Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி!

Featured Replies

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி!
 
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி!
சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்ற வேண்டாம்” என்று தேசிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடந்தபோது, குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர் குறித்த தேசிய தலைவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் விடுதலைப் புலிகளின் கொடியையா ஏற்றுவது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நடைபெறவிருக்கும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதும்இ கலந்து கொள்ளாமையும் அவரவர் சுயவிருப்பம் எனவும் அதனை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
 
  • Replies 55
  • Views 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை சிங்களவன் லேசில மறக்கமாட்டான் போல. அதுவே தமிழ் மக்களுக்கு கொள்கை அளவில்.. கிடைத்த வெற்றி தான்.

Edited by nedukkalapoovan

தமிழ் நாடு பிரிவினை  கேட்கவில்லையா கியுபெக் பிரிவினை கேட்கவில்லையா .இன்று  பழதை  மறந்து  இந்திய ,கனேடிய கொடியை  ஏற்றி அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லையா ,

அதைத்தான் நாங்களும்  இனி  செய்யவேண்டும் .

அதே நேரம் எமது  உரிமைகளுக்காகவும் போராடவேண்டும் .

21 minutes ago, arjun said:

தமிழ் நாடு பிரிவினை  கேட்கவில்லையா கியுபெக் பிரிவினை கேட்கவில்லையா .இன்று  பழதை  மறந்து  இந்திய ,கனேடிய கொடியை  ஏற்றி அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லையா ,

அதைத்தான் நாங்களும்  இனி  செய்யவேண்டும் .

அதே நேரம் எமது  உரிமைகளுக்காகவும் போராடவேண்டும் .

எப்படி போரடப்போரிங்க ....என்ன செக்கு இழுத்த சம்பந்தனுடன் சேர்ந்தா ....போங்க உங்கட சொந்த அலுவலை பாருங்க .....

12651090_10156566285660232_1826111637046

பாடினால் மட்டும் எல்லாம் சரியா ? ...சிறுபிள்ளைதனமாக இருக்கு ..

6 minutes ago, பிரபாதாசன் said:

பாடினால் மட்டும் எல்லாம் சரியா ? ...சிறுபிள்ளைதனமாக இருக்கு ..

1949இல் பாடப்பட்டது, பின்னர் இல்லாமல் போனது. போகவேண்டிய தூரம் அதிகம்.  ஆரம்பம் பாட்டிலாவது இருக்கட்டுமே.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கியூபெக்கை பொறுத்தவரை சகல உரிமைகளும் இருந்தும் பிரிவதற்கு முயற்சித்தார்கள். அதை இன்னும் அவர்கள் கைவிடவில்லை.தனித்துவத்துடன் வாழவிரும்புகின்றார்கள்.ஆனால் இலங்கை சிங்கள அரசியல் வரலாறுகள்  பகுத்தறிவில்லாதது. மற்றைய பிரிந்துபோன/ பிரியமுயற்சிக்கும் நாடுகளின் அரசியலை பார்க்கும் போது எமது தனிநாடு பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது.

 

"கியூபெக்கை பொறுத்தவரை சகல உரிமைகளும் இருந்தும் பிரிவதற்கு முயற்சித்தார்கள் " 

இப்படி சொல்ல எமக்கு எந்த உரிமையும் இல்லை .

பிரிவினை கேட்கும் நாடுகளின் பிரச்சனைகள் அனைத்துமே தனித்துவமானது .எமது அடக்குமுறையை விட மோசமான அடக்குமுறையில் உள்ள நாடுகள் எல்லாம் வேறு வழியில்லாமல் சேர்ந்தே இருக்கின்றார்கள் .இவையெல்லாம் அவர்கள் எதிர்த்து போராடும் அரசின் பலத்திலும் அவர்கள் நாடு இருக்கும் புவியியல் அமைப்பிலும் தங்கியிருக்கு .

எமக்கு எதிரி பெரிய பலமானவன் அல்ல ஆனால் இந்தியாவிற்கு அருகில் இருக்கும் எமது புவியியல் அமைப்பால் தனிநாடு என்பதற்கான சாத்தியம் மிக குறைவு .

அதை விளங்கித்தான் எமது அரசியல் இருக்கு அதுதான் யதார்த்தமும் கூட 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு பேசாமல் சுருண்டு படுப்பம்......எண்டு போகுது ஒருசிலரின் கருத்துக்கள்.

