Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Featured Replies

10 minutes ago, Maruthankerny said:

செங்கன்னனுடன் இறுதியாக இருந்தவர்கள்தான் அவர் இறந்துவிட்டார் என்று 
எனக்கு 2010இல் சொன்னார்கள்.

எல்லா இடமும் துரோகமும் கொள்ளையும் என்றால் 
நாம் யாரைத்தான் நம்புவது ...?

எல்லாம் முடிய எது இருக்கோ அதை அதை பார்க்க வேண்டியதுதான்.

மதிய கிழக்கு நாடு ஒன்றில் எங்கும் போக வழியில்லாமல் ....
அங்கும் இருக்க முடியாத நிலையில் பலர் தவிக்கிறார்கள் 
ஒரு வேளை நாடு போக நேர்ந்தால் அவர்கள் அங்கேயே தற்கொலை செய்வது உத்தமம் 
ஏன் இவர்கள் யாரும் அவர்களுக்கு உதவில்லை ?

நாட்டில் விடுதலையான போராளிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடக 
தொடர்பை ஏற்படுத்தி  ஓரளவு தேவையை பூர்த்தி செய்யலாம்.

இடைவெளியில் நிற்பவர்கள் என்ன செய்ய முடியும் ?

இவர்களுடன் இருந்தவர்கள்தானே அங்கு அவதி படுகிறார்கள்? 

அதற்க்கு  தான்  இவர்கள்  சொல்கிறார்கள் அவர்களுக்கு  உதவ  சொல்லி  ஆனால்  இங்குள்ளவர்கள்  முடியாது  என்றால் அவர்கள்  என்ன  பண்ண  முடியும் பொருளாதாரத்தை  வைத்திருப்பவன்  உதவி  செய்கிறான்  இல்லை  அப்ப  இந்த  பணத்தை  என்ன  செய்கிறான்  எனும்   கேள்வி  வருது ...கேட்டால்  துரோகி  அவன் ஆள்  இவன்  ஆள்  என்றால்  கோவம்  வருவது  நியாயம்  தானே .

 

உனக்கு  இலாபம்  உள்ளபடியால்  தானே   ஒட்டிக்கொண்டு   இருக்கிறீங்க உண்மையாக  மக்களுக்கு  வேலை  செய்பவன்   விமர்சனம்  வந்தால்  பதவியை  தூக்கி ஏறிச்சுட்டு  போயிடுவான்  ஏனெனில்  அவன்  ஒரு  இலாபம்  இல்லாமல்  மக்கள் பணி  செய்பவன்  ஒட்டு  இருக்க  வேண்டிய  தேவை   இல்லை  இந்தா  பிடி  என்னை  விடு  என்று  போவதுதான்   அழகு  ,அட்டை  போல  ஒட்டி  இருப்பது கொழுத்த  பணம்  அதை  எப்படி  விட்டு  ஒதுங்க   முடியும் ஆசை  எவரை  விட்டது .

 

அவர்கள் ஊருக்கு  தான்  காசு  அனுப்ப சொல்கிறார்கள் அங்கு அங்கவீனமான  போராளிகளை  ஒரு  இடத்தில  வைத்து  பராமரிக்க சொல்கிறாக்கள் வீட்டுக்கு  பாரமாக வயதான  தாய்  தகப்பன்  துக்கி எடுத்து  பார்ப்பது  சிரமம்  தலைவர்  இருக்கும்  போது  எப்படி  அவர்களை  பார்த்தார்  அப்படி  பாருங்க எங்களிடம்  பணம் இருக்கு  இல்லாமல்   இருந்தால்  ஒகே  இவ்வளவு  கோடிகளை  வைத்துக்கொண்டு  எதற்கு  கொடுக்க பிரச்சினை .

  • Replies 124
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா கொடுத்த மக்கள் எல்லாம் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்...புலியே இல்லாமல் போய் விட்டார்கள். இனிமே அந்த காசு போனால் என்ன,வந்தால் என்ட நிலைமை தான் அந்த மக்களுக்கு[தவிர இதற்கு போய் ஆர்ப்பாட்டம் அது,இது என்று செய்து இருக்கின்ற கொஞ்ச,நஞ்ச மானத்தையும் இல்லாமல் செய்யச் சொல்கிறீர்களா?]...அதற்காக நம்பிக் கொடுத்த அந்தக் காசை ஆட்டையைப் போடக் கூடாது அண்ணா மகா பாவம்...பதுக்கு வைச்சிருக்கின்ற அரைவாசிக் காசை வெளியாலே எடுத்தாலே ஊரில் பாதிக்கப்பட்ட்,அங்கவீனப்பட்ட போராளிகள்,பொது மக்களுக்கு சுய வாய்ப்பு வேலை வாய்ப்புத் திட்டங்களை ஆரம்பித்து கொடுக்கலாம்...காசு கொடுத்த மக்கள் கேட்காததால் அந்தக் காசு அவர்களுக்கு[அடித்தவர்களுக்கு] சொந்தம் என்றாகி விடாது...புலி வந்தப் பிறகு தான் கொடுப்போம் என்டால் போரில் பாதிக்கப்பட்ட அங்கனீனமான போராளிகள் எல்லாம் இல்லாம் புலிகள் இல்லையா?...இதைய தலைவர் விரும்புவார்?...கொஞ்சமாவது மனச்சாட்சியோடு நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா காலம்காலமா கொடுத்தவன் எல்லாம்..  பாவம் பார்க்கிற நிலையில இருக்காங்க. இஞ்ச கொஞ்சச் சனம் சொல்லுது விரக்தில இருக்காங்கலாம். மனம் வைச்சு.. கொடுத்தவங்க.. கொடுக்கும் போது பலரும் திரும்பி வரும்.. வரனும் என்று கொடுக்கவே இல்லை. 

கொடுக்காதவையும்.. பிடுங்க முடியல்லையே என்ற கவலையில் உள்ளவையும்.. தங்களுக்கு தரேல்லையே என்று புலம்பும்..ஒட்டுக்குழு கொள்ளையர்களும் தான் இப்ப விரக்தியில இருக்கினம்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

 

எல்லா இடமும் துரோகமும் கொள்ளையும் என்றால் 
நாம் யாரைத்தான் நம்புவது ...?

