Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை : இளஞ்செழியன்

Featured Replies

இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை : இளஞ்செழியன்
இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை : இளஞ்செழியன்

மக்களையும் நாட்டையும் பாதுகாக்கச் சென்ற காவலர்களே குற்றம் புரிந்து இந்த வழக்கில் எதிரிகளாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள்  இராணுவச் சிப்பாய்களாவர். இவர்கள் இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில், கிளிநொச்சி விசுவமடு பிரதேசத்தில் நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக,இராணுவ உத்தியோகத்தர்களாக கடமைக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டிருந்தார்கள்.   அவ்வாறாக தேசிய பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டிருந்த போதே, இவர்கள் தங்களுடைய இராணுவ முகாமில் இருந்து வெளியேறிச் சென்று, கூட்டுப்பாலியல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்செயலைப் புரிந்திருக்கின்றார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிளி.விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததன் பின்னரே அவர் முக்கியமாக இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் கோர யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைத்தையும் இழந்து இராமநாதன் இடம்பெயர் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்துவிட்டு, அரசாங்கமும், இராணுவத்தினரும் வழங்கிய மீள்குடியேற்றத்திற்கான வாக்குறுதியை அடுத்து, இந்தப் பெண்கள் தமது செர்நத ஊரான விசுவமடுவுக்குத் திரும்பிச் சென்று தற்காலிகக் கொட்டில் அமைத்து, அதில் தங்கியிருந்து தங்களுடைய காணிகளைத் துப்பரவு செய்வதில்  ஈடுபட்டிருந்த வேளையில் இரவு 12 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டினுள்ளே புகுந்து, இந்தக் குற்றச் செயலைப் புரிந்திருக்கின்றார்கள். 

கோர யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மானம் யுத்தம் இல்லாத வேளை சூறையாடப்பட்டது.இந்தச் செயலின் மூலம், யுத்தம் நடைபெற்ற போது, காப்பாற்றப்பட்டிருந்த அந்தப் பெண்களின் கற்பையும் மானத்தையும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்த 4 இராணுவ சிப்பாய்களும் சூறையாடியிருக்கின்றார்கள். 

கோர யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மானம் 2010 ஜுன் 6 ஆம் திகதி யுத்தம் இல்லாத சூழ்நிலையில் எதிரிகளான இராணுவ சிப்பாய்களினால் பறிக்கப்பட்டிருப்பது பாரிய குற்றச் செயலாகும். 

பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமது அரச கடமையாகிய பாதுகாப்பை வழங்காமல் இரண்டு தாய்மார்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அது மட்டுமல்லாமல், இந்த நாட்டு இராணுவத்தினரின் நற்பெயரைக் கெடுத்த செயலாகும். எனவே, இலங்கை இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தின் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது சர்வதேச குற்றம், அத்துடன் அது ஒரு போர்க் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஐ.நா யுத்த குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது யாழ். மேல் நீதிமன்றம் பொதுமக்களினால் நிறைந்து வழிந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, எதிரிகள் நான்கு பேரும் உடனடியாக, பாதுகாப்பாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

 யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அதிரடிப்படை பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். நீதிபதி இளஞ்செழியனுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/985

  • கருத்துக்கள உறவுகள்

welldone

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஐயா. வாழைப்பழத்தில் ஊசி ?

துணிச்சலான தீர்ப்பினை வழங்கியதுடன் அதை தகுந்த விதத்தில் நியாயப்படுத்தி இருக்கின்றார்.

ஆனால் பாலியல் வல்லுறவு என்பதை 'மானம் இழப்பு'  என்ற விதத்தில் பார்ப்பது தவறான ஒரு அணுகு முறை. வக்கிரம் பிடிச்சவர்களால் இழைக்கப்படும் கொடுமையால் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு உள மற்றும் உடல் ரீதியான பாதிப்பு. இவ்வாறான பாதிப்புக்குள்ளான பெண்ணை 'மானம் இழந்தவள்' என்று குறிப்பிடுவது மிகவும் தவறானது. இதற்கும் பாலியல் வல்லுறவு என்ற பதம் கொடுக்கும் அர்த்தத்திற்கும் இடையில் வேறுபாடு இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துணிவான முதலமைச்சர், ஒரு துணிவான  நீதிபதி  இப்படியே எல்லா இடத்திலும்

இருக்க வேண்டியவர்கள் இருந்துவிட்டால் தமிழினம் தழைக்க வழி கிடைக்கும்

இளம் செழியன் என்ற படியினால்தான் இப்படி இன முரண்பாட்டை தோற்றுவிக்க கூடிய விதமாக நடந்து கொள்கிறார்? இது கண்டிக்கப்பட வேண்டியது? முதும் செழியனாக ... சம்பந்தர் வழியில் .. பொறுப்பாக செயற்பட முறபட வேண்டும்?  

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாராட்டுகள்! 

ஆனால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதைப் பார்க்க சிரிப்பு வருது!

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாராட்டுகள்! 

ஆனால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதைப் பார்க்க சிரிப்பு வருது!

இராணுவத்திற்கு கெளரவம் என்ற வசனம் விளங்கவில்லை போலிருக்கு .

Edited by arjun
எழுத்து பிழை .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவிடம் ஒரு பணிவான வேண்டுகோள். தங்களது பாதுகாப்பு கருதி எதையும் பகிரங்கமாக சொல்ல முடியவில்லை. "கவனம்." இழுத்துக்கொண்டுபோய்  பதவி ஏதும்  தந்து போட்டு தள்ளி விழுத்திப் போடுவினமோ? என்று ஒரு பயம், தமிழ் நீதிபதியே இராணுவ வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்குகிறார். எங்களுடைய நீதிக்கட்டமைப்புகள் எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை. என்ற ஒரு பிரச்சாரத்தை தொடங்கிப்போடுவினமோ? என்று ஒரு சந்தேகம். அடுத்தது கூடிய விரைவில் இடமாற்றம். இறுதியாக ஒரே வார்த்தையில் சொல்வதானால் "கவனம், கவனம்."  கடந்த கால சம்பவங்கள் எங்களுக்கு பல பாடங்களை விட்டுச் சென்றிருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.