Jump to content

திருமண வாழ்க்கை பற்றி ஒரு ஆண்மகனின் அழுத்தமான கடிதம்: அனைவரும் படியுங்கள்…!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண வாழ்க்கையில் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஏற்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த சமுதாயமே, ஆண்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை திரையிட்டு மறைத்துக்கொள்வதற்கான காரணங்களை வழிவகுத்துவிடுகிறது.

வரதட்சணை பிரச்சனை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்ரவதைகள் இவையெல்லாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனைகள், ஆனால் அவற்றை ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால் ஏளனசிரிப்பு தான் இங்கு தீர்வாக கிடைக்கும், அல்லது இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆண்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.

அப்படி தனது குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர்வுக்காக எழுதியுள்ள கடிதம் இதோ,

எனது பெயர் முகுந்த், மின் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் ஒருவரையொருவர் ஓரளவுக்குதான் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது.

ஏனெனில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாத இடைவெளியில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை, மாறாக சண்டைகளும், சச்சரவுகளும் ஆரம்பமானது.

எனது மனைவி சிறு சிறு விடயங்களுக்கு கூட கோபப்படுவாள். நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானால், வார்த்தைகளால் என்னை சித்ரவதை செய்வாள்.

அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்றால், விடாப்பிடியாக நான் அழைப்பை எடுக்கும்வரை போன் செய்து கொண்டிருப்பாள்.

தாமதாக வீட்டிற்கு வருவதை தாங்கிகொள்ளாத அவள், நான் வீட்டுக்கு வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிபோட்டு உடைப்பாள்.

அந்த நேரத்தில் நான் பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக அறையில் போய் அமர்ந்துகொண்டேன், அது அவளை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது.

எனக்கு பெற்றோர் கிடையாது, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரனுக்கு காது கேட்காது. இதனால் இருவரும் என்னோடு தான் தங்கியிருப்பார்கள் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் நானும் எனது உறவினர்களும் தெரிவித்திருந்தோம்.

அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், முதலில் இதனை ஏற்றுக்கொண்ட எனது மனைவியால் பின்னர் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் எனது சகோதரர்களையும் வார்தைகளால் காயப்படுத்துவாள். நான் அலுவத்தில் இருந்து தாமதாக வருவதால், எனக்கும், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தவறான தொடர்பு உள்ளது என அவளாக கற்பனை செய்து கொண்டு என்னிடம் சண்டைபோடுவாள்.

ஒரு முறை எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பெண்கள் அனைவரிடம் சண்டைபோட்டு என்னைப்பற்றியும் தவறாக பேசினாள்.

இதனால் எனது சக ஊழியர்கள் முன்னிலையில் கூனி குறுகிபோய் நின்றேன். இந்த பெயர் கெட்டுவிட்டதே என கருதி அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

எனது மனைவி இதுவரை 3 கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறாள், ஆனால் இதுவரை எந்த ஒரு கம்பெனியிலும் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமாட்டாள்.

அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கலாம் என கருதி, மருத்துவரிடம் சென்றோம். அங்கு அவளுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனை எடுத்துக்கொண்டாள்.

நாட்கள் ஆக ஆக, அவளின் சித்ரவதைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன, ஒருமுறை கையில் இருந்த பொருளை எடுத்து என்னை நோக்கி அடித்ததில், எனது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றேன். இவளின் கொடுமையை 1 1/2 ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவளோ, கர்ப்பிணியாக இருக்கும்போது அவளை அடித்தேன், எனது சகோதரர்கள் அவளிடம் தவறாக நடக்க முயன்றனர், வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினாள்.

பெண்களை பாதுகாக்க போட்டப்பட்ட சட்டங்களை அவள் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, எங்களுக்கு எதிரான அனைத்தையும் திசைதிருப்பி விட்டாள். நான் காவல்நிலையம் சென்று எனது மனைவியால் எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தால், அவர்களுக்கு என்னை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

உனது மனைவி உன்னை அடித்தது உண்மைதானா? நீ அடிவாங்கினாயா? என்பது போன்ற உதாசீனமான கேள்விகளை கேட்டனர்.

இறுதியில் எங்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. எனக்கு பெண் குழந்தை இருப்பதால் சட்டப்படி பெண் குழந்தை தாயின் வசம் ஒப்படைக்கப்படும் என்பதால் அவளை பெறுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை.

