Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை இல்லாத ஆட்கள் ஏன் கருத்து கணிப்பில் கலந்து கொள்ள வேண்டும்?

  • Replies 53
  • Views 3.6k
  • Created
  • Last Reply
7 hours ago, nunavilan said:

பிரச்சனை இல்லாத ஆட்கள் ஏன் கருத்து கணிப்பில் கலந்து கொள்ள வேண்டும்?

 

எல்லாரும் இலங்கையர் என்பதனால் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெரியார் said:

 

எல்லாரும் இலங்கையர் என்பதனால் 

தமிழரின் பிரச்சனை சிங்களவருக்கு இல்லாத போது அவர்கள் ஏன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும்? இலங்கையர் என்பதற்காக எல்லா வாக்களிப்பிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று நியதி இல்லை.

1 hour ago, nunavilan said:

தமிழரின் பிரச்சனை சிங்களவருக்கு இல்லாத போது அவர்கள் ஏன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும்? இலங்கையர் என்பதற்காக எல்லா வாக்களிப்பிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று நியதி இல்லை.

 

வாக்கெடுப்பில் கலந்து கொள்பவருக்கு, பிரச்சனை இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. 

1 hour ago, nunavilan said:

தமிழரின் பிரச்சனை சிங்களவருக்கு இல்லாத போது அவர்கள் ஏன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும்? இலங்கையர் என்பதற்காக எல்லா வாக்களிப்பிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று நியதி இல்லை.

 

15 hours ago, பெரியார் said:

 

எல்லாரும் இலங்கையர் என்பதனால் 

ஸ்காட்லான்ட் பிரிந்து செல்ல வேண்டும் என்றால் ஸ்காட்லான்ட் மக்கள் மட்டும் தான் வாகளித்தார்கள்,ஏன் பிரித்தானியர் அனைவரும் வாக்களிக்கவில்லை?

கிழக்கு தீமோர் பிரிந்து செல்ல இந்தோனேஷியா மக்கள் அனைவரும் ஏன் வாக்களிக்கவில்லை?

மொன்றியல் பிரிந்து செல்ல ஏன் கனேடிய மக்கள் அனைவரும் வாக்களிக்கவில்லை !!!!

10 minutes ago, Dash said:

 

ஸ்காட்லான்ட் பிரிந்து செல்ல வேண்டும் என்றால் ஸ்காட்லான்ட் மக்கள் மட்டும் தான் வாகளித்தார்கள்,ஏன் பிரித்தானியர் அனைவரும் வாக்களிக்கவில்லை?

கிழக்கு தீமோர் பிரிந்து செல்ல இந்தோனேஷியா மக்கள் அனைவரும் ஏன் வாக்களிக்கவில்லை?

மொன்றியல் பிரிந்து செல்ல ஏன் கனேடிய மக்கள் அனைவரும் வாக்களிக்கவில்லை !!!!

 

இலங்கையின் பிரச்சனை வேறு.

மேற்கூறிய நாடுகளின் பிரச்சனை வேறு.

6 minutes ago, பெரியார் said:

 

இலங்கையின் பிரச்சனை வேறு.

மேற்கூறிய நாடுகளின் பிரச்சனை வேறு.

அது எப்படி என்று விளக்க முடியுமா?? 

3 minutes ago, Dash said:

அது எப்படி என்று விளக்க முடியுமா?? 

தீமோரைத் தவிர, மற்றைய நாடுகள் வாக்களிப்பிற்கு எதிர்ப்பு பெரும்பாலும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள்.

இலங்கையில் அப்படி இல்லை.

40 minutes ago, பெரியார் said:

தீமோரைத் தவிர, மற்றைய நாடுகள் வாக்களிப்பிற்கு எதிர்ப்பு பெரும்பாலும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள்.

இலங்கையில் அப்படி இல்லை.

