Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ்

Featured Replies

  • யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ்
 
 

யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ்

 

நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார்.

தமிழகத்தில் ஈழதுச் சிஷறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார்.

இதற்கான அழைப்பிதழை  வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.

zcx-750x400.jpg

http://newuthayan.com/story/82188.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்....

  • தொடங்கியவர்

காவேரிக்காக வடக்கு மக்கள் குரல் கொடுக்கவேண்டும். – கருணாஸ் கோரிக்கை

Karunas-viki1.jpg?resize=750%2C400
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவேரி மேலாண்மை தமிழக மக்களுக்குக் கிடைக்க வடமாகாண மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என தென்னிந்திய நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னிந்திய நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார்.

 

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழக முகாம்களில் உள்ள 120 மாணவ மாணவியர்களின் உயர்கல்வியில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. மற்றவர்களிடம் கையேந்துவதை விட தாமாகவே ஒரு கல்லூரியைக் கட்ட வேண்டுமென்று எண்ணியுள்ளோம்.

கல்லூரி அமைப்பதுக்கான காணியை தற்போது வாங்கியுள்ளேன். தமிழகத்தில் முகாம்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி மற்றும் துணைக் கல்லூரி அமைக்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த கல்லூரிக்கான அடிக்கல்லினை ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவராகவும், தகுதியுடையவரும் நாட்ட வேண்டும். அவர் சுயநலமற்ற பொதுநலவாதியாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் சில திகதிகளை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்குச் சென்று அங்கு தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர், கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்துக்கு முதலமைச்சரை அழைப்பதுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

முதலமைச்சர், தமிழக இளைஞர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட போது, ஜல்லிக்கட்டு தடையின் போது, ஆறுதலாக இரு அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை பெரும் உற்சாகத்தை தமிழக மக்களுக்கு கொடுத்திருந்தது.

காவேரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சரிடமும் எடுத்துரைத்துள்ளேன். உலக தமிழர்கள் அனைவரும் காவேரி மேலாண்மையில் ஒன்றுபட்ட கருத்துக்களை வெளியிட வேண்டுமென்பதுடன், ஜல்லிக்கட்டினை தாண்டிய மிகப்பெரும் போராட்டத்தினையும் முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளேன்’ என்றார்.

http://globaltamilnews.net/2018/73941/

  • தொடங்கியவர்
 
 
தமிழகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர்கள் குரல்கொடுக்க வேண்டும் என, தமிழக சட்டசபையின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் போராடுபவர்களை இவர் சார்ந்திருக்கும் அதிமுக போராடவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் போது யாழ் வந்து காவேரிக்காக குரல் கொடுக்குமாறு கேட்பது ரொம்ப வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:
...

தமிழக முகாம்களில் உள்ள 120 மாணவ மாணவியர்களின் உயர்கல்வியில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. மற்றவர்களிடம் கையேந்துவதை விட தாமாகவே ஒரு கல்லூரியைக் கட்ட வேண்டுமென்று எண்ணியுள்ளோம்.

கல்லூரி அமைப்பதுக்கான காணியை தற்போது வாங்கியுள்ளேன். தமிழகத்தில் முகாம்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி மற்றும் துணைக் கல்லூரி அமைக்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த கல்லூரிக்கான அடிக்கல்லினை ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவராகவும், தகுதியுடையவரும் நாட்ட வேண்டும். அவர் சுயநலமற்ற பொதுநலவாதியாக இருக்க வேண்டும்.

...

11 hours ago, நவீனன் said:

.. தமிழகத்தில் ஈழத்துச் சிறுவர்களின் கல்விக்காக நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார்.

http://globaltamilnews.net/2018/73941/

இவ்விடயம் உண்மையெனில், பாராட்டப்பட வேண்டிய செயல்.  vil-super.gif

 

  • தொடங்கியவர்

தமிழ்­நாட்டில் இலங்கை அகதி மாண­வர்­க­ளுக்கு தனி­யான கல்­லூரி

Sp16-03d65bec589c604be728a97e20e65a5834802f88.jpg

 

அடிக்­கல் ­நாட்­டு­வ­தற்கு சி.வி.க்கு அழைப்பு விடுப்­ப­தற்கு யாழ். வந்த நடிகர் கருணாஸ் 

(ரி.விரூஷன்)

தமிழ்­நாட்டில் உள்ள இலங்கை அகதி மாண­வர் கள் கல்வி கற்­ப­தற்­காக தனி­யான கல்­லூ­ரி­யையும் தொழில் கல்­லூ­ரி­யையும் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக தென்­னிந்­திய நகைச்­சுவை நடி­கரும் அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் தமி­ழக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கருணாஸ் தெரி­வித்­துள்ளார்.

குறித்த கல்­லூ­ரிக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்­வு க்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வ­ர­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பை விடுப்­ப­தற்­காக நேற்று நடிகர் கருணாஸ் யாழ்ப்­பா­ணத்­திற்கு  விஜயம் செய்­தி­ருந்தார்.  

