Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்

Featured Replies

மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்

 

( ரி.விரூஷன் ) 

யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

schoolll.jpg

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

 

அத்துடன் இக் கோரிக்கையை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்றையும் அவர்கள் நடாத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உறுதிமொழி அளித்ததன் பின்னர் அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைதுசெய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முட்படுத்தியிருந்தனர். 

இந்நிலையில் இவ் வழக்கு விசாரணையில் குறித்த ஆசிரியரை எதிர்வரும் ஜூலை மாதம்  4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.  நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/7995

  • கருத்துக்கள உறவுகள்

மாதா பிதா குரு தெய்வம் என்கிறார்கள் முன்னோர்கள்
இப்போது எந்தக் குருவைப் பார்த்தாலும் ஒரு சந்தேகப் பார்வை பார்க்க வேண்டியிருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதினர்... கல்வித் தகமையுடன் வருகின்றனர், ஆனால் கண்ணியத்தைக் காற்றிலே பறக்கவிட்டு, பண்புகளைப் பாதத்தால் மிதித்து விட்டு, ஒழுக்கத்தைக் காமத்தில் புதைத்து விட்டு....!  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுக்கு நிக்கிற பிள்ளை, 'உடன் கிடைக்கும் பதனீரை  விட காலம் கடந்த கள்ளுக்குத் தான் போதை அதிகம்' என்று எழுதி வைத்திருக்குது. 

உதற்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? பிரச்சனைக்காளான வாத்தியார் பதனீர் என்று கள்ளு அடிப்பவரோ? (வேடிக்கைக்காக கேட்கவில்லை)

தவறான படமானாலும் இதனை பெண்பிள்ளை ஏன் பிடித்திருக்க வேண்டும்?

50 minutes ago, Nathamuni said:

முன்னுக்கு நிக்கிற பிள்ளை, 'உடன் கிடைக்கும் பதனீரை  விட காலம் கடந்த கள்ளுக்குத் தான் போதை அதிகம்' என்று எழுதி வைத்திருக்குது. 

உதற்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? பிரச்சனைக்காளான வாத்தியார் பதனீர் என்று கள்ளு அடிப்பவரோ? (வேடிக்கைக்காக கேட்கவில்லை)

தவறான படமானாலும் இதனை பெண்பிள்ளை ஏன் பிடித்திருக்க வேண்டும்?

இதை நானும் படத்தை பார்த்தவுடன் யோசித்தேன் - எனக்கும் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முன்னுக்கு நிக்கிற பிள்ளை, 'உடன் கிடைக்கும் பதனீரை  விட காலம் கடந்த கள்ளுக்குத் தான் போதை அதிகம்' என்று எழுதி வைத்திருக்குது. 

உதற்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? பிரச்சனைக்காளான வாத்தியார் பதனீர் என்று கள்ளு அடிப்பவரோ? (வேடிக்கைக்காக கேட்கவில்லை)

தவறான படமானாலும் இதனை பெண்பிள்ளை ஏன் பிடித்திருக்க வேண்டும்?

 

 

 

இந்த வசனத்தை எழுதியவர் அதி புத்திசாலித்தனமாக யோசித்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

சிறு பெண்பிள்ளைகள் பதனீரைப் போன்றவர்கள் என்பதால் போதையைத் தரமாட்டார்கள். எனவே அவர்கள் வளர்ந்து வரும்வரை காத்திருந்து அவர்களை உபயோகித்து அதிக போதையை அடையலாம் என்று சொல்லுகின்றார்.

அந்தப் பதாகையை சிறுமிகள் பிடித்து நிற்பது இன்னும் மோசமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

மாதா பிதா குரு தெய்வம் என்கிறார்கள் முன்னோர்கள்
இப்போது எந்தக் குருவைப் பார்த்தாலும் ஒரு சந்தேகப் பார்வை பார்க்க வேண்டியிருக்கின்றது

வாத்தி முதல் உங்கடை பெயரை மாத்துங்கோ.tw_blush:

6 minutes ago, கிருபன் said:

 

இந்த வசனத்தை எழுதியவர் அதி புத்திசாலித்தனமாக யோசித்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

சிறு பெண்பிள்ளைகள் பதனீரைப் போன்றவர்கள் என்பதால் போதையைத் தரமாட்டார்கள். எனவே அவர்கள் வளர்ந்து வரும்வரை காத்திருந்து அவர்களை உபயோகித்து அதிக போதையை அடையலாம் என்று சொல்லுகின்றார்.

அந்தப் பதாகையை சிறுமிகள் பிடித்து நிற்பது இன்னும் மோசமாக உள்ளது.

எங்கை போய் முட்ட tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

இந்த வசனத்தை எழுதியவர் அதி புத்திசாலித்தனமாக யோசித்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

சிறு பெண்பிள்ளைகள் பதனீரைப் போன்றவர்கள் என்பதால் போதையைத் தரமாட்டார்கள். எனவே அவர்கள் வளர்ந்து வரும்வரை காத்திருந்து அவர்களை உபயோகித்து அதிக போதையை அடையலாம் என்று சொல்லுகின்றார்.

அந்தப் பதாகையை சிறுமிகள் பிடித்து நிற்பது இன்னும் மோசமாக உள்ளது.

இன்னுமொரு கருத்தும் உள்ளது கிருபன்!

வாத்தியாருக்கு வயது அதிகம் என்பதை இவ்வாறு எழுதிக் காட்டியிருக்கிறார் இதை எழுதிய அதி மேதாவி!

