Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EPRLF வராலாற்றின் அவமானச் சின்னமாக மாறிவிட்டது :வியாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது மற்றொரு இருண்ட காலம்! இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் வடக்கையையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்ட அச்சம் தரும் இரவுகள்!! சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் சோதனைச் சாவடிகளைக் கடந்தே நடந்து போகமுடியும். அவர்கள் கண்களுக்கு எதிரி என்று தெரிகின்ற ஒவ்வொரு மனிதனும், கைது செய்யப்படலாம். விசாரணையின் பின் விடுவிக்கப்படலாம், சித்திரவதையின் பின் கொல்லப்படலாம்…

இவை அனைத்திற்கும் மேலாக தனது பெயரில் புரட்சி என்ற சுமையை சுமந்துகொண்ட அருவருப்பில் உலா வந்துகொண்டிருந்தது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப்.

1987 இல் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அன்னிய ஆக்கிரமிப்புப் படையான இந்திய இராணுவம் தனது ஊழிக்கால தர்ப்பாரை நடத்திக்கொண்டிருந்தது. அது நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற கூலிப்படையை அழிப்பதற்காகவே உருவாக்கியது, அதன் நிறுவன வேலையை ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை தாங்கியது.

சாலையில் ஒரு இளைஞன் தனியாக நடமாடுவதைக் கண்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் கடத்திச் சென்றுவிடும்.

அழுகுரலோடும், அச்சம் படர்ந்த முகங்களோடும் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களைக்கொண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற துணைப்படையை உருவாக்குவதே இந்திய இராணுவத்தினதும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனது,ம் நோக்கம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து பல்கலைக் கழக மாணவர்கள் வரை எந்த நேரத்திலும் எந்தப் பகுதியிலும் வைத்துக் கடத்திச் செல்லப்படலாம் என்பதை யாழ்ப்பாண மக்கள் அறிந்து வைத்திருந்தனர். பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

பள்ளிகளுக்கு தந்தையர் தாயாருடன் செல்லும் நிலை காணப்பட்டது. யாழ்ப்பாணம் செத்துப் போயிருந்தது. தெருக்கள் வெறிச்சோடியிருந்தன.

கடத்திச் செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாண நகரத்தின் கொல்லைப் புறத்தில் அமைந்திருந்த அசோக் ஹொட்டேலில் அருசி மூட்டைகள் போல அடைத்து வைக்கபட்டனர்.

sureshபயிற்சிக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் அங்கு தான் ‘அரசியல்’ விளக்கம் வழங்கப்பட்டது. அப்போது இந்திய இராணுவத்தின் நம்பிக்கைக்குரிய துணைப்படையாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விளக்கத்தை வழங்குவார்.

புலிகளை அழிப்பதும், சுயாட்சியை ஏற்படுத்துவதும் எமது நோக்கம்; அதற்கு நீங்கள் தான் பாதுகாப்புப் படை என பிடித்துவரப்பட்டவர்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது குற்றுரையை ஆரம்பிப்பார். நீண்ட அகலமான சந்திப்புக் கூடத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கான கூட்டம் நடைபெறும்.

ஒரு மூலையில் சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், நெருக்கமாக தரையில் மாற்ற உடையின்றி அமர்ந்திருக்கும் கடத்திவரப்பட்ட இளைஞர்களுக்கு சுரேஷ் உரையாற்றுவார்.

யாராவது மறு பேச்சுப் பேசினால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அவர்கள் மீதான விசாரணையை சுரேஷ் பிரேமச்சந்திரனின் ‘மண்டையன் குழு’ கவனித்துக்கொள்ளும்.

மண்டையன் குழு என்றால், மண்டைய பிழந்து கொலை செய்வது என்பதே பொருள் படும் என பலர் தெரிந்து வைத்திருந்தனர்.

இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபா யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)இன் செயலாளர் நாயகம் பத்மநாபா  64ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தோழமை தினம் இரண்டு நாட்களின் முன்னர் கொண்டாடப்பட்டது. இன்று வரை இந்திய அரசின் தோழர்களகவே தொடரும் ஈ.பி.ஆர்.எல் எப் இன் தோழமை இன் இலக்கணம் இரத்தக்கறைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இவை நடந்துகொண்டிருக்கும் போது ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய வரதராஜப்பெருமாள் ‘இது பழைய ஈ.பி.ஆர்.எல்.எப்’ இல்லை; புதியது என வில்லத்தனமாக உரையாற்றினார்.

