Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் அன்று 

பரிசிலிருந்து 100  கிலோமீற்றரிலுள்ள  Chartres தேவாலயத்துக்கு குடும்பமாக செல்வது

கிட்டத்தட்ட 30 வருடப்பழக்கம்.

 2016 நத்தார்  அன்றும் அப்படித்தான் 

மக்கள்  எல்லோரையும் கூட்டிக்கொண்டு தேவாலயத்துக்கு போனோம்

சுத்தி வணங்கி

மெழுகு திரியை  கொழுத்திவிட்டு

வெளியில் வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு

அடுத்த புரோக்கிறாம்  என்ன  என்று கேட்டபோது

மக்கள் சொன்னார்கள்  இன்று நீங்க எங்களுக்கு பின்னால வாருங்கள் என்று.

கூட்டிக்கொண்டு ஒரு உணவகத்துக்குள்  நுளைந்தார்கள்

அங்கு ஏற்கனவே எமக்காக  மேசை  ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது

அது ஒரு பிரேசில் உணவகம்

சாப்பிட்டு விட்டு பில் வந்தபோது மக்கள் அதை எடுத்துக்கொண்டு 

காசாளரிடம் போனார்கள்

நானும்  போனேன்

எல்லோரும்  ஆளாளுக்கு ஒவ்வொரு தொகையை  எடுத்து வைத்தார்கள்

நானும் வைத்தேன்

வெளியே  வந்த போது ஒரு மன மகிழ்வும் அமைதியும்  குடி கொண்டது

இதுவரை தனியனாக செலவளித்து  செலவளித்து

மூச்சிறைத்து வந்த எனக்கு ஏதோ ஒன்று என்னிடமிருந்து 

வேறு தோள்களுக்கு  மாறுவதும் அது எனக்கு பெரும் உதவியாக இருப்பதும் தெரிந்தது.

இந்த பங்கீட்டு முறை புலத்திலுள்ள நல்லதொரு பழக்கம்

அதை எம்மவர்  பின் பற்றணும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமை குறையும் போது அது சந்தோசமே  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

இந்த பங்கீட்டு முறை புலத்திலுள்ள நல்லதொரு பழக்கம்

குடும்பத்திலுமா?

நோ நோ நோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முனிவர் ஜீ said:

சுமை குறையும் போது அது சந்தோசமே  

அதை  முதன்முதலாக உணர்தல் என்பது....

நன்றி ராசா

வரவுக்கும்நேரத்துக்கும்..

6 minutes ago, ஈழப்பிரியன் said:

குடும்பத்திலுமா?

நோ நோ நோ

ஏனண்ணா??

  • கருத்துக்கள உறவுகள்

காலம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் நிறைய சந்தோசங்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கு. நாம்தான் எமது வேலைப்பளுவில்  கவனிக்க மறந்து விடுகிறோம் விசுகு .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஏனண்ணா

மனதாலேயே பிரித்து பார்க்க முடியல விசுகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மனதாலேயே பிரித்து பார்க்க முடியல விசுகு.

அது ஒரு  நல்ல பழக்கமண்ணா

எவரையும் அது பாதிக்காது

மனம்கோண   சலிப்படைய  வைக்காது

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள், கூட வேலைசெய்பவர்களுடன் போனால் பங்கிட்டுத்தான் செலவளிப்பது. இதுதான் காலாகாலத்திற்கும் பழக்கத்தில் உள்ளது. ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இன்னும் பங்கிட ஆரம்பிக்கவில்லை!

 

  • கருத்துக்கள உறவுகள்

என் யேர்மனி நண்பன் ஒருவனுடன் சாப்பிடப்போனேன் அவன் காதலியும் கூட வந்திருந்தாள். நாங்கள் சாப்பிட்டோம். அவள் சாப்பிடவில்லை. ஏன் என்று கேட்டேன். தன்னிடம் பணமில்லை என்றாள். இப்படி ஒரு சம்பவத்தை ஊரில் நினைத்துப்பார்க்கவும் முடியுமா...??