எனது மகள் அவளது தாய்வழி உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வசித்து வருகிறாள். ஒரு நரகமான வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்துள்ளது என்றாலும், எனது வாழ்க்கையும் சீரழிந்துவிட்டது என நினைத்து வருத்தப்படுகிறேன்.

இதனை எதற்காக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்றால், பெண்கள் மட்டுமே ஆண்களால் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று சமுதாயம் கருதுகிறது, ஆனால் ஆண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது.

வன்முறைகள் என்று வந்துவிட்டதால் அது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். எனவே இருபாலருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

 

todayjaffna.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் வர முதலாவது காரணம் பிள்ளை யாரையாவது விரும்பியிருக்கும்.சாதி மத பிரச்சனைகளால் விருப்பம் இல்லாத ஒருவருக்கு கட்டி வைத்து பெற்றோர் தமது கடமையை முடித்துவிடுவார்கள். பிள்ளை பெற்றோரின் கோபத்தை வந்தவரில் காட்டிக் கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை தன் கணவன் தனக்குமட்டும் தான்  என்ற எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறா .. அவரின் சகோதரர் களோடு  அவர் ..உறவாடுவதை விருப்பவில்லை ..வேண்டா கணவன் கைப்படடாலும் குற்றம் கால்படாலும் குற்றம் என்று இல்லாததும் பொல்லாததும்   சொல்லி  பிரிந்துவிடடா ...தற்போது  திருமணங்கள்   மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு முற்றிலுமான கற்பனைக் கதை அல்ல...நிறைய உண்மைகள் கலந்திருக்கின்றன!

ஒரு பெண் நிறையக்  கனவுகளைத் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறாள்! அவற்றை நிறைவேற்ற வேண்டிய ஒரு ஒரு பெரிய சுமையை....தனது கணவன் மீது சுமத்தி விடுகிறாள்!  தனது கனவுகளை மட்டுமல்ல....தனது தாய் தந்தையர்....சகோதரர்களின் கனவுகளையும் கூட..அவன்  மீதே சுமத்தி விடுகிறாள்!

ஒரு அழகிய சிலை ஒன்று...விலை கொடுத்து வாங்கப் பட்டால்...அந்தச் சிலையை வடித்தவர்கள் ...அந்தச் சிலை மீதான முழு உரிமையையும் இழந்து போகின்றார்கள் என்பது தான் நிதர்சனம்! அந்தச் சிலை தங்கள் கண் முன்னாலேயே உருக்குலைந்து போவதைக் கண்டும் ..எதுவும் செய்ய முடியாத நிலையில் அவனைப் பெற்றவர்கள் அழுது வடிக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம்! சமுதாயம், குடும்பக் கெளரவம் எனப் பல காரணங்களினால்..அவனது பெற்றோரின் கரங்கள் கட்டப்பட்டு விடுகின்றன!

தங்கள் வசதிக்கேற்ற மாதிரி....,.வளர்ந்த சமுதாயத்தின் சட்டங்களையும்......வாழும் சமுதாயத்தின் சட்டங்களையும்...உபயோகித்துக் கொள்வார்கள்! இப்படியான மன நிலையில் உள்ளவர்களுக்கு....ஆலோசனை என்ற பெயரில்..உதவப் பலர் உள்ளனர்!

இளமையிலேயே தலை மயிர் நரைத்துப் போன பலரை நானும் அறிவேன்!

சுய நலம் என்பது வெறியாக மாறும் போது....அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகி விடுவதே....சாலச் சிறந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்! அது ஒரு நரம்பியல் மனநிலை சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதனால், மனநல  சிகிச்சை எடுத்திருந்திருக்கலாம்!

அதற்காக ஆண்கள் அனைவருமே யோக்கியர்கள் என்று அர்த்தமில்லை,

காலியான பல விஸ்கி போத்தலுகளுக்கு மட்டுமே தெரியும் ஆண்கள் அனைவருமே உத்தமர்கள் அல்ல என்று...