இப்போது இன்னொரு புதிய முகத்தோடு தோழமை தினத்தில் அதே வரதராஜப்பெருமாள் உரையாற்றியுள்ளார். வக்கிரத்தனத்தின் மறு பெயர் தோழமை என்று நினைத்துக்கொண்ட்டார்களோ?
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கொலைகள், சித்திரவதைகள் எல்லாம் அந்த இயக்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த புரட்சி என்ற பெயரை அவமானப்படுத்திற்று. உயரிய தோழர் என்ற வார்த்தையை கொலையாளிகள் தங்களை அடையாளப்படுத்த பயன்படுத்திக்கொண்டார்கள்.

இடதுசாரிய இயக்கங்கள் மீது மக்கள் வெறுப்படைய ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற துணை இராணுவக் குழு காரணமாயிற்று,

வடக்குக் கிழக்கில் இடதுசாரி இயக்கங்களைத் துடைத்தெறிவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய அரசிற்குத் துணை சென்றது. உலக மக்களின் போராட்டத் தத்துவமாகத் திகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகரக் கருத்துக்கள் மீது மக்கள் வெறுப்படைந்தமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

naba_douglas டக்ளஸ் தேவானந்தாவுடன் பத்மநாபா

இவ்வாறு அழிவுகளின் ஆதாரசக்தியாகவிருந்த ஈ.பி.ஆர்.எல் எப் இன்றும் தனது அதிகாரவர்க்க அரசியலைப் புரட்சியின் பெயரால் தொடர்கிறது. அதன் குற்றவாளிகள் சமூகத்தின் உயரடுக்குகளில் உலா வருகின்றனர்.

டெலோ மற்றும் புலிகள் இயக்கங்களைத் தவிர ஏனைய எல்லா இயக்கங்களின் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் இணைந்து செயற்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் லண்டனிலிருந்து இலங்கை சென்ற பத்மநாபா ஈரோஸ் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்து ஆரம்பித்த அமைப்பாகும். ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டுமே மக்களை அமைப்புகளாக அணிதிரட்டியது.

ஈழப் பெண்கள் முன்னணி, கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழ மக்கள் முன்னணி போன்ற துணை அமைப்புக்கள் ஊடாக வடக்குக் கிழக்கு முழுவதும் மக்களை அணிதிரட்டி பல வேறு போராட்டங்களை நடத்திற்று. இவ்வாறான போராட்டங்கள் ஊடாக பல்வேறு முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் உருவாகினர். போர்குணம் மிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து எழுச்சி மிக்க இளைஞர் அணி இயக்கத்தின் பல்வேறு மட்டங்களில் செயற்பட்டது.

இயக்கத்தின் பிற்போக்குத் தலைமை இந்தியாவிலிருந்து செயற்பட அதன் முற்போக்கு ஜனநாயக அணி பொதுவாக ஈழத்தில் மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர். புலிகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட போது களத்தில் மக்களோடு வாழ்ந்த முற்போக்கு அணியே அழிக்கப்பட அதன் பிற்போக்குத் தலைமை தப்பித்துக்கொண்டது.

எஞ்சிய சிலரை இணைத்துக்கொண்ட அதன் பிற்போக்குத் தலைமை, புலிகளைப் பழிவாங்குவதே தமது நோக்கம் என்ற முழக்கத்துடன் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இலங்கையில் களமிறங்கிற்று.

புலிகளின் அழிப்பிலிருந்து தப்பி எஞ்சியிருந்த ஒரு சிலரையும், இந்திய இராணுவத்துடன் வந்திறங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப் தேட ஆரம்பித்த போது அவர்களுகு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழிகள் இருந்திருக்கவில்லை.

ஆபத்தான முற்போக்கு அணியை அழித்து, பிற்போக்குப் பகுதியைத் தம்மோடு இணைத்துக்கொள்வது என்ற இந்திய அரசின் முதலாவது நோக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது புலிகளின் தாக்குதலால் நிறைவேற்றப்பட்டது.

கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் பொறுப்பான பிழைப்புவாதிகளின் கூட்டே இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இன்றைய இரண்டு அணிகளும்!

தமது கொலைகளை ஈ.பிஆர்.எல்.எப் ஏற்றுக்க்கொண்டு பொறுப்புக்கூற வேண்டும். இடதுசாரியத்தை அழிப்பதற்குத் தாமும் துணை சென்றோம் என மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவே இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அணிகள் சமூகத்திற்கு ஆற்றக் கூடிய முக்கிய பணி. இனிமேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இருப்பு அவசியமற்றது, அது நமது போராட்டத்தின் அவமானச் சின்னமாக மாறிய காலம் இந்திய இராணுவத்துடனேயே ஆரம்பித்துவிட்டது.