 

46 minutes ago, Dash said:

அது எப்படி என்று விளக்க முடியுமா?? 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/25/2016 at 6:16 PM, nedukkalapoovan said:

தமிழீழம் கேட்பது சொறீலங்கா மக்கள் அல்ல. தமிழ் மக்கள். அவர்களிடம் தான் கருத்துக்கணிப்பு நடத்தனும்.. தமிழீழம் தேவையா இல்லையான்னு. சிங்களவனிடம் எதற்கு கருத்துக்கணிப்பு. அவன்ற நாட்டையா கேட்கினம். 

சிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமது நாடு என்றே கருதுகிறார்கள். அதே போல கொழும்பில் வாழும் தமிழர்களும் மலையாக தமிழர்களும் இலங்கையே தமது நாடு என்று கருதுகிறார்கள். இந்த தமிழர்கள் தமது நாடு வடக்கு-கிழக்கில் மட்டும் இருப்பதாக கருதவில்லை. முஸ்லிம்கள் கிழக்கில் பெருமளவு வாழ்கிறார்கள். மேலும் பெருமளவு முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களும் இலங்கை முழுவதும் தமது நாடு என்று கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் இலங்கையின் ஒரு பகுதி வேறு நாடாக பிரிவதை ஏற்று கொள்கிறார்களா இல்லையா என்று வாக்களிக்கும் உரிமை உடையவர்கள்.

வடக்கு - கிழக்கு வேறு நாடானால் கொழும்பில் உள்ளவர்களும் மலையகத்தில் உள்ளவர்களும் வடக்கு - கிழக்குக்கு வந்து வணிகம் செய்ய விசா எடுக்க வேண்டியிருக்கும். தமக்கு தேவையான வெங்காயம், மிளகாய் போன்றவற்றை வடக்கு பகுதியில் இருந்து இறக்குமதி செய்ய அதிக தடைகள் இருக்கும். ஆகவே அவர்கள் தமது நாட்டின் ஒரு பகுதியை வேறு நாடு என்று ஏற்றுக்கொள்ள தயாரா இல்லையா என்பதை இந்த வாக்கெடுப்பு தீர்மானிக்க வேண்டி இருக்கும். இதற்கு தமிழீழம் கேட்பவர்கள் தயாரானால் இலங்கை அரசு வாக்கெடுப்புக்கு ஐ. நா.வை கேட்க தயங்காது என்றே நான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான கருத்து

 

2 hours ago, Jude said:

சிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமது நாடு என்றே கருதுகிறார்கள். அதே போல கொழும்பில் வாழும் தமிழர்களும் மலையாக தமிழர்களும் இலங்கையே தமது நாடு என்று கருதுகிறார்கள். இந்த தமிழர்கள் தமது நாடு வடக்கு-கிழக்கில் மட்டும் இருப்பதாக கருதவில்லை. முஸ்லிம்கள் கிழக்கில் பெருமளவு வாழ்கிறார்கள். மேலும் பெருமளவு முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களும் இலங்கை முழுவதும் தமது நாடு என்று கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் இலங்கையின் ஒரு பகுதி வேறு நாடாக பிரிவதை ஏற்று கொள்கிறார்களா இல்லையா என்று வாக்களிக்கும் உரிமை உடையவர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by nochchi

23 hours ago, Jude said:

சிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமது நாடு என்றே கருதுகிறார்கள். அதே போல கொழும்பில் வாழும் தமிழர்களும் மலையாக தமிழர்களும் இலங்கையே தமது நாடு என்று கருதுகிறார்கள். இந்த தமிழர்கள் தமது நாடு வடக்கு-கிழக்கில் மட்டும் இருப்பதாக கருதவில்லை. முஸ்லிம்கள் கிழக்கில் பெருமளவு வாழ்கிறார்கள். மேலும் பெருமளவு முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களும் இலங்கை முழுவதும் தமது நாடு என்று கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் இலங்கையின் ஒரு பகுதி வேறு நாடாக பிரிவதை ஏற்று கொள்கிறார்களா இல்லையா என்று வாக்களிக்கும் உரிமை உடையவர்கள்.