அடுப்படியில் கிடக்கும் பூரிக்கட்டைக்கு மட்டுமே தெரியும் பெண்கள் அனைவருமே மென்மையானவர்கள் அல்ல என்பது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

பெண் ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்! அது ஒரு நரம்பியல் மனநிலை சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதனால், மனநல  சிகிச்சை எடுத்திருந்திருக்கலாம்!

அதற்காக ஆண்கள் அனைவருமே யோக்கியர்கள் என்று அர்த்தமில்லை,

காலியான பல விஸ்கி போத்தலுகளுக்கு மட்டுமே தெரியும் ஆண்கள் அனைவருமே உத்தமர்கள் அல்ல என்று...

அடுப்படியில் கிடக்கும் பூரிக்கட்டைக்கு மட்டுமே தெரியும் பெண்கள் அனைவருமே மென்மையானவர்கள் அல்ல என்பது!

இதுக்காகத் தான் நான் வீட்டில் பூரிக்கட்டையே உபயோகிக்கிறதில்லை!

ஏன்....பூரியோ..சப்பாத்தியோ...அல்லது ரொட்டியோ கூட வீட்டில செய்ய அனுமதிக்கிறதும் இல்லை!

ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருந்தால்...இருக்கவே இருக்கு....இந்தியன் உணவகங்கள்!

அது சரி...வளவன்!

ஒருவன் உத்தமனா இல்லையா என்பதற்கும்...விஸ்கிப் போத்தலுக்கும் என்ன சம்பந்தம்?

நீங்களும் யாழ்ப்பாண அடிமட்டம் கொண்டு தான்...ஆக்களை அளக்கிறீங்க போல கிடக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, புங்கையூரன் said:

 

ஒருவன் உத்தமனா இல்லையா என்பதற்கும்...விஸ்கிப் போத்தலுக்கும் என்ன சம்பந்தம்?

நீங்களும் யாழ்ப்பாண அடிமட்டம் கொண்டு தான்...ஆக்களை அளக்கிறீங்க போல கிடக்கு?

புலத்தில் பல பெண்களின் வாழ்வு அடி,உதை,அவமானம் வறுமை , சிலவேளை அது கொலைவரை சென்று  அஸ்தமனமானது பல முழுநேர குடிகாரர்களால், அதை மனசில்  வைச்சுத்தான் அதை சொன்னேன்!

யாழிலேயே அதற்கு உதாரணமும் உண்டு: 

https://www.yarl.com/forum3/topic/205765-கனடாவில்-தமிழ்ப்-பெண்-அடித்து-கொலை-கணவன்-கைது /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மனைவி தனக்கு மட்டுமே உண்மையாக, தன்னை மட்டுமே சார்ந்தவளாக கிட்டத்தட்ட அடிமையாக இருக்க வேண்டுமென கணவன் நினைத்து நடக்கையில், மனைவிக்கும் அதே எண்ணம் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்...?

You reap what you sow..!

இல்வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருமே சமம்தான், ஏற்றத் தாழ்வு கிடையாது,இருக்கவும் கூடாது.  இதில் நான் ஆண், என் எண்ணப்படிதான் அனைத்தும் நடக்கவேண்டும் என பெரும்பாலான கணவன்கள் நினைப்பது தவறு, அதுவே குடும்ப வன்முறைகளுக்கும், தடுமாற்றங்களுக்கும் காரணமாகிறது.

மனைவி என்பவள், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வரும் வேலைக்காரியோ, அடிமையோ அல்ல,( புங்கை கவனிக்க -அவள் கல்லாலான சிலை அல்ல, வாங்கி உங்கள் விருப்பதிற்கு ஆட்டுவிக்க..! non-2010.gif) அவளுக்கும் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் உண்டு அவற்றை மதித்து நிறைவேற்றுவது கணவனின் கடமை. இன்னமும் மனைவிகளை ஏளனமாக நடத்தும் கணவன்கள்தான் இவ்வுலகில் பெரும்பான்மையானவர்கள். stopnon.gif

ஆணாதிக்க எண்ணத்தில் தவறாக/குழப்பத்துடன் நடந்துவிட்டு, 'வாழ்க்கையே போச்சுது.. நிம்மதியே போச்சுது..!' என புலம்புவதில் ஒரு பயனும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

பிள்ளை தன் கணவன் தனக்குமட்டும் தான்  என்ற எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறா .. அவரின் சகோதரர் களோடு  அவர் ..உறவாடுவதை விருப்பவில்லை ..வேண்டா கணவன் கைப்படடாலும் குற்றம் கால்படாலும் குற்றம் என்று இல்லாததும் பொல்லாததும்   சொல்லி  பிரிந்துவிடடா ...தற்போது  திருமணங்கள்   மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. 

