குன்றியோரக்கு விலக்கு நடைமுறையிருந்தது ஆனால் இப்போ சட்டத்தை பயின்றோரையும் கூப்பிடுமாறு சட்டத்தை திருதியுளனர்.

ஒரு தமிழ் செய்திவாசிப்பாளர், ஜூரி சேவைக்குப் போய் வந்து, ரேப் கேசை விலாவரியா பேஸ்புக்கில் எழுதித்தள்ளினார்.

பாவம் என்று யாரோ எழுதிய எச்சரிக்கையையும் எள்ளி நகையாடினார். இதை ஒத்த ரெண்டு வழக்குகளின் விபரத்தை தனி மடலில் தட்டி விட்டென்.

பேஸ்புக் கணக்கையே மூடிவிட்டார் ???

நல்ல காலம் மூடிப் போட்டினம்.

இல்லாட்டி உள்ளுக்க தான்....

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருணிக்கா அப்படி ஒன்றும் அடம் இல்லையே??

முன்பு சட்டம் பயின்றவர்களை, பொலீசாரை, நீதிபதிகளை, மொழி தெரியாதோரை, உடல் மன நலம் குன்றியோரக்கு விலக்கு நடைமுறையிருந்தது ஆனால் இப்போ சட்டத்தை பயின்றோரையும் கூப்பிடுமாறு சட்டத்தை திருதியுளனர்.

ஒரு தமிழ் செய்திவாசிப்பாளர், ஜூரி சேவைக்குப் போய் வந்து, ரேப் கேசை விலாவரியா பேஸ்புக்கில் எழுதித்தள்ளினார்.

பாவம் என்று யாரோ எழுதிய எச்சரிக்கையையும் எள்ளி நகையாடினார். இதை ஒத்த ரெண்டு வழக்குகளின் விபரத்தை தனி மடலில் தட்டி விட்டென்.

பேஸ்புக் கணக்கையே மூடிவிட்டார் ???

முதல்ல பார்த்துட்டு நானும் அப்படிதாங்க நினைச்சேன் ...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.