Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலங்கு வானூர்தியில் மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசப் ஆண்டகை

Featured Replies

உலங்கு வானூர்தியில் மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசப் ஆண்டகை
 
உலங்கு வானூர்தியில் மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசப் ஆண்டகை
மன்னார் மாறைமவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார்.
 
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று நாடு திரும்பியுள்ளார்.
 
இன்று காலை பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ஆயர். அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் ஏ32 வீதியில் அமைந்துள்ள மன்னார் தள்ளாடி விமானதளத்தை வந்தடைந்தார்.
 
ஆயருடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில் எழில்ராஜ் ஆகியோரும் சிங்கபூரில் இருந்து வருகை தந்திருந்தனர்.
 
தள்ளாடி விமான தளத்திற்கு வந்தடைந்த ஆயரை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்ரடர் சோசை, மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் வரவேற்றனர்.
wrni2r.jpg
 
f3glua.jpg
குறித்த தள்ளாடி விமானத்தளத்தில் இருந்து ஆயர் இராயப்பு ஜோசப் அம்புலன்ஸ் வண்டி மூலம் மன்னார் இல்லத்தை சென்றடைந்தார்.
                                                      
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இனி அறிக்கை விட‌மாற்றார் என நினைக்கிறேன் .....இராணுவத்திற்கு எதிராக...

  • கருத்துக்கள உறவுகள்

 உடல் நிலை தேறியதும் தன் பணியை மீண்டும்  தொடர வாழ்த்துக்கள்.

3 hours ago, putthan said:

ஐயா இனி அறிக்கை விட‌மாற்றார் என நினைக்கிறேன் .....இராணுவத்திற்கு எதிராக...

தேவை அவர்களுக்கு இருக்கிறது போலும் அதுதான் உலங்கு வானூர்தியில் கொண்டுவந்தார்கள்..

...  அதோடை  ஆசியாவிலையே ஆயுதங்கள் இல்லாத ஆமிக்காறனை ஐயா ஏன் விமர்சிக்க போறார்...

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, satan said:

 உடல் நிலை தேறியதும் தன் பணியை மீண்டும்  தொடர வாழ்த்துக்கள்.

அப்படியானால்

அவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு அழைத்துவரப்படுகிறாரா??

அடுத்து புலம் பெயர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு அழிக்க பிரச்சனை முடிந்தது .

முதல் புனர்வாழ்வு பாதர் இமானுவேலில் தொடங்குது .

9 minutes ago, arjun said:

அடுத்து புலம் பெயர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு அழிக்க பிரச்சனை முடிந்தது .

முதல் புனர்வாழ்வு பாதர் இமானுவேலில் தொடங்குது .

அப்ப எப்ப நீங்கள் எப்ப கிளம்புறீயள்...? ஊருக்கு...

55 minutes ago, காத்து said:

அப்ப எப்ப நீங்கள் எப்ப கிளம்புறீயள்...? ஊருக்கு...

புலிகளுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் தான் புனர்வாழ்வு தேவை .

சகிப்புத்தன்மை இல்லாமை ,இனத்துவேசம் அவர்களிடம் தான் இருக்கு .யாழை பலரின் கருத்துகளை பார்த்தாலே அது விளங்கும் .

புலிகள் ,தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது அவர்கள் நிலை அதற்குத்தான் புனர்வாழ்வு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேங்கப்பா மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இனத்துவேசம் சகிப்புத்தன்மை என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் பாவிக்க ஆரம்பித்து விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

ஐயா இனி அறிக்கை விட‌மாற்றார் என நினைக்கிறேன் .....இராணுவத்திற்கு எதிராக...

அப்படி எல்லாம் சொல்ல முடியாது.. புத்து. ஹிந்தியா தலைவரையும் ஹெலியில் கொண்டு திரிந்தது. சொறீலங்கா அன்ரன்.. தமிழ்செல்வன்.. என்று கொண்டு திரிஞ்சது தானே. அதற்காக.. அவர்கள் எல்லாம் சோரம் போனார்கள் என்றில்லை. ஐயா பேச்சில கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆனாலும் இறுதியில் சர்வதே போர்குற்ற விசாரணை தொடர்பில் உறுதியாக இருந்தவர். அதில மாற்றமோ இல்லையோன்னு எனி எனித்தான் தெரியும்.

சிங்களம் ஹெலில கொண்டு வந்த பலனை எதிர்பார்க்கத்தான் செய்யும். இருந்தாலும் சோரம் போகத் தயார் இல்லாத தமிழனை உதுகள் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். tw_blush:

17 minutes ago, குமாரசாமி said:

அடேங்கப்பா மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இனத்துவேசம் சகிப்புத்தன்மை என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் பாவிக்க ஆரம்பித்து விட்டனர்.

