Jump to content

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை .

"நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்."

பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.

எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.

மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு

இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.

இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது

இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.

தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.

தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை.

( நயினை அன்னைமகன் )

நன்றி  முக நூலில் இருந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை .

 இஞ்சத்தையான் கஸ்டங்களை அப்ப தொடக்கம் சொல்லிக்கொண்டு வாறன்......

அங்கையிருக்கிறதுகள் கேட்டாத்தானே....

ஏதோ நான் காசுமரத்துக்கு கீளை படுத்திருக்கிற மாதிரியும் அவையள் முன்னேறிடுவினம் எண்டு எரிச்சல் பொறாமையிலை சொல்லுறமாதிரி நினைக்கினம்....
வாங்கோ இங்கை வந்து வேலை செய்து பாருங்கோ....அப்ப தெரியும் கையின் கருக்குமட்டை சொரசொரப்பு...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர்.

தற்போதைய நிலைமை இதுவல்ல ...ஊரிலிருக்கும் ஒரளவு விடயம் தெரிந்த அனைவருக்கும் இந்த விளக்கம் தெரியும். இவர்கள் காட்டும் கலரில் பிரமிப்பதில்லை மாறாக நமுட்டு சிரிப்பை சிரித்து மனதுக்குள் சொல்லிக்கொள்வினம் தம்பியர இனி நான்கு வருடத்துக்கு ஊரில காணக்கிடைக்காது என்று. பிரமித்தகாலம் எல்லாம் மலையேறிவிட்டது. இவர்களை சூழ்ந்து கொள்ளும் இன சன நண்பர்கள் எல்லாம் பெரும் பாசத்திலோ சூழ்கிறார்கள் ...?
வெளிநாட்டு வெற்று பந்தா பார்ட்டி புடுங்கும் வரைக்கும் புடுங்குவோம் என்று ஓசித்தண்ணி இத்யாதி ...இத்யாதி என்று அனுபவித்து விட்டு போகும்போது கஜுக்கொட்டை பக்கெட்  ஒன்றை கையில் திணித்து அனுப்பிவிடுவர்...எங்கடை புலத்து ஆக்களும் நெம்பர் ஒன் சுயநலவாதிகள் தெரியுமோ. சிக்கினான் சின்னத்தம்பி என்று பிரித்து மேஞ்சுடுவினம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள மக்கள் யாவும் அறிந்தவர்கள் ஒரு சிலரைத்தவிர ஆனால் வெளிநாட்டு வாழ்க்கை  பந்தாக்கு வாழ்பவ்ரகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்குறார்கள் சில படு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கூழோ கஞ்சியோ எம் நாட்டில் வாழ்ந்தால் போதும் எனக்கு 

எனக்கு கார் வேணாம் அப்பாடா பெடல் இல்லாத சைக்கிள் போதும் 

கையில் சுவிஸ் வாச்சி வேணாம்  காகம் போதும் கரந்தால் நேரமறிவேன் மாலை மய்க்கினால் நேரமறிவேவ் 

பீசா , வேணாம் , பர்கர் வேணாம் பழைய தண்ணிச்சொறு போதும் 

ஒரு சறமும் வேட்டியும் சொல்லும் நான் தமிழன் என எந்த ஆடையும் என்னை பிடிக்க முடியாது 

கையில் அதிக காசு  வேணாம் நல்ல உறவுகள் போதும் போலியாக வாழ முடியாது 

ஏசி வேணாம் , மெத்தை வேணாம் ஒர்  தரை போதும் படுத்துறங்க

இன்னும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழனாக ஒன்று சேர்ந்தால்தான் அதிசயம் !

