Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த வார ஆனந்தவிகடனில் எனது இரு கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி..

 

 

 

லட்டு மாதிரி இருப்பது

 

காலையில் வேலைக்குக் கிளம்புகையில்

 

இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி

 

‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள்.

 

‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று

 

சொல்லிவிட்டு வரும் வழியில்,

 

பருத்த உடலா,

 

மஞ்சள் சட்டையா

 

என் கொஞ்சல் பேச்சா

 

லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,

 

லட்டுகள் உருளும் சாலையில் ஓடி

 

லட்டைக் குடித்து

 

லட்டை உண்டு,

 

லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்

 

வீடு திரும்பும் வரை,

 

சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.

 

லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்

 

யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.

 

 

 

உயிர்த் தீ

 

தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை

 

பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்

 

அணைத்த அந்தக் கணத்தில்தான்

 

அவளுக்கு அந்த எண்ணம்

 

முதன்முதலாக வந்தது....

 

உந்திச் சுடர் பற்றி எரியும்

 

அந்தத் தீபத்தை

 

ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்

 

எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.

 

 

Edited by seyon yazhvaendhan

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதைகள்... வாழ்த்துக்கள் சேயோன்...!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, suvy said:

கருத்தான கவிதைகள்... வாழ்த்துக்கள் சேயோன்...!  tw_blush:

தங்கள் அன்புக்கு நன்றி தோழர்!

  • கருத்துக்கள உறவுகள்

பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.... சேயோன். Smiley

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, seyon yazhvaendhan said:

உந்திச் சுடர் பற்றி எரியும்

 

அந்தத் தீபத்தை

 

ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்

 

எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.

 

வாழ்த்துக்கள் சேயோன்!

உந்திச் சுடர் பற்றி எரியும் தீபத்தை அவ்வளவு இலகுவாக அணைத்து விடலாம் என்று நம்பவில்லை!

குளிர் நீரில் குளித்தால் அணைக்கலாம்!

எனினும் ஈரம் காய்ந்ததும் அது மீண்டும் பற்றிக்கொள்ளுமே!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதைகள் பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்.

 

16 minutes ago, Kavallur Kanmani said:

கருத்தான கவிதைகள் பாராட்டுக்கள்

கண்மணி அக்கா,

உங்களை  நீண்ட காலத்தின் பின்  மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

5 hours ago, தமிழ் சிறி said:

பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.... சேயோன். Smiley

தங்களின் பேரன்புக்கு என் நன்றி!

1 hour ago, putthan said:

வாழ்த்துக்கள் சேயோன்

நன்றி தோழர்!

40 minutes ago, Kavallur Kanmani said:

கருத்தான கவிதைகள் பாராட்டுக்கள்

நன்றி தங்களின் அன்புக்கு!

4 hours ago, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள் சேயோன்!

உந்திச் சுடர் பற்றி எரியும் தீபத்தை அவ்வளவு இலகுவாக அணைத்து விடலாம் என்று நம்பவில்லை!

குளிர் நீரில் குளித்தால் அணைக்கலாம்!

எனினும் ஈரம் காய்ந்ததும் அது மீண்டும் பற்றிக்கொள்ளுமே!

நன்றி தோழர்!

மனக்குழப்பத்தில் இருக்கிறாள் அந்த மாது, தனிமையில்.

குழப்பமான தொலைக்காட்சிக் காட்சிகளைக் காணப் பிடிக்காமல், ரிமோட்டால் டிவியை அணைக்கிறாள்.  அப்போது அவளுக்கு முதன் முதலாக, ஒரு எண்ணம், உயிர்த்தீயையும் இப்படி ஒரு நொடியில் அணைத்துவிட்டால், தன் வாழ்வின் துயரமான நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தேவையிருக்காதே,,.. என்ற தற்கொலை எண்ணம் வருகிறது.    உங்கள் வரவிலும், கருத்திலும் மிக மகிழ்ந்தேன் தோழர்!

 

 

23 minutes ago, பகலவன் said:

வாழ்த்துக்கள்.

நன்றி தோழர்!

Edited by seyon yazhvaendhan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சேயோன்.

On 11/04/2016 at 5:11 PM, seyon yazhvaendhan said:

உயிர்த் தீ

தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை

பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்

அணைத்த அந்தக் கணத்தில்தான்

அவளுக்கு அந்த எண்ணம்

முதன்முதலாக வந்தது....

உந்திச் சுடர் பற்றி எரியும்

அந்தத் தீபத்தை

ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்

எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.

மனக் குழப்பத்தை இவ்வளவு அழகாக 9 வரிகளில் வெளிப்படுத்திய உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள் சேயோன்

  tumblr_o30u09qQ5i1v5vnioo1_500.gif  

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஜீவன் சிவா said:

மனக் குழப்பத்தை இவ்வளவு அழகாக 9 வரிகளில் வெளிப்படுத்திய உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள் சேயோன்

  tumblr_o30u09qQ5i1v5vnioo1_500.gif  

தங்களின் கருத்துக்கு நன்றி தோழர்!

 

21 hours ago, குமாரசாமி said:

வாழ்த்துக்கள் சேயோன்.

நன்றி தோழர்!

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/13/2016 at 11:27 PM, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சேயோன்.

நன்றி தோழர்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.