Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சாவுடன் பூசாரி கைது

Featured Replies

கஞ்சாவுடன் பூசாரி கைது
 
 

article_1470311206-Handcuff300.jpg-செல்வநாயகம் கபிலன்

இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை, நேற்றுப் புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரைச் சோதனை செய்தபோது கஞ்சா மீட்கப்பட்டது. 26 வயதுடைய  பூசாரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறு இருக்க, அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவரும் புதன்கிழமை (03) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழான விசேட குற்றத்தடுப்புப் பொலிஸர் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரிடமிருந்து 4 கிலோவும் 100 கிராமும் நிறையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவலின் அடிப்படையில், கஞ்சா வாங்கும் முகவர் போல பாசாங்கு செய்து சென்றே பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/178693#sthash.3hx6Q4zH.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-------------------------------e14601696

தெற்பைக்கு பதிலாய் கஞ்சா கொண்டு வெளிக்கிட்டினம் போலை

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முதல் பூசாரியார் வரை, கஞ்சா கவ்வீட்டது.

ஓம் பிரதட்சினம் சமைப்பியாமி.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகள்.... செய்யிற வேலையை... 
பூசாரிகளும்..... செய்யுறது நல்லதல்ல. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பூஜைக்கு சென்று கொண்டிருந்தார் .....
என்பதுதான் முக்கிய செய்தி.
பாவிகள் தணிக்கை செய்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அய்யாவை கனடாவுக்கு அனுப்புங்கோ....இராசமரியாதை கிடைக்கும்....சமரிலை குரைந்தது 30- 40 கோவில் தேர்காணலாம்....ஜிகினாச் சட்டை போட்டுகிட்டு...சகல் நிகழ்வுகளீலும் முன்னுக்கு இருக்கலாம்...கலியாணம் முதல் நாய் செத்தவீடுவரை காரியம் செய்யலாம்...போதாததற்ௐஉ இலங்கை சுதந்திர தினத்திலும் பேசலாம்......கன்சா விக்கிற காசைவிட பச்சை ப்ச்சையாய் கொட்டோ கொட்டென்றூ கொட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

நாய் செத்த வீட்டிற்க்கு பூசாரியார் போகலாம் என்டால் அவர் கஞ்சா வைத்திருக்க கூடாதா.அட சும்மா காசு பாக்கத்தான்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, சுவைப்பிரியன் said:

நாய் செத்த வீட்டிற்க்கு பூசாரியார் போகலாம் என்டால் அவர் கஞ்சா வைத்திருக்க கூடாதா.அட சும்மா காசு பாக்கத்தான்.tw_blush:

அத சரியென்றே  சொல்லுறன்....அவர் ஏன் அங்கை பொலிசோடை அலைவான்...கனடாவில் ...சுகமாக உழைக்கலாம்தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, alvayan said:

அந்த அய்யாவை கனடாவுக்கு அனுப்புங்கோ....இராசமரியாதை கிடைக்கும்....சமரிலை குரைந்தது 30- 40 கோவில் தேர்காணலாம்....ஜிகினாச் சட்டை போட்டுகிட்டு...சகல் நிகழ்வுகளீலும் முன்னுக்கு இருக்கலாம்...கலியாணம் முதல் நாய் செத்தவீடுவரை காரியம் செய்யலாம்...போதாததற்ௐஉ இலங்கை சுதந்திர தினத்திலும் பேசலாம்......கன்சா விக்கிற காசைவிட பச்சை ப்ச்சையாய் கொட்டோ கொட்டென்றூ கொட்டும்....

போற போக்கைப்பார்த்தால் நானும் பூணூலை கொழுவிக்கொண்டு கனடாவுக்கு வரலாம் போலை கிடக்கு....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

போற போக்கைப்பார்த்தால் நானும் பூணூலை கொழுவிக்கொண்டு கனடாவுக்கு வரலாம் போலை கிடக்கு....tw_blush:

எனக்கும் ஒரு ஐடியா இருந்துச்சுது:unsure: 
உங்களுக்கு சீடனாக வரவா  கெதியா சொல்லுங்க இல்லாட்டால் வேற் நாட்டை பார்ப்பேன் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

போற போக்கைப்பார்த்தால் நானும் பூணூலை கொழுவிக்கொண்டு கனடாவுக்கு வரலாம் போலை கிடக்கு....tw_blush:

வாருங்கண்னா..வந்து பாருங்க..புடிச்சிருந்தால்.....லாண்ட் ..பண்ணிடுங்க....விளைச்சல் அமோகம் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

பூனூலின்றி ஒருவர் தமிழில் சாமிக்குப் பூசை செய்தால்...! எங்கடையளுக்குப் பக்தி வருமா? கோவிலுக்கு கோபுரம்தான் கட்டுவார்களா? பூனூல் அணிந்து சமசுகிறிதத்தில் மந்திரம் ஓதினால் கஞ்சா அடித்து ஏறும் போதைபோல் பக்தி தலைக்கேறும். இதனை உதாரணப்படுத்தத்தான் அவர் கஞ்சாவை வைத்திருந்தார். இது புரியாமல்..........:grin: 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.