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. ம்... ம் ..விளங்குகின்றது.:100_pray:

இருந்தாலும் தகப்பன் வேலைக்கும் தாய் வீட்டில்
இயலாத நிலைமையிலும் இருக்கும்போது

அந்தத் தாயின் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தன் தொழில் சுமந்து,

உப்புப் புளி இல்லாவிட்டாலும் தாய் தந்தையருக்குச்

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்

பிள்ளைகள்  சமைத்த உணவை உண்ணும்போது இருக்கும்

சுவையே ஒரு தனியான சுவையாக இருக்கும்.

இருக்கும்போது பங்கிட்டு செய்வதில் தப்பில்லை
பெற்றோரிடம் இல்லாதபோதும் பங்கிட்டுச்  செய்வார்களாக இருந்தால்
அவர்கள்தான் உண்மையான செல்வங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இடம்.....பிரிக்ஸ்ரனில் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம்!

வாடிக்கையாளர்  இருவர்..! ஒருவர் கழுத்தில் பல சங்கிலிகளும், பத்து விரல்களில் மோதிரங்களும்..தலையில் ஒரு ரஸ்தா தொப்பியும் போட்ட ஒரு கறுப்பினத்தவர்! அடுத்தவர்....ஒரு சிம்பிளான வெள்ளை இனத்துப் பெண்மணி!

கறுப்பினத்தவர்.. இரண்டு பக்கற் பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் வாங்கிக்கொண்டு போகிறார்! 

வெள்ளையினத்தவர்..காசாளரிடம் போய்...உன்னால் எனக்கு ஒரு சிகரட் கடனாக எனக்குத் தர முடியுமா...நாளை நிச்சயம் திருப்பித் தருவேன்!

காசாளர்....நீங்கள் இருவரும் ஒரே காரில் தானே வந்தீர்கள்! உன் காதலனிடம் கேட்பது தானே!

அவள்....அவர் தர மாட்டார்! அவரிடம் கேட்பது நியாயமுமல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

 

சுத்தி வணங்கி

 

 

 

 

 

எனக்கும்  தேவால‌யத்துக்கு போனால் சுத்தி வணங்கிற பழக்கமிருக்கு.......பங்கீடு நல்லம் தான் ஆனால் குடும்பத்தில்  பங்கீடு என்பது அதி அதி அதி உயர் ஜனநாயகமாக.... சோசலிசமாக  எனக்கு படுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்களுக்கு இடையில் பங்கிட்டு செய்வது ஒருவரை ஒருவர் அதிகம் பாதிக்காது..மேலைத்தேய நாட்டில் வாழ்கிறோம்  என்பதற்காக   எல்லாம் அவர்களை பின்பற்றித் தான் வாழ வேண்டும்  என்று  இல்லைத் தானே..குடும்பங்களுக்குள் பங்கீடு அதுவும் சாதரணமாக ஒரு உணவகத்திற்கு போய் விட்டு செய்வது என்பது அது ஒரு வேண்டத்தகாத செயல்.சொல்லப் போனால் வயோதிபர்கள் ௯ட வெள்ளையினத்தவர்கள் போல் பில் பேமன்ற் செய்யப் பழகி இருக்கிறார்கள்..

அதாவது வீட்டில் உள்ள எல்லாருக்காகவும் பொருட்களை எடுக்கும் போது நீர் ௯டிய விலைக்குரியதுக்கு பணம் கொடும்; நான் குறைந்ததுக்கு பணம் கொடுக்கிறன் என்று மனிதர்களை பிரித்துப் பார்ப்பது..அல்லது தாங்கள் எடுக்கும் பொருட்களுக்கு மட்டும் மற்றவர் கையில் பணத்தை திணித்து விட்டு மாறுவது.நானும் இப்போ இவ்வாறன சங்கடங்களை சந்திக்கின்றேன்...ஆனால் யார் மனதையும் நோகப் பண்ணக் ௯டாது என்பதற்காக எதுவும் பேச மாட்டன்..மனதுக்குள் என்ன பழக்க வழக்கங்கள் என்று மனம் சீ என்று போய் விடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