தமிழனுக்கு அழுதகண்ணீரும் சோறும் என்று ஒரு விதி இருக்குமானால் அதை யாரால் மாற்ற முடியும் என்கிறார்கள் போலிருக்கின்றது.

இயற்கையின் படைப்பை வைத்து புவியியல் பூகோளம் பக்கத்து நாடு பார்க்க வெளிக்கிடுறம்.....

அதாவது இலங்கையில் தமிழனாய் பிறந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

இது பூகோள நியதியாக இருக்குமோ???

1 minute ago, குமாரசாமி said:

கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு பேசாமல் சுருண்டு படுப்பம்......எண்டு போகுது ஒருசிலரின் கருத்துக்கள்.

தமிழனுக்கு அழுதகண்ணீரும் சோறும் என்று ஒரு விதி இருக்குமானால் அதை யாரால் மாற்ற முடியும் என்கிறார்கள் போலிருக்கின்றது.

இயற்கையின் படைப்பை வைத்து புவியியல் பூகோளம் பக்கத்து நாடு பார்க்க வெளிக்கிடுறம்.....

அதாவது இலங்கையில் தமிழனாய் பிறந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

இது பூகோள நியதியாக இருக்குமோ???

அதை விளங்கித்தான்  அரசியல் செய்யவேண்டும்.

அந்த தெளிவுதான் முக்கியம் .

கூழை குடித்துவிட்டு படுக்க சொல்லி எவரும் சொல்லவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி!

 

ரணிலுக்கு புரியுது

இலங்கையில் இரு கொடிகள் தான் உண்டு என்பது....

அதைத்தான் தமிழர்களும் சொல்கிறார்கள்

ஒரு நாடு

இரண்டு தேசங்கள் என....

தமிழர்கள் அதற்கும் மேலாக சென்று 

சிங்கக்கொடியை நீ இழக்கவேண்டாம். வைத்துக்கோ

எங்கள் புலிக்கொடியை நீ தூக்கவேண்டாம் 

அதை நாங்க வைத்திருக்கவிடு என்று தான் சொல்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, arjun said:

அதை விளங்கித்தான்  அரசியல் செய்யவேண்டும்.

அந்த தெளிவுதான் முக்கியம் .

கூழை குடித்துவிட்டு படுக்க சொல்லி எவரும் சொல்லவில்லை .

புலிகள் காலத்தை தவிர்த்து....... இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரை தமிழ்த்தலைவர்கள் அரசியல் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் விளங்கித்தான் செய்கிறார்கள்.தெளிவானவர்கள்!

Edited by குமாரசாமி
ள்

14 minutes ago, குமாரசாமி said:

புலிகள் காலத்தை தவிர்த்து....... இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரை தமிழ்த்தலைவர்களின் அரசியல் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் விளங்கித்தான் செய்கிறார்கள்.தெளிவானவர்கள்!

அரசியல் என்பது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது அல்ல ,

நாங்கள் நினைப்பது மாதிரி அரசியல்வாதிகள் எல்லாம் செயலாற்றவேண்டும் என்று நினைப்பதே பிழையான விடயம் .

சுதந்திரம் கிடைத்த காலம் முதல் ஜனநாயக ரீதியில் தான் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள் அவர்களை பிழையானவர்கள் என்றால் சரியானவர்கள் அரசியல் செய்ய யாரும் அங்கு தடை போடவில்லை .

நாட்டில் எவர் அரசியல் செய்ய முனைந்தாலும் இதே நிலைக்கு தான் அவர்களும் தள்ளபடுவார்கள் .எதிர்கட்சியில் இருந்து கத்துபவர்களும் பதவிக்கு வந்தால் அதே நிலைதான் .

புலிகள் காலத்தை தவிர்த்து - சிரிப்பாக இருக்கு ,இந்த காலத்தில் தமிழர்கள் இழந்ததை தவிர வேறு எந்த காலமும் இழக்கவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்று சொல்வதுபோல்.....அரசியலில் தீர்வை காணமுடியாதவர்கள் இன்றும் என்றும் புலிகளையே காரணம் சொல்லிக்கொண்டிருப்பர்.