 

www.inioru.com

 

 

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

12241684_1691709137709895_20699739579852

12241311_1691709171043225_44580868612243

12274189_1691715401042602_82735847491727

 

... அஞ்சலிப்போம்,???? அர்சுன, உங்கடையை இணைத்திருக்கிறேன்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனாக இருந்தபோது எல்லா இயக்கத்தவர்களையும் "பொடியள்" என்றுதான் தெரியும். முதன்முதலாக இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை வெறுத்தது என்றால் இந்த முன்னாள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் வடகிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாளைத்தான். அவரையும் அவரது புரட்சிகர தலைவர் நாபாவையும், போராளிகள் என்று பொதுமைப்படுத்தி போராளிகள் என்ற சொல்லை மலினப்படுத்தாமல் விட்டால் நல்லது.

எமது விடுதலை இயக்கங்களில் இரத்த கறை படியாதவை எதுவுமில்லை .

எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் அதில் ஆக குறைந்த கறை படிந்தது ஈ பி தான் அதிகம் எது என்று நான் எழுதி தெரியவேண்டியதில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது படித்துக் கொண்டிருந்த நானும்  இந்த பிள்ளை பிடி காரர்களிடம் பிடியில் இருந்து மயிரிழையில்  தப்பினனான்.  இந்த Elephant Pass ஐ மக்கள் விரும்பவில்லை. 

இந்த செய்தி  இங்கு தூசி தட்டப்பட்டு  இணைக்கபட்டதே மாவீர்ர் வாரத்தில் எமக்கிடையே தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கவே. எல்லா இயக்கத்திலும் தமிழ் மக்களுக்காக தமது இன்னுயிர்களை அரப்பணம் செய்த பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்துவதை விட்டு இப்படியான உள் நோக்கங்களுடன் இணைக்கப்படும் செய்திகளுக்குப் பின்னூட்டம் இடுவதை தவிர்ககலாமே. 

1 hour ago, arjun said:

எமது விடுதலை இயக்கங்களில் இரத்த கறை படியாதவை எதுவுமில்லை .

எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் அதில் ஆக குறைந்த கறை படிந்தது ஈ பி தான் அதிகம் எது என்று நான் எழுதி தெரியவேண்டியதில்லை . 

ஆக குறைந்த கறை TELO வில் தான் இருந்தது..  அப்படி சொல்லுற ஆக்களும் இருக்கிறார்கள்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12241684_1691709137709895_20699739579852

கலியாணவீட்டுக்கு சோடிச்ச மாதிரி பிங்க் கலர் அந்தமாதிரி தூக்குது......:grin:

  • கருத்துக்கள உறவுகள்

உதுபோன்றதொரு கலியாணவீட்டுச் சோடினையை இந்தமாதம் 26 ஆம் நாள் டொரண்டோவிலும் காணலாம்!<_<

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டமுடியாவிட்டால் விட்டு விலகி நிற்பதே நல்லது.மாவீரர் நாள் பிடிக்காதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை கொன்றவர்களுக்கும் மக்களை காத்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுடன்  மல்லுகட்டுவது நேர விரயம் .அவர்களின் அடிப்படை புத்தியை மாற்றுவது கஷ்ட்டம் .

எப்பவும் நாங்கள் கிட்ட போனதேயில்லை ஆனால் அவர்கள் தான் இப்ப ஒட்ட நினைக்கின்றார்கள் .

அந்த வித்தியாசம் பலருக்கு இப்பதான் விளங்குது 

இது அப்பவே நடந்துதான் .புளொட் ஈபி என்றால் தங்களை விட படித்தவர்கள் என்று அவர்கள் நினைத்த காலங்கள் அவை ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, வாலி said:

உதுபோன்றதொரு கலியாணவீட்டுச் சோடினையை இந்தமாதம் 26 ஆம் நாள் டொரண்டோவிலும் காணலாம்!<_<

அதில்லை......இஞ்சை ஹோல் எடுத்து மாவீரர் தினம் செய்தால் நக்கலடிக்கிற கூட்டம் யாழ்ப்பாணத்திலை குடிலுக்கை / வடலிப்பக்கம் ஏன் மாவீரர் தினம் செய்யேல்லை எண்டு கேக்காதவரைக்கும் சந்தோசம்.

