Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் விசேட அதிரடிப்படை!

Featured Replies

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் விசேட அதிரடிப்படை!

 

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்  விசேட அதிரடிப்படை!

வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்திற்கு நண்பகலில் இருந்தே மைதானம் அமைந்துள்ள பகுதியை சூழ பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வருகை தந்தபோது விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு படையினர் புடைசூழ மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன் பின்னர் அவர் உரையாற்ற முற்பட்டபோது மண்டபத்தினை சூழ விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்த நிலையில் அவர் உரையாற்றியதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான கமலேஸ்வரன், ஜி.ரி.லிங்கநாதன், விந்தன் கனரட்ணம், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-meeting-in-vavuniya-27

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் கூட்டணியினர் பொலிசாரையும்,முப்படையினரையும் விரோதிகளாக நினைத்து பிரச்சாரம் செய்தனர்...இன்று "அவர்களின் நண்பேன்டா" .....காலம் இதுவும் செய்யும் இதற்கு மேலயும் சேய்யும்..tw_blush:

 

அரசாங்கம் இவ்வளவு பாதுகாப்பு வழங்குவதின் முக்கிய நோக்கம் ,அரசாங்கத்திற்கு இவர் தங்க முட்டை போடும் வாத்து.

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

4-6d2e4267056b046f67e4826a98ec15211d505e4f.jpg

 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவு­னியா கலை­மகள் மைதா­னத்தில் வடக்கு மாகாண சபை உறுப்­பினர் ப.சத்­தி­ய­லிங்கம் தலை­மையில் நடை­பெற்றது. இக் கூட்­டத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்பந்தன், புளொட் அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்தன்,  தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், சிவ­மோகன், சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா, வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான கம­லேஸ்­வரன், ஜி.ரி.லிங்­க­நாதன், விந்தன் கனக­ரட்ணம், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (படங்கள் : ஓமந்தை நிருபர்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-29#page-2

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

1977 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் கூட்டணியினர் பொலிசாரையும்,முப்படையினரையும் விரோதிகளாக நினைத்து பிரச்சாரம் செய்தனர்...இன்று "அவர்களின் நண்பேன்டா" .....காலம் இதுவும் செய்யும் இதற்கு மேலயும் சேய்யும்..tw_blush:

 

அரசாங்கம் இவ்வளவு பாதுகாப்பு வழங்குவதின் முக்கிய நோக்கம் ,அரசாங்கத்திற்கு இவர் தங்க முட்டை போடும் வாத்து.

எந்த மக்களிடம் வாக்கு கேட்டு போகின்றோமோ

அதே மக்களை ஆயுதமுனையில் வைத்திருப்பதையும் ஐனநாயகம் என்கிறார்கள்.

பாவம் மக்கள் மட்டுமல்ல ஐனநாயகமும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
C1_D62_BDA-038_A-4_F74-_BB75-_AD912016_A
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பிற்குள் நின்றபடி, தமிழர்களுக்கு விசேட அதிகாரங்கள் வாங்கிதர பாடுபடும் சுமந்திரனின் தியாகத்தை நினைச்சால் மனசுக்குள் மணி அடிக்குது.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

26994202_1772998036083625_81296760168557

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

26994202_1772998036083625_81296760168557

ஐ பயம் வந்திட்டுது........... இனி வெருட்டித்தான் வாக்குகளை பெற வேண்டும்.

சிங்கள-பௌத்த விசேட பயங்கரவாதக் கும்பலின் பாதுகாப்பு திருடர்களுக்கும், கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களுக்கும், கடத்தற்காரர்களுக்கும், தமிழின அழிப்புக்கு துணைபோபவர்களுக்கும் தான் வழங்கப்படுவது வரலாறு!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை எழுத்தாளர் சோ அவர்கள் குறிப்பிட்டதை இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்கும்.                                                                                                       புலிகளிடமிருந்து பாதுகாக்க அவருக்கு இந்திய அரசால் இரண்டு காவல்த்துறையினரை  நியமித்திருந்தார்கள்.                                                                                                  சோ அவர்கள் இரு காவல்துறையை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பிவிட்டார். 