இது தான் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை

பொட்டரின் வளர்ப்பு

தலைவரின் மெய்ப்பாதுகாப்பு

இப்படி பல நூறு பேர் வந்தாச்சு

ஒருத்தரும் சாதாரண போராளியாக இதுவரை சொல்லவே இல்லை...

அத்துடன் எல்லோரிடமும் சர்வதேச கடவுச்சீட்டு...

இப்போ இவர்கள் பணத்தை எதற்காக தேடுகிறார்கள்

கண் முன் இருந்தவர்கள்

வளர்ந்தவர்கள்

தாயகத்துக்காக தம் வாழ்வையே கொடுத்ததை நாம் பார்த்தவர்கள் கள்ளர் என்றால்

ஒரு போதுமே எம்மால் அறியப்படாத இவர்கள்....?

எவ்வாறு நம்பிக்கை வரும்?

எவ்வாறு நம்பிக்கையை கட்டி எழுப்பப்போகிறார்கள்?

அவ்வாறு நம்பிக்கையை கட்டி எழுப்பாமல் எதற்காக பணம் பணம் என்று அடிபடுகிறார்கள்?

தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்

எவ்வாறு முறை தவறி புலம் பெயர் தேசங்களில்

ஐனநாயக வழிகளில் தம்மை பலப்படுத்தாமல் தலைவரால் மௌனிக்கப்பட்ட ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள்??

இவ்வாறு என்னிடம் சிலர் கேள்வி கேட்கிறார்கள்

பதில்???

 

20 minutes ago, ரதி said:

நெடுக்கர்,நீங்கள் காசு கணக்கு கேட்க மாட்டீர்கள்.நீங்கள் பெரிய கொடையாளி என்று எல்லோருக்கும் தெரியும்...ஜந்து சதம் குடுக்காதவர்கள் எல்லாம் நெடுக்கரை மாதிரி வாயை மூடிக் கொண்டு இருங்கோப்பா! நெடுக்கர் இருக்கிறாரல்ல

இங்கு சீன்  புலிகள்  ஏமாற்று  புலிகள் புலிகளை  காட்டி  பணம்   பார்க்கும்  புலிகள்  பற்றி  பேசுவது  நேர  விரையம்  ரதி .....உண்மையில் போராடி  இன்று  கோழி வளர்த்து சீவியம்   விடும்  புலிகள்  பற்றி  நாம்  பேசிக்கொண்டே  இருப்பம் .

முகத்தை  மறைச்சு கொண்டு  இணையங்களில்  காசு  சேர்க்கும்  புலிகளுக்கு  அப்பு   அடிக்கபட்டுக்கொண்டே  இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

விசுகு அண்ணா கொடுத்த மக்கள் எல்லாம் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்...புலியே இல்லாமல் போய் விட்டார்கள். இனிமே அந்த காசு போனால் என்ன,வந்தால் என்ட நிலைமை தான் அந்த மக்களுக்கு[தவிர இதற்கு போய் ஆர்ப்பாட்டம் அது,இது என்று செய்து இருக்கின்ற கொஞ்ச,நஞ்ச மானத்தையும் இல்லாமல் செய்யச் சொல்கிறீர்களா?]...அதற்காக நம்பிக் கொடுத்த அந்தக் காசை ஆட்டையைப் போடக் கூடாது அண்ணா மகா பாவம்...பதுக்கு வைச்சிருக்கின்ற அரைவாசிக் காசை வெளியாலே எடுத்தாலே ஊரில் பாதிக்கப்பட்ட்,அங்கவீனப்பட்ட போராளிகள்,பொது மக்களுக்கு சுய வாய்ப்பு வேலை வாய்ப்புத் திட்டங்களை ஆரம்பித்து கொடுக்கலாம்...காசு கொடுத்த மக்கள் கேட்காததால் அந்தக் காசு அவர்களுக்கு[அடித்தவர்களுக்கு] சொந்தம் என்றாகி விடாது...புலி வந்தப் பிறகு தான் கொடுப்போம் என்டால் போரில் பாதிக்கப்பட்ட அங்கனீனமான போராளிகள் எல்லாம் இல்லாம் புலிகள் இல்லையா?...இதைய தலைவர் விரும்புவார்?...கொஞ்சமாவது மனச்சாட்சியோடு நடக்க வேண்டும்.

இந்தக்கருத்தோடு முழுவதுமாக உடன்படுகின்றேன்

பாவத்திலும் மகாபாவம் இது..

நான் எனது வரும்புக்குட்பட்டு பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பரிசில சுடவச்சது சிங்களன் இல்லையா????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nedukkalapoovan said:

தாயகத்தில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஆயிரக்கணக்கில் கொடுத்தவன் எல்லாம் பேசாமல் இருக்க.. 5 பென்ஸ் ஈயாததுகள் எல்லாம் புலிட்ட கணக்குக் கேட்கிறது தான் பெரும் கொடுமை. என்ன உலகமப்பா இது. :rolleyes:

 

நெடுக்கு ஐயா,

முன்பு நீங்கள்  scholarship grants இல்   கூட ஒரு ப‌குதியை கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்த தாராள மனம் யாருக்கு வரும். பலர் இதேபோல் உள்ளார்கள். இதை நம்பாத பலர் இங்கு அந்த‌ ஸ்கொலர்ஷிப் பெயரைக்கேட்டு உங்களை வெட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

அப்ப பரிசில சுடவச்சது சிங்களன் இல்லையா????

கோசான் எமது அயலவர் ஒருவர் 2009 க்கு முன்னர் புலிகளைக் காட்டி கொடுப்பதும் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து வெளிநாட்டிலிருந்து வருபவர்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்து மிரட்டி பெரும் பணம் கறந்தார்கள்.

போர் முடிவுக்கு வந்தவுடன் நன்றிக் கடனாக அவர் மனைவி 3 பிள்ளைகள் என 5 பேரையும் பிரான்சுக்கு அனுப்பி விட்டார்கள்.இப்படி பலரும் இருக்கலாம்.சிலர் இன்னமும் அவர்களுக்கு விசுவாசமாகவும் இருக்கலாம்.