ஆனால் சிங்களம் அன்று தொடக்கம் தமிழர்களுக்கு செய்த அழிவுகளை மறந்து விடுவர்.:cool:

நாங்கள் எவ்வளவு அழுது புரண்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் விடான். அரவணைச்சு பாத்தாச்சு, அடிச்சும் பாத்தாச்சு - விளைவு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பக்கத்து வீட்டுக்காரனை இடம் மாற்ற முடியாது. நாங்கள் எம்மால் இப்போது எவ்வளவு பெற முடியுமோ அதைப் பெறனும். அதில் கனடா போன்று சர்வஜன வாக்கு மூலம் பிரிந்து போகும் உரிமை இருக்குமாயின் - சிங்களம் பயப்படும். முடிந்தவரை இலங்கை ஒருநாடாக இருப்பதைத்தான் நானும் விரும்புகி்றேன். அதற்காக என்னை சிங்களத்தின் பே றோலில் இருப்பதாக கருதினாலும் கவலையில்லை. இத்தீவை இரண்டாக்கி இருவரும் 1000 கிமீ எல்லைக்கு (தமிழீழ வரைபடத்தைப் பார்த்தால் இதற்கு மேலும் வரும்) பாதுகாப்பென்று கோடிக்கணக்கில் செலவு செய்வதெல்லாம் சுத்த வேஸ்ட். சிங்கப்பூர், நோர்வே மாதிரி என்றாவது நட்புடன் பிரிய வேண்டி வந்தால் அது நல்லது. இவற்றிற்கு முதலில் ஒரு ஆரம்பம் வேண்டும். அது இதுவாக இருக்கட்டும்.

இதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி!
 
நாட்டின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் விடுதலைப் புலிகளின் கொடியையா ஏற்றுவது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

புலிகளை இழுக்காது பிரதமராலும் அரசியல் செய்ய இயலவில்லை. :shocked: :grin: 

சிறீலங்க அரசின் பரிதாபநிலைக்கு அனுதாபங்கள்... !! :(

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

நாங்கள் எவ்வளவு அழுது புரண்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் விடான். அரவணைச்சு பாத்தாச்சு, அடிச்சும் பாத்தாச்சு - விளைவு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பக்கத்து வீட்டுக்காரனை இடம் மாற்ற முடியாது. நாங்கள் எம்மால் இப்போது எவ்வளவு பெற முடியுமோ அதைப் பெறனும். அதில் கனடா போன்று சர்வஜன வாக்கு மூலம் பிரிந்து போகும் உரிமை இருக்குமாயின் - சிங்களம் பயப்படும். முடிந்தவரை இலங்கை ஒருநாடாக இருப்பதைத்தான் நானும் விரும்புகி்றேன். அதற்காக என்னை சிங்களத்தின் பே றோலில் இருப்பதாக கருதினாலும் கவலையில்லை. இத்தீவை இரண்டாக்கி இருவரும் 1000 கிமீ எல்லைக்கு (தமிழீழ வரைபடத்தைப் பார்த்தால் இதற்கு மேலும் வரும்) பாதுகாப்பென்று கோடிக்கணக்கில் செலவு செய்வதெல்லாம் சுத்த வேஸ்ட். சிங்கப்பூர், நோர்வே மாதிரி என்றாவது நட்புடன் பிரிய வேண்டி வந்தால் அது நல்லது. இவற்றிற்கு முதலில் ஒரு ஆரம்பம் வேண்டும். அது இதுவாக இருக்கட்டும்.

இதுதான் யதார்த்தம்.

ஜீவன்! யதார்த்திற்கும் பழிபோடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது..

ஈழத்தமிழர்களின் இன்றையை நிலைக்கு புலிகள் காரணம் என்பவர்கள்.....60வருடகால பழமைவாய்ந்த அரசியல் தலைகள் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் போனதின் மர்மம் என்னவென்று விளங்கவில்லை.

15 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களின் இன்றையை நிலைக்கு புலிகள் காரணம் என்பவர்கள்.....60வருடகால பழமைவாய்ந்த அரசியல் தலைகள் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் போனதின் மர்மம் என்னவென்று விளங்கவில்லை.

யாராயினும், விட்ட பிழைகளில் தப்பில்லை. அது அந்த சூழலில் விட்டவை. அவற்றை அனுபவமாக்கி அதிலிருந்து முன்னேறுபவன்தான் மனிதன். அதற்காக பிழைகள் நிச்சயமாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இங்குள்ள பிரச்சனை புலிகள் பிழையே விடவில்லை எனும் வாதம்தான். 60 வருடமாக பல வழிகளில் போராடி விட்டோம் ஆனாலும் நாம் தோற்கிறோம் என்றால் எங்கு பிழை. எம்மில்தான் பிழை, எமது போராட்டங்கள் எதுவுமே எமக்குரிய தீர்வைத் தரவில்லை. இன்று எமக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கு. இதையாவது எமக்கு சாதகமாக்கலாமே (தேசிய கீதத்தை குறிப்பிடவில்லை) என்ற ஒரு நப்பாசைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