எந்த கருத்திலையும்  பிரபாகரனையும் புலியையும் கொண்டுவராமல் கருத்து எழுத சிலருக்கு வாறது இல்லை...    இது தான் யாழின் கருத்து வங்குரோத்து நிலைமை... 

எனது கருத்தையும் சொல்ல வேண்டும்.. 

போராடாமல் தோற்று போன PLOT போண்ற அமைப்புகளோடை ஒப்பிடும் போது  ஏதோ ஒரு வகையில் யாருடனாவது போராடி தோற்று போன EPRLF  ம் பத்மநாபாவும் உயர்ந்தவர்தான்... 

என்ன போரட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே... 

Edited by காத்து
இலக்கண தவறு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவுக்கு ஈபி மட்டும் தான் பிரச்சனை போல. ஈ என் டி எல் எவ்.. ரெலோ.. புளொட் செய்தவை எல்லாம் நன்மையாமோ..?! ரெலோவும் புளொட்டும் வவுனியாவில் சிங்களப் படைகளில் முகாம்களில் பதுங்கிக் கிடந்து இரண்டு சதாப்தங்களாக செய்த அட்டகாசம்.. புளொட் 2009 க்குப் பின்னும் சிங்களப் படை ஏஜென்டுகளாக சொந்த இன மக்களை சித்திரவதை செய்த கொடுமைகள்.. அம்னாஸ்ரியால் கூட மிகக் கொடியது என்ற வர்ணிக்கப்பட்ட நிலையில்.. இன்னொருவுக்கு ஈபி யின் செயல்கள் மட்டும் தான்.. பிரச்சனையா..?! ஈபிக்கு சரி நிகராக.. புளொட்.. ரெலோவும் நடந்து கொண்டுள்ளது. ஈ என் டி எல் எவ் உம் அடங்கும். புளொட் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பதை பற்றி ஏன் இன்னொரு கவலை வெளியிடுவதில்லை. tw_blush:

புளொட்டுக்கு வேண்டிய வியாபாரிகள்.. இன்னொருவில் இருக்கினம் போல. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாபாவின் நினைவுகள்

 

செம்மறிகள் கூட நல்ல மேய்பனை தேடுகின்றன. அதேபோல பல வருடங்களாக பத்மநாபாவின் தகுதியில் தமிழ் இனத்தில் ஒரு தலைவரை தேடும் ஆவலில் இந்த கட்டுரை மீண்டும்  ஜுன் 19 ம் திகதி மீண்டும் பிரசுரமாகிறது.
நடேசன்

என் எஸ் நடேசன்

நமது வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமானவர்களை சந்திக்கிறோம்.பழகுகிறோம் பிற்காலத்தில் ஒவ்வொருவரும் வேறு வழிகளில் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். இவ்வாறு பழகியவர்களில் பலரது நினைவுகளை நினைவு கூருகிறோம். சிலரது நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறுகிறோம். சொற்பமானவர்களைப்பற்றி பலர் கூடும் நிகழ்வுகளில் பேசுகிறோம். ஒரு சிலரின் நினைவுகளை புத்தகங்களில் பதிப்பித்து பாதுகாக்கின்றோம். காரணம் வருங்கால சமூகத்திற்கும் இவர்களது எண்ணங்கள், சிந்தனைகள் தேவையானது என கருதிய காரணத்தால்.

சமீபத்தில் இப்படி ஒரு பணியை திறம்பட செய்தவர் நண்பர் புஸ்பராஜா. பிரான்ஸில் வசிக்கும் இவர் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற தனது நனைவோடை நினைவுகளைப் புத்தகமாக்கி இருக்கிறார். இவர் தனது நண்பன் பத்மநாபாவுடைய தொடர்புகளையும் செயல்களை 70ம் ஆண்டு காலத்திலிருந்து பதிவு செய்துள்ளார்.

சென்னையில் பத்மநாபாவுடன் பழகிய அந்த மூன்று வருடங்கள் மறக்க முடியாதவை. நான், நானாக இருப்பதற்கு அஸ்திவாரம் இட்ட காலங்கள். அந்தக் காலங்களில் பத்மநாபாவை ரஞ்சன் என்றே அழைப்பேன். மற்றைய EPRLF இனர் இருக்கும் போது ரஞசன் தோழர் என்பேன். தோழர் என்ற வார்த்தை சங்கடத்துடன்தான் வெளியே வரும். காரணம் நான் EPRLF அங்கத்வனல்ல. அதேவேளை இடதுசாரி இயக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனோ இல்லை.

