Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்!

Featured Replies

போருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்!

முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்!!

Vikarai.jpg?resize=660%2C400

 

வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார்.

பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் முல்லைத்தீவு மன்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை இதன்மூலம் அமம்பலமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்கள் பெரும் ஆதங்கத்தில் இருப்பதாக தெரிவித்த அவர்
இனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் சேர்த்து பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கப்படவேண்டியது கட்டாயமாகும் என்றும் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/82551/

  • கருத்துக்கள உறவுகள்

131 கோவில்கள் தெற்கிலும் கட்டப்பட வேண்டும். அதற்கு இங்கு ஒருவர் ஆலோசனை வழங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பலநூறு அரசியல் பிரிவுகளாய் பிரிந்து நின்றாலும் இனம் என்று வந்துவிட்டால் ஒன்றுபடுவார்கள் சிங்களவர்கள்.

 ஒரு அணியில் நின்றாலும், தன்னை முன்னிலை படுத்தாவிட்டால் இனம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையின்று ஆயிரம் பிரிவாய் உடைந்து செல்வார்கள் நம்மவர்கள். 

இன்னும் 50 வருஷங்களின் பின்னர் தமிழர் பகுதிகளில் கோவில்களைவிட விகாரைகளும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையுமே அதிகமாக இருக்கும்.

ஒரு சிங்கள பிரதேசத்தில் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் விகாரைகளைவிட கோவில்களின் எண்ணிக்கை ஒருபோதும் அதிகரிக்காது / அதிகரிக்க ஒருபோதும் அனுமதிக்கபடாது..

யுத்தம் முடிந்த பத்து வருஷத்திலேயே விகாரைகளும் பள்ளிவாசல்களும் தமிழர் தாயகமெங்கும் காரணமின்றி பரவுவதை நியாயபடுத்தும் தமிழர்கள் எம்மிடையே பலர் உண்டு.

யுத்தம் முடிந்து முன்னூறு வருஷமானாலும் தமது பிரதேசத்தில் தமிழர் வழிபாட்டு தலங்கள் காரணத்துடன் அதிகரித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள ஒரு சிங்களவர்கூட இருக்கமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கண்டு கொள்ள மாட்டோம் அவர்கள் விகாரை அமைச்சாலும் சரி இவர்கள் பள்ளி வாசல் கட்டினாலும் சரி  எமக்கு தேவை இணக்க அரசியல் அப்படின்னு சொல்லிகொள்வார்கள் நம்ம அரசியல் காமடி குஞ்சுகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப கண்டு கொள்ள மாட்டோம் அவர்கள் விகாரை அமைச்சாலும் சரி இவர்கள் பள்ளி வாசல் கட்டினாலும் சரி  எமக்கு தேவை இணக்க அரசியல் அப்படின்னு சொல்லிகொள்வார்கள் நம்ம அரசியல் காமடி குஞ்சுகள் 

எங்கடையள் லெக்சன் வரேக்கை மட்டும் தவளைக்கத்து கத்துறது.....

அதுக்கு பிறகு கொழும்புக்கு போய் ஒரே மௌன விரதம் தான்...... :grin:

எங்கடை எதிர்க்கட்சி தலைவரை பாக்கேல்லையே  மனிசன் கதிரையிலை ஏறினவுடனை   ஒரே  நித்திரையும் மௌனவிரதமுமாம்...:cool:

 

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப கண்டு கொள்ள மாட்டோம் அவர்கள் விகாரை அமைச்சாலும் சரி இவர்கள் பள்ளி வாசல் கட்டினாலும் சரி  எமக்கு தேவை இணக்க அரசியல் அப்படின்னு சொல்லிகொள்வார்கள் நம்ம அரசியல் காமடி குஞ்சுகள் 

என்னுடைய கேள்வி என்னவென்றால் 130 விகாரைகள் என்பது நம்பும் படியாக இல்லை

அடுத்து விகாரைளை பற்றி கதைக்கும் இவர் ஏன் பள்ளிவாசல்களை பற்றிப்கதைக்கவில்லை.

அண்மை காலங்களில் வடக்கு பகுதி தமிழ் மக்களிடம் இஸ்லாமிய மயமாக்கல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.

அதை திசை திருப்பும் விதமாகவே சிங்களவன் பக்கம் பகையை திருப்ப முஸ்லிம் சக்திகளின் முயற்சியாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

இன்னும் 50 வருஷங்களின் பின்னர் தமிழர் பகுதிகளில் கோவில்களைவிட விகாரைகளும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையுமே அதிகமாக இருக்கும்.

....

