Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

 

R.sampanthanசிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக சம்பவங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

‘சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது.

இனவாத  செயற்பாடுகளை தடுக்க சட்டம், ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை?  அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கவை.

அம்பாறை சம்பவம் தொடர்பில் சந்தேகம் உள்ளது. காவல் நிலையம் அருகில் இருந்த போதும், தாக்க வந்தவர்கள் காவல்துறையினரின் காதினால் புகுந்து தப்பியுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஆராய வேண்டும்.

இளைஞர் ஒருவர் மீதான தாக்குதலை அடிப்படையாக வைத்து கண்டியில் வன்முறை இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல்கள், வீடுகள் தாக்கப்பட்டன. உடைமைகள், வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

இவற்றை அனுமதிக்க முடியாது.மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்படவில்லை.

சட்டத்தில் இருந்து தப்புவதற்காக வீடுகளை தீ வைத்து சேதம் விளைவிப்பது  மோசமான நிலைமையை ஏற்படுத்தும். சம்பவம் நடந்து முடிந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை. சட்டத்தை கையிலெடுத்து செயற்பட முடியும் என்று மக்கள் கருதுகின்றனரா?

இந்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.சகல இனத்தினருக்கும் சம உரிமையுள்ளது. சட்டம் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும்.

தாம் பெரும்பான்மை இனம் என யாராவது கருதி செயற்படுவார்களானால் அதற்கு இடமளிக்க முடியாது. கண்டியில் மூன்று, நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏன் அவர்களால் செயற்பட முடியவில்லை?

கடந்த காலங்களில் சிறிலங்காவில் இவ்வாறான இன ரீதியான அடக்குமுறைகள் இடம்பெற்றன. அத்தகைய நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்போது இனவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சட்டம், நீதி எம்மை எதுவும் செய்யாது என்ற நிலைப்பாட்டில் இனவாத குழுக்கள் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

ஆகவே குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு முழுமையான பொறுப்பை சிறிலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் இந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கை கையாள்கின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது.

சிலர் தாங்களே உயர்ந்தவர்கள் என நினைத்து கொண்டு ஏனையவர்களை அடக்க முனைகிறார்கள். எம்மைவிட பின்னோக்கி இருந்த நாடுகள் அனைத்தும் எம்மை விடவும் அபிவிருத்தி கண்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்துகின்றன.

நாம் இன்றும் இனவாத செயற்பாடுகளில் மூழ்கி செயற்படுவது தடுக்கப்பட வேண்டும். பிரதமர் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2018/03/07/news/29567

  • தொடங்கியவர்

பிர­தமர் இதற்கு என்ன பதில் கூறப்­போ­கின்றார்.?

 

 

தொடர்ச்­சி­யாக சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்ள நிலையில்  இவற்றை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

 சட்டம் நிலை­நாட்­டப்­ப­டு­வதில்  ஏன்  தவ­றி­ழைக்­கப்­பட்­டுள்­ளது? பிர­தமர் இதற்கு என்ன பதில் கூறப்­போ­கின்றார்  என்று எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் சபையில் கேள்வி எழுப்­பினார்.

சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் எமக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் சர்­வ­தேச மட்­டத்தில் பாரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அம்­பாறை, திகனை பகு­தி­களில் இடம்­பெற்ற இன வன்­மு­றைகள் தொடர்­பிலும் அவ்­வா­றான சம்­ப­வங்கள் இனிமேல் இடம்­பெறக் கூடாது  என்­பதை  வலி­யு­றுத்­தியும் ஜே.வி.பி.யின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொர­டா­வு­மா­கிய அனு­ர­கு­மார திசா­நா­ய­க­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட  சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தின் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் இங்கு மேலும் கூறு­கையில்,. 

அண்­மையில் நாட்டில் இடம்­பெற்று வரும் இன­வாத சம்­ப­வங்கள் மிகவும் கண்­டிக்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். இதில் அம்­பாறை சம்­பவம் தொடர்பில் எமக்கு சந்­தேகம் உள்­ளது. உண­வ­கத்தில் உண­வு­களில் மருந்து கலந்து கொடுக்­கப்­பட்டு வரு­வ­தாக கூறி அதனை அடிப்­ப­டை­யாக கொண்டு  குழப்­பங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதன் பின்­ன­ணியில் உள்ள  உண்மைத் தன்மை குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உரிய தரப்­பினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அதன் உண்மைத் தன்­மையை ஆராய வேண்டும். 