அவர்கள் அதனை 1982 இலையே பாவிச்சிட்டு தான் இருக்கினம்.அதன் பலாபலனாகத்தான்.. சனத்தை மிரட்டி காசு வாங்கி.. இந்தா.. தமிழீழம் எடுக்கிரம் என்று... தூக்கின ஆயுதத்தை குப்பையில போட்டிட்டு.. அகதியா ஓடினவை. விடுங்கண்ணா.. உந்தச் சில்லறைகளை கணக்கில எடுத்தால்.. தாள் காசுக்கு பஞ்சம் தான். tw_blush:

1 hour ago, arjun said:

புலிகளுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் தான் புனர்வாழ்வு தேவை .

சகிப்புத்தன்மை இல்லாமை ,இனத்துவேசம் அவர்களிடம் தான் இருக்கு .யாழை பலரின் கருத்துகளை பார்த்தாலே அது விளங்கும் .

புலிகள் ,தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது அவர்கள் நிலை அதற்குத்தான் புனர்வாழ்வு .

சகிப்பு தன்மை புலிகளுக்கு எதிராக உங்களுக்கு இருந்து இருந்தால் புலிகளோடை உங்களுக்கு பிரச்சினையே வந்து இருக்காது... புலிகளும் தங்கட வேலையை மட்டும் பார்த்து இருப்பார்கள்...  ஆக அது உங்களுக்கு இருகாது புலம்பெயர்ந்த எங்களுக்கு இருக்க வேணும்... 

சிங்களவன் எங்களை அடிப்பான் கொல்ல்லுவான் ஆனால் நாங்கள் அவர்களை நேசிக்க வேணும்... நாங்களும் யேசு கிறிஸ்சு மாதிரிதான்...  ஒரு கன்னத்திலை அறைந்தார்கள் மற்றதை காட்டினம்..  மற்றதை காட்டினம் அதிலையும் அறைஞ்சு போட்டான்...  இப்ப பாருங்கோ காட்ட கன்னம் இல்லை....  அதுதான் உங்களை போய் காட்ட சொல்லுறம்...

சும்மா எங்களுக்கு ( புலம்பெயர்ந்த புலிக்கும் ) அறிவுரை வளங்கி போட்டு கூட்டமைப்பு ஆதரவை குடுத்து போட்டு உங்கின இருக்காமல்  இறங்கி வேலை செய்யுங்கோ...   சிங்களம் உங்கட கன்னத்துக்காக காத்து இருக்கிறது ... இன ஒற்றுமையை காட்ட...

Edited by காத்து
இலக்கணம்... விளக்க இணைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, காத்து said:

சகிப்பு தன்மை புலிகளுக்கு எதிராக உங்களுக்கு இருந்து இருந்தால் புலிகளோடை உங்களுக்கு பிரச்சினையே வந்து இருக்காது... புலிகளும் தங்கட வேலையை மட்டும் பார்த்து இருப்பார்கள்...  ஆக அது உங்களுக்கு இருகாது புலம்பெயர்ந்த எங்களுக்கு இருக்க வேணும்... 

சிங்களவன் எங்களை அடிப்பான் கொல்ல்லுவான் ஆனால் நாங்கள் அவர்களை நேசிக்க வேணும்... நாங்களும் யேசு கிறிஸ்சு மாதிரிதான்...  ஒரு கன்னத்திலை அறைந்தார்கள் மற்றதை காட்டினம்..  மற்றதை காட்டினம் அதிலையும் அறைஞ்சு போட்டான்...  இப்ப பாருங்கோ காட்ட கன்னம் இல்லை....  அதுதான் உங்களை போய் காட்ட சொல்லுறம்...

சும்மா எங்களுக்கு ( புலம்பெயர்ந்த புலிக்கும் ) அறிவுரை வளங்கி போட்டு கூட்டமைப்பு ஆதரவை குடுத்து போட்டு உங்கின இருக்காமல்  இறங்கி வேலை செய்யுங்கோ...   சிங்களம் உங்கட கன்னத்துக்காக காத்து இருக்கிறது ... இன ஒற்றுமையை காட்ட...

இனி சிங்கனை இந்தப்பக்கம் காணக்கிடைக்காது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

ஐயா இனி அறிக்கை விட‌மாற்றார் என நினைக்கிறேன் .....இராணுவத்திற்கு எதிராக...

புத்தன் ஸார் இராணுவத்துக்கு எதிராக அய்யா இனி அறிக்கை விடமாட்டார் என்கிறீர்கள். எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்பது விளங்கவில்லை. ஒருவேளை இராணுவத்தின் உலங்கு வானூர்தியில் வந்தற்காக எழுதினீர்க்ளோ தெரியவில்லை. தமிழ் பேசும் சமயத் தலைவர்களுள் விடுதலைப்போருக்கு ஆதரவாக இருந்த ஒருவரைபற்றி நினைத்திருக்கிறீர்கள். 

Tamilselvan%20with%20Airforce%20helicopt

மேல உள்ளவரும் அடிக்கடி இலங்கை அரசின் உலங்கு வானூர்தியில் போய்வந்தவர்.  சீச்சீ அப்பிடி ஏதும் இருக்காது எண்டு புத்தன் நீங்கள் நினைச்ச மாதிரி நானும் நினைக்கிறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.