Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் கடல்கரைக்கு செல்லும் தமிழர்களே எச்சரிக்கை!! தமிழ்த் தந்தைக்கு காத்திருந்த சோகம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் அறியாமையால் விபத்தில் அகப்பட்டு இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கடலில் மட்டுமல்ல வயிறு நிறைய உண்டுவிட்டு உடன் குளிர்ந்த நீருள்ள குளத்தி்ல் பாய்ந்து நீச்சலடிக்க முற்பட்டு இறந்த தமிழர்கள் முன்பு யேர்மனியில் அனேகம். 

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மூழ்கி உயிர் துறந்த நண்பர்கள் ஐவரின் குடும்பத்தாருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Camber Sands, Poole கடற்கரைப் பகுதிகள் வருடாவருடம் போகும் இடம்தான். Camber Sands ஆழமில்லாத மணற்பரப்பு என்பதால் பயமின்றி அதிக தூரம் கடலினுள் போய்வரும் இடம். இனிக் கவனமாக இருக்கவேண்டும். நீச்சல் தெரிந்தாலும் sandbar க்குள் மாட்டுப்பட்டால் ஒன்றும் செய்யமுடியாது என்பதை இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கடலைப் பற்றி நன்கு தெரிந்த முனிவர்ஜீ கடலில் முழ்கி சாகக் கூடாது என்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

பி;கு; அவர்கள் கடலில் நீந்தப் போய் முழ்கி சாகவில்லை...கடற்கரை மணலோரம் நின்று உதைப்பந்தாட்டம் விளையாடித் தான் மண்ணுக்குள் புதையுண்டவர்கள்...அவர்களை மீட்கும் போது முழுதாய் உடை அணிந்து தான் காண்ப்பட்டார்கள். இதற்கும் எதாவது அட்வைஸ் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/08/2016 at 1:10 AM, ரதி said:

கடலைப் பற்றி நன்கு தெரிந்த முனிவர்ஜீ கடலில் முழ்கி சாகக் கூடாது என்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

பி;கு; அவர்கள் கடலில் நீந்தப் போய் முழ்கி சாகவில்லை...கடற்கரை மணலோரம் நின்று உதைப்பந்தாட்டம் விளையாடித் தான் மண்ணுக்குள் புதையுண்டவர்கள்...அவர்களை மீட்கும் போது முழுதாய் உடை அணிந்து தான் காண்ப்பட்டார்கள். இதற்கும் எதாவது அட்வைஸ் இருக்கா?

எனக்கு கடலைப் பற்றி தெரியாது ரதி ஆனால் சில சம்பவங்களை அனுபவ ரீதியாக அனுபவித்துள்ளன் நான் 

நான் இந்த டிஸ்கவரி பார்பதுண்டு அதில் உயிர் காப்பு பற்றியதை அதிகம் பார்க்கும் பழக்கம் அதனால தான் சொன்னது 

இப்போது நீச்சல் கடலில் பழகிகொண்டு இருக்கிறன் பயம் போய் விட்டது கூடிய விரைவில் பழகிவிடுவேன்

 

உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி ரதி 

அவர்கள் பற்றி பதிவிடவில்லை நன்றி உங்கள் தகவல்களுக்கு

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, முனிவர் ஜீ said:

எனக்கு கடலைப் பற்றி தெரியாது ரதி ஆனால் சில சம்பவங்களை அனுபவ ரீதியாக அனுபவித்துள்ளன் நான் 

நான் இந்த டிஸ்கவரி பார்பதுண்டு அதில் உயிர் காப்பு பற்றியதை அதிகம் பார்க்கும் பழக்கம் அதனால தான் சொன்னது 

இப்போது நீச்சல் கடலில் பழகிகொண்டு இருக்கிறன் பயம் போய் விட்டது கூடிய விரைவில் பழகிவிடுவேன்

 

உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி ரதி 

அவர்கள் பற்றி பதிவிடவில்லை நன்றி உங்கள் தகவல்களுக்கு

 

என்னது இன்னும் நீந்தத்தெரியாதா? tw_astonished:
நாலுபக்கமும் கடல்...
எல்லாப்பக்கமும் வாவி.....
இன்னும் நீந்தப்பழகேல்லை....அய்யொ....அய்யொ...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

என்னது இன்னும் நீந்தத்தெரியாதா? tw_astonished:
நாலுபக்கமும் கடல்...
எல்லாப்பக்கமும் வாவி.....
இன்னும் நீந்தப்பழகேல்லை....அய்யொ....அய்யொ...tw_blush:

நான் உன்மையை சொன்ன கு.சாமியண்ண  எங்க ஊரிலும் கடல் தான் இருகிறது ஆனால் நான் மட்டக்களப்பு இல்லையே இதுவ்ரை நீங்கள் என்னை மட்டக்களப்பு என நம்பியிருக்கிறீர்களா??  
tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்னது இன்னும் நீந்தத்தெரியாதா? tw_astonished:
நாலுபக்கமும் கடல்...
எல்லாப்பக்கமும் வாவி.....
இன்னும் நீந்தப்பழகேல்லை....அய்யொ....அய்யொ...tw_blush:

அவர் இப்படித்தான்

எல்லாத்துக்கும் பயம்..