என்னைப்போல் இலங்கை, இந்தியாவில் ஏராளமானவர்கள் பதமநாபாவின் நண்பர்கள். சிங்களவர், மலையகத்தமிழர், தமிழ்நாட்டினர், இஸ்லாமியர் என இன, மத, மொழி வோறுபாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களுடன் நட்புறவு கொண்டவர். எனது பார்வை, வாசிப்புகளுக்கு உட்பட தமிழ்நாட்டில் இரண்டு பேர் LIVING LEGENDS என என்னால் பார்க்கப்படுவார்கள். பத்திக்கையாளர் சோ ராமசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன். இவர்கள் இருவரும் கொள்கைகளிலும், வாழ்க்கைகளிலும் எதிரும், புதிருமானவர்கள் கடந்த ஜம்பது வருடத்தில் இவர்கள் இன்றி தமிழ்நாட்டு சரித்திரம் எழுதமுடியாது. இப்படியான இருவரும் பத்மநாபாவின் நண்பர்கள்.

தனிப்பட்ட முறையில் பத்மநாபாவுடனான பல சம்பவங்களை நான் நினைவு கூறமுடியும். இதில் முக்கியபாக நான் கருதும் சமபவம் ஒன்று பத்மநாபாவின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டுவது.

86ம் ஆண்டு மே மாதம் இருபத்தியாறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

இரவு பத்து மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள EPIC தகவல் நிலையத்தருகே TVS 50 இல் சென்று கொண்டிருந்த போது பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார்.

“ரஞ்சன், ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாஸிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு(ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்?

“ஓம்” என தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. எங்கள் TVS 50 மெதுவாக சென்றது. போகிற வழியில் கேட்டேன் பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா?

“இல்லை. தோழர் நாம் ஏன் பயப்பட வேண்டும்?

அப்பொழுது எனது இதயத்துடிப்பு இரு மடங்காகியது. ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் சகோதர கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை, இதில் நானும் மாட்டிக் கொண்டேனே என உள்ளே எண்ணிக் கொண்டு, ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் சென்றோம்.

இரவு பததரை மணியிலிருந்து விடியற்காலை நாலுமணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பேசினார்கள். பேசியதில் முக்கியபாக பத்மநாபா சிறியிடம் “உங்கள் உட்பிரச்சனையை பேசி தீருங்கள்” என்பதுதான். அமைதியாக தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று விடியற்காலையில் வேதாரணியம் கரைக்கு சென்றார்.

யாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களை புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.

இதே போல இராணுவப் பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் தேவானந்தா பிரிந்து செல்லும் போது EPRLF அங்கத்தினருக்குள் கொதிப்பு உணர்வுகள் உருவாகியது. இரண்டு பகுதியிலும் ஏற்பட்ட மனக்கசப்புகளை நேரில் பார்த்தேன். எந்த ஒரு சிறிய வன்முறையும் ஏற்படாது பிரிவு ஏற்பட்டதை நான் பார்க்க முடிந்தது.

இப்படி மற்ற இயக்க பிரிவுகளில் மட்டும் அல்ல தனது இயக்கத்தில் பிரிவுகள் ஏற்பட்ட போது வன்முறை ஏற்க மறுத்தவர் பத்மநாபா.

சிட்னியில் நான் இருந்தபோது பதமநாபாவின் கொலை சம்பவம் தெரிந்து கண்ணீர் விட்டு அழுதேன். பத்மநாபாவோடு கொலை செய்யப்பட்ட கிருபாகரன், யோகசங்கரி என்பவர்கள் எனது கல்லூரித்தோழர்கள் என்பதும் காரணமானது.

கடந்த இருபதாம் நூற்றாணடில் உலக அரசியலில் நான் மதிக்கும் மூவர் இந்தியாவில் மோகனதாஸ்காந்தி, தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, கியூபாவில் (ஆஐன்ரீனாவில் பிறந்த) ஏனெஸ்ரோ சேகுவரா போன்றவர்கள் வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியான இந்த மூவர் எமது மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ பிறந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிட்சயமாக கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.வன்முறைக்கு பலியாகியிருப்பார்கள்.
இப்படியான சிந்தனையின் பின் என் மனம் ஆறுதலடைந்தது.