மற்றும்படி எல்லா குடும்பத்திலும் கலந்து இருப்பதாலோ என்னோவோ 
இன்னமும் கொஞ்சம் பொது நிறமானவர்கள் ... கறுப்பானவர்கள் 
என்பதை தவிர 

மற்றையபடி எல்லா வித பிரிவினையும் உண்டு.
பொறாமையின் அதியுச்சிதான் இதன் முதன்மை காரணம் 

போராட்டம் என்றாலும் ...
பொருளாதார உதவி என்றாலும் ...
குடும்ப மேம்பாடு என்றாலும் ....
கூத்தமைப்பு உண்டியல் குலுக்கினாலும்.
கடடேறும்பாய் தேய்ந்தது புலப்பெயர்ந்த தமிழன்தான்.

அவன் செய்த மாபெரும் குற்றம் ....
25 30 வருடம் முன்பு வரும்போது கொண்டுவந்த 
சாரம் கேஷியோ மணிக்கூடு இதுகளை தொலைத்துத்தான்.
திரும்பி போகும்போது அவற்றுடன் திரும்பி இருந்தால் 
அங்கிருந்து கொளுத்தவர்களுக்கு குளிர்ந்திருக்கும் போல??

அங்கிருக்கிறவை பெருமை கொள்ளலாம் தாம் ஐ போன் 8 10 
எல்லாம் வைச்சிருக்கிறம் என்று ...
இங்கிருக்கிறவனுக்கு அந்த குப்பை ஒரு வார சம்பளம் 
ஆனால் அதனுடன் போக கூடாது ....
இனி ஆப்பிளுக்கு சொல்லி இங்கிருந்து கொண்டுபோற மாதிரி 
ஐ போன் - 5    -6 என்று ரிவெர்சில செய்ய வேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Maruthankerny said:

அங்கிருக்கிறவை பெருமை கொள்ளலாம் தாம் ஐ போன் 8 10 
எல்லாம் வைச்சிருக்கிறம் என்று ...
இங்கிருக்கிறவனுக்கு அந்த குப்பை ஒரு வார சம்பளம் 
ஆனால் அதனுடன் போக கூடாது ....
இனி ஆப்பிளுக்கு சொல்லி இங்கிருந்து கொண்டுபோற மாதிரி 
ஐ போன் - 5    -6 என்று ரிவெர்சில செய்ய வேணும். 

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

 
சிறப்பு எழுத்துக்குறிகள்

புலம்பெயர்தவணை உங்களின் சகோதரர்கள் எனும் மனநிலையில் பார்த்தால்
இந்த கேள்விகள் வரத்தேவையில்ல
அவர்கள் வரும்போது கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அவன

 
சிறப்பு எழுத்துக்குறிகள்
புலம்பெயர்தவணை உங்களின் சகோதரர்கள் எனும் மனநிலையில் பார்த்தால்
இந்த கேள்விகள் வரத்தேவையில்லை
அவர்கள் வரும்போது கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அவனது உழைப்பில்தான்
அவனது குடும்பம்
ஊர்
நாடு
என்று எல்லாம் வளருகிறது.

எல்லவற்றையும் உதறிவிட்டு இருந்தால்
ஒருவார உழைப்பில் அந்த குப்பையை வாங்க முடியும்.

முதல் தலைமுறைதான் உள்ளதை எல்லாம் ஊருக்கு
ஊத்திவிட்டு இப்படி புலம்புகிறார்கள் ... இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் நாட்டுக்கு என்று உழைத்தவன்
ஊரில் இருந்தாலும் .... புலம்பெயர்ந்து இருந்தாலும்
இழந்தவன் அவன்தான்.

தான் இருந்தவன் இங்கிருந்தாலும் அங்கிருந்தாலும்
ஊத்திதான் இருக்கிறான். 
 
இதை மேம்படுத்த உதவவும்!
44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

து உழைப்பில்தான்
அவனது குடும்பம்
ஊர்
நாடு
என்று எல்லாம் வளருகிறது.

எல்லவற்றையும் உதறிவிட்டு இருந்தால்
ஒருவார உழைப்பில் அந்த குப்பையை வாங்க முடியும்.