இந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டி­யாக வைத்து அம்­பா­றையில் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டுள்­ளது,  கடைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன . அதேபோல் இந்த சம்­ப­வத்தில் பேருந்­து­களில் சந்­தேக நபர்கள் வந்­துள்­ளனர். மோட்­டர்­சைக்­கிள்கள்  பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன .எனினும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நிலையில் காவல்­து­றை­யினர் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வில்லை. மக்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­தப்­பட்ட சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நிலையில் சட்டம், ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. அதேபோல் சில நாட்­க­ளுக்கு முன்னர் கண்­டியில் இதே­போன்­ற­தொரு இன­வாத சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இதனால் உயி­ரி­ழப்­பு­களும் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான சம்­ப­வங்கள்  பல்­வேறு முரண்­பா­டு­களை தோற்­று­வித்­துள்­ளன. 

கடந்த காலங்­களில் இலங்­கையில் இவ்­வா­றான ஒரு இனத்­துக்­கான அடக்­கு­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இவ்­வா­றான நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் குறிப்­பிட்ட கால­கட்டம் வரையில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­விலை. இப்­போது இன­வாத செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதனை ஏற்­று­கொள்ள முடி­யாது. நல்­லாட்­சியில் இன­வாதம் தூண்­டப்­ப­டு­வதை ஒரு­போதும் பொறுத்­துக்­கொள்­ளவும்  முடி­யாது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெறும் நிலையில் சட்­டத்தின் மூல­மாக அவற்றை நாம் கட்­டு­ப­டுத்த வேண்டும். இல்­லை­யென்றால் சட்டம் நீதி எம்மை எதுவும் செய்­யாது என்ற நிலைப்­பாட்டில் இன­வாத குழுக்கள் தொடர்ந்தும் இவ்­வா­றான சம்­ப­வங்­களில் ஈடு­ப­டு­வார்கள். ஆகவே குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்டம் மற்றும் ஒழுங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

தொடர்ச்­சி­யாக இரண்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் இவற்றை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. சட்­டத்தை நிலை­நாட்­டு­வதில் ஏன்  தவ­றி­ழைக்­கப்­பட்­டுள்­ளது? பிர­தமர் இதங்கு என்ன பதில் கூறப்­போ­கின்றார் என்ற கேள்­வியை நான் அர­சாங்­கத்­திடம் கேட்­கின்றேன். 

உரிய நேரத்தில் சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­டா­மையே இவ்­வா­றான விளை­வுகள் ஏற்­ப­டவும் கார­ண­மாக அமைந்­துள்­ளது. ஆகவே வன்­மு­றை­க­ளுக்­கான முழு­மை­யான பொறுப்பை  அர­சாங்­கமே ஏற்­று­கொள்ள வேண்டும். நடு­நி­லை­யாக சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­டா­விட்டால் இந்த நாட்டின் நல்­லாட்சி பயணம் எங்கே செல்லும். பிர­தமர் இதற்கு பதில் கூற வேண்டும். அனை­வ­ருக்கும் சமத்­துவம் கிடைக்க வேண்டும். மக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். ஆனால் இந்த அர­சாங்கம் எதன் அடிப்­ப­டையில் சட்டம் ஒழுங்கை கையாள்­கின்­றது என்ற கேள்வி எம்­மத்­தியில் எழு­கின்­றது. சிலர் தாங்கள் தான் உயர்ந்­த­வர்கள் என நினைத்­து­கொண்டு ஏனை­ய­வர்­களை  குறைந்த எண்­ணிக்­கை­யி­லான மக்­களை அடி­மைகள் என்ற ரீதியில் நடத்த முயற்­சிக்­கின்­றனர். 