அதுக்காக இப்படி வந்தவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று சொல்லவில்லை.சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

1 hour ago, nedukkalapoovan said:

தாயகத்தில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஆயிரக்கணக்கில் கொடுத்தவன் எல்லாம் பேசாமல் இருக்க.. 5 பென்ஸ் ஈயாததுகள் எல்லாம் புலிட்ட கணக்குக் கேட்கிறது தான் பெரும் கொடுமை. என்ன உலகமப்பா இது. :rolleyes:

இந்த எழுத்து அடித்தவர்கள் நடுங்குவதை காட்டுது .

கொடுத்தவன் கொடுக்காதவன் அல்ல பிரச்சனை காசு அடித்ததுதான் பிரச்சனை .

அப்ப போராடபோனவர்கள் எல்லாம் சும்மா இருக்க போராட்டம் என்றவுடன் ஓடி வந்தவன் மட்டும் போராட்டத்தை பற்றி கதைப்பது என்ன நியாயம் 

1 hour ago, விசுகு said:

கேட்கக்கூடாது என்பதல்ல

இவர்கள் இதை  வேறு நோக்கங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள்

எனவே இவர்களும் மக்கள் நன்மை சார்ந்து நம்பகத்தன்மை கொண்டவர்களல்ல..

ரதி

உங்களிடம் ஒரு கேள்வி

இங்கு 

பெருமளவு பணத்தை கடன் எடுத்துக்கொடுத்தோர்

வீட்டை அடைவைத்துக்கொடுத்தோர்

என்று பலரும் உண்டு

அவர்களில் எவராவது புலிகளின் அலுவலகங்களிலோ

புலிகளின் கடைகளிலோ போய்நின்று தமது பணத்தை தரும்படி வற்புறுத்தியதாக

அல்லது ஆர்ப்பாட்டம் செய்ததாக இதுவரை ஏதாவது செய்திகள் வந்ததா?

ஏன் ??

கொடுத்தவர்களுக்குத்தெரியும் 

தமது பணத்தை எதற்காக கொடுத்தோம்

அதற்கு என்ன நடந்தது என்றும் 

இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானோர் தமது வாழ்வையே கொடுத்துவிட்டு வீதியில் நிற்கிறார்கள் என்றும்.

 

அண்ணை பல இடங்களில் வழக்குகள் நடக்குது ,ஊடகங்களில் வேறு வந்து திட்டி தீர்கின்றார்கள் .சுவிசில் நடந்த வழக்கு மறந்து போச்சா ?

உங்களுக்கு இது எதுவும் கேட்காது என்றும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

 

நெடுக்கு ஐயா,

முன்பு நீங்கள்  scholarship grants இல்   கூட ஒரு ப‌குதியை கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்த தாராள மனம் யாருக்கு வரும். பலர் இதேபோல் உள்ளார்கள். இதை நம்பாத பலர் இங்கு அந்த‌ ஸ்கொலர்ஷிப் பெயரைக்கேட்டு உங்களை வெட்டினார்கள்.

உங்களுக்கு புலமைப் பரிசில்களின் தரவு தேவை என்றால்.. பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நாங்க  புலமைப்பரிசிலை மட்டும் நம்பி வாழுற கூட்டமில்லை. சொந்தமா உழைக்கவும் தெரிந்தவர்கள். அதனால்.. குறுகிய வட்டத்துக்குள் நிற்பதும் இல்லை சிந்திப்பதும் இல்லை. tw_blush:

அடுத்தவன் காசை ஆட்டைப் போட்டு அல்லது அடுத்தவன் துயரிலை எங்கட வாழ்க்கையை வளமாக்கிக்கனுன்னு ஒரு தேவையும் இல்லை எங்களுக்கு. கள்ளக் கணக்கு எழுதியும் பிழைச்சதில்லை. tw_blush:

1 hour ago, arjun said:

இந்த எழுத்து அடித்தவர்கள் நடுங்குவதை காட்டுது .

கொடுத்தவன் கொடுக்காதவன் அல்ல பிரச்சனை காசு அடித்ததுதான் பிரச்சனை .

அப்ப போராடபோனவர்கள் எல்லாம் சும்மா இருக்க போராட்டம் என்றவுடன் ஓடி வந்தவன் மட்டும் போராட்டத்தை பற்றி கதைப்பது என்ன நியாயம் 

1982 இல் ஓடியாந்தவர்.. 2000 களில் வந்தவனைப் பார்த்து.... ஏதே மொழிகிறார் தனக்குத் தன் அறிவுக்கு தெரிஞ்சதை. tw_blush:

அதுசரி அண்ணே.. உந்த நடுக்கம் கண்டுபிடிக்கிற மிசினை பாவிச்சோ.. 1982 இலேயே புத்திமதி சொல்லிட்டு கிளம்பினனீங்க. tw_blush:

Edited by nedukkalapoovan

கனடிய தமிழர் தேசிய அவையினர்(NCCT), கனடாவில் உள்ள தமிழ்த்தேசியம் சார்ந்த சொத்துக்களை பொதுவுடமையாக பதிவிட்டு - அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு அழைப்பாம். எதிர்வரும் சனிக்கிழமை 20-02-2016 அன்று ரொறன்ரோவிலுள்ள scarborough civic centre ல் மாலை 3 மணி முதல் 5 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கின்றார்களாம்.

யார் இந்த கனடிய தமிழர் தேசிய அவை(NCCT) ?

வருடம் 2010ம் ஆண்டு யூன் மாதம் 20ம் திகதி இலாப நோக்கமில்லாத அரசியல் அமைப்பாக கனடாவில் பதியபட்டவர்கள் தான் இந்த கனடிய தமிழர் தேசிய அவை(NCCT).

ஆனால், கனடாவில் இருக்கும் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை இவர்கள்(NCCT) எவ்வாறு ஒழுங்கு படுத்தி மக்கள் சொத்தாக்க முடியும் ?

கனடாவில் இருக்கும் முழுமையான தேசியத்தின் சொத்துக்கள் எல்லாம், கனடா உலகத்தமிழர் அமைப்பிடம்(WTM) தான் இருக்கின்றது. அப்படியென்றால் கனடா உலகத்தமிழர் அமைப்பினரின்(WTM) உருவாக்கமா கனடிய தமிழர் தேசிய அவை(NCCT) ?

