Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் இனியொரு யுத்தம் உருவாகுமானால் அது கிழக்கு மாகாணத்திலிருந்தே ஆரம்பிக்கும்! - கிழக்கு முதலமைச்சர்

Featured Replies

நாட்டில் இனியொரு யுத்தம் உருவாகுமானால் அது கிழக்கு மாகாணத்திலிருந்தே ஆரம்பிக்கும்!

கிழக்கு மாகாணம் இன்னமும் அதிகார அடக்குமுறையின் கீழே உள்ளதாகவும், பலர் பேரினவாத அதிகார மனப்பான்மையுடனே நடந்துகொள்வதாகவும், இது இன ஒற்றுமையைக் குலைக்கும் ஒரு செயல் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மீள் குடியேறிய சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணினிப் பிரிவு என்பவற்றை கடந்த சனிக்கிழமையன்று திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

சம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்கவேண்டிய பொறுப்பை கிழக்குமாகாண சபை சுமந்துநிற்கின்றது. அந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சயமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்து முடிக்கும். பாதிக்கப்பட்ட மக்களை சொந்தக்காலில் நிற்கச் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்தி சம்பூரை நகரமாக மாற்றும் பொறுப்பை நாம் செய்துகாட்டுவோம். இதற்கெல்லாம் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறுவது அவசியம்.

கிழக்குமாகாணம் பேரினவாத சக்திகளின் மமதையிலிருந்து விடுபடவேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 2 இலட்சம் பேர் எந்தவொரு வேலைவாய்ப்புமின்றி நாளாந்தம் போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக நாளாந்தம் எம்மைச் சூழ்ந்துகொள்கின்றார்கள். இவற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமானால் எமது மாகாணசபைக்கு அரசியலமைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும் நிதியும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

அரசியலமைப்பில் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ளது. எமது பிராந்தியத்திலுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாமல் ஆளுநர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு அடக்கி ஆள்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் 95 வீதமான பாடசாலைகள் கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தின்கீழே காணப்படுகின்றன. கல்வி நிலையில் கிழக்கு மாகாணம் 8ஆவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு கல்விக்கான நிதியில் 8 வீதம் கூட மத்திய அரசு ஒதுக்குவதில்லை. இது கவலையளிக்கும் விடயம். அத்துடன் இந்தநிலை மாற்றப்படாவிட்டால் நாட்டில் சமாதானத்தை அடையமுடியாது.

இந்த நாட்டில் இனியொரு புரட்சி வெடிக்குமாக இருந்தால் அது கிழக்குமாகாணத்தில் வேலையில்லாமல் நாள்தோறும் அலைந்து திரியும் 2 இலட்சம் பேரால்தான் ஆரம்பிக்கப்படும் என்பதை இந்த நாட்டுக்குக் கூறிவைக்க விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=27599

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடங்குறீங்க

2 minutes ago, நந்தன் said:

எப்ப தொடங்குறீங்க

வேலையில்லாதோர் புரட்சி போல.

ஆயுதம் தேவையில்லை இதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய தீவீரவாதம் விரைவில் வரப்போவதை மறைமுகமாக கூறுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெரியார் said:

வேலையில்லாதோர் புரட்சி போல.

ஆயுதம் தேவையில்லை இதற்கு.

இப்படிப்பட்ட புரட்சிகளை அலட்சியப்படுத்துவதும், அடக்குவதும், நளினப்படுத்துவதும் ஆயுதத்துக்கு வழிவகுக்கலாம். 

கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் வேலையில்லாப் பட்டதாரிகள் இருப்பதை, கிழக்கின் முதலமைச்சர் மறந்து பேசுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப்புண்ணும் மருந்து தேடித்தான்  வலிக்குது. அவனவன் தனது வலி பெரிதென்று  முதல் மருந்து போட முயற்சிக்கிறான். பெருத்த புண்காரன் வலிபட்டுப்பட்டு மரத்துப்போய் இருக்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இப்படிப்பட்ட புரட்சிகளை அலட்சியப்படுத்துவதும், அடக்குவதும், நளினப்படுத்துவதும் ஆயுதத்துக்கு வழிவகுக்கலாம். 

இப்படி அலட்சியப்படுத்தி. அடிமைப்படுத்தி. நளினப்படுத்தும் எண்ணங்கங்கள் தமிழர்கள் மனங்களில் மிதமிஞ்சி வளர்க்கப்பட்டதால் இன்று அதன் சுமைதாங்க முடியாது மண்ணிற்குள் கிடக்கிறார்கள் தமிழர்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெரியார் said:

கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் வேலையில்லாப் பட்டதாரிகள் இருப்பதை, கிழக்கின் முதலமைச்சர் மறந்து பேசுகிறார்.