வடக்கு - கிழக்கு வேறு நாடானால் கொழும்பில் உள்ளவர்களும் மலையகத்தில் உள்ளவர்களும் வடக்கு - கிழக்குக்கு வந்து வணிகம் செய்ய விசா எடுக்க வேண்டியிருக்கும். தமக்கு தேவையான வெங்காயம், மிளகாய் போன்றவற்றை வடக்கு பகுதியில் இருந்து இறக்குமதி செய்ய அதிக தடைகள் இருக்கும். ஆகவே அவர்கள் தமது நாட்டின் ஒரு பகுதியை வேறு நாடு என்று ஏற்றுக்கொள்ள தயாரா இல்லையா என்பதை இந்த வாக்கெடுப்பு தீர்மானிக்க வேண்டி இருக்கும். இதற்கு தமிழீழம் கேட்பவர்கள் தயாரானால் இலங்கை அரசு வாக்கெடுப்புக்கு ஐ. நா.வை கேட்க தயங்காது என்றே நான் நினைக்கிறேன்.

யாழ் களத்தில்  புலி செய்தது பிழை என்பது போய் தமிழனுக்கு தனது நிலம் சொந்தம் இல்லை, சிங்களவனுக்கும் முஸ்லிமுக்கும் சொந்தம் என்று வாதிட ஒரு கூட்டம் வந்திருக்கு.

ஆனால் தமிழருக்கான தளம் என்று விட்டு தமிழார் விரோத கருத்துக்களை எதுக்கு யாழ் களம் அனுமதிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

யாழ் களத்தில்  புலி செய்தது பிழை என்பது போய் தமிழனுக்கு தனது நிலம் சொந்தம் இல்லை, சிங்களவனுக்கும் முஸ்லிமுக்கும் சொந்தம் என்று வாதிட ஒரு கூட்டம் வந்திருக்கு.

கொழும்பிலும் மலையகத்திலும் தமிழருக்கு சொந்தமான நிலபுலங்களும் நிறுவனங்களும் பெருமளவில் இருக்கின்றன. இவை கோடிக்கணக்கில் பெறுமதியானவை. அவற்றை இழக்க தமிழர் தயாராக இல்லை. வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் வணிகர்களுக்கும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் அவர்களின் உற்பத்திகளை வாங்கி பணம் தரும் வாடிக்கையாளராக முஸ்லிம்களும் சிங்களவரும் இருக்கிறார்கள். ஆகவே இந்த தமிழ் வணிகர்களுக்கும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முஸ்லிம்களும் சிங்களவரும் வடக்கு கிழக்குக்கு வந்து போவது வாழ்வாதாரத்துக்கு தேவையானது. இவற்றை தடுக்கும் உங்கள் முயற்சிக்கு தமிழர்கள் ஆதரவில்லை.

ஆனால் தமிழருக்கான தளம் என்று விட்டு தமிழார் விரோத கருத்துக்களை எதுக்கு யாழ் களம் அனுமதிக்கிறது.

யாழ் களம் அறிவார்ந்த பொறுப்புள்ள உறுப்பினர்களால் மட்டுறுத்தப்படுவதை நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2016 at 9:38 AM, Dash said:

 

ஸ்காட்லான்ட் பிரிந்து செல்ல வேண்டும் என்றால் ஸ்காட்லான்ட் மக்கள் மட்டும் தான் வாகளித்தார்கள்,ஏன் பிரித்தானியர் அனைவரும் வாக்களிக்கவில்லை?

ஸ்காட்லான்ட் தனியான நாடு என்பதை இங்கிலாந்து மக்களும் உலகம் முழுவதுள்ள மக்களும் ஏற்று கொண்டுள்ளார்கள். எவருமே அதனை மறுக்கவில்லை. இங்கிலாந்து தனது ஆட்சியில் உலகின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளில் ஸ்காட்லான்ட் தனியான நாடு என்றும் இங்கிலாந்து,  ஸ்காட்லான்ட், வட ஐயர்லாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது என்று கற்று கொடுத்துள்ளது. ஆகவே ஸ்காட்லான்ட் தனியாக பிரிந்து போவதை பற்றிய முடிவை இங்கிலாந்து மக்கள் ஸ்காட்லான்ட் மக்களிடமே விட்டு விட்டார்கள்.