கனடா உலகத்தமிழர் அமைப்பினர் முழுமனதோடு எல்லாவற்றையும் பொதுச் சொத்தாக்க சம்மதம் தெரிவுத்துவிட்டார்களா ?

கனடாவில் தேசியத்தின் சொத்தில் முதலீடு செய்து நட்டத்தில் போகின்ற பூ கடைகளும் சாப்பாட்டு கடைகளையும் மட்டும் தான் மக்கள் சொத்தாக்கப் போகின்றீர்களா(NCCT) ?

அல்லது தேசியத்தின் பல மில்லியன் முதலீட்டுகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் வியாபாரங்களையும் மக்கள் சொத்தாக்க முடியுமா ?

1) தேசியத்தின் பல மில்லியன் டொலரில், Toronto பகுதிகளில் மற்றயவர்களின் பெயர்களில் வேண்டிவிட்ட பல Plazza க்களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

2) கனடா கந்தசுவாமி கோயிலும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

3) தேசியத்தின் முதலீட்டில் உருவாக்கப்பட்ட வானொலிகளான CMR, CTR மற்றும் TVI பொதுச் சொத்தாக்கப்படுமா ?

4) கனடா தமிழீழ சங்கம் மற்றும் அதன் சொத்துக்களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

5) தேசியத்தின் முதலீட்டில் உருவான சுரபி Super Market, Asian Textiles, Spiceland Super Market, Ocean Super market மற்றும் பல Marketகளும், Franchise restaurantsகளும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

6) தேசியத்தின் முதலீட்டில் கனடாவில் இயங்கிவரும் அடுக்கு மாடி(Hotel)லும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

7) தேசியத்தின் முதலீட்டில் கனடாவில் இயங்கிவரும் Nursing Homes களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

8) கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) சில முக்கிய செயற்பாட்டாளர்களின் பெயரில் வேண்டிவிட்ட பல வீடுகளும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

9) கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) சொந்த இடமாக இருந்த (20 Cosentino Drive, Scarborough) விற்ற பணமும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

10) கனடா கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக இருந்து விற்கப்பட்ட வீடும் பொதுச் சொத்தாக்கப்படுமா?

இவற்றையும் தவிர பல புதிய வீடுகளிலும் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் போட்ட முதலீட்டுகளையும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

இந்த பட்டியலில் இருக்கும் விடையங்களை முழுமையாக நிறைவேற்றினால் மட்டும் தான், முள்ளிவாய்காலிற்கு பிறகு கனடா உலகத்தமிழர் அமைப்பினர்(WTM) செய்த பாவங்களிற்கு விமோசனம் கிட்டும். இல்லாதுவிட்டால், மாவீரர்களின் ஆத்மா இவர்களையும் சும்மா இருக்க விடாது. பரிஸ், லண்டன், நோர்வே என்று எம்மவர்களிற்குள் நிகழும் வீரவிளையாட்டுகள் கனடாவிலும் நடைபெற்றால் அதிசயமில்லை.

5 வருடங்களிற்கு பிறகு தான் இவர்களிற்கு(NCCT) ஞாநோதயம் பிறந்திருக்கின்றது. மக்களே என்ன செய்வது இவர்களிற்கு ஆலோசனை கொடுப்பவர்களிற்கு ஏதேனும் சரக்கு இருந்தால் தானே அவர்களும் சரியான நேரத்தில் முடிவெடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ் இவ்ளவோ சொத்தா?

விற்றால் இலங்கையையே வாங்கலாம் போலிருக்கே

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

கனடிய தமிழர் தேசிய அவையினர்(NCCT), கனடாவில் உள்ள தமிழ்த்தேசியம் சார்ந்த சொத்துக்களை பொதுவுடமையாக பதிவிட்டு - அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு அழைப்பாம். எதிர்வரும் சனிக்கிழமை 20-02-2016 அன்று ரொறன்ரோவிலுள்ள scarborough civic centre ல் மாலை 3 மணி முதல் 5 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கின்றார்களாம்.

யார் இந்த கனடிய தமிழர் தேசிய அவை(NCCT) ?

வருடம் 2010ம் ஆண்டு யூன் மாதம் 20ம் திகதி இலாப நோக்கமில்லாத அரசியல் அமைப்பாக கனடாவில் பதியபட்டவர்கள் தான் இந்த கனடிய தமிழர் தேசிய அவை(NCCT).

ஆனால், கனடாவில் இருக்கும் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை இவர்கள்(NCCT) எவ்வாறு ஒழுங்கு படுத்தி மக்கள் சொத்தாக்க முடியும் ?

கனடாவில் இருக்கும் முழுமையான தேசியத்தின் சொத்துக்கள் எல்லாம், கனடா உலகத்தமிழர் அமைப்பிடம்(WTM) தான் இருக்கின்றது. அப்படியென்றால் கனடா உலகத்தமிழர் அமைப்பினரின்(WTM) உருவாக்கமா கனடிய தமிழர் தேசிய அவை(NCCT) ?

கனடா உலகத்தமிழர் அமைப்பினர் முழுமனதோடு எல்லாவற்றையும் பொதுச் சொத்தாக்க சம்மதம் தெரிவுத்துவிட்டார்களா ?

கனடாவில் தேசியத்தின் சொத்தில் முதலீடு செய்து நட்டத்தில் போகின்ற பூ கடைகளும் சாப்பாட்டு கடைகளையும் மட்டும் தான் மக்கள் சொத்தாக்கப் போகின்றீர்களா(NCCT) ?

அல்லது தேசியத்தின் பல மில்லியன் முதலீட்டுகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் வியாபாரங்களையும் மக்கள் சொத்தாக்க முடியுமா ?

1) தேசியத்தின் பல மில்லியன் டொலரில், Toronto பகுதிகளில் மற்றயவர்களின் பெயர்களில் வேண்டிவிட்ட பல Plazza க்களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

2) கனடா கந்தசுவாமி கோயிலும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

3) தேசியத்தின் முதலீட்டில் உருவாக்கப்பட்ட வானொலிகளான CMR, CTR மற்றும் TVI பொதுச் சொத்தாக்கப்படுமா ?

