Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம்

Featured Replies

அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம்
 
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம்
விரைவாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.விஷன் ஓப் ஹ்யூமனிட்டி அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பட்டியலின் பிரகாரம் இலங்கை, மொங்கோலியா, இஸ்ரேல், சாட் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் உள்நாட்டு யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு விரைவாக அமைதியான நிலைக்குத் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 114ஆவது இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கையானது தொடர்ந்தும் மிக  ஆபத்தை எதிர்கொண்டுள்ள அமைதி உருவாகும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே தெற்காசியாவின் அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளன.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:
எனினும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 114ஆவது இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கையானது தொடர்ந்தும் மிக  ஆபத்தை எதிர்கொண்டுள்ள அமைதி உருவாகும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே தெற்காசியாவின் அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளன.

பெரிய கோட்டுக்கு முன் சிறிய கோட்டை கீறிவிட்டு சந்தோசப்படுகின்றார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு பிழை. ஆபத்தான அமைதியான நாடுகளில் சொறீலங்கா 4வது. தலைப்பை சொறீலங்காவுக்கு சார்ப்பா யாரோ எழுதிறாங்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பெரிய கோட்டுக்கு முன் சிறிய கோட்டை கீறிவிட்டு சந்தோசப்படுகின்றார்கள்.:cool:

இதென்ன பெரிய விஷயம்...... மைத்திரி மாத்தையாவிற்கு நோபெல் பரிசு கிடைக்கவும் வாய்ப்பிருக்கின்றது .அதற்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரவு கொடுப்பார்

குண்டு வெடிப்பை வெடி கொழுத்தி கொண்டாடி அங்காலை எத்தனை இங்காலை எத்தனை என்று ஸ்கோர் கேட்டவர்களுக்கு ,

அமைதி என்ற சொல்லே  அலர்ஜிதான் .

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, arjun said:

குண்டு வெடிப்பை வெடி கொழுத்தி கொண்டாடி அங்காலை எத்தனை இங்காலை எத்தனை என்று ஸ்கோர் கேட்டவர்களுக்கு ,

அமைதி என்ற சொல்லே  அலர்ஜிதான் .

உண்மையான அமைதி என்பது இரு இனங்களுக்கிடையே ஆன மன ஒற்றுமை மற்றும் நம்பிக்கைகளில் தான் இருக்கே தவிர

இது போன்ற வெளிப்படங்காட்டுதல்களில் அல்ல...

உண்மையான அமைதியை விரும்பாதவர் எவருமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

2016 முடியுறதுக்குள்ள அநேகமா அமைதியை நோக்கி முன்னேறிவிடுவம். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருசத்துக்கு முந்தியும் ஸ்ரீலங்கா  அமைதி வரிசையிலை கடைசியிலைதான் நிண்டது உங்கை கனபேருக்கு தெரியும்....ஆனால் இரண்டொரு பேருக்கு மட்டும் ஏதோ என்னத்தையோ மறைக்கிது போலை கிடக்கு tw_grin:

இதில் கவனிக்கப்படவேண்டிய வரி  

- விரைவாக அமைதியை நோக்கி பயணிக்கும் நாடுகள் என்பது மட்டுமே ,

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, arjun said:

இதில் கவனிக்கப்படவேண்டிய வரி  

- விரைவாக அமைதியை நோக்கி பயணிக்கும் நாடுகள் என்பது மட்டுமே ,

நாம் சாப்பிடும்  சாப்பாட்டிலிருந்து

போடும் உடுப்பு

வாழும் முறை

அனைத்தையும் ஒரு சிலரே தீர்மானிக்கின்றனர்

அதை எம்மீது ஏதோ ஒருவகையில் திணிக்கின்றனர்

அந்தவகையில் தான் இந்த திணிப்பும்

ஆனால் உண்மை எல்லோருக்கும் தெரியும்.

உண்மையான அமைதி என்பதைத்தான் நாம் விரும்புகின்றோம்

எழுதுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம்
 
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம்
 
 
 
 
எனினும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 114ஆவது இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கையானது தொடர்ந்தும் மிக  ஆபத்தை எதிர்கொண்டுள்ள அமைதி உருவாகும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 

இந்த வரிகளின் தார்ப்பரியம்.......? அர்ஜுன் அண்ணாவின் கண்களில் படவில்லை என்றால் நங்கள் நம்புவோம் :)

1 hour ago, arjun said:

குண்டு வெடிப்பை வெடி கொழுத்தி கொண்டாடி அங்காலை எத்தனை இங்காலை எத்தனை என்று ஸ்கோர் கேட்டவர்களுக்கு ,

அமைதி என்ற சொல்லே  அலர்ஜிதான் .