இலங்கையின் பிராந்தியத்துள் தமிழீழம் என்ற நாடு இருந்தது என்பதை இலங்கையோ அல்லது வேறு நாடுகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் அப்படி தமிழீழம் என்ற நாடு பண்டை காலத்தில் இருக்கவில்லை என்றே கருதுகிறார்கள். அவர்கள் இலங்கை முழுவதும் ஒரே நாடு என்றே கருதுகிறார்கள்.

கிழக்கு தீமோர் பிரிந்து செல்ல இந்தோனேஷியா மக்கள் அனைவரும் ஏன் வாக்களிக்கவில்லை?

கிழக்கு தீமோர் போர்த்துக்கேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று ஒன்பது நாட்களில் 1975ல் இந்நோனேசிய இராணுவம் அதனை ஆக்கிரமித்து கைப்பற்றியது. இது உலகம் அறிந்த ஆக்கிரமிப்பு. அதனால் இந்நோனேசிய மக்கள் கிழக்கு தீமோரை தமது நாடு என்று கருதவில்லை. அவர்கள் கிழக்கு தீமோர் மீண்டும் விடுதலை பெறுவது பற்றி அக்கறை படவும் இல்லை. இலங்கை முழுவதும் பிரித்தானிய ஆட்சியில் ஒரே நாடாகவே இருந்தது. தமிழீழம் என்ற நாடு அங்கு இருக்கவில்லை.

 

மொன்றியல் பிரிந்து செல்ல ஏன் கனேடிய மக்கள் அனைவரும் வாக்களிக்கவில்லை !!!!

மாகாணங்கள் ஒன்றிணைந்து சமஸ்டி ஆட்சி (கூட்டாட்சி) கொண்ட நாடாக கனடா இருக்கிறது. க்யூபெக் அதில் ஒரு மாகாணம் (மொன்றியல் க்யூபெக் மாகாணத்தில் ஒரு நகரம்). க்யூபெக் மட்டுமே பிரெஞ்சு மொழி பேசும் மாகாணம். இந்த கூட்டாட்சி முறையில் மாகானங்கள் விரும்பினால் கூட்டாட்சியில் இருந்து விடுபட்டு தனியான நாடாக போக முடியும். அதற்கு மற்ற மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.  சிங்கபூர் இவ்வாறே மலேசிய கூட்டாட்சியில் இருந்து பிரிந்தது. சிங்களவர்களும் சிறி லங்கா அரசும் இலங்கையில் மாகாணங்களுக்கு கூட்டாட்சி வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இவ்வாறே சிங்கபூர் போல பிரிந்து சென்று விடும் என்று அஞ்சி கூட்டாட்சிக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மலேசியா போன்ற கூட்டாட்சி உள்ள நாடுகள் பல சுதந்திரமான ஆட்சி நிலங்கள் ஒன்றிணைந்து கூட்டாட்சியாக உருவானவை - ஒரு நாடாக இருந்து பின் மாகாணங்களாகி கூட்டாட்சியாக உருவாகவில்லை. இலங்கை ஒரு நாடாக இருக்கிறது. அதனாலேயே கூட்டாட்சிக்கு இந்த ஒரு நாட்டின் மக்களும் அரசும் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

நண்பரே,

நீங்கள் இவ்வாறான அறிவார்ந்த கேள்விகளை கேட்டிருப்பது மிகவும் நல்ல விடயம். இந்த கேள்விகளை வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முதல் தந்தை செல்வா போன்றவர்கள் கேட்டு அதற்கான பதில்களை தேடியிருந்தால் இலங்கை இன்று சிங்கபூரிலும் பார்க்க சிறந்த நாடாக இருந்திருக்கலாம்.