 1-  தண்ணிக்கு பயத்தில் குளிப்பதே இல்லையென்றால் பாருங்கோவன்....

2 - அவரே எழுதுவார்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் இந்த ஐரோப்பிய நீர் நிலைகளுக்கு  பலியாகிய எம் உறவுகள் ஆறு அல்ல ஏழு எம் தமிழ் ஊடகங்கள் ஏன் மவுனமாகின என்பது புதிர் அதுவும் நன்கு நீச்சல் தெரிந்தவர்  சம்பவம் போர்த்துக்கல் நாட்டில் நடந்தது உண்மையில் விளையாட்டுக்கு நண்பர்களால் தூக்கி கடலில் எறியப்பட்டவர் சில  நாட்களின் பின் சடலமாக கிடைத்தார் http://www.mirror.co.uk/news/uk-news/body-city-worker-who-went-8476573

http://www.dailymail.co.uk/news/article-3702863/London-manager-Nishanthan-Gnanathas-presumed-dead-Portugal-pushed-river-cruise-prank-friend.html

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

5 இளம் வயதினரை பறிகொடுத்த அம்மா.. அப்பா.. மனைவி.. குழந்தை... காதலி... தங்கை..தம்பி.. மாமா மாமி...இவர்களை ஒருகணம் நினைத்துப் பார்க்கிறேன்...
எந்த நேரத்தில் எதை பேச வேணும்.. அதை எப்படி பேச வேணும் என்பதும் கூட பண்பாடு... 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் நானும் சொன்னேன் சசி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இதைத் தான் நானும் சொன்னேன் சசி.

நானும் அதைத்தானே சொன்னனான்

 

எதை எங்கு சொல்ல வேண்டும் என்ற பிரச்சனை அல்ல

இங்கு இருப்பது

எல்லா இடத்திலும் தங்கள் அரிப்புக்கு சொறிய வேண்டும் என்ற

வியாதி தான் இருக்கு

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இதைத் தான் நானும் சொன்னேன் சசி.

இது தான் சந்துல சிந்து பாடுவது என்பதா ரதி?? 

 

3 hours ago, வைரவன் said:

நானும் அதைத்தானே சொன்னனான்

எதை எங்கு சொல்ல வேண்டும் என்ற பிரச்சனை அல்ல

இங்கு இருப்பது

எல்லா இடத்திலும் தங்கள் அரிப்புக்கு சொறிய வேண்டும் என்ற

வியாதி தான் இருக்கு

வைரவநாதன் உங்கள் ஆதங்கம் புரியாமல் இல்லை தலைப்பு நீரில் முழ்கியா அல்லது மணலில் புதைந்தா சாவா அதற்கான கருத்துக்கள் தான் இடப்பட்டது 

 இப்படி கன பேர் வெளிக்கிட்டவங்கள்  ஈழத்தில் சண்டை நடக்கும் போது கூட  சண்ட நடக்கிறது வேண்டாமே சாவை பார்த்து பொங்கின கனபேர் தான் இப்போது............... 

நானும் எழுதினால்.............. வேண்டாம்

வார்த்தை பிரயோகம் விட்டால் பிடிக்க இயலாது 

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ,நான் எங்கே சந்தில சிந்து பாடினது ஆரம்பத்தில் இருந்து இதைத் தான் சொல்லிட்டு வாறன். விளக்கமில்லாமல் எழுதினது என் தப்புத் தான். மன்னித்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் கடலில் புதைமணல் காரணமாகவே மரணங்கள் சம்பவிக்கின்றன.

சடுதியாக நீர்மட்டம் குறையும் போது, அட ஆழம் இல்லையே என்று நடந்தே போகும் பலர், தீடீரென நீர்மட்டம் உயரும் போது நடப்பதா, நீந்துவதா என்று தடுமாறும் போதே, அலைகள் மேலே வந்து ஆளை இன்னும் உள்ளே கொண்டு போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிரபல ஆங்கில தொலைகாட்சிகளில் செய்தியாக ஐவரினது மரணச்சடங்கை காட்டினார்கள். கண்கலங்குவதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.
ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.