தற்போதும்  திருமணங்கள் மிகவும் .. ..பிரச்சினை உள்ளவையாக இருக்கின்றன. :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.1.2018 at 4:30 PM, Paanch said:

-------

குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர்வுக்காக எழுதியுள்ள கடிதம் இதோ,

எனது பெயர் முகுந்த், மின் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் ஒருவரையொருவர் ஓரளவுக்குதான் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது.

ஏனெனில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாத இடைவெளியில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை, மாறாக சண்டைகளும், சச்சரவுகளும் ஆரம்பமானது.

எனது மனைவி சிறு சிறு விடயங்களுக்கு கூட கோபப்படுவாள். நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானால், வார்த்தைகளால் என்னை சித்ரவதை செய்வாள்.

அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்றால், விடாப்பிடியாக நான் அழைப்பை எடுக்கும்வரை போன் செய்து கொண்டிருப்பாள்.

தாமதாக வீட்டிற்கு வருவதை தாங்கிகொள்ளாத அவள், நான் வீட்டுக்கு வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிபோட்டு உடைப்பாள்.

அந்த நேரத்தில் நான் பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக அறையில் போய் அமர்ந்துகொண்டேன், அது அவளை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது.

எனக்கு பெற்றோர் கிடையாது, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரனுக்கு காது கேட்காது. இதனால் இருவரும் என்னோடு தான் தங்கியிருப்பார்கள் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் நானும் எனது உறவினர்களும் தெரிவித்திருந்தோம்.

அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், முதலில் இதனை ஏற்றுக்கொண்ட எனது மனைவியால் பின்னர் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் எனது சகோதரர்களையும் வார்தைகளால் காயப்படுத்துவாள். நான் அலுவத்தில் இருந்து தாமதாக வருவதால், எனக்கும், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தவறான தொடர்பு உள்ளது என அவளாக கற்பனை செய்து கொண்டு என்னிடம் சண்டைபோடுவாள்.

ஒரு முறை எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பெண்கள் அனைவரிடம் சண்டைபோட்டு என்னைப்பற்றியும் தவறாக பேசினாள்.

இதனால் எனது சக ஊழியர்கள் முன்னிலையில் கூனி குறுகிபோய் நின்றேன். இந்த பெயர் கெட்டுவிட்டதே என கருதி அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

எனது மனைவி இதுவரை 3 கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறாள், ஆனால் இதுவரை எந்த ஒரு கம்பெனியிலும் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமாட்டாள்.

அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கலாம் என கருதி, மருத்துவரிடம் சென்றோம். அங்கு அவளுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனை எடுத்துக்கொண்டாள்.

நாட்கள் ஆக ஆக, அவளின் சித்ரவதைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன, ஒருமுறை கையில் இருந்த பொருளை எடுத்து என்னை நோக்கி அடித்ததில், எனது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றேன். இவளின் கொடுமையை 1 1/2 ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவளோ, கர்ப்பிணியாக இருக்கும்போது அவளை அடித்தேன், எனது சகோதரர்கள் அவளிடம் தவறாக நடக்க முயன்றனர், வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினாள்.

----

 

Bildergebnis für தமிழ் கலியாணம்.

திருமணம் என்பது,  "சொர்க்கத்தில்.... நிச்சயிக்கப் படுவது"   என்று சொல்வார்கள்.
அந்தத் திருமண தம்பதிகளின், பெற்றோர்.... எத்தனை வருடங்கள் காத்திருந்து,  பல எதிர் கால கனவுகளுடன்... செய்து வைக்கும், திருமணங்கள்.... அடுத்த  தலைமுறையின், வாழ்க்கை  பாதிக்கப் படுவதை,  பார்ப்பது,  வேதனையான... விடயம்.  