 

 

 

 

5 minutes ago, Jude said:

நீங்கள் இவ்வாறான அறிவார்ந்த கேள்விகளை கேட்டிருப்பது மிகவும் நல்ல விடயம். இந்த கேள்விகளை வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முதல் தந்தை செல்வா போன்றவர்கள் கேட்டு அதற்கான பதில்களை தேடியிருந்தால் இலங்கை இன்று சிங்கபூரிலும் பார்க்க சிறந்த நாடாக இருந்திருக்கலாம்.

அப்ப கேட்டிருந்தால் நாங்கள் இப்ப வக்கேசனுக்கு ஸ்கண்டிநேவியா. யூரோப், அமேரிக்கா, அவுஸ், தாய்லாந்து, மலாசியா, ..... என்று சுத்த முடியுமா.

சும்மா போங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

கொழும்பிலும் மலையகத்திலும் தமிழருக்கு சொந்தமான நிலபுலங்களும் நிறுவனங்களும் பெருமளவில் இருக்கின்றன. இவை கோடிக்கணக்கில் பெறுமதியானவை. அவற்றை இழக்க தமிழர் தயாராக இல்லை. வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் வணிகர்களுக்கும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் அவர்களின் உற்பத்திகளை வாங்கி பணம் தரும் வாடிக்கையாளராக முஸ்லிம்களும் சிங்களவரும் இருக்கிறார்கள். ஆகவே இந்த தமிழ் வணிகர்களுக்கும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முஸ்லிம்களும் சிங்களவரும் வடக்கு கிழக்குக்கு வந்து போவது வாழ்வாதாரத்துக்கு தேவையானது. இவற்றை தடுக்கும் உங்கள் முயற்சிக்கு தமிழர்கள் ஆதரவில்லை.

 

 

எதோ அறிவுபூர்வமாக( எழுதுவது) (ஏமாற்றுவதை)யோசிப்பது   என்றால் இதைத்தான் சொல்வார்கள்

44 minutes ago, Jude said:

ஸ்காட்லான்ட் தனியான நாடு என்பதை இங்கிலாந்து மக்களும் உலகம் முழுவதுள்ள மக்களும் ஏற்று கொண்டுள்ளார்கள். எவருமே அதனை மறுக்கவில்லை. இங்கிலாந்து தனது ஆட்சியில் உலகின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளில் ஸ்காட்லான்ட் தனியான நாடு என்றும் இங்கிலாந்து,  ஸ்காட்லான்ட், வட ஐயர்லாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது என்று கற்று கொடுத்துள்ளது. ஆகவே ஸ்காட்லான்ட் தனியாக பிரிந்து போவதை பற்றிய முடிவை இங்கிலாந்து மக்கள் ஸ்காட்லான்ட் மக்களிடமே விட்டு விட்டார்கள்.

இலங்கையின் பிராந்தியத்துள் தமிழீழம் என்ற நாடு இருந்தது என்பதை இலங்கையோ அல்லது வேறு நாடுகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் அப்படி தமிழீழம் என்ற நாடு பண்டை காலத்தில் இருக்கவில்லை என்றே கருதுகிறார்கள். அவர்கள் இலங்கை முழுவதும் ஒரே நாடு என்றே கருதுகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 இலங்கை மக்கள் பெரும்பாலும்  படிப்பறிவே இல்லாதவர்கள்

பிரித்தானியர்களுக்கு முதல் ஒல்லாந்தர் அவர்களுக்கு முன்னர் போர்த்துக்கீசர் அவர்களுக்கு முன்னர் .....இருந்த இலங்கை என்ற நாடு ???
சுப்பர் கொமெடி

அந்தக்காலத்தில் ராமநாதன் அருணாசலம் பொன்னம்பலம் பின்னர் திருச்செல்வம் நீலன் கதிர்காமர் என்று பட்டியல் நீள்கின்றது

5 hours ago, Dash said:

யாழ் களத்தில்  புலி செய்தது பிழை என்பது போய் தமிழனுக்கு தனது நிலம் சொந்தம் இல்லை, சிங்களவனுக்கும் முஸ்லிமுக்கும் சொந்தம் என்று வாதிட ஒரு கூட்டம் வந்திருக்கு.