யுத்தம் முடிந்த பத்து வருஷத்திலேயே விகாரைகளும் பள்ளிவாசல்களும் தமிழர் தாயகமெங்கும் காரணமின்றி பரவுவதை நியாயபடுத்தும் தமிழர்கள் எம்மிடையே பலர் உண்டு.

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப கண்டு கொள்ள மாட்டோம் அவர்கள் விகாரை அமைச்சாலும் சரி இவர்கள் பள்ளி வாசல் கட்டினாலும் சரி  எமக்கு தேவை இணக்க அரசியல் அப்படின்னு சொல்லிகொள்வார்கள் நம்ம அரசியல் காமடி குஞ்சுகள் 

 

5 minutes ago, Dash said:

அடுத்து விகாரைளை பற்றி கதைக்கும் இவர் ஏன் பள்ளிவாசல்களை பற்றிப்கதைக்கவில்லை.

அண்மை காலங்களில் வடக்கு பகுதி தமிழ் மக்களிடம் இஸ்லாமிய மயமாக்கல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.

அதை திசை திருப்பும் விதமாகவே சிங்களவன் பக்கம் பகையை திருப்ப முஸ்லிம் சக்திகளின் முயற்சியாகவே தெரிகிறது.

கிறீஸ்தவ சபைகள், அல்லேலுயாக்கள், ஜெஹோவா கூட்டங்கள் பற்றி யாருக்குமே எந்த எதிர்ப்போ ஆதரவோ இல்லையா?  இப்படியென்றால் நானே போய் நாலு ஊரில் ஜெஹோவா கூட்டங்கள் வேறு ஐந்து ஊரில் அல்லேலுயாக்கள் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - எதிர்ப்பு இல்லாத நல்ல வியாபாரம் ?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

 

கிறீஸ்தவ சபைகள், அல்லேலுயாக்கள், ஜெஹோவா கூட்டங்கள் பற்றி யாருக்குமே எந்த எதிர்ப்போ ஆதரவோ இல்லையா?  இப்படியென்றால் நானே போய் நாலு ஊரில் ஜெஹோவா கூட்டங்கள் வேறு ஐந்து ஊரில் அல்லேலுயாக்கள் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - எதிர்ப்பு இல்லாத நல்ல வியாபாரம் ?

 

உண்மைதான் 2009 க்கு பின்னர் இந்த சபைகளின் அதிகரிப்பு பல நூறு. குறிப்பாக வன்னிப் பகுதிகளில் மூலைக்கு மூலை காணக் கூடியதாக இருந்தது. போரினால் பாதிக்கப்பட்டு அந்தரிக்கப்பட்ட மக்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தடுக்க முடியாது ....இதுவும் கடந்து போகும்....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

கிறீஸ்தவ சபைகள், அல்லேலுயாக்கள், ஜெஹோவா கூட்டங்கள் பற்றி யாருக்குமே எந்த எதிர்ப்போ ஆதரவோ இல்லையா?  இப்படியென்றால் நானே போய் நாலு ஊரில் ஜெஹோவா கூட்டங்கள் வேறு ஐந்து ஊரில் அல்லேலுயாக்கள் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - எதிர்ப்பு இல்லாத நல்ல வியாபாரம் ?

 

அல்லுலோயா கூட்டங்கள்பற்றி நிச்சயமா என் எதிர்ப்பு உண்டு ,வேலைக்கு அவசர அவசரமாக சென்ற என்னை இடைமறித்து ஆண்டவரின் நல்ல சேதி சொல்ல வந்திருக்கிறோம் என்று போதனை பண்ண முயன்றபோது அவர்களை நான் கெட்ட வார்த்தையில் திட்டியதும் உண்டு...

ஆனால் கிறிஸ்தவர்கள் ,தேவாலய பரம்பல் என்று வரும்போது அது எந்த வகையிலும் எமது இனத்தை பாதிக்கபோவதில்லை...மதம்தான் வேறு என்றாலும் எமது இனத்தை எப்போதுமே அவர்கள் விட்டு கொடுத்ததில்லை...

போரின் நெருக்கடியில் இனத்துக்காகவே போராடியதாலும், ஆதரவாய் நின்றதாலும் கொல்லப்பட்டும் ,காணாமல்போயும் உள்ள கிறிஸ்தவர்கள்,பாதிரியார்கள் ஏராளம்..இறுதியுத்தம் உட்பட...

இன்னும் தெளிவாக சொல்லபோனால்...

அரசியல் ரீதியில் தமிழர் தந்தை என்றழைக்கப்பட்ட செல்வநாயகமும்....

ஆயுதபோராட்டத்தில் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியான சீலனும் கிறிஸ்தவர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.