4) கனடா தமிழீழ சங்கம் மற்றும் அதன் சொத்துக்களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

5) தேசியத்தின் முதலீட்டில் உருவான சுரபி Super Market, Asian Textiles, Spiceland Super Market, Ocean Super market மற்றும் பல Marketகளும், Franchise restaurantsகளும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

6) தேசியத்தின் முதலீட்டில் கனடாவில் இயங்கிவரும் அடுக்கு மாடி(Hotel)லும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

7) தேசியத்தின் முதலீட்டில் கனடாவில் இயங்கிவரும் Nursing Homes களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

8) கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) சில முக்கிய செயற்பாட்டாளர்களின் பெயரில் வேண்டிவிட்ட பல வீடுகளும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

9) கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) சொந்த இடமாக இருந்த (20 Cosentino Drive, Scarborough) விற்ற பணமும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

10) கனடா கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக இருந்து விற்கப்பட்ட வீடும் பொதுச் சொத்தாக்கப்படுமா?

இவற்றையும் தவிர பல புதிய வீடுகளிலும் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் போட்ட முதலீட்டுகளையும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

இந்த பட்டியலில் இருக்கும் விடையங்களை முழுமையாக நிறைவேற்றினால் மட்டும் தான், முள்ளிவாய்காலிற்கு பிறகு கனடா உலகத்தமிழர் அமைப்பினர்(WTM) செய்த பாவங்களிற்கு விமோசனம் கிட்டும். இல்லாதுவிட்டால், மாவீரர்களின் ஆத்மா இவர்களையும் சும்மா இருக்க விடாது. பரிஸ், லண்டன், நோர்வே என்று எம்மவர்களிற்குள் நிகழும் வீரவிளையாட்டுகள் கனடாவிலும் நடைபெற்றால் அதிசயமில்லை.

5 வருடங்களிற்கு பிறகு தான் இவர்களிற்கு(NCCT) ஞாநோதயம் பிறந்திருக்கின்றது. மக்களே என்ன செய்வது இவர்களிற்கு ஆலோசனை கொடுப்பவர்களிற்கு ஏதேனும் சரக்கு இருந்தால் தானே அவர்களும் சரியான நேரத்தில் முடிவெடுப்பார்கள்.

நல்லவிடயம்

ஆனால் பொதுச்சொத்து என்று

யார் பெயரில்  அல்லது எந்த அமைப்பின் பெயரில் பதியப்போகிறார்கள் என்ற தெளிவில்லை

குரங்கு பாணைப்பகிர்ந்த கதையாகாமல் இருக்கக்கடவது...

 

Edited by விசுகு

4 hours ago, nedukkalapoovan said:

தாயகத்தில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஆயிரக்கணக்கில் கொடுத்தவன் எல்லாம் பேசாமல் இருக்க.. 5 பென்ஸ் ஈயாததுகள் எல்லாம் புலிட்ட கணக்குக் கேட்கிறது தான் பெரும் கொடுமை. என்ன உலகமப்பா இது. :rolleyes:

:D:

4 hours ago, nedukkalapoovan said:

வெளிநாட்டுக்கு ஓடியாந்த.. முன்னாள்...புலிகளே.. தாயகத்தில்...உள்ள.. முன்னாள் புலிக்கு உதவ முன்வராத வங்குரோத்து மனநிலையில் இருக்கிறார்கள். இதுதான் எங்கட இனம். இதுங்களட்ட போய்............

முடிஞ்சா நீங்கள் உங்களுக்கு வசதின்னா.. உதவுங்க. எம்மவர் கதைக்கு அது யார் சொன்னாலும் காதுகொடுக்காதேங்க. :rolleyes:

அப்பு இதுக்குத்தான் ரெண்டு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

அண்ணை பல இடங்களில் வழக்குகள் நடக்குது ,ஊடகங்களில் வேறு வந்து திட்டி தீர்கின்றார்கள் .சுவிசில் நடந்த வழக்கு மறந்து போச்சா ?

உங்களுக்கு இது எதுவும் கேட்காது என்றும் தெரியும் .

என்னை இதற்குள் இழுத்து தனிப்பட எழுதியதால்...

அண்ணை இந்த திரிக்குள் எதற்கு நேரத்தை செலவு செய்கிறீர்கள்??

உங்களுக்கும் புலிகளின் சொத்துகளுக்கும்  கணக்கு வழக்குகளுக்கும் என்ன சம்பந்தம்??

நீங்கள் இதற்குள் வந்தாலே உறவுகளுக்குத்தெரிந்துவிடும்

பழி வாங்குதலுக்கு அலைகிறீர்கள் என்று.

நீங்கள் உண்மையிலேயே  நீதிதேடுபவர் என்றால்

புளட்டின் சொத்துக்கள்

அதன் தலைவரின் இன்றைய சொத்துக்களின் பெறுமதி

உலகமெல்லாம் பரந்து பெரியளவில் வசதியாக வாழும் புளட்டின் முன்னைநாள் உறுப்பினர்களதும்

அவர்களது சொத்துக்களினதும் விபரங்கள்

அவற்றின் இருப்பிடம் பற்றியல்லவா பதியணும்....

பதிவீர்களா???

இல்லை அப்படி எதுவுமே இல்லை என்பீர்களா???

 

 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

என்னை இதற்குள் இழுத்து தனிப்பட எழுதியதால்...

அண்ணை இந்த திரிக்குள் எதற்கு நேரத்தை செலவு செய்கிறீர்கள்??

உங்களுக்கும் புலிகளின் சொத்துகளுக்கும்  கணக்கு வழக்குகளுக்கும் என்ன சம்பந்தம்??

நீங்கள் இதற்குள் வந்தாலே உறவுகளுக்குத்தெரிந்துவிடும்

பழி வாங்குதலுக்கு அலைகிறீர்கள் என்று.

நீங்கள் உண்மையிலேயே  நீதிதேடுபவர் என்றால்

புளட்டின் சொத்துக்கள்

அதன் தலைவரின் இன்றைய சொத்துக்களின் பெறுமதி

உலகமெல்லாம் பரந்து பெரியளவில் வசதியாக வாழும் புளட்டின் முன்னைநாள் உறுப்பினர்களதும்

அவர்களது சொத்துக்களினதும் விபரங்கள்

அவற்றின் இருப்பிடம் பற்றியல்லவா பதியணும்....

பதிவீர்களா???