நான் பழகிய நாட்களில் அவதானித்த முக்கிய ஒரு விடயம் பத்மநாபா ஒரு தூய ஜனநாயகவாதி. நான் பல தமிழ் அரசியல்வாதிகள், இயக்கத்தை சேர்ந்தவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத்தில் பலதரப்பட்டவர்களுடன் பழகி வந்துள்ளேன். ஜனநாயகத்தில் பத்மநாபா போல நம்பிக்கை கொண்ட ஈழத்தமிழர் ஒருவரைக் காணவில்லை இக்காரணங்களுடன் சமூகத்தின் சார்பாக பல வருட முன்னோக்கிய சிந்தனையும், முடிவெடுத்த தன்மையும் பத்மநாபாவின் தவறுகளாக அமைந்தது. கற்களும், முட்களும் நிறைந்த சதுப்பு நிலத்தில் ரோஜாவாக பூத்த காரணத்தால் அழிக்கப்பட்டிருக்கலாம் என ஆறுதலடைகிறேன்.

புத்மநாபா இறந்த பதினைந்து வருட நினைவுக்கூட்டம் மெல்பேணில் யூலை 25ம் திகதி நடைபெற்ற போது பேசிய உரையின் சாரம்.

நன்றி உதயம் அஸ்திரேலியா

July 2005

www.ilankainet.com

 

49 minutes ago, colomban said:

கடந்த இருபதாம் நூற்றாணடில் உலக அரசியலில் நான் மதிக்கும் தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, கியூபாவில் (ஆஐன்ரீனாவில் பிறந்த) ஏனெஸ்ரோ சேகுவரா போன்றவர்கள் வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியான இந்த மூவர் எமது மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ பிறந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிட்சயமாக கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.வன்முறைக்கு பலியாகியிருப்பார்கள்.

நன்றி பகிர்வுக்கு

காந்தியைப் பற்றி எனக்கு வேறு கருத்துகள் உண்டு. அதனால் அவர் பெயரை மட்டும் மேற்கோளில் நீக்கியுள்ளேன்.

On 11/24/2015, 7:25:37, no fire zone said:

 

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

12241684_1691709137709895_20699739579852

12241311_1691709171043225_44580868612243

சரி ... ஹிந்திய இராணுவத்துக்கு மாமா வேலைபார்த்தவரின் நினைவோ? அதில் ஏறக்குறைய அதே நிறம், மணம், குணமுடைய  சித்தர் போகலாம்! ... 

... ஆமா ... உதற்குள் ஏன் மாவையார்????? ... ஏறக்குறைய அதே தொழிலை சிங்களவனுக்கு செய்கிறோம் என்று போனாரோ????????

23 hours ago, காத்து said:

ஆக குறைந்த கறை TELO வில் தான் இருந்தது..  அப்படி சொல்லுற ஆக்களும் இருக்கிறார்கள்.. 

...ம்ம்... பின்பொருநாள் விலாவாரியாக எழுதுகிறேன் ... எம்மக்களுக்கு எதிராக முதன் முதலில் தாம் தூக்கிய ஆயுதங்களை திருப்பியவர்கள் ... இந்த ரெலோஸ்டுகள்! .. 

18 hours ago, arjun said:

எப்பவும் நாங்கள் கிட்ட போனதேயில்லை ஆனால் அவர்கள் தான் இப்ப ஒட்ட நினைக்கின்றார்கள் .

அந்த வித்தியாசம் பலருக்கு இப்பதான் விளங்குது 

இது அப்பவே நடந்துதான் .புளொட் ஈபி என்றால் தங்களை விட படித்தவர்கள் என்று அவர்கள் நினைத்த காலங்கள் அவை ,

ஓ ... அர்சுன அண்ணோய்! ... என்ன? நீங்கள் கிட்டப்போறதில்லை?   அவயள் வந்து உங்களை கட்டிப்பிடிக்கினமோ?? ஏனெனில் நீங்கள் படித்தவர்கள்??

... ம்ம்ம்... அதுதான் இங்கு யாழுக்குள் குந்தியயபடி இருக்கிறீர்களோ??? தெரியாமல் கேட்கிறேன், ஏன் ஈ, பீ, தேனிக்கள் கிடைக்கவில்லையா? இல்லை யாழ் என்ன மாகமாணிக்கங்கள் குந்தும் இடமென நினைத்தீர்களா???

புளொட், ஈபி படிச்சவையள்! .. முகங்களை காட்டுங்கோ பார்ப்பம்??? சங்கிலியோ, டம்மிங் கந்தசாமியோ, மாணிக்கதாசனோ ... இதில் எந்தப்படித்த முகத்துக்கு கிட்ட நிற்கிறீர்கள் என்று பார்ப்போம்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.