இளம் பெடியளிலும் பார்க்க....வயது போனவர்களுக்குத் தான் 'போதை' அதிகம் என்று கருதுகிறார் என்பது எனது அனுமானம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பொடியனை(பதனீர்) நம்பினாலும் கலியாணம் கட்டினவனை(கள்ளு) நம்பக்கூடாது எண்டு முந்தியே சொல்லுறவை...:cool:

Quote

 

உடன் கிடைக்கும் பதனீரை  விட காலம் கடந்த கள்ளுக்குத் தான் போதை அதிகம்

கல்விக் கூடமாக இருந்த பாடசாலையை கலவிக்கூடமாக மாற்றியது.....

குற்றத்தை நேரடியாகக் கண்டிப்பதில் எதற்கு கவித்துவம் மறைபொருளை எழுதி புத்திசாலிததனம் காட்டுகின்றார்கள் என்று புரியவில்லை. முதலாவது வசனம் இளவட்டங்களை விட வயதானவர்களுடன் தான் போகவேண்டும் என்றும் பொருள் படுகின்றதே ! இது பாலியல் விசயத்தில் கட்டுப்டாட்டை இழந்து அத்துமீறல்கள் செய்த ஆசிரியர்களுக்கு சார்பாக இருக்கின்றது. இவ் வசனங்கள் ஒரு நேரடியான கண்டனமாக தெரியவில்லை. "குற்றவாளியை கைதுசெய் தண்டனை கொடு நீதி வழங்கு " இப்படியல்லவா இந்த சிறு பெணபிள்ளைகள் பதாகை தூக்கியிருக்கவேண்டும்.

கலாச்சார இறுக்கமும் பாலியல் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் பாலியல் சார்ந்த குற்றச்செயல்களை பெருக்குகின்றது. 

 

 

 

 

 

 

 

Quote

 

 

2 hours ago, சண்டமாருதன் said:

குற்றத்தை நேரடியாகக் கண்டிப்பதில் எதற்கு கவித்துவம் மறைபொருளை எழுதி புத்திசாலிததனம் காட்டுகின்றார்கள் என்று புரியவில்லை. முதலாவது வசனம் இளவட்டங்களை விட வயதானவர்களுடன் தான் போகவேண்டும் என்றும் பொருள் படுகின்றதே ! இது பாலியல் விசயத்தில் கட்டுப்டாட்டை இழந்து அத்துமீறல்கள் செய்த ஆசிரியர்களுக்கு சார்பாக இருக்கின்றது. இவ் வசனங்கள் ஒரு நேரடியான கண்டனமாக தெரியவில்லை. "குற்றவாளியை கைதுசெய் தண்டனை கொடு நீதி வழங்கு " இப்படியல்லவா இந்த சிறு பெணபிள்ளைகள் பதாகை தூக்கியிருக்கவேண்டும்.

உண்மை தான்!
சிறு பிள்ளைகளின் கைககளில் பொருத்தமற்ற பதாதைகள் என்பது தான் என் கருத்தும்.

ஆனால் கொஞ்சம் யோசித்தால்,
"உடன் கிடைக்கும் பதனீரை  விட காலம் கடந்த கள்ளுக்குத் தான் போதை அதிகம் ......? ? ?"
ஒருவேளை இதை அந்தக் காவாலி ஆசிரியர் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் கூறியதாகவோ அல்லது வகுப்பறைகளில் அடிக்கடி கூறியதாகவோ இருக்கலாம் என நினைக்கிறேன்.

குறிப்பாக முடிவில் இருக்கும் அந்த புள்ளிகளும், 3 கேள்விக்குறிகளும் மிகவும் அர்த்தம் வாய்ந்தவை என நினைக்கிறேன்.  

அத்துடன் புங்கையூரான் குறிப்பிட்ட விளக்கம் கூடிய பொருத்தமாக உள்ளது.

எது எப்படியோ சிறு பிள்ளைகளின் கைககளில் பொருத்தமற்ற பதாதைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

இன்னுமொரு கருத்தும் உள்ளது கிருபன்!

வாத்தியாருக்கு வயது அதிகம் என்பதை இவ்வாறு எழுதிக் காட்டியிருக்கிறார் இதை எழுதிய அதி மேதாவி!

இளம் பெடியளிலும் பார்க்க....வயது போனவர்களுக்குத் தான் 'போதை' அதிகம் என்று கருதுகிறார் என்பது எனது அனுமானம்!

வயது போனவர்கள் தாங்கள் இப்பவும் இளம்பொடியள் என்று நினைத்து போதை கொள்ளலாம். ஆனால் அது வெறியாக மாறும்போதுதான் சமூகத்திற்கு ஆபத்து.

இளம் பிராயத்தினரை துஷ்பிரயோகம் செய்பவர்கள் சமூகவிரோதிகள் அதிலும் கல்வித் துறையில் இருந்தால் மிகவும் மோசமான சமூகவிரோதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பதாதையில் எழுதியிருக்கும் விடயத்தின் அர்த்தம் அந்தச்  சிறுமிக்கு விளங்கியிருக்குமோ தெரியாது. யாரோ எழுதிக்கொடுத்ததை அது கையில் வைத்திருக்கின்றது.

இளம் வயது ஆண்களை நம்பலாம். ஆனால் கொஞ்சம் வயது அதிகமானவர்களை நம்பக்கூடாது .  அவர்களுடன் அதிக கவனத்துடன் பழகவேண்டும் (என்ற வகையிலும் அர்த்தம் கொள்ளலாம்) என்று சொல்ல வருகின்றார்கள் என நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.