இல்லை அப்படி எதுவுமே இல்லை என்பீர்களா???

 

 

சுவிஸ் வங்கியில் சிர்த்தார்த்தன் மக்களை வவுனியாவில் கொலை செய்து 
பறித்து பதுக்கிய பணம் கோடியாக இருக்கிறது.

அதுக்கு அர்ஜுன் சொல்லுவார் 
அதுதான் தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்துவிட்டேன் என்று.

புலிகள் இவரத்தான் இப்ப சர்வதேச நிதி பொறுப்பாளராக போட்டிருக்கிறார்கள் 
அதுதான் கணக்கு தேடி திரிகிறார். 

சிர்த்தார்த்தன் கனடா வந்தால் காரில் ஏற்றி ஊர் காட்டி '
அதை பெருமையாகவும் பதிவார்.


புலிதான் மக்களுக்கு கேட்டல் பதில் கொடுக்க வேண்டிய ஒரே அமைப்பு 
என்று அர்ஜுன் அவர்களே சொல்வதுதான் 
அவருடைய பெருந்தன்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

சுவிஸ் வங்கியில் சிர்த்தார்த்தன் மக்களை வவுனியாவில் கொலை செய்து 
பறித்து பதுக்கிய பணம் கோடியாக இருக்கிறது.

அதுக்கு அர்ஜுன் சொல்லுவார் 
அதுதான் தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்துவிட்டேன் என்று.

புலிகள் இவரத்தான் இப்ப சர்வதேச நிதி பொறுப்பாளராக போட்டிருக்கிறார்கள் 
அதுதான் கணக்கு தேடி திரிகிறார். 

மருது சித்தார்த்தனை விடுங்கள்

உங்களுக்குத்தெரியாததல்ல

புலிகளிலிருந்து சுற்றினார்கள் என இவர் பதிந்துள்ள அனைவரும் இவரது நெருங்கிய நண்பர்கள்

வாரஇறுதிமுழுவதும் இவர்களுடன் தான் தண்ணிப்பாட்டி

அப்போ மக்கள் பணத்தில் தண்ணி அடிப்பது

அதில் பங்கு கொள்வது பாவமில்லையா?

மேலே இவர் போட்டிருக்கும் சொத்து பதிவின்படி

ஒரு புலி உறுப்பினன் உழைத்து ஒரு வீடு வாங்கப்படாது

வாங்கினால் 

அதுவும் புலிகளின் சொத்துக்கணக்கில் வருகிறது என்றால்

முன்னாள்  போராளியான இவரும்

இவரது புளட் நண்பர்களும் எவ்வளவு சொத்துவைத்துள்ளனர் என்பதை பதிவது தானே நீதி..

அதன் பின்னர் தானே நீதிக்கான பயணம்....

மக்காள் முதலில் இரண்டு விடயங்களை கவனிக்கவேண்டும் .

முதலாவது ,

புலிகள் இல்லாதவர்கள் ,புலிகளுக்கு காசு கொடுக்காதவர்கள் புலிகளின் சொத்து விபரம் கேட்ககூடாதா ? 

அண்ணை திருப்ப திருப்ப இதையே எழுதி கடைசியில் தலைவர் வந்தால் கொடுப்போம் என்று முடிக்க போகின்றார் .

பொது மக்களின் காசை யார் கொள்ளை அடித்தாலும் அதை கேட்கும் உரிமை எவருக்கும் உண்டு .அந்த நாட்டு அரசு ,போலிஸ் என்று  கணக்கு கேட்கும் உரிமை இருக்கு .

நீங்கள் புலிகளுக்கு பணம் கொடுத்தீர்களா என்று போலீசிடமும் கேட்பீர்கள் போலிருக்கு .

இரண்டாவது புலிகள் அடித்த  பணம் தொடர்பாக இங்கு பேசும்போது புளொட்டை அதற்குள் இழுத்து தாங்கள் தப்பிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டீர்கள் 

அப்ப நீங்களும் அடித்தீர்கள் நாங்களும் அடித்தோம் என்று சமன் செய்து கணக்கு முடிக்கும் நோக்கமா ?

எப்படியோ தப்பித்து ஓட நிற்கின்றீர்கள் ,குதிருக்க அப்பன் இல்லை என்று உங்களையே காட்டி கொடுத்துவிடுவீர்கள் போலிருக்கு ?

(எனக்கு தெரிந்த புளொட் கணக்கு விபரம்  பின்னர் எழுதுகின்றேன் )

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்நன்றிகொன்றார்க்கும் உய்வுண்டாம் 
உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.

உண்மையில் இவ்வளவு சொத்துக்களா? 
இது குறித்து சரியான தெளிவு இன்னும் கனடா தமிழ் மக்களிடம் (நான் உட்பட) இல்லை என்பது சோகம்.
இயக்க சொத்துக்களை சுருட்டினார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு பல்வேறு தளங்களில் உள்ளது.
இவை நிச்சயமாக அரசாங்கத்தின் உதவியோடு விசாரணை செய்யப்பட்டு சரியான முறையில் பயன்படுத்தப்படல் வேண்டும். சொத்துக்களை பதுக்கியவர்களுக்கும், இதுவரையிலும்  தாயக தேவை அறிந்தும் உதவிகளை நீட்டாமல் கம்பி நீட்டியவர்கள் போன்றவர்கள் தமிழ் சமுதாயத்தில் இருந்தே களைந்து எறியப்படல் வேணும்.

விசுகு அண்ணா, இது ஒரு சமுதாயத்தில் நடந்திருக்கும் தவறு. இதை இவர் தட்டி கேட்கலாம் , இவர் தட்டி கேட்ககக் கூடாது என்னேறேல்லாம் இல்லை.  கேட்பதோடு மட்டும் நிறுத்தி விடாது ஏதாவது செய்ய முடியுமா எண்டும் சிந்திக்க வேண்டும்.

 

3 hours ago, arjun said:

கனடிய தமிழர் தேசிய அவையினர்(NCCT), கனடாவில் உள்ள தமிழ்த்தேசியம் சார்ந்த சொத்துக்களை பொதுவுடமையாக பதிவிட்டு - அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு அழைப்பாம். எதிர்வரும் சனிக்கிழமை 20-02-2016 அன்று ரொறன்ரோவிலுள்ள scarborough civic centre ல் மாலை 3 மணி முதல் 5 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கின்றார்களாம்.