முதல் தலைமுறைதான் உள்ளதை எல்லாம் ஊருக்கு
ஊத்திவிட்டு இப்படி புலம்புகிறார்கள் ... இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் நாட்டுக்கு என்று உழைத்தவன்
ஊரில் இருந்தாலும் .... புலம்பெயர்ந்து இருந்தாலும்
இழந்தவன் அவன்தான்.

தான் இருந்தவன் இங்கிருந்தாலும் அங்கிருந்தாலும்
ஊத்திதான் இருக்கிறான். 

 
இதை மேம்படுத்த உதவவும்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Maruthankerny said:

.. இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

புலம்பெயர்சின் அடுத்த  தலைமுறைகள் அவுடிகளுடனும் பீமர்களுடனும் வலம் வருவது மகிழ்ச்சி 
ஆனால் முக்கியமாக  ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது   அவர்களுக்கும் புலத்து சொந்தங்களுக்கிடையான உறவு அப்படியே அருகிக்கொண்டு செல்கிறது. புலத்திலும் புலம்பெயர்சிலும் முதலாம் தலைமுறை  இறுதி தலை விழும் காலத்திருந்து 
புலம் , புலம்பெயர் இரண்டாம் தலைமுறைகளுக்கான உறவு சொந்தம் என்பதிலிருந்து நாகரிகம் கருதிய ஒரு உறவாக மாறும் சாத்தியமே அதிகம் 
உதாரணமாக எனது குடும்பத்திலும் எனது தாயாரின் நான்கு சகோதரங்கள் எண்பதுகளில்  புலம்பெயர்ந்தவர்கள் . அவர்களுக்கிடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை விட 
அவர்களது பிள்ளைகள் (இரண்டாம்   தலைமுறை ) எங்களிடம் இருக்கும் அந்நியோன்னியம் நாகரிகம் கருதிய ஒன்றாகவே இருக்கிறது 
அதாவது எனது மச்சான் என்பதை விட மாமாவின் மகன் என்பதாகவே இருக்கிறது . எந்த நல்லவை கெட்டவைகளில் இரண்டாம் தலைமுறைகளை காணவே கிடைக்காது. புலம் பெயர் இரண்டாம் தலைமுறைகளின் வாழ்க்கை துணைகள் அனைத்துமே வெள்ளைகள்  
உதாரணமாக குழந்தை பிறந்தால் கூட முகப்புத்தகத்தில் லைக் போட்டு வாழ்த்திவிட்டு நகரும் ஒரு வகையிலே தான் இரண்டாம் தலைமுறை இருக்குகிறது . உண்மையிலே இரண்டாம் தலைமுறை எப்போதாவது  புலத்திற்கு வரும்நோக்கில் 
தொடர்புகொண்டாலோ புலத்திலிருக்கும் இரண்டாம் தலைமுறை ஏதாவது சாக்கு சொல்லி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்க்கும் பாங்கே அதிகரித்துகொண்டு  செல்கிறது. மூன்றாம் தலைமுறையில் இந்த இடைவெளிகள் அதிகமாகி 
தமக்கு  உறவுகள் உண்டென்பதையே இரு சாராரும் மறந்துவிடுவார்கள்.  இப்படி புலத்துடனான தொடர்பே முற்றாக அற்றுபோனபின் புலம் பெயர் அடுத்த சந்ததிகளில் எவ்வாறு புலத்தின் அடுத்தசந்ததி தங்கியிருக்கப்போகிறது
நிச்சயமாக இதுமட்டும் நடக்காது    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