யாராயினும், விட்ட பிழைகளில் தப்பில்லை. அது அந்த சூழலில் விட்டவை. அவற்றை அனுபவமாக்கி அதிலிருந்து முன்னேறுபவன்தான் மனிதன். அதற்காக பிழைகள் நிச்சயமாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இங்குள்ள பிரச்சனை புலிகள் பிழையே விடவில்லை எனும் வாதம்தான். 60 வருடமாக பல வழிகளில் போராடி விட்டோம் ஆனாலும் நாம் தோற்கிறோம் என்றால் எங்கு பிழை. எம்மில்தான் பிழை, எமது போராட்டங்கள் எதுவுமே எமக்குரிய தீர்வைத் தரவில்லை. இன்று எமக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கு. இதையாவது எமக்கு சாதகமாக்கலாமே (தேசிய கீதத்தை குறிப்பிடவில்லை) என்ற ஒரு நப்பாசைதான்.

இங்கு யாராவது இப்படியொரு வசனத்தை பாவித்தாக எனக்கு தெரியவில்லை. பிழைகள் பலபக்கங்களிலும் இருந்ததாகவே அனேகரின் கருத்துக்கள் அமைந்திருந்தது. ஆனால் அர்ஜுனின் புலிகளுக்கு எதிரானா ஈனத்தன அருவருப்பான கருத்துக்கள்தான் இன்றைய நிலைக்கு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சிங்கங்கொடி சிங்கள தேசத்துக்கு முக்கியமோ.. அதே அளவு முக்கியமானது தமிழர் தேசத்தின் புலிக்கொடி. அதனைப் பற்றி உச்சரிக்க ரணிலுக்கும் உரிமையில்லை.. நாட்டைக் காட்டிக்கொடுத்து அடிமைப்படுத்திய எம்மத்தியில் உள்ள சில புல்லுருவிகளுக்கும் உரிமையில்லை.

 

 

 

4 hours ago, arjun said:

தமிழ் நாடு பிரிவினை  கேட்கவில்லையா கியுபெக் பிரிவினை கேட்கவில்லையா .இன்று  பழதை  மறந்து  இந்திய ,கனேடிய கொடியை  ஏற்றி அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லையா ,

அதைத்தான் நாங்களும்  இனி  செய்யவேண்டும் .

அதே நேரம் எமது  உரிமைகளுக்காகவும் போராடவேண்டும் .

கியுபெக் சரியான உதாரணம் இல்லை.

3 hours ago, arjun said:

 

"கியூபெக்கை பொறுத்தவரை சகல உரிமைகளும் இருந்தும் பிரிவதற்கு முயற்சித்தார்கள் " 

இப்படி சொல்ல எமக்கு எந்த உரிமையும் இல்லை .

பிரிவினை கேட்கும் நாடுகளின் பிரச்சனைகள் அனைத்துமே தனித்துவமானது .எமது அடக்குமுறையை விட மோசமான அடக்குமுறையில் உள்ள நாடுகள் எல்லாம் வேறு வழியில்லாமல் சேர்ந்தே இருக்கின்றார்கள் .இவையெல்லாம் அவர்கள் எதிர்த்து போராடும் அரசின் பலத்திலும் அவர்கள் நாடு இருக்கும் புவியியல் அமைப்பிலும் தங்கியிருக்கு .

எமக்கு எதிரி பெரிய பலமானவன் அல்ல ஆனால் இந்தியாவிற்கு அருகில் இருக்கும் எமது புவியியல் அமைப்பால் தனிநாடு என்பதற்கான சாத்தியம் மிக குறைவு .

அதை விளங்கித்தான் எமது அரசியல் இருக்கு அதுதான் யதார்த்தமும் கூட 

சிங்களவனை போல்  கேவலமாக எந்த பிரிவினை கேட்ட நாடும் செய்யவில்லை.  மலக்குண்டு கொட்டவில்லை, புக்காரா விட்டு அடிக்கவில்லை. கீபிர் குண்டு போடவில்லை.   இத்தனை இலட்சம் மக்களை கொல்லவில்லை. கேவலமாக மற்ற நாடுகளோடு சிரிலங்காவை ஒப்பிடாதீர்கள்

 

17 minutes ago, இணையவன் said:

கியுபெக் சரியான உதாரணம் இல்லை.