On 29/03/2017 at 6:42 PM, suvy said:

காலம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் நிறைய சந்தோசங்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கு. நாம்தான் எமது வேலைப்பளுவில்  கவனிக்க மறந்து விடுகிறோம் விசுகு .....!  tw_blush:

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 29/03/2017 at 9:35 PM, கிருபன் said:

நண்பர்கள், கூட வேலைசெய்பவர்களுடன் போனால் பங்கிட்டுத்தான் செலவளிப்பது. இதுதான் காலாகாலத்திற்கும் பழக்கத்தில் உள்ளது. ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இன்னும் பங்கிட ஆரம்பிக்கவில்லை!

நண்பர்களுடன்  முதலில் நாம் பங்கிட்டதில்லை கிருபன்

வசதிக்கேற்ப

உழைப்புக்கேற்ப  தானே கொடுத்தோம்....

அடுத்ததாக  அதுவும் வரும்

வரணும்

நன்றி கிருபன் ஐயா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 29/03/2017 at 9:48 PM, Paanch said:

என் யேர்மனி நண்பன் ஒருவனுடன் சாப்பிடப்போனேன் அவன் காதலியும் கூட வந்திருந்தாள். நாங்கள் சாப்பிட்டோம். அவள் சாப்பிடவில்லை. ஏன் என்று கேட்டேன். தன்னிடம் பணமில்லை என்றாள். இப்படி ஒரு சம்பவத்தை ஊரில் நினைத்துப்பார்க்கவும் முடியுமா...??

இது போன்ற  அசாதாரண நிலைகளில்  

மற்றவர்கள்  பங்கிடுவது தானே முறையண்ணா......?

ஒருவர் மட்டுமே 

இரக்கவாளிவாளியாகவோ

தொடர் கொடுப்பனவை  செய்பவராகவோ இருப்பது 

ஒரு காலப்போக்கில்  அவரின் வாழ்வில்   பெரும்  தாக்கங்களை  உண்டு  பண்ணும்

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 30/03/2017 at 0:08 AM, வாத்தியார் said:

ம்.. ம்... ம் ..விளங்குகின்றது.:100_pray:

இருந்தாலும் தகப்பன் வேலைக்கும் தாய் வீட்டில்
இயலாத நிலைமையிலும் இருக்கும்போது

அந்தத் தாயின் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தன் தொழில் சுமந்து,

உப்புப் புளி இல்லாவிட்டாலும் தாய் தந்தையருக்குச்

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்

பிள்ளைகள்  சமைத்த உணவை உண்ணும்போது இருக்கும்

சுவையே ஒரு தனியான சுவையாக இருக்கும்.

இருக்கும்போது பங்கிட்டு செய்வதில் தப்பில்லை
பெற்றோரிடம் இல்லாதபோதும் பங்கிட்டுச்  செய்வார்களாக இருந்தால்
அவர்கள்தான் உண்மையான செல்வங்கள் 

அதே..

நன்றி தம்பி வாத்தியார்

வருகைக்கும்  நேரத்துக்கும்..

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/03/2017 at 0:35 AM, புங்கையூரன் said:

இடம்.....பிரிக்ஸ்ரனில் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம்!

வாடிக்கையாளர்  இருவர்..! ஒருவர் கழுத்தில் பல சங்கிலிகளும், பத்து விரல்களில் மோதிரங்களும்..தலையில் ஒரு ரஸ்தா தொப்பியும் போட்ட ஒரு கறுப்பினத்தவர்! அடுத்தவர்....ஒரு சிம்பிளான வெள்ளை இனத்துப் பெண்மணி!

கறுப்பினத்தவர்.. இரண்டு பக்கற் பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் வாங்கிக்கொண்டு போகிறார்! 

வெள்ளையினத்தவர்..காசாளரிடம் போய்...உன்னால் எனக்கு ஒரு சிகரட் கடனாக எனக்குத் தர முடியுமா...நாளை நிச்சயம் திருப்பித் தருவேன்!

