Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்

Featured Replies

இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்
இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்

 

இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் மிக முக்கியமான நாடு என்பதோடு, சர்வதேச ரீதியில் செல்வாக்கு மிகுந்த நாடாகவும் திகழ்கின்றது. இந்நிலையில், இலங்கையில் பொது மக்களுக்கு எதிராக அநியாயங்கள் நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனைத் தடுத்திருக்க வேண்டும். அது இந்தியாவின் கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் இறையாண்மை என்பதும் அதுவே எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு நாடும் தமது குடிமக்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதோடு, அதனைச் செய்ய குறித்த நாடுகள் தவறும் பட்சத்தில் நட்பு நாடுகள் தலையிட்டு பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மிகத் தெளிவான சர்வதேசசட்டங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியா இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளதாகவே தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா தலையிட்டு சமரசத்தை ஏற்படுத்தியிருந்தால், 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத்தடுத்திருக்கலாம் எனவும், தென்னாபிரிக்கா போன்று அது உள்நாட்டு பிரச்சினை என இந்திய தெரிவித்திருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவது உள்நாட்டு பிரச்சினை அல்ல எனவும், அது சர்வதேச விவகாரம் எனவும் அவர் இந்தச் செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/602

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் 1971 ஆம் ஆண்டு நடந்தபடுகொலைகளுக்கு ஐ.நா சபை தலையிட்டிருந்தால் இன்று இவ்வளவு உயிர்கள் பலியாகியிருக்கமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நவீன் அம்மையார் அவர்களே..... இந்தியாவுக்கு, தமிழ் மக்களின் உயிர் ஒரு பொருட்டல்ல.
இல்லையேல்.... அவர்களின் மீனவர் படு கொலைகளையோ, 
செம் மரம் படுகொலையில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களைப் பற்றியோ... அலட்டிக் கொள்ளாத இந்திய அரசாங்கம் தான் அது.
இதுவே....  வட இந்தியாவில் நடந்திருந்தால், வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு, அழுது வடிந்திருப்பார்கள்.
தமிழர்கள்.... அவர்களுக்கு, சோதனை எலி மட்டுமே. செத்தால்... சாகட்டும் என்ற அகங்காரம்.
இவற்றுக்கு... இடம் கொடுத்தது, திராவிடம் பேசும்... தமிழ் அரசியல் வாதிகளின் சுயநலமும், தூரப் பார்வையற்ற அரசியல் சிந்தனையும் மட்டுமே.

நீங்கள் சண்டை வேண்டும் என்று நிற்பீர்கள் இந்தியா வந்து நிப்பாடவேண்டும் .

சிறுவயதில் யாருடனும் கொழுவி விட்டு அவன் அடிக்க அப்பா என்று ஓடிய பழக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சண்டை வேண்டும் என்று நிற்பீர்கள் இந்தியா வந்து நிப்பாடவேண்டும் .

சிறுவயதில் யாருடனும் கொழுவி விட்டு அவன் அடிக்க அப்பா என்று ஓடிய பழக்கம் .

அந்தச் சண்டைக்கு .... உசுப்பேத்தியது தமிழரசுக் கட்சி.
அதுக்கு... தடி எடுத்துக் கொடுத்தது..... இந்தியா.
இப்பவாவது.... இது, உங்களுக்கு, புரிந்தாதா? 
இல்லை... நீங்கள் பிடித்த, முயலுக்கு,,,, மூன்று கால் என்று, அடம் பிடிக்கப் போகின்றீர்களா....

அந்தச் சண்டைக்கு .... உசுப்பேத்தியது தமிழரசுக் கட்சி.
அதுக்கு... தடி எடுத்துக் கொடுத்தது..... இந்தியா.
இப்பவாவது.... இது, உங்களுக்கு, புரிந்தாதா? 
இல்லை... நீங்கள் பிடித்த, முயலுக்கு,,,, மூன்று கால் என்று, அடம் பிடிக்கப் போகின்றீர்களா....

அப்ப உங்களுக்கு சொந்த சுய புத்தி இல்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்களுக்கு சொந்த சுய புத்தி இல்லையா ?

நீங்கள்.... தமிழனின் உயிர் போராட்டாத்தை, 
மூன்றாமவர், போராட்டம்  மாதிரி.... நின்று, குத்தி... முறிந்து... விமர்சிக்கின்றீர்கள்.
நீங்கள்... உண்மையிலேயே... தமிழனா? அல்லது.... காக்கை வன்னியன் பரம்பரையா?
இயற்கையில்.... உங்களுக்கு.... சொந்த இரத்தம் ஓடாதா?:)

எமது மக்களுக்காக போராட போன என்னை போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர் கேள்வி கேட்கின்றார் .நான் போரட்டத்தை மூன்றாம் ஆளாக பார்க்கின்றேனாம் .வாழ்க்கையில் ஒரு போராளியை கூட கண்ணால காணதவர் .

இதைத்தான் கலிகாலம் என்பது .

அப்ப உங்களுக்கு சொந்த சுய புத்தி இல்லையா ?