எல்லா.... திருமணத்தையும், ஒரு பொதுவான... வரை முறைக்குள், அடக்க முடியாது என்றாலும், விட்டுக்  கொடுப்புகள், இரு பகுதியிலும்... இருக்க வேண்டியது.. மிக முக்கியம்.காரணம்:  இரண்டு திருமண தம்பதிகளும்.... ஒரு நாடு, ஒரு மொழி,  ஒரு  இனம், ஒரு  மதம்,  ஒரு கலாச்சாரம்  என்று... வாழ்ந்தாலும்.....அந்தப் பிள்ளைகளின்... வளர்ப்பு,  பழக்க வழக்கம்... போன்றவை ஒன்றாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. அதனை... இரு பகுதியும்... எதிர் பார்ப்பது தான்.... பிரச்சினையின், மூல காரணம். 

தமிழர்கள் மத்தியில்....  ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கைக்கு அப்பால், வெளிநாட்டவர்களும், மிக மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை கண் கூடாக அறிவீர்கள். பிரச்சினை... பொதுவானது. நாம்... பார்க்கும், பார்வை...  வேறானது  என நினைக்கின்றேன்.  :)

++++++++   ++++++++    +++++++++

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

இப்ப தானே கூகிள் ஆண்வரிடம் கம்பனி பெயரைச் சொன்னால் நம்பரை எடுத்து தருவாராச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இனி... பாஞ்ச் அண்ணா இணைத்த, கட்டுரைக்கு வருவோம்......
அவர்  நல்ல ஒரு பதவியில்... இருக்கின்றார்.  என... நினைக்கின்றேன்.
அலுவலக தொலைபேசி இலக்கத்தை.... மனைவிக்கு.... ஏன் கொடுத்தார்.  

இந்தக்காலத்திலை எந்த மன்னவர் வேலையிடத்து ரெலிபோன் நம்பர் மனிசிக்கு குடுக்காமல் வேலைக்கு போறவர்????:cool:
தம்பி நடக்கிற கதையை கதையுங்க தம்பி..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தானே கூகிள் ஆண்வரிடம் கம்பனி பெயரைச் சொன்னால் நம்பரை எடுத்து தருவாராச்சே!

கூகிள்..... ஆண்டவர்,  பிறக்க முன், நடந்த........ கதை, இது... ஈழப்பிரியன்ஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இந்தக்காலத்திலை எந்த மன்னவர் வேலையிடத்து ரெலிபோன் நம்பர் மனிசிக்கு குடுக்காமல் வேலைக்கு போறவர்????:cool:
தம்பி நடக்கிற கதையை கதையுங்க தம்பி..:grin:

இதில... சில, "ரெக்னிக்"   இருக்கு...  அண்ணை. tw_yum:  :grin:
ஆனால், அதை ... வெளிப்படையாய்... சொல்ல மாட்டம். tw_glasses: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இதில... சில, "ரெக்னிக்"   இருக்கு...  அண்ணை. tw_yum:  :grin:
ஆனால், அதை ... வெளிப்படையாய்... சொல்ல மாட்டம். tw_glasses: :D:

ஆக மொத்தத்தில் உண்மையாக, மறைக்காமல் நடந்துகொள்வதில்லை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் படியுங்கள் என்ற கோரிக்கையோடு உள்ள இந்தக் கதை உண்மையாக இருக்க சாத்தியங்கள் குறைவு.

மேலும் கதையானது கணவனின் ஒரு தரப்புப் பார்வையாகவே உள்ளது. இதில் நிறைய கட்டுக்கதைகளும் இருக்கலாம். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளதுபோல, அடுத்த பக்கத்து மனைவியின் கதையையும் கேட்டால்தான் கதையில் உள்ள உண்மைகளை ஓரளவு அறிந்துகொள்ளலாம். 

கலியாணம் கட்டி வாழ்பவர்கள் எல்லாம் புரிந்துணர்வோடு காலங்காலமாக வாழ்கின்றனர் என்றில்லை. ஒவ்வொருவரும் அடிப்படையில் தனியன்கள். அவர்களுக்கான சுய விருப்பு வெறுப்புக்களில் ஒரு குறித்த வீதம் பொருந்தினால் அந்தப் பொதுவான தடத்திலேயே வாழ்க்கையை சிக்கல்களின்றி ஓட்டிவிடலாம். ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்து இயல்புகளை மாற்ற முயலும்போதுதான் விரிசல்களும் வெடிப்புக்களும் உருவாகின்றன.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.