நிச்சயமாக வடக்கு கிழக்கை விடை குறைவாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.அரசு, தமிழர், முஸ்லிம்களை பாராமுகமாக இருக்கிறார்கள் என்ற கூற்று எப்படி பிழையாகும் என கூற முடியுமா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் (கிழக்கு) வியாழேந்திரன் அவர்களின் சில உரைகளை கேட்டால் கிழக்கு தமிழரின் நிலை புரியும்.

http://www.tradingeconomics.com/sri-lanka/unemployment-rate

1 hour ago, nunavilan said:

நிச்சயமாக வடக்கு கிழக்கை விடை குறைவாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.அரசு, தமிழர், முஸ்லிம்களை பாராமுகமாக இருக்கிறார்கள் என்ற கூற்று எப்படி பிழையாகும் என கூற முடியுமா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் (கிழக்கு) வியாழேந்திரன் அவர்களின் சில உரைகளை கேட்டால் கிழக்கு தமிழரின் நிலை புரியும்.

http://www.tradingeconomics.com/sri-lanka/unemployment-rate

வட, கிழக்கிற்கு அப்பாலும் தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள்  வேலையின்றி இருக்கிறார்கள்.

அவர்களின் நிலைமையையும் கிழக்கின் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு பேசினால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெரியார் said:

வட, கிழக்கிற்கு அப்பாலும் தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள்  வேலையின்றி இருக்கிறார்கள்.

அவர்களின் நிலைமையையும் கிழக்கின் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு பேசினால் நல்லது. 

கிழக்கு முதலமைச்சருக்கு அடுத்த மாகாணங்களில் என்ன வேலை?

3 hours ago, nunavilan said:

கிழக்கு முதலமைச்சருக்கு அடுத்த மாகாணங்களில் என்ன வேலை?

வேலை இல்லைதான்.  

வேறு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர் பேசுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெரியார் said:

வேலை இல்லைதான்.  

வேறு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர் பேசுவது நல்லது.

கிழக்கு மாகாணா அமைச்சரின் வேலை கிழக்கு மாகாணத்தை கவனிப்பது.மற்றயவற்றை கவனிக்க அந்தந்த மாகாண அமைச்சர்கள் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் கவனிக்கிறாரா?...அவரை விட இவர் எவ்வளவோ மேல்

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் அதிசயம் நிகழ இருக்கிறது அதைக் குழப்பும் வகையில் இப்படி எல்லாம் சொற்பதங்களை பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் - சம் சும் கும்பல்.

அட இது எங்கட நானாவ.. நீங்க சொல்லலாம் நானா.. நாங்க நினைச்சம் வடக்கு முதல்வராக்கும் என்று.. நீங்க நல்லா பேசுங்க நானா - சும் அடுத்த வினாடியில்.. பல்டி அடி. tw_blush:

6 hours ago, nunavilan said:

கிழக்கு மாகாணா அமைச்சரின் வேலை கிழக்கு மாகாணத்தை கவனிப்பது.மற்றயவற்றை கவனிக்க அந்தந்த மாகாண அமைச்சர்கள் உள்ளார்கள்.

 

கிழக்கு முதல்வராயிருந்தாலும் அல்லது வேறு எந்த முதல்வராயிருந்தாலும்,  மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலின்படித்தான் செயலாற்ற வேண்டும். 

வேலையில்லாப் பட்டதாரிகளை உள்வாங்குவதும் மத்திய அரசின் தீர்மானத்தின்படிதான்.

31 minutes ago, nedukkalapoovan said:

2016 இல் அதிசயம் நிகழ இருக்கிறது அதைக் குழப்பும் வகையில் இப்படி எல்லாம் சொற்பதங்களை பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் - சம் சும் கும்பல்.

அட இது எங்கட நானாவ.. நீங்க சொல்லலாம் நானா.. நாங்க நினைச்சம் வடக்கு முதல்வராக்கும் என்று.. நீங்க நல்லா பேசுங்க நானா - சும் அடுத்த வினாடியில்.. பல்டி அடி. tw_blush:

:grin::grin:

17 minutes ago, பெரியார் said:

 

கிழக்கு முதல்வராயிருந்தாலும் அல்லது வேறு எந்த முதல்வராயிருந்தாலும்,  மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலின்படித்தான் செயலாற்ற வேண்டும். 

வேலையில்லாப் பட்டதாரிகளை உள்வாங்குவதும் மத்திய அரசின் தீர்மானத்தின்படிதான்.

 

2 minutes ago, ஜீவன் சிவா said:

 

34 minutes ago, nedukkalapoovan said:

2016 இல் அதிசயம் நிகழ இருக்கிறது அதைக் குழப்பும் வகையில் இப்படி எல்லாம் சொற்பதங்களை பாவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் - சம் சும் கும்பல்.

அட இது எங்கட நானாவ.. நீங்க சொல்லலாம் நானா.. நாங்க நினைச்சம் வடக்கு முதல்வராக்கும் என்று.. நீங்க நல்லா பேசுங்க நானா - சும் அடுத்த வினாடியில்.. பல்டி அடி. tw_blush:

:grin::grin:

 

 நானே சிரிச்சுட்டு போறன். சில மாதங்களில் நீங்களும் சிரிச்சுட்டு போவீங்கள்.