 

 

ஸ்ரீ லங்கா என்பது, சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு. 

சிங்களவருக்கோ, தமிழருக்கோ, முஸ்லிம்களுக்கோ என்று தனிப்பட்ட நிலப்பகுதி, ஸ்ரீ லங்காவில் இல்லை. 

ஓரினத்திற்கு என்று, தனியான இடத்தில் ஸ்ரீ லங்காவில் நிலப்பகுதியைக் கோர, எந்த இனத்திற்கும் அனுமதி இல்லை.

இதுதான் அரசின் நிலைப்பாடு.  பெரும்பாலான ஸ்ரீ லங்கா மக்களின் நிலைப்பாடு கூட இதுதான்.

6 hours ago, ஜீவன் சிவா said:

அப்ப கேட்டிருந்தால் நாங்கள் இப்ப வக்கேசனுக்கு ஸ்கண்டிநேவியா. யூரோப், அமேரிக்கா, அவுஸ், தாய்லாந்து, மலாசியா, ..... என்று சுத்த முடியுமா.

சும்மா போங்க சார்.

ஆமா சார் சரிதான் நாங்க இப்ப  நோர்வே தொடக்கம் ஸகன்டிநேவியா ஐரோப்பா எல்லாம் சுத்தி பார்தது  களைச்சு போய் இப்ப   நம்ம கடைசிக்காலத்தை ஜாலியா கழிக்க நாடு திரும்பி  இருக்கிறம். சும்மா உரிமை காணி எண்டு கதைச்சு எங்க கடைசிக்கால எங்க சந்தோசமான வாழ்ககையையும் கெடுத்து போடாமல் தாறத தின்னூட்டு கம்மெண்டு கிடவுங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/29/2016 at 3:49 PM, பெரியார் said:

 

இலங்கையின் பிரச்சனை வேறு.

மேற்கூறிய நாடுகளின் பிரச்சனை வேறு.

உங்களுக்கு உள்ள பிரச்சனை என்னவென்று எல்லோருக்கும் நன்றாகவே புரிகிறது பெரியவரே. உங்கள் வேலைத்திட்டம் இங்கு வேகும் என்று நான் நினைக்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
On 5/30/2016 at 5:25 PM, வாத்தியார் said:

எதோ அறிவுபூர்வமாக( எழுதுவது) (ஏமாற்றுவதை)யோசிப்பது   என்றால் இதைத்தான் சொல்வார்கள்

யார் சொல்வார்கள் என்பதையும் சொல்லலாமே? உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இலங்கை மக்கள் பெரும்பாலும்  படிப்பறிவே இல்லாதவர்கள்

........

அந்தக்காலத்தில் ராமநாதன் அருணாசலம் பொன்னம்பலம் பின்னர் திருச்செல்வம் நீலன் கதிர்காமர் என்று பட்டியல் நீள்கின்றது

படிப்பறிவே இல்லாதவர்களின் பட்டியல் நிறையவே நீள்கிறது. மீண்டும் உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

பிரித்தானியர்களுக்கு முதல் ஒல்லாந்தர் அவர்களுக்கு முன்னர் போர்த்துக்கீசர் அவர்களுக்கு முன்னர் .....இருந்த இலங்கை என்ற நாடு ???

மீண்டும் உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/25/2016 at 8:20 PM, பெரியார் said:

சிறி லங்கா என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.

கருத்துக் கணிப்பு நடக்கும்போது, எல்லாரினதும் அபிலாசைகளும் வெளிப்படுத்தப் பட வேண்டும்.