உதை தான் நாங்களும் செய்ய போனாங்கள் கடைசியா  சோற்று பார்சல் வாங்கினதும்,  தூள் கடத்தினதும், ஆட்களை ஆட்கள் வெட்டி தாட்டதான் மிச்சமா போச்சு.  எங்களுக்கு குண்டு என்டா என்னன்டு தெரியாது. பணங்கொட்டையை தான் காட்டி படிப்பிச்சவை

இருபது மார்க்குகள் வாங்கிய பிள்ளை நாற்பது மார்க்குகள் வாங்கினால் ,

நான் பார்ப்பது, தட்டி கொடுப்பது அந்த முன்னேற்றத்தை ,

வாத்தியார் பார்ப்பது ,போட்டு அடிப்பது அட இப்பவும் நாற்பது மார்க்கா ? என்று .:rolleyes:

Edited by arjun
எழுத்து திருத்தம் .

54 minutes ago, arjun said:

இருபது மார்க்குகள் வாங்கிய பிள்ளை நாற்பது மார்க்குகள் வாங்கினால் ,

நான் பார்ப்பது, தட்டி கொடுப்பது அந்த முன்னேற்றத்தை ,

நாற்பது நூறாகும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

இருபது மார்க்குகள் வாங்கிய பிள்ளை நாற்பது மார்க்குகள் வாங்கினால் ,

நான் பார்ப்பது, தட்டி கொடுப்பது அந்த முன்னேற்றத்தை ,

வாத்தியார் பார்ப்பது ,போட்டு அடிப்பது அட இப்பவும் நாற்பது மார்க்கா ? என்று .:rolleyes:

சேர் பொன் ராமநாதன் தொடங்கி ஜி ஜி பொன்னம்பலம்.... தந்தை செல்வா...... ஈறாக எல்லோரும் தட்டிக் கொடுத்தும்   படியாத பிள்ளைகள்
இனத்தான் படிக்கப்போகினமோ.....
அது சரி இப்ப தட்டிக்கொடுக்கிறது எங்கடை சட்டாம்பியார் சுமந்திரன் ஐயா அல்லவா....
திரும்பவும் அல்வாத்தான் கிடைக்கும்  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சில பிள்ளைகள் படிப்பிலை கெட்டிக்காரப் பிள்ளைகள், ஆனா குழப்படிகாரப் பிள்ளைகளோட சேந்து பத்து இருவது முப்பது எண்டு மாக்ஸ் எடுக்குங்கள். குழப்படிகாரரை பள்ளிக்குடத்திலை இருந்து வெளீலை அனுப்பிவிட்டால் இந்தப் பிள்ளைகள் நல்லாப் படிச்சு தொண்ணூறு தொண்ணூற்றஞ்சு எண்டு மாக்ஸ் எடுக்கத் துடங்கீடுங்கள்!<_<

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியையும் தேள்களினால் கொட்டித்தான் காட்ட முடியும். அதன் வலியால் மனிதர்கள் துடிப்பதை தேள்கள் அறியுமோ தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

 சத்தம் போட்டு அழ முடியவில்லை களைத்து, இளைத்து  மௌனமாக அழுகிறோம். உறவுகள் இன்னும் சிறையில், சிலரின் நிலை தெரியவில்லை தேடி அலைகிறோம்  எதிரி அதை அமைதி  என வர்ணிக்கிறான். நாமும் சரிதான் என்று ஆமோதிக்கிறோம்,

தென்னாசியாவிலை  4 வது இடமா...?  தலைப்பை பாத்து ஏதோ உலக ஒழுக்கில் நாலாவதாய் வந்திட்டாங்களோ எண்டு நினைச்சன்... 

ஊருக்கு போய்வர பெட்டியை வேறை கட்டீட்டன்...

  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

 சத்தம் போட்டு அழ முடியவில்லை களைத்து, இளைத்து  மௌனமாக அழுகிறோம். உறவுகள் இன்னும் சிறையில், சிலரின் நிலை தெரியவில்லை தேடி அலைகிறோம்  எதிரி அதை அமைதி  என வர்ணிக்கிறான். நாமும் சரிதான் என்று ஆமோதிக்கிறோம்,

நீங்க வேற...

அப்பா

அம்மா

சகோதர சகோதரிகள்

கொல்லப்பட்டபோது

எரிக்கப்பட்டபோது

அதைத்தடுத்தவன் குளப்படிக்காரர்கள்

அவற்றைக்கண்டும் காணாமல்

படிப்பில் மாக்ஸ்  வாங்கிவர்களை பாராட்டிக்கொண்டிருக்கின்றோம்

இனி இது தான் உலக ஒழுங்கு....

நீங்க என்ன செய்வதாக உத்தேசம்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.