 

நீங்கள் ஒரு முறை உரையாடிக் கொண்டு இருக்கும் போது இந்திய உளவு நிறுவன 'றோ' எப்படி புளட் இயக்கத்துக்குள் உள் நுழைந்து மத்திய குழு உறுப்பினர் மட்டம் வரைக்கும் முன்னேறி இருந்தனர் கூறியிருந்தீர்கள். இந்திய அரசால் தேடப்படும் ஒரு  நக்ஸ்லைட்டாக தன்னை சொல்லி புளட்டுக்குள் நுழைந்து படிப்படியாக எல்லாரது நம்பிக்கைகளையும் பெற்று மத்திய குழுவில் அவர் இடம்பிடித்த கதையையும் சொல்லியிருக்கின்றீர்கள். அதே போன்று அனைத்து இயக்கங்களுக்குள்ளும் இந்திய உளவுத்துறை உள் நுழைந்து அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்பவே காய்களை நகர்த்தினார்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்கள்.

நீங்கள் மட்டும் அல்ல, காழ்ப்புணர்வுகள் எதுவுமற்று சுயபுத்தியுடன் விடயங்களை அணுகின்றவர்கள் அனைவருக்கும் புரியும் இந்தியா சிங்களத்தினை பணிய வைக்க எம்மை பகடை காய் ஆக்கியது எவ்வாறு என்று.  ஆனால் உங்களால் அப்படி சிந்திக்க முடியாது. வெளியில் ஒரு கதையும், யாழில் இன்னொரு கதையும் கதைக்கும் ஒரு Multiple personality disorder  கொண்ட ஒரு கருத்தாளராகத்தான் உங்களால் சிந்திக்க முடியும்.

 

நிழலியின் நிஜம் வெளிவந்துவிட்டது .சந்தித்த முதன் நாளே அந்த முகம் எனக்கு தெரியும்.

இப்படியான விடயங்களை யாழில் முகபுத்தகத்தில் எல்லாம் ஏற்கனவே எழுதியுள்ளேன் .

அனுராதபுரத்தில் போய் சிங்கள பொதுமக்களுக்கு வெடிவையுங்கோ என்று ரோ சொல்ல அதை செய்தால் உங்களுக்கு சுய புத்தி இல்லையா என்று கேட்கத்தான் தோன்றும் .

இன்னும் பல விடயங்கள் இருக்கு இப்ப நேரம் இல்லை பின்னர் வருகின்றேன் .

நிழலியின் நிஜம் வெளிவந்துவிட்டது .சந்தித்த முதன் நாளே அந்த முகம் எனக்கு தெரியும்.

இப்படியான விடயங்களை யாழில் முகபுத்தகத்தில் எல்லாம் ஏற்கனவே எழுதியுள்ளேன் .

அனுராதபுரத்தில் போய் சிங்கள பொதுமக்களுக்கு வெடிவையுங்கோ என்று ரோ சொல்ல அதை செய்தால் உங்களுக்கு சுய புத்தி இல்லையா என்று கேட்கத்தான் தோன்றும் .

இன்னும் பல விடயங்கள் இருக்கு இப்ப நேரம் இல்லை பின்னர் வருகின்றேன் .

சந்தித்த முதல் நாளே ஆளை சரியாக எடை போடும் உங்கள் அறிவுக்கு என் சல்யூட்

அனுராதபுரத்தில் போய் சிங்கள பொதுமக்களுக்கு வெடிவையுங்கோ என்று ரோ சொல்ல அதை செய்தால் உங்களுக்கு சுய புத்தி இல்லையா என்று கேட்கத்தான் தோன்றும் .

புலிகள் எவர் சொல்லையும் எப்பவுமே கேட்பதில்லை என ஒரு பக்கம் சாரி சாரியாக எழுதிக்கொண்டே இதற்கு மட்டும் றோ சொன்னதை கேட்டார்கள் என்று சொல்கின்றீர்கள்...நன்று.. பின்னர் வருவேன் என்று சொல்லியுள்ளீர்கள். முடிந்தால் 3 மணிக்கு முன்பாக வந்து எழுதவும்..அதற்கு பிறகு திங்கள் தான் பதில் எழுத முடியும் என்னால்.

 

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் 2009இல் நடந்த இறுதி யுத்தத்தின் வெற்றிக்காக இலங்கை இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததாக  வாசகர் ஒருவரின் கேள்விக்கு விகடன் சஞ்சிகையின் கழுகார் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராஜபக்‌ச அமைச்சரவையில் அங்கம் வகித்த கருணா, பிரபா கணேசன் போன்ற முன்னாள் அமைச்சர்கள், இலங்கையில் போர் நடத்தியதும் நடக்கக் காரணமாக இருந்ததும் அன்றைய இந்திய காங்கிரஸ் அரசு தான் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து மறுப்போ, எதிர் அறிக்கையோ விடாதது ஏன்?

2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, இந்தப் போரை நடத்துவதற்கு இலங்கை தரப்பில் மூன்று பேரும் இந்தியாவின் தரப்பில் மூன்று பேரும் நியமிக்கப்பட்டார்கள் என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். 