யார் இந்த கனடிய தமிழர் தேசிய அவை(NCCT) ?

வருடம் 2010ம் ஆண்டு யூன் மாதம் 20ம் திகதி இலாப நோக்கமில்லாத அரசியல் அமைப்பாக கனடாவில் பதியபட்டவர்கள் தான் இந்த கனடிய தமிழர் தேசிய அவை(NCCT).

ஆனால், கனடாவில் இருக்கும் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை இவர்கள்(NCCT) எவ்வாறு ஒழுங்கு படுத்தி மக்கள் சொத்தாக்க முடியும் ?

கனடாவில் இருக்கும் முழுமையான தேசியத்தின் சொத்துக்கள் எல்லாம், கனடா உலகத்தமிழர் அமைப்பிடம்(WTM) தான் இருக்கின்றது. அப்படியென்றால் கனடா உலகத்தமிழர் அமைப்பினரின்(WTM) உருவாக்கமா கனடிய தமிழர் தேசிய அவை(NCCT) ?

கனடா உலகத்தமிழர் அமைப்பினர் முழுமனதோடு எல்லாவற்றையும் பொதுச் சொத்தாக்க சம்மதம் தெரிவுத்துவிட்டார்களா ?

கனடாவில் தேசியத்தின் சொத்தில் முதலீடு செய்து நட்டத்தில் போகின்ற பூ கடைகளும் சாப்பாட்டு கடைகளையும் மட்டும் தான் மக்கள் சொத்தாக்கப் போகின்றீர்களா(NCCT) ?

அல்லது தேசியத்தின் பல மில்லியன் முதலீட்டுகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் வியாபாரங்களையும் மக்கள் சொத்தாக்க முடியுமா ?

1) தேசியத்தின் பல மில்லியன் டொலரில், Toronto பகுதிகளில் மற்றயவர்களின் பெயர்களில் வேண்டிவிட்ட பல Plazza க்களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

2) கனடா கந்தசுவாமி கோயிலும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

3) தேசியத்தின் முதலீட்டில் உருவாக்கப்பட்ட வானொலிகளான CMR, CTR மற்றும் TVI பொதுச் சொத்தாக்கப்படுமா ?

4) கனடா தமிழீழ சங்கம் மற்றும் அதன் சொத்துக்களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

5) தேசியத்தின் முதலீட்டில் உருவான சுரபி Super Market, Asian Textiles, Spiceland Super Market, Ocean Super market மற்றும் பல Marketகளும், Franchise restaurantsகளும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

6) தேசியத்தின் முதலீட்டில் கனடாவில் இயங்கிவரும் அடுக்கு மாடி(Hotel)லும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

7) தேசியத்தின் முதலீட்டில் கனடாவில் இயங்கிவரும் Nursing Homes களும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

8) கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) சில முக்கிய செயற்பாட்டாளர்களின் பெயரில் வேண்டிவிட்ட பல வீடுகளும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

9) கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) சொந்த இடமாக இருந்த (20 Cosentino Drive, Scarborough) விற்ற பணமும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

10) கனடா கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக இருந்து விற்கப்பட்ட வீடும் பொதுச் சொத்தாக்கப்படுமா?

இவற்றையும் தவிர பல புதிய வீடுகளிலும் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் போட்ட முதலீட்டுகளையும் பொதுச் சொத்தாக்கப்படுமா ?

இந்த பட்டியலில் இருக்கும் விடையங்களை முழுமையாக நிறைவேற்றினால் மட்டும் தான், முள்ளிவாய்காலிற்கு பிறகு கனடா உலகத்தமிழர் அமைப்பினர்(WTM) செய்த பாவங்களிற்கு விமோசனம் கிட்டும். இல்லாதுவிட்டால், மாவீரர்களின் ஆத்மா இவர்களையும் சும்மா இருக்க விடாது. பரிஸ், லண்டன், நோர்வே என்று எம்மவர்களிற்குள் நிகழும் வீரவிளையாட்டுகள் கனடாவிலும் நடைபெற்றால் அதிசயமில்லை.

5 வருடங்களிற்கு பிறகு தான் இவர்களிற்கு(NCCT) ஞாநோதயம் பிறந்திருக்கின்றது. மக்களே என்ன செய்வது இவர்களிற்கு ஆலோசனை கொடுப்பவர்களிற்கு ஏதேனும் சரக்கு இருந்தால் தானே அவர்களும் சரியான நேரத்தில் முடிவெடுப்பார்கள்.

அர்ஜுன் அண்ணா,
இந்த நிகழ்வு நடந்து முடிந்து விட்டதா?  எதிர்வரும் சனிக்கிழமை 20-02-2016 !!!
இதை தான் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டதாக கூறினேன்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் போக்கை மாற்றாது 
இந்த சொத்துக்களை எப்படி இவர்களிடம் இருந்து களையலாம் என்பது பற்றி ஆக்கபூர்வமாக உரையாடலாம்.
நிச்சியம் கனேடிய வருமானவரி சட்ட திட்டங்களில் எதாவது வழி  முறைகள் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அஞ்சரன் said:

இங்கு சீன்  புலிகள்  ஏமாற்று  புலிகள் புலிகளை  காட்டி  பணம்   பார்க்கும்  புலிகள்  பற்றி  பேசுவது  நேர  விரையம்  ரதி .....உண்மையில் போராடி  இன்று  கோழி வளர்த்து சீவியம்   விடும்  புலிகள்  பற்றி  நாம்  பேசிக்கொண்டே  இருப்பம் .

முகத்தை  மறைச்சு கொண்டு  இணையங்களில்  காசு  சேர்க்கும்  புலிகளுக்கு  அப்பு   அடிக்கபட்டுக்கொண்டே  இருக்கும் .