 

கியூபெக் பிரிய பொது வாக்கெடுப்பு நடாத்திய போது கியூபெக்கில் உள்ள மக்கள் தான் வாக்களிந்து இருந்தார்கள். ஒரு மில்லியன் பிரெஞ்சு மக்கள் ஒன்ராறியோவில் வசித்த போதும் அவர்கள் வாக்களிக்கவில்லை. ஆனால் கியூபெக்கில் உள்ள மக்கள் மட்டும் (ஆங்கிலம்.,பிரெஞ்சு மக்கள்)மட்டும் வாக்களித்தார்கள். இதனையே வடக்கு கிழக்கிலும் செய்ய வேண்டும்.அவசர அவசரமாக  குடியேற்றிப்பட்ட சிங்கள மக்கள் வாக்களீக்கலாமா என்ற கேள்வியும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/30/2016 at 10:40 PM, Jude said:

நண்பரே,

 

நீங்கள் இவ்வாறான அறிவார்ந்த கேள்விகளை கேட்டிருப்பது மிகவும் நல்ல விடயம். இந்த கேள்விகளை வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முதல் தந்தை செல்வா போன்றவர்கள் கேட்டு அதற்கான பதில்களை தேடியிருந்தால் இலங்கை இன்று சிங்கபூரிலும் பார்க்க சிறந்த நாடாக இருந்திருக்கலாம்.

 

 

 

 

அவர்கள்  உந்தக்கேள்விகளை எல்லாம் அன்றிருந்த அரசாங்கத்திடம் கேட்டு பதில் கிடைக்காததால்தான் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வந்தார்கள், வந்திட்டார் இப்ப ஒருவர் தந்தை செல்வாவிற்கே வகுப்பெடுக்க. உந்த அதிமேதாவித்தனம் தான் தமிழன் அழிய காரணம்.   

On 5/31/2016 at 0:22 AM, பெரியார் said:

 

 

சிங்களவருக்கோ, தமிழருக்கோ, முஸ்லிம்களுக்கோ என்று தனிப்பட்ட நிலப்பகுதி, ஸ்ரீ லங்காவில் இல்லை. 

 

இப்போது இல்லை என்று சொல்லுங்கள். ஒரு காலத்தில் தமிழர் ராச்சியம், சிங்கள இராசதானி என்று பிரிக்கப்பட்டே இருந்தன. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு பின்னரே இவை இணைக்கப்பட்டன. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

அவர்கள்  உந்தக்கேள்விகளை எல்லாம் அன்றிருந்த அரசாங்கத்திடம் கேட்டு பதில் கிடைக்காததால்தான் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வந்தார்கள், வந்திட்டார் இப்ப ஒருவர் தந்தை செல்வாவிற்கே வகுப்பெடுக்க. உந்த அதிமேதாவித்தனம் தான் தமிழன் அழிய காரணம்.   

அழியக்காரணம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தம்

ஆனால் இனித்தான் இருக்கு

சிங்களம் மிகத்தௌிவாக

ஒரே முடிவில் நின்று

மிக ரகசியமாக காய் நகர்த்துகிறார்கள்

தாயக மக்கள்

தமிழக மக்கள் மட்டுமல்ல

புலம் பெயர் மக்களின் உதவிகள்

தார்மீக ஆதரவுகள் அனைத்தும் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு

தவிர்க்கப்படுகின்றன

மீறியும் செயற்படுவோர் சார்ந்து

பயங்கரவாதச்சட்டம் தனது வேலையை செய்கிறது

இங்க சிலது 

ஒரு நாடு பல இனம் என கனவு கண்டு விழிப்பதற்குள் எல்லாம் முடிஞ்சிருக்கும்

எழும்பி அம்மே என்று அழவும் முடியாதிருக்கும்...

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

யார் சொல்வார்கள் என்பதையும் சொல்லலாமே? உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

படிப்பறிவே இல்லாதவர்களின் பட்டியல் நிறையவே நீள்கிறது. மீண்டும் உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

மீண்டும் உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

 

 இப்படியான பதிலைத் தான் நான் எதிர்பார்த்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.