காசாளர்....நீங்கள் இருவரும் ஒரே காரில் தானே வந்தீர்கள்! உன் காதலனிடம் கேட்பது தானே!

அவள்....அவர் தர மாட்டார்! அவரிடம் கேட்பது நியாயமுமல்ல!

உண்மை தான்அண்ணா

ஆனால்   நான் சொல்வது  பங்கீடு

நீங்கள்  சொல்வது கஞ்சத்தனம்  அல்லது ஒவ்வாமை

இந்நிலை  இருந்தால்  பங்கீடே வராதே..

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 30/03/2017 at 7:57 AM, putthan said:

எனக்கும்  தேவால‌யத்துக்கு போனால் சுத்தி வணங்கிற பழக்கமிருக்கு.......பங்கீடு நல்லம் தான் ஆனால் குடும்பத்தில்  பங்கீடு என்பது அதி அதி அதி உயர் ஜனநாயகமாக.... சோசலிசமாக  எனக்கு படுகிறது...

உண்மை  தான் புத்தர்

எனக்கு அடிக்கடி ஐரோப்பிய கார்ப்பயணம்வரும்

உறவுகள் எல்லா  நாடுகளிலும்  இருப்பதால்...

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனியே  தான் காருக்கான  செலவு

வீதிச்செலவு

பயணச்செலவு  என செலவிட்டு வருவது வழக்கம்

மக்களும்  வாகனத்தை செலுத்தினாலும் எனது வங்கி  காட்டை முன்னுக்கு வைத்து விடுவேன்

திரும்பி  வந்து குத்துவிளக்கில் கணக்கு பார்த்து தலையிடி வந்த நாட்களும் உண்டு

ஆனால் இப்பொழுதெல்லாம்  அப்படி செலவுகள் கட்டுக்குள் வந்து  விடுகின்றன

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு செலவை  பார்த்துக்கொள்கிறார்கள் (அவர்களாகவே)

இது குடும்பத்துக்கும் நல்லது தானே..?

 

நன்றி  புத்தர் அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

நட்புக்களுக்கு இடையில் பங்கிட்டு செய்வது ஒருவரை ஒருவர் அதிகம் பாதிக்காது..மேலைத்தேய நாட்டில் வாழ்கிறோம்  என்பதற்காக   எல்லாம் அவர்களை பின்பற்றித் தான் வாழ வேண்டும்  என்று  இல்லைத் தானே..குடும்பங்களுக்குள் பங்கீடு அதுவும் சாதரணமாக ஒரு உணவகத்திற்கு போய் விட்டு செய்வது என்பது அது ஒரு வேண்டத்தகாத செயல்.சொல்லப் போனால் வயோதிபர்கள் ௯ட வெள்ளையினத்தவர்கள் போல் பில் பேமன்ற் செய்யப் பழகி இருக்கிறார்கள்..

அதாவது வீட்டில் உள்ள எல்லாருக்காகவும் பொருட்களை எடுக்கும் போது நீர் ௯டிய விலைக்குரியதுக்கு பணம் கொடும்; நான் குறைந்ததுக்கு பணம் கொடுக்கிறன் என்று மனிதர்களை பிரித்துப் பார்ப்பது..அல்லது தாங்கள் எடுக்கும் பொருட்களுக்கு மட்டும் மற்றவர் கையில் பணத்தை திணித்து விட்டு மாறுவது.நானும் இப்போ இவ்வாறன சங்கடங்களை சந்திக்கின்றேன்...ஆனால் யார் மனதையும் நோகப் பண்ணக் ௯டாது என்பதற்காக எதுவும் பேச மாட்டன்..மனதுக்குள் என்ன பழக்க வழக்கங்கள் என்று மனம் சீ என்று போய் விடும்..

உண்மைதான்பிள்ளை

உங்களது முதலாவது கேள்விக்கு

உங்களது இரண்டாவது பகுதியில்  பதிலிருக்கு...