இங்கு சீன் காட்டி, ஏமாற்றி, முகம் மறைப்போருக்கு அருகில் புலிகள் என்ற சொல்லைச் சேர்க்காதீர்கள். அங்கு சேர்ப்பதற்கு வேறு சிறப்பான பெயர்கள் அவர்களுக்குச் சூட்டப்பட்டுள்ளன. :grin:

44 minutes ago, Paanch said:

இங்கு சீன் காட்டி, ஏமாற்றி, முகம் மறைப்போருக்கு அருகில் புலிகள் என்ற சொல்லைச் சேர்க்காதீர்கள். அங்கு சேர்ப்பதற்கு வேறு சிறப்பான பெயர்கள் அவர்களுக்குச் சூட்டப்பட்டுள்ளன. :grin:

இப்படி  பலர் சமூகத்தளங்களில்  உலவுகிறார்கள்  நாங்கள் கொஞ்சம்  தேசியம்  கதைத்தால்  உள்பெட்டியில்  வந்து  அந்த  பொறுப்பாளருக்கு ஒப்பிரேஷன்  செய்யணும்  காசு  வேணும்  உதவ  முடியுமா  என்பார்கள் நாங்களும்  சரி நண்பர்கள்  சேர்த்து  செய்வம்  நீங்க  அவரின்  நேரடி  தொடர்பு  தாங்க  என  கேட்டால் இல்லை இல்லை  அவர்  கொஞ்சம்  சிக்கலில்  உள்ளார்  வெளிய  வரமுடியாது  நீங்க  எங்களுக்கு  அனுப்புங்க நாங்க  கொடுப்பம் என்பார்கள் ...

அதை விட்டு  நாங்க  தனிப்பட்ட  ரீதியாக  அவர்  பற்றி   ஊரில்  விசாரித்தால்  அந்தாள்  அங்க  வடிவா  வாழும்  பிரச்சினை  இல்லாமல் இவங்க  இங்க  ஆளை  சொல்லி  பிழைப்பு இதுக்கு  வேற தொழில்  செய்யலாம் ...

இப்படி  பல  வகை  திரியுது  இப்ப  புலியை  சொல்லி  காலத்தை  ஓட்டிக்கொண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, அஞ்சரன் said:

இப்படி  பலர் சமூகத்தளங்களில்  உலவுகிறார்கள்  நாங்கள் கொஞ்சம்  தேசியம்  கதைத்தால்  உள்பெட்டியில்  வந்து  அந்த  பொறுப்பாளருக்கு ஒப்பிரேஷன்  செய்யணும்  காசு  வேணும்  உதவ  முடியுமா  என்பார்கள் நாங்களும்  சரி நண்பர்கள்  சேர்த்து  செய்வம்  நீங்க  அவரின்  நேரடி  தொடர்பு  தாங்க  என  கேட்டால் இல்லை இல்லை  அவர்  கொஞ்சம்  சிக்கலில்  உள்ளார்  வெளிய  வரமுடியாது  நீங்க  எங்களுக்கு  அனுப்புங்க நாங்க  கொடுப்பம் என்பார்கள் ...

அதை விட்டு  நாங்க  தனிப்பட்ட  ரீதியாக  அவர்  பற்றி   ஊரில்  விசாரித்தால்  அந்தாள்  அங்க  வடிவா  வாழும்  பிரச்சினை  இல்லாமல் இவங்க  இங்க  ஆளை  சொல்லி  பிழைப்பு இதுக்கு  வேற தொழில்  செய்யலாம் ...

இப்படி  பல  வகை  திரியுது  இப்ப  புலியை  சொல்லி  காலத்தை  ஓட்டிக்கொண்டு .

ஓ....இப்படிப்போகுதா கதை.

யோக்கியன் வாறன் சொம்பு பத்திரம் என்பது சரிதான் :)

இதெல்லாம் ஒரு மானக்கெட்ட பிழைப்பு. 

இதுக்கு புலம்பெயர் முதலாளிமார் எவ்வளவு திறம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிக்கு உதவிறம் என்று சொல்லி.. சமூக வலையில் உலாவிற கொஞ்சப் பேர்.. அந்த முன்னாள் போராளிகளின் விபரங்கள் தெரிந்தும்.. தொடர்புகொண்டு கேட்காமலே.. (அந்த முன்னாள் போராளி பகிரங்கமாகவே தான் உள்ளார். ஓடி ஒளியல்ல.. ஓடியாந்து வெளிநாட்டில் மனிசி பிள்ளைன்னு பதுங்கி இல்லையாம். அவருக்கு என்று சமூகவலையும் இருக்காம்.. அத்தோடு அவரை தொடர்புகொள்ள எவ்வளவோ வழிகள் இருக்காம்... அத்தனைக்கும் அந்தப் போராளி மக்களுக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.) அவன் வெளிநாட்டுக்காரியை கட்டி செற்றிலாகிட்டாண்டா.. என்று தமக்குள் தாமே ஒரு கட்டுக்கதையை கட்டி.. கூடிப் பேசி.. முடிவெடுத்துவிட்டு.. முன்ன தாறம் என்று  சொல்லி பின்ன.. ஏமாற்றம் பண்ணி பிழைப்பு நடத்துவதும் நடந்துகிட்டு இருக்குது. இதுங்க மனிசரா.. இல்லை... ஓட்டப்பத்தையும் பிச்சுத் தின்னும் வானரங்களா...?! 

இத்தனைக்கும் அந்தப் போராளி கேட்கவில்லையாம். அவரே யாரையும் கேட்க வேண்டாம் பட்ட கஸ்டத்தோடு இதையும் படுகிறேன் என்று தானாம் சொன்னது. பாவம் பார்த்தது  அப்பாவி மக்கள். அடப்பாவிகள் இடையில் புகுந்து தாங்களும் முன்னாள் போராளிகள் என்ற வேசம் கலையாமல் இருக்க.. புகுந்து விளையாட வெளிக்கிட்டு.. இப்ப குட்டு உடைஞ்சதும்.. பிளேட்டை மாத்திப் போடுவதாக..

சமூக வலையில்.. உள்பெட்டிக்குள் இருந்து உள்ளகமாக கசிந்த தகவல்கள் சொல்கின்றன. சமூகவலையில் இப்படி எத்தனை வேசக்காரர்கள்.. வெளில..சொந்தப் படத்தைப் போட்டுக்கிட்டு.. உள்பெட்டிக்குள்ள நல்லா கில்மா பண்ணினம் என்பதற்கு.. அதுவும் முன்னாள் போராளிகளை அவர்களின் கஸ்டங்களை வைச்சு.. என்பதற்கு இது சாட்சி. tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.