தற்போதைய நிலைமை இதுவல்ல ...ஊரிலிருக்கும் ஒரளவு விடயம் தெரிந்த அனைவருக்கும் இந்த விளக்கம் தெரியும். இவர்கள் காட்டும் கலரில் பிரமிப்பதில்லை மாறாக நமுட்டு சிரிப்பை சிரித்து மனதுக்குள் சொல்லிக்கொள்வினம் தம்பியர இனி நான்கு வருடத்துக்கு ஊரில காணக்கிடைக்காது என்று. பிரமித்தகாலம் எல்லாம் மலையேறிவிட்டது. இவர்களை சூழ்ந்து கொள்ளும் இன சன நண்பர்கள் எல்லாம் பெரும் பாசத்திலோ சூழ்கிறார்கள் ...?
வெளிநாட்டு வெற்று பந்தா பார்ட்டி புடுங்கும் வரைக்கும் புடுங்குவோம் என்று ஓசித்தண்ணி இத்யாதி ...இத்யாதி என்று அனுபவித்து விட்டு போகும்போது கஜுக்கொட்டை பக்கெட்  ஒன்றை கையில் திணித்து அனுப்பிவிடுவர்.
..எங்கடை புலத்து ஆக்களும் நெம்பர் ஒன் சுயநலவாதிகள் தெரியுமோ. சிக்கினான் சின்னத்தம்பி என்று பிரித்து மேஞ்சுடுவினம்   

 

 

cause and effect........  

 

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலம்பெயர்சின் அடுத்த  தலைமுறைகள் அவுடிகளுடனும் பீமர்களுடனும் வலம் வருவது மகிழ்ச்சி 
ஆனால் முக்கியமாக  ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது   அவர்களுக்கும் புலத்து சொந்தங்களுக்கிடையான உறவு அப்படியே அருகிக்கொண்டு செல்கிறது. புலத்திலும் புலம்பெயர்சிலும் முதலாம் தலைமுறை  இறுதி தலை விழும் காலத்திருந்து 
புலம் , புலம்பெயர் இரண்டாம் தலைமுறைகளுக்கான உறவு சொந்தம் என்பதிலிருந்து நாகரிகம் கருதிய ஒரு உறவாக மாறும் சாத்தியமே அதிகம் 
உதாரணமாக எனது குடும்பத்திலும் எனது தாயாரின் நான்கு சகோதரங்கள் எண்பதுகளில்  புலம்பெயர்ந்தவர்கள் . அவர்களுக்கிடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை விட 
அவர்களது பிள்ளைகள் (இரண்டாம்   தலைமுறை ) எங்களிடம் இருக்கும் அந்நியோன்னியம் நாகரிகம் கருதிய ஒன்றாகவே இருக்கிறது 
அதாவது எனது மச்சான் என்பதை விட மாமாவின் மகன் என்பதாகவே இருக்கிறது . எந்த நல்லவை கெட்டவைகளில் இரண்டாம் தலைமுறைகளை காணவே கிடைக்காது. புலம் பெயர் இரண்டாம் தலைமுறைகளின் வாழ்க்கை துணைகள் அனைத்துமே வெள்ளைகள்  
உதாரணமாக குழந்தை பிறந்தால் கூட முகப்புத்தகத்தில் லைக் போட்டு வாழ்த்திவிட்டு நகரும் ஒரு வகையிலே தான் இரண்டாம் தலைமுறை இருக்குகிறது
. உண்மையிலே இரண்டாம் தலைமுறை எப்போதாவது  புலத்திற்கு வரும்நோக்கில் 
தொடர்புகொண்டாலோ புலத்திலிருக்கும் இரண்டாம் தலைமுறை ஏதாவது சாக்கு சொல்லி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்க்கும் பாங்கே அதிகரித்துகொண்டு  செல்கிறது. மூன்றாம் தலைமுறையில் இந்த இடைவெளிகள் அதிகமாகி 
தமக்கு  உறவுகள் உண்டென்பதையே இரு சாராரும் மறந்துவிடுவார்கள்.  இப்படி புலத்துடனான தொடர்பே முற்றாக அற்றுபோனபின் புலம் பெயர் அடுத்த சந்ததிகளில் எவ்வாறு புலத்தின் அடுத்தசந்ததி தங்கியிருக்கப்போகிறது
நிச்சயமாக இதுமட்டும் நடக்காது    