இவ்வாறு தான் எமக்குள்   பிரச்சினைகளும்  பிரிவுகளும் 

நான்அதிகம்  கொடுத்தனான்

இவர்  கொடுப்பதே இல்லை போன்ற  பாகுபாடுகளும்வருகின்றன

அவரவர் தத்தமது வீக்கத்துக்கு ஏற்ப  கொடுத்து விட்டால்  அதிலேயே  பிரச்சினை  முடிந்து விடும்

இதை  நம்மவர்  பழக்கப்படுத்திக்கொள்ளணும்

கொஞ்சம் எம்மவருக்கு கடினம்தான்

ஆனால்  தேவையான ஒன்று.

நன்றி பிள்ளை

வருகைக்கும்  நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உண்மை தான்அண்ணா

ஆனால்   நான் சொல்வது  பங்கீடு

நீங்கள்  சொல்வது கஞ்சத்தனம்  அல்லது ஒவ்வாமை

இந்நிலை  இருந்தால்  பங்கீடே வராதே..

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

உண்மை  தான் புத்தர்

எனக்கு அடிக்கடி ஐரோப்பிய கார்ப்பயணம்வரும்

உறவுகள் எல்லா  நாடுகளிலும்  இருப்பதால்...

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனியே  தான் காருக்கான  செலவு

வீதிச்செலவு

பயணச்செலவு  என செலவிட்டு வருவது வழக்கம்

மக்களும்  வாகனத்தை செலுத்தினாலும் எனது வங்கி  காட்டை முன்னுக்கு வைத்து விடுவேன்

திரும்பி  வந்து குத்துவிளக்கில் கணக்கு பார்த்து தலையிடி வந்த நாட்களும் உண்டு

ஆனால் இப்பொழுதெல்லாம்  அப்படி செலவுகள் கட்டுக்குள் வந்து  விடுகின்றன

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு செலவை  பார்த்துக்கொள்கிறார்கள் (அவர்களாகவே)

இது குடும்பத்துக்கும் நல்லது தானே..?

 

நன்றி  புத்தர் அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

 

 

நிச்சயம் நல்லது ஆனால் சாப்பாட்டுக்கடையில் பங்கீடு தான் கொஞ்சம் மனதை உறுத்துகிறது....காரையே, பிள்ளைகள் வாங்கி கொடுக்கும் நாட்டில அவர்கள் வாழ்கிறார்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

நிச்சயம் நல்லது ஆனால் சாப்பாட்டுக்கடையில் பங்கீடு தான் கொஞ்சம் மனதை உறுத்துகிறது....காரையே, பிள்ளைகள் வாங்கி கொடுக்கும் நாட்டில அவர்கள் வாழ்கிறார்கள்....

உண்மைதான்

இது போன்ற  சிறிய சிறிய  பங்கீடுகளும்

புரிதலும்

பெரிய விடயங்களுக்கும் உந்துதலாகும் என்பது எனது கணிப்பு

அடுத்ததாக  உங்களுக்கு எந்தக்கார் விருப்பம் என்று மக்கள் கேட்டு  வைத்திருக்கிறார்கள்

விரைவில் கைக்கு வரும்.

Edited by விசுகு

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு வேலை செய்த இடத்தில் மாதமொருமுறை மலேசியசீனா உணவகம் ஒன்றுக்கு மதிய உணவு உண்ணச்செல்வோம்.  மூன்று பேர் சென்றால் சோற்றுடன் 4 வெவ்வேறு கறிகளை வாங்குவோம். 7 பேர் சென்றால் வெவ்வேறு 8 கறிகளை வாங்குவோம். ஒரு முறை 14 பேர் போனோம். 15 வெவ்வேறு கறிகளை வாங்கினோம்.  எல்லாவற்றையும்சாப்பிட்டுவிட்டு  நாங்கள் பங்கிட்டு பணத்தினைச் செலுத்துவோம். எல்லோரும் குறைந்த விலையில் எல்லா உணவுகளையும் சுவைப்போம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.