கியுபெக் பிரிவினை கேட்டது உண்மை .ஆயுதபோராட்டத்திற்கும் ஒரு சிறு குழு ஆயுத்தம் செய்தது .

கீழே உள்ள  பந்தி முதல்  நான் எழுதியதுதான் .

பிரிவினை கேட்கும் நாடுகளின் பிரச்சனைகள் அனைத்துமே தனித்துவமானது .எமது அடக்குமுறையை விட மோசமான அடக்குமுறையில் உள்ள நாடுகள் எல்லாம் வேறு வழியில்லாமல் சேர்ந்தே இருக்கின்றார்கள் .இவையெல்லாம் அவர்கள் எதிர்த்து போராடும் அரசின் பலத்திலும் அவர்கள் நாடு இருக்கும் புவியியல் அமைப்பிலும் தங்கியிருக்கு .

6 minutes ago, நேசன் said:

சிங்களவனை போல்  கேவலமாக எந்த பிரிவினை கேட்ட நாடும் செய்யவில்லை.  மலக்குண்டு கொட்டவில்லை, புக்காரா விட்டு அடிக்கவில்லை. கீபிர் குண்டு போடவில்லை.   இத்தனை இலட்சம் மக்களை கொல்லவில்லை. கேவலமாக மற்ற நாடுகளோடு சிரிலங்காவை ஒப்பிடாதீர்கள்

 

மற்ற நாடுகளில் இதை விட ஆயிரம் மடங்கு கேவலம் நடந்திருக்கு ,

அதற்காக சிங்களவன் செய்த  அநியாயத்தை நியாயப்படுத்தமுடியாது .இந்தியன் ஆமி வந்து சிங்களவன் செய்தவற்றை விட ஆயிரம் மடங்கு அநியாயம் செய்தான் .அதன் பிறகு சிங்களவனும் அதற்கு நிகராக தொடங்கிவிட்டான் . 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

கியுபெக் பிரிவினை கேட்டது உண்மை .ஆயுதபோராட்டத்திற்கும் ஒரு சிறு குழு ஆயுத்தம் செய்தது .

கீழே உள்ள  பந்தி முதல்  நான் எழுதியதுதான் .

பிரிவினை கேட்கும் நாடுகளின் பிரச்சனைகள் அனைத்துமே தனித்துவமானது .எமது அடக்குமுறையை விட மோசமான அடக்குமுறையில் உள்ள நாடுகள் எல்லாம் வேறு வழியில்லாமல் சேர்ந்தே இருக்கின்றார்கள் .இவையெல்லாம் அவர்கள் எதிர்த்து போராடும் அரசின் பலத்திலும் அவர்கள் நாடு இருக்கும் புவியியல் அமைப்பிலும் தங்கியிருக்கு .

மற்ற நாடுகளில் இதை விட ஆயிரம் மடங்கு கேவலம் நடந்திருக்கு ,

அதற்காக சிங்களவன் செய்த  அநியாயத்தை நியாயப்படுத்தமுடியாது .இந்தியன் ஆமி வந்து சிங்களவன் செய்தவற்றை விட ஆயிரம் மடங்கு அநியாயம் செய்தான் .அதன் பிறகு சிங்களவனும் அதற்கு நிகராக தொடங்கிவிட்டான் . 

அர்ஜுன் அண்ணா,

ஆனால் பாருங்கோ நாங்கள் புலிகளின்ட பிழை பிடிச்சு புளிச்சுப்போன வாதங்களை மட்டுமே தொடர்ந்தும் வைப்போம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கீழே உள்ள கருத்து பொதுவாக இணைக்கப்பட்ட செய்திக்கு எழுதப்பட்டது.

இவ்வளவு அழிவுக்கும் பிறகும்  தமிழர்கள் உன் தேசிய கீதத்தையாவது நான் பாடிவிட்டு போகிறேன் என்று கேட்கும் நிலையில் கூட சிங்கள அரசியல்வாதிகள் சல்லி காசுக்கும் தமிழனை மதித்ததாக தெரியவில்லை.

அட சிங்கத்துக்கு பிறந்த அசிங்கக் கூட்டமே....உன் இத்துப் போன வேசியகீத பாட்டை  படிக்கவே நீ பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேணும், விளக்கக் கூட்டம் வைக்கணும்னா நீ யாரு..நான் யாரு...  உன்னோட சேர்ந்து நமக்கென்ன டுபாகூர் அரசியல் ....

Edited by Sasi_varnam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.