 

 

Link to comment
Share on other sites

புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி மேலோட்டமாக ஆராய முற்பட்ட மேற்படி முகநூல் பகிர்வு அதன் இப்பிரச்சனைக்கான அடிப்படை என்ன என்பதை பற்றி வசதியாக மறந்து விட்டு தனியே புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது மட்டும் சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டியுள்ளது. மற்றவர்களுக்கு பந்தா காட்டும் பழக்கம் ஐரோப்பாவில் இருந்து அங்கு சென்றதல்ல. எமது தாயகம் உட்பட தெற்காசிய நாடுகளில தான் இப்பழக்கம் பல காலமாக  வேரூன்றி உள்ளது. புலம் பெயர் மக்களில் சிலர் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் அந்த பழக்கம் அவர்களுக்கு தாயகத்தில் தான் ஊட்டப்பட்டது என்பதை மறந்து அது ஏதே மேற்கத்தய பழக்கம் என்பது போல கட்டுரையாளர் காட்ட முன்வந்துள்ளார். ஐரோப்பியர்கள் தனது வாழ்வில் என்றுமே பந்தாகாட்டுவதில்லை என்பது அவர்களுடன் பழகும் எவரும் இலகுவில் அறிந்து கொள்வர். எனவே இவவாறு பந்தா காட்டுபவர்கள் அந்ந பழக்கத்தை தாயகத்தில் தான் வாழ்ந்த காலத்தில் தான் கற்று தனது நிலை பொருளாதாரத்தில் உயரும் போது அதை மற்றவர்களுக்கு காட்ட முன்வநதுள்ளனர். எனவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்  என்ற விடுப்பு பார்க்ககும் கலாச்சாரத்தை தாயகத்தில் உள்ளவர்கள் உட்பட நம்மவர் கைவிடும் போது இந்த பந்தா காட்டும் பழக்கமும் இல்லாமல் போய்விடும். உண்மையில் மற்றவர்களை பார்க்கும் தவறான பார்வையும் அவர்கள் பந்தா காட்டுகிறார்கள் என்ற நினைப்புக்கு காரணம்.

நாற்பதுகளின் நோய்களை சுமந்து முதுமை அடைந்து விடும் மக்கள் கூட்டம் என்றால் தவறு எங்கே இருக்கிறது. இருபதுகளில் சிறந்த உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களே நாற்பதுகளில் மனிதர்கள்  நோய்வாய்பட பெரும்பாலும் காரணமாகிறது. இருபதுகளில் இங்கு வந்த தலைமுறையினர்  தவறான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தனர் என்பதையே மறைமுகமாக  கட்டுரை சொல்கிறது. அப்படியானால்   இருபதுகளின் தமது ஆரம்ப உயர் கல்வியை முடித்து இங்கு வந்த இளைஞர்களுக்கு சிறந்த சுகாதார  வாழ்க்கை முறையை தாயக கல்விமுறை சொல்லி கொடுக்க வில்லையோ என்ற ஐயம் எழுவது இயல்பானது. 

துப்பவரவு தொழிலாளி காட்டும் கலரால் என்று அத்தொழிலை இழிவாக கட்டுரையாளர் கூறுவது எமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அத்துப்பரவு தொழிலாளிடன் ஒரு நிறுவனத்தில் இயக்குனர் பதவியில் இருக்கும் ஒருவர் சரிசமமான இருந்து உணவருத்துவது  ஐரோப்பிய கலாச்சாரம்