போர் முடிந்த நாள் அன்று, கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் வாசலில், இந்தியாவுக்கு நன்றி என்று வாசகங்கள் தாங்கிய பதாகைகள் இருந்தன. அப்போதே மறுக்காதவர்கள் இப்போது எப்படி மறுப்பார்கள்? என கழுகார் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு தேசமாக நின்று எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு அது ஒரு தேசமல்ல!

வரலாற்றுத் தவறுகளால் ஒன்றிணைக்கப் பட்ட ஒரு 'தவறு" !

ஒரு தேசமென்ற அடிப்படையில் என்றும் முடிவுகளை எடுப்பதில்லை! புராண காலத்துக் கட்டுக்கதைகளை அடிப்படையாக்கி, தன சொந்த மக்களுடனேயே,இன்னொரு தேசத்துடன் போராடுவது போன்ற மன நிலையிலேயே இன்றும் உள்ளது! 'மதராசி' என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே அவர்கள் முகத்தில் தோன்றும் வெறுப்பானது.. பற தெமிழ என்று சிங்களவன் உச்சரிக்கும் போது தோன்றும் வெறுப்புக்குச் சற்றும் குறைந்ததல்லவே! ஒரு வரலாற்றின் அடிப்படையில் நீண்ட காலம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை,,, ஒதுக்கி ஓரத்துக்குத் தள்ளுவதே சில நாடுகளின் சிந்தனை! அதில் இந்தியாவும் ஒன்று...! குப்பையைக் கிழறினால்.. நாற்றத்தைத் தவிர வேறு எதுவும் வராது!

நாற்பதினாயிரம் மக்கள் அழிக்கப் பட்டதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும்!

பச்சை இரத்தம் காயாத கரங்கள் யாருடையவை என்றும் அனைவருக்கும் தெரியும்!

ஆனாலும் 'கதிரவனைக்' கைக்குடையால் மறைக்க முயல்கின்றோம்! அசிங்கங்களை ஆடை கட்டி மறைப்பது போலவே இதுவும்!

ஏனென்று தான் புரியவில்லை!

 

எமது மக்களுக்காக போராட போன என்னை போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர் கேள்வி கேட்கின்றார் .நான் போரட்டத்தை மூன்றாம் ஆளாக பார்க்கின்றேனாம் .வாழ்க்கையில் ஒரு போராளியை கூட கண்ணால காணதவர் .

இதைத்தான் கலிகாலம் என்பது .

தனியே புலிகளுக்கு எதிராக வக்கிரங்களை கொட்டுவதையே முழுநேர தொழிலாக கொண்டு யாழ்களம் வரும் தங்களைப் போன்றவர்கள் எப்போதும் சக கருத்தாளர்களை மதிக்காமல் வீண்பேச்சு பேசுவது யாழ்கள உறவுகள் அனைவரும் அறிந்ததே. உங்களைப்போன்ற வீண்பேச்சு பேசுபவர்கள் இல்லாமல் எதிர்காலத்தில் நல்ல அறிவுடைய சமுதாய அக்கறை உடைய கருத்தாளர்களால் யாழ களம் சிறப்புறும் காலம் வரவேண்டும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.நீங்கள் உங்கள் முதலாவது கருத்தை அர்ஜீன் அண்ணாவுடனான தனிப்பட்ட உரையாடலின் போது அவர் உங்களுக்கு சொல்லிய கருத்தை யாழில் வந்து எழுதியுள்ளீர்கள். இது முரணானது இல்லையா?

கொஞ்ச காலத்திற்கு முன்பு சகாறா அக்கா நீங்கள் மு.புத்தகத்தில் எழுதிய கருத்தை யாழில் கொண்டு வந்து போட்டு விட்டார் என அவரோடு நீங்கள் சண்டை பிடிக்கவில்லையா?

என்னைப் பொறுத்த வரை அன்டைக்கு அக்கா செய்ததும் பிழை.இன்டைக்கு நீங்கள் செய்ததும் பிழை. அக்காவும் தன்ட கருத்திற்கு வலு சேர்க்கத் தான் உங்கட தனிப்பட்ட கருத்தைக் கொண்டு வந்து யாழில் போட்டவ. அதே மாதிரி நீங்களும் உங்கட கருத்திற்கு வலு சேர்க்க அவரது தனிப்பட்ட உரையாடலைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முறிய முன்பு ...
முறிந்த பின்பு என்றுதான் 

சிலர் இங்கு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
முறிந்த பின்பு வந்தவுடன் ...... சிலர் கொய்யோ முய்யோ என்று பச்சை குத்தி 
ஆரவாரிப்பார்கள்.
நான் பார்த்து சிரித்துவிட்டு போவதுண்டு.

ஒரு மனிதன் 
நல்லவனாக 
அல்லது கெட்டவனாகத்தான் இருக்க முடியும்.

நடிக்க தெரிந்தால் 
மேடையில் என்ன வேசமும் போடலாம் 
வாழ்க்கை மேடைக்கு கீழேதான். அதற்கு கீழே இறங்கிதான் ஆகவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.