35 minutes ago, ஜீவன் சிவா said:

:grin::grin:

 

 நானே சிரிச்சுட்டு போறன். சில மாதங்களில் நீங்களும் சிரிச்சுட்டு போவீங்கள்.

சிலரின் சிரிப்பும், நாளடைவில் அவர்களுக்கே எதிராகத் திரும்பும் வகையில்  இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெரியார் said:

சிலரின் சிரிப்பும், நாளடைவில் அவர்களுக்கே எதிராகத் திரும்பும் வகையில்  இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

கதைச்ச நானா ...மண்டையில மதப்பு அதிகமாகி நேவி ஆபிசருக்கு ஆங்கிலத்தில் கிழிக்க போய் 
முகப்புத்தகத்தில் கந்தல் கந்தலாய் தொங்கிறார் ...போய் சிங்களவர்களின் கமண்ட்ஸ்களை வாசியுங்கள் 
இவர்களுக்காகவா நாண சொன்னோம் என்று நீங்கள் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது 

12 hours ago, அக்னியஷ்த்ரா said:

கதைச்ச நானா ...மண்டையில மதப்பு அதிகமாகி நேவி ஆபிசருக்கு ஆங்கிலத்தில் கிழிக்க போய் 
முகப்புத்தகத்தில் கந்தல் கந்தலாய் தொங்கிறார் ...போய் சிங்களவர்களின் கமண்ட்ஸ்களை வாசியுங்கள் 
இவர்களுக்காகவா நாண சொன்னோம் என்று நீங்கள் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது 

அவருக்கும், கடற்படைக்கும் உள்ள பிரச்சனை அது.

சிங்களவர்களின் கமெண்ட்ஸ் பண்ணத்தான் செய்வார்கள்.

இதனால், நமக்கு என்ன இலாபம்?

அவர்கள் வாய்த்தர்க்கத்தில்  கடுமையாக நடந்து கொள்வார்கள்.

அடுத்த நாள், கடற்படை முகாமில் முதலமைச்சருடன் Dinner அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2016 at 0:25 PM, colomban said:

இஸ்லாமிய தீவீரவாதம் விரைவில் வரப்போவதை மறைமுகமாக கூறுகின்றார்.

இனித்தானா???

அது வந்து  ஒரு நூற்றாண்டாகப்போகுது...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெரியார் said:

அவருக்கும், கடற்படைக்கும் உள்ள பிரச்சனை அது.

சிங்களவர்களின் கமெண்ட்ஸ் பண்ணத்தான் செய்வார்கள்.

இதனால், நமக்கு என்ன இலாபம்?

அவர்கள் வாய்த்தர்க்கத்தில்  கடுமையாக நடந்து கொள்வார்கள்.

அடுத்த நாள், கடற்படை முகாமில் முதலமைச்சருடன் Dinner அடிப்பார்கள்.

ஒரு இலாபமும் இல்லை ...மேற்கே சூரியன் உதித்தாலும் சிங்களவனை மாற்றவோ ,திருத்தவோ முடியாது என்பதையாவது விளங்க்கிக்கொள்ளலாம் 

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

ஒரு இலாபமும் இல்லை ...மேற்கே சூரியன் உதித்தாலும் சிங்களவனை மாற்றவோ ,திருத்தவோ முடியாது என்பதையாவது விளங்க்கிக்கொள்ளலாம் 

நம்ம தமிழனையே திருத்த ஏலாது.  ஆளுக்கொரு கொள்கை.

இன்னொரு இனத்தைத் திருத்தப் போகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

நம்ம தமிழனையே திருத்த ஏலாது.  ஆளுக்கொரு கொள்கை.

இன்னொரு இனத்தைத் திருத்தப் போகிறீர்களா?

அப்ப ...சிங்களவன் நாண நன்னயம் செய்யவேண்டும் என்று எங்களுக்கு வகுப்பெடுத்தது ....? ஓ தமிழனை முதலில் திருத்துகிறீர்கள் 
அப்படி எல்லா தமிழனும் திருந்தியும் ..சிங்களவன் திருந்தாவிட்டால் என்ன செய்வீர்கள் ....? சுவருடன் மண்டையை கொண்டுபோய் மோதினாலும் சுவரை கொண்டுவந்து மண்டையுடன் மோதினாலும் சேதம் மண்டைக்கு தான் ...
 

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

அப்ப ...சிங்களவன் நாண நன்னயம் செய்யவேண்டும் என்று எங்களுக்கு வகுப்பெடுத்தது ....? 
 

வகுப்பெடுக்க நானென்ன வாத்தியா?

எனது கருத்தைச் சொன்னேன். 

நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமென்பது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.