எம்மவர்களின் அளவுக்கு அதிகமான மது பாவனை  இங்கு கற்று கொண்டதல்ல. தாயகத்தில் கூட அப்படிதான். ஐரோப்பாவில் ஒரு Restaurant அறிமுகம் இல்லாத  மது அருந்துபவர்களின் பக்கத்து மேசையில் ஒரு குடும்பம் தனது குழந்தைகளுடன் கண்ணிமான முறையில்  உணவருந்த முடியும். அதிகம் கலாச்சாரம் பேசும் தாயகத்தில் என்ன நிலை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  மனிதர்கள் உறவாடாத தனிமை சிறை என்பது மிகைபடுத்த பட்ட கூற்று. பணத்தை தவிர வேறு உலக அறிவு இல்லை என்றால் அதற்கு காரணம் வாழும் நாட்டின் இணைவு வாழ்க்கையை (intergration) வாழ தவறுவதே. தூக்கி எறியவேண்டிய பத்தாம்பசலி த்தனமான  மடைத்தனமான பல  பழக்கங்களை கலாச்சாரம் என்ற அடைமொழியுடன்  இன்றும் கைகொள்ள தெரிந்த எமக்கு  வாழும் நாட்டின் சிறந்த பழக்கங்களை கற்று கொள்ள தவறுவது  மறுப்பது ஏன்?  எம்மை போல புலம்பெயர்ந்த மற்றய இன மக்கள் ஒப்பீட்டு ரீதியில் மிகவும் வேகமாக இணைவு வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் போது எம்மவர்களால் அது முடியாதற்கு காரணம் தாயகத்தில் அவர்கள் பழகிய விதமே. ஆகவே இங்கு புலம் பெயர்ந்தவர்களின் மீது விரல் நீட்டி தாயகத்தில் இருப்பவர்கள் குற்றம்   சாட்டும் போது மற்றயை விரல்கள் குற்றம் சாட்டுவபர்களையும் சேர்த்தே காட்டி நிற்கிறது.

.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

அண்ணேய் முதலில் ஊரில் இருக்கும் சிங்கங்களை ஒழுங்கா ஒரு வேலை செய்ய சொல்லுங்க பார்க்கலாம் ஒரு வாழை மரத்துக்கு பாத்தியை மாத்த கூலிக்கு ஆட் பிடிக்கும் கூட்டம் இன்னும் வருது வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Wolken, Himmel, Brücke und im Freien

 

Bild könnte enthalten: Fahrrad und im Freien Bild könnte enthalten: Auto, im Freien und Natur

Bild könnte enthalten: Schnee, Auto und im Freien

Bild könnte enthalten: Schnee und im Freien

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான்  பார்த்தேன்

அருமையான  கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன

 

2003  இல் ஊர்   போயிருந்தபோது நான்  சொன்னது

எனது ஊரை கூட்டி அள்ளினாலே நான் கோடீசுவரனாகிவிடுவேன்

இன்றுவரை அதை செய்ய  ஆளில்லை

இது தான் அங்குள்ள  நிலைமை

ஆனால் புலத்தில் வந்து......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில்  வாழ்ந்துவிட்டு

தாயகத்தில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் ஒன்றை  செய்துவரும்

முகநூல் நண்பர் ஒருவரின் கருத்து இது.

 

களத்திலும் புலத்திலும் வாழ்பவன்

எனக்கொரு உண்மை தெரியும்.

நாட்டில் உள்ளவர்களில்99%

வெளி நாடு சென்றுவாழவே விரும்பும் கின்றார்கள்.

சின்ன உதாரணம்                                                                                                                                                                                                                                                                                                               என்  நண்பர் படித்தவர் வசதியானவர் அவரின் ஆதங்கம் "எங்கள் குடும்பதில் ஒருவர் கூட வெளிநாடு செல்லும் பாக்கியம் அற்றவர்கள்."

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/13/2017 at 1:39 AM, சுவைப்பிரியன் said:

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

இன்னும் எழுத தொடங்கல எதிர்பார்த்தேன் பார்த்துக்கொண்டிருக்கிறன் உங்கள் கருத்தையும் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.