இந்­நி­லையில் முத­ல­மைச்­சரை சந்­தித்­து­விட்டு ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்­நாட்­டி­லுள்ள ஈழ அகதி மக்­களின் பிள்­ளைகள் கற்­ப­தற்­கென்று தனி­யான ஒரு கல்­லூரி இல்லை. இந்­நி­லையில் அவர்கள் வேறு பாட­சா­லை­களில் சேரு­வதில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. இதனால் அவர்கள் கற்­ப­தற்கு என்று தனி­யான ஒரு கல்­லு­ரி­யையும் தொழிற் கல்­லூ­ரி­யையும் அமைக்கத் திட்­ட­மிட்­டுள்ளேன்.

இக் கல்­லூ­ரிக்கு அடிக்கல் நாட்­டு­வ­தற்­காக வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை அழைக்­கவே நான் யாழ்ப்­பாணம் வந்­தி­ருந்­துள்ளேன். மேலும் முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்பின் போது தற்­போது தமிழ்­நாட்­டி­லுள்ள பிரச்­சி­னை­யான காவிரி நீர் பிரச்­சி­னைக்கு உலக தமிழ் மக்கள் அனை­வரும் அதற்கு ஆத­ர­வ­ழிக்க வேண்டும் என்று கோரி­யி­ருந்தேன். அதற்கு முத­ல­மைச்சர் தாம் அந்த விட­யத்தை தொடர்ந்து கவ­னித்து வரு­வ­தாக கூறி­யுள்ளார் என்றார்.

இதே­வேளை நடிகர் கரு­ணா­ஸிடம், இந்­திய மீன­வர்­க­ளது பிரச்­சினை தொடர்­பாக வின­விய போது,

இவ்­வி­டயம் தொடர்பில் மறைந்த முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா இருக்­கும்­போது பேசி­ய­தா­கவும் ஆனால் இப் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­திய அர­சையே எதிர்­நோக்கி இருக்க வேண்­டி­ய­நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்த அவர், அவர்­க­ளிடம் இது தொடர்­பான கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருப்­ப­தா­கவும் கூறினார்.

முத­ல­மைச்­சரின் வேண்­டுகோள்

இதே­வேளை, தமிழ்­நாட்டில் உள்ள பல்­க­லை­க­ழ­கங்­க­ளுக்கும் வடக்­கி­லுள்ள பல்­க­லை­க­ழ­கங்­க­ளுக்கும் இடையில் உயர்­கல்வி சார்ந்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்­பாக ஆராய வேண்டும் என்று நடிகர் தமி­ழக கரு­ணா­ஸிடம் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்தார்.

இங்­குள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கும் தமி­ழக பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கும் இடையில் கல்வி செயற்­பா­டுகள் தொடர்­பாக புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக பேசி­யி­ருந்தேன்.

இதே­போன்று விவ­சாயம் தொடர்­பான நவீன கற்றல் முறை­களும், நவீன தொழில்­நுட்ப விட­யங்­களும் எமது மாண­வர்­க­ளுக்கு தேவையாகவுள்ளன. ஆகவே அது தொடர்பான கற்றல்களை மேற்கொள்ள புலமைப்பரிசில்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தேன்.

இவைதவிர தமிழ்நாட்டிலுள்ள தென்னிந்திய நடிகர்கள் ஊடாக இங்கு முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயுமாறு கருணாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-07#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கல்லுரியில் படித்தால் வேலை எடுக்கலாமோ  தமிழ்நாட்டில்?
 

  • கருத்துக்கள உறவுகள்

கருணாஸ்... சொல்லவாறதைச் செய்வாரா.. இல்லை.. அரசியல் விளம்பரம் செய்கிறாரா..??! 

இவ்வளவு காலமும் உருகாத கருணாஸ்.. இப்ப உருகுவதன் பின்னணி..??!

நோக்கம் தூய்மையாக இருக்கனும் என்பதன் அடிப்படையில் எழும் சந்தேகமே அன்றி... குறை கூறல் அல்ல. :rolleyes:tw_blush:

தமிழ்நாட்டில் பரந்துப்பட்டிருக்கும் ஈழத்து தமிழ் அகதிகள் படிக்க அங்கங்கே பல்வேறு வசதிகள் இருக்க, பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஒதுக்கீடுகள் இருக்க, இவர் ஓரிடத்தில் பாடசாலை அமைத்து என்ன செய்யப்போகிறார்?   

கல்வியும் வியாபாரமாகப் போய்விட்டது!

எப்படி எப்படியெல்லாம் பிழைப்பு நடத்தலாம் என்று சந்தர்ப்பவாதிகள் அலைகிறார்கள்.

முதலமைச்சர் இந்த சந்தர்ப்பவாதிகளுடன் அவதானமாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2018 at 11:04 AM, நவீனன் said:

காவேரிக்காக வடக்கு மக்கள் குரல் கொடுக்கவேண்டும். – கருணாஸ் கோரிக்கை

கடைசி செய்தி போராட்டக்களம் களில் மிலிட்டரி யை கொண்டு வந்து இறக்கியுள்ளார்கள் இனி ...........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.