அது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது சோ சொன்னது.                                                                                                                                                                                                          புலிகள் என்னை கொல்லணும் என்று முடிவெடுத்து  விட்டால் எவராலும் என்னைக்காப்பாற்றமுடியாது.                                                                                            இரண்டு பேரை ஏன் கூடுதலாக பலியாக்கணும் என்று.

சுமேந்திரனுக்கு அந்த அடிப்படை கூட புரியவில்லை என்பது சோகமானது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

ஒருமுறை எழுத்தாளர் சோ அவர்கள் குறிப்பிட்டதை இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்கும்.                                                                                                       புலிகளிடமிருந்து பாதுகாக்க அவருக்கு இந்திய அரசால் இரண்டு காவல்த்துறையினரை  நியமித்திருந்தார்கள்.                                                                                                  சோ அவர்கள் இரு காவல்துறையை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பிவிட்டார். 

அது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது சோ சொன்னது.                                                                                                                                                                                                          புலிகள் என்னை கொல்லணும் என்று முடிவெடுத்து  விட்டால் எவராலும் என்னைக்காப்பாற்றமுடியாது.                                                                                            இரண்டு பேரை ஏன் கூடுதலாக பலியாக்கணும் என்று.

சுமேந்திரனுக்கு அந்த அடிப்படை கூட புரியவில்லை என்பது சோகமானது.

விசுகு இல்லாத புலிகளை அரசும் விடுவதாக தெரியல.நீங்களும் விடுவதாக தெரியல.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு இல்லாத புலிகளை அரசும் விடுவதாக தெரியல.நீங்களும் விடுவதாக தெரியல.

நாங்க  விட்டுட்டம் அண்ணை

ஆனால் இவர்களது  பிதட்டல்களைப்பார்த்தால்

சோ  சொன்னது தான் ஞாபகம் வருகுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, nunavilan said:

26994202_1772998036083625_81296760168557

ஓ....வெருட்டல் வேறை....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி உபாயம்  என்றெண்ணித் தாம் யார் என்பதை மக்களுக்கு  தெளிவு படுத்தியிருக்கிறார். சுய ரூபம் என்றோ ஒருநாள் பசப்பு வார்த்தையையும் விட்டு வெளியே வரும். வந்தும் விட்டது. இனி தமிழினத்துக்கு தீர்வு வந்த மாதிரித்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

26994202_1772998036083625_81296760168557

 

  • தொடங்கியவர்

வடக்கில் கூட்டமைப்பின் பரப்புரை தீவிரம் – பாதுகாப்பு கெடுபிடிகளால் முகம்சுழிக்கும் ஆதரவாளர்கள்

 

TNA-ralley (2)வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வடக்கில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வடக்கில் இதுவரை ஏனைய கட்சிகள் பாரிய தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தாத நிலையில், வன்னிப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பெரியளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த சனிக்கிழமை பரந்தனிலும், ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலும், தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலும், துணுக்காயிலும் இரண்டு பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. நேற்று மன்னார் மாவட்டத்தில் பாலிநகரிலும், மன்னாரிலும் இரண்டு பாரிய பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டங்களில் இரா.சம்பந்தனுடன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் உள் ஒதுக்கீட்டில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரமுகர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களும் பங்கேற்று வருகின்றனர்.

TNA-ralley (1)TNA-ralley (2)TNA-ralley (3)TNA-ralley (4)TNA-ralley (5)TNA-ralley (6)TNA-ralley (7)TNA-ralley (8)TNA-ralley (9)TNA-ralley (10)

இந்தக் கூட்டங்களில் முக்கிய பேச்சாளர்களாக இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் உரையாற்றி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

அதேவேளை, நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பில் நடந்த கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்ற அனைவரும், காவல்துறையினரால் கடுமையாக சோதனையிடப்பட்டனர். உடற்பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்கள் கொண்டு சென்ற பொருட்களும் சோதனையிடப்பட்டன.

கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையினரின் பிரசன்னமும், சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புக் கெடுபிடிகளும், பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.puthinappalakai.net/2018/01/31/news/28753

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.