இந்த அர­சாங்­கத்­திலும் தமிழ், முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்கள் உள்­ளனர். அவர்­களின் பங்­க­ளிப்பும் உள்­ளது. ஆகவே அவர்­களின் உரி­மைக்­காக அர­சாங்­க­மாக என்ன நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றது என்ற கேள்வி இன்று எழுந்­துள்­ளது. எனவே மக்­களை பாது­காப்­பதில் அர­சாங்­கத்தின் திட்­டங்­களில் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும். இந்த நாட்டில் சகல மக்­களும் சமத்­து­வ­மாக பாதுக்­காக்­கப்­ப­ட­வேண்டும். உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­த­பட வேண்டும். இவ்­வா­றான சம்­ப­வங்­களின் மூலம் சர்­வ­தேச விதி­மு­றைகள் மீறப்­பட்­டுள்­ளன.

பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் மீறப்­பட்­டுள்­ளன. இது சர்­வ­தேச தரப்பு மத்­தியில் மிகப்­பெ­ரிய அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தும். இந்த நாட்டில் இன­வாதம் மீண்டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. அதற்கு இட­ம­ளிக்க  முடி­யாது. உரிய நேரத்தில் சட்டம் நிலை­நாட்­டப்­பட வேண்டும். இந்த நாட்டில் இனவாதத்தை பரப்பி முன்னோக்கி செல்ல வேண்டிய நாடாக இல்லாது தொடர்ந்தும் பின்னோக்கி பயணிக்கின்றோம். 

எம்மைவிட பின்னோக்கி இருந்த நாடுகள் அனைத்தும் எம்மைவிடவும் அபிவிருத்தி கண்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்தும் நிலையில் நாம் இன்றும் இனவாத செயற்பாடுகளில் மூழ்கி செயற்படுவது தடுக்கப்பட வேண்டும். எனவே அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து உரிய அதிகாரிகள் தமது கடமையினை சரியாக முன்னெடுக்க வேண்டும். பிரதமர் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/31349

  • கருத்துக்கள உறவுகள்

வாப்பா ..நீங்க கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கீங்களா ....சும்மா சிங்களவனுடைய குரோதத்தை தமிழன் பக்கம் திருப்பி எங்களுக்கு அடிவாங்கி தராமல்.... நேற்று மட்டும் எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் மூண்டிருக்க வேண்டும் உங்களுடைய தலையில் இருக்கும் மிச்ச முடிகளையும் பிடுங்கியிருப்போம் தமிழனை பாதுகாக்க வக்கில்லை முஸ்லிம்களிடம் போறாரு. 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நிலை வராமல் இருக்க  நீங்களும் சுமத்திரனும் பாடுபடுவீர்கள் தானே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

வாப்பா ..நீங்க கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கீங்களா ....சும்மா சிங்களவனுடைய குரோதத்தை தமிழன் பக்கம் திருப்பி எங்களுக்கு அடிவாங்கி தராமல்.... நேற்று மட்டும் எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் மூண்டிருக்க வேண்டும் உங்களுடைய தலையில் இருக்கும் மிச்ச முடிகளையும் பிடுங்கியிருப்போம் தமிழனை பாதுகாக்க வக்கில்லை முஸ்லிம்களிடம் போறாரு. 

தமிழர் மீது கைவைத்தால்.... இவரிட்ட போய்ப்பிரயோனம் இல்லை. தூசணப் பிக்கரிடம் ஓடவேண்டியது தான் வழி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடி வந்துவிடப் போகுது என்றுதான் துள்ளுறார். நம்ம மக்கள் அழியும்போது வாய் மூடி எங்கேயோ இருந்தவர் இப்பிடித் துடிக்கிறார். ஓ.... எதிர்க்கட்ச்சி தலைவராச்சே  பொறுப்பை சரியாய் செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

Tamil comedians senthil Reactions

நரி ஊளையிட்டு விட்டுது எல்லாரும் ரெடி ஆகுங்க  ஓட ........................................

8 hours ago, நவீனன் said:

‘சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது.

இனவாத  செயற்பாடுகளை தடுக்க சட்டம், ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை?  அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கவை.

சம்மந்தன் தன் பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்று அஞ்சுவது விளங்குகிறது.

சம்சுங் கும்பல் அறிக்கை அரசியல் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது!

இந்தக் கும்பல் சத்தமின்றி நிறைவேற்றப்பட்ட, தமிழினத்துக்கு நீதியை பெற்றுத்தராத, காணாமல் போனோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தது வாக்களித்தது கடும் கண்டனத்துக்கு உரியது.

இதன் பின்னணியில் இவர்கள் பாரிய இலஞ்சத்தை பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது இயல்பானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.