Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் எப்பொழுது கருணைகாட்டுகின்றாரோ அப்போதுதான் தீர்வு – விஜயகலா மகேஸ்வரன்

Featured Replies

.

தமிழர்கள் தீர்வுக்காக போராடக்கூடாது, கடவுள் கருணையினாலேயே அது சாத்தியமாகும் - விஜயகலா!

தமிழர்கள் தீர்வுக்காக போராடக்கூடாது, கடவுள் கருணையினாலேயே அது சாத்தியமாகும் – விஜயகலா!

 

தமிழ் மக்கள் தீர்வு தீர்வு என தீர்வை எதிர்பார்க்காது இருக்கவேண்டுமெனவும், கடவுள் கருணை கூர்ந்தால் மாத்திரமே எங்களுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடங்களாக யுத்தம் நடந்த நிலையில் நாம் அந்த வடுக்களை இல்லாமல் செய்யவே பாடுபட வேண்டியிருந்தது. தற்போது அது நடைபெற்றுள்ளது.

ஆகவே தீர்வு தீர்வென்று நாம் தீர்விற்காக பாடுபடக்கூடாது. என்றாவது ஒருநாள் தீர்வு கிடைக்கும். கடவுள் கருணை காட்டினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=68287

 

 

Edited by Athavan CH

கடவுள் எப்பொழுது கருணைகாட்டுகின்றாரோ அப்போதுதான் தீர்வு – விஜயகலா மகேஸ்வரன்

 

vija.jpg

தமிழ் மக்கள் தீர்வுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெகு விரைவில் தீர்வு கிடைக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்  நோக்கும் போது தீர்வு எப்போதோ ஒரு நாளைக்கு கிடைக்கும் என்ற நிலையே காணப்படுகிறது. அதை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காது எப்பொழுது கடவுள் இந்த தீர்வை எங்களுக்கு வழங்கவேண்டும் என்று கருணை கூறுகின்றாரோ அன்றைக்குதான் தீர்வு.

எங்களுடைய தீர்வு என்றைக்கு ஒரு நாள் என  கடவுளால் எழுதியிருந்தால் அது அன்றைக்கு கிடைக்கும் இல்லையோ நாங்கள் இப்படியே வீதியில் நிற்க வேண்டிய ஒரு நிலை இருக்கிறது நாங்கள் தீர்வு தீர்வு என்று நினைத்துக்கொண்டிருக்காமல் யுத்தத்தின் வடுவில் இருந்து வெளி வரவேண்டும் ,  வெளி வந்திருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்தார்.

இன்று 20-05-2017 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்ற நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை  தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது

கடந்த கால நினைவுகளை நினைத்து பார்;த்தால் மீண்டும் அதிலிருந்து மீளவே முடியாது என்ற நிலைமையே இருந்தது. கடந்த கால முப்பது வருட யுத்தத்திற்கு முகம்கொடுத்து இன்று வெளியில் வந்திருக்கின்றோம் யுத்தத்திற்கு பிறகு அடிப்படை வசதிகளை நாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் அபிவிருத்தியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் எங்களுடைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்திருக்கிறது. இந்த மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிப்புக்களுக்குள்ளாகியிருகிறார்கள். வடக்கு மாகாணத்தில் முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக உள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நல்லாட்சி அரசு அங்கவீனர்களுக்கு பல உதவிகளை வழங்கிவருகிறது.

அமைச்சர் வஜிர அபேயவர்த்தன எங்களுடைய விடுதலைப்புலிகளின் காலத்திலும் கூட  இங்கு வந்து சென்றிருக்கின்றார். அவர் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை எங்களைப் பார்க்கிலும் நன்கு தெரிந்தவர். ஒவ்வொரு நிமிடமும் கதைக்கும் போது எங்களுக்கே உதாரணம் சொல்லிக் கதைக்க கூடியவர் அப்படியான ஒரு அமைச்சர் எங்களுக்கு கிடைத்திருக்கின்றார் எனத் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் நாளைய அரசியல் தலைவர்களை தெரிவு செய்கின்ற போது மக்கள் நிதானமாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் இல்லை எனில் மீண்டும் வீதிக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் எனத்தெரிவித்த அவர்  நல்லாட்சி அரசில் துரோகிகளுக்கும் இனவாதிகளுக்கும் இடம்கொடுக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்

https://globaltamilnews.net/archives/27497

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா ஆமிக்காரனிடம் அடி வாங்கி களைத்துப்போனா/

2 hours ago, alvayan said:

அக்கா ஆமிக்காரனிடம் அடி வாங்கி களைத்துப்போனா/

எங்க என்னத்தால அடி வேண்டினவா ? ???

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. தாங்கள்.. தங்கள் கணவரை உயிருடன் திரும்பத் தரச் சொல்லி.. கடவுளிடம் கேட்டு வாங்கிவிட்டு.. தமிழ் மக்களுக்கு இதனை உபதேசிப்பது நல்லது. 

அரசியல் செய்யத் தெரியாட்டில்.. அதற்கான சந்தர்ப்பம் அமையும் வேளையில்.. அதில் இருந்து விலகி விடுவது கெளரவம். மாறாக.. கண்டதையும் உளறி... உள்ளதையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செந்தமிழாளன் said:

எங்க என்னத்தால அடி வேண்டினவா ? ???

பட்டறிவு சொன்னா கேட்டுக்குங்க சாமீ......அவனவன் அனுபவம் அவனுக்குத்தான் தெரியுமுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா நமக !

 

 

 

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் வீழ்ச்சியைத்  தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் (இவரது அரசியல்) தத்தமது தேவைக்கேற்ப தமது உரைகளில் பயன்படுத்தவது சரியான அர்பணிப்புமிக்க தலைமைத்துவமொன்று வரும்வரை தொடரவே செயயும். அதைவிட ரணிலுக்கு நெருக்கடியேற்படாது தடுப்பதும் இவரது கடமையல்லவா? அதற்காக எதையாவது சொல்லவேண்டும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கடவுளை சொல்லுகின்றார் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Athavan CH said:

தமிழர்கள் தீர்வுக்காக போராடக்கூடாது, கடவுள் கருணையினாலேயே அது சாத்தியமாகும் – விஜயகலா!

இவ என்ன அன்னதான மடத்திலை நிண்டு கதைக்கிறமாதிரி கதைக்கிறாவு....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவ என்ன அன்னதான மடத்திலை நிண்டு கதைக்கிறமாதிரி கதைக்கிறாவு....:grin:

அரசியல் சாணாக்கியம் என்பது இப்பவுள்ள அரசியல் வாதிகளுக்கு தெரியாது  தெரிந்திருக்க விரும்புவதுமில்லை தங்களது இருப்புக்களை பாதுகாத்து கொள்ளவும் வங்கி கணக்கை யாருக்கும் தெரியாமல் பேணுவதிலுமே குறியாக இருக்கிறார்கள் நான் யாரையும்குறித்து சொல்ல வில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழரசு said:

எந்த கடவுளை சொல்லுகின்றார் :rolleyes:

இப்போ அவருக்கு ரணில்தான் கடவுள். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.