Jump to content

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்


Recommended Posts

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்

 

 

யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ் பாரம்பரிய கலை அம்சங்களான மங்கள வாத்தியம் முழக்கம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளைக் கொண்ட ஊர்வலம் ப்றவுன் வீதி வழியாக பல்கலைக்கழக மைதானத்தினை வந்தடைந்துள்ளது.

தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கலை,கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

 

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக இந்திய தமிழ்நாடு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் கு.புகழேந்தி கலந்து சிறப்பித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அத்துடன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் வரலாற்றினையும், வாழ்வையும், அரசியலையும் நிர்ணயிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/events/01/193616?ref=home-feed

Link to comment
Share on other sites

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

 
 
41931814_10217383822413895_1747756706823

 

 

“நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் ” என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் – மாபெரும் தமிழ் விழா தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பல்கலைக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

41992028_10217383853534673_854380337047541991986_10217383823173914_629638376200741965085_10217383824413945_307610351352541946185_10217383825213965_497061731582241934093_10217383826413995_207185604708041926131_10217383821773879_245787071245941861686_10217383823933933_887031655966341858744_10217383825773979_194365531915442085517_10217383822813905_2863515538749

https://newuthayan.com/story/11/மாபெரும்-தமிழ்-விழா-யாழ்-பல்கலைக்கழகத்தில்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் யாழ்ப்பாணத்தில் சைவத்தையும் தமிழையும் காக்க ஆங்கிலேய.. கிறிஸ்தவ ஆதிக்கத்துக்குள் இருந்து எப்படி போராட வேண்டி இருந்ததோ.. அதை விடப் பல மடங்கு நிலை இன்று தமிழையும் தமிழர் தேசத்தையும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் வடக்குக் கிழக்கில்.. சிங்கள பெளத்த.. இஸ்லாமிய முஸ்லீம்.. மத வெறியர்களிடம் இருந்தும்.. சர்வதேச, பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்க போராட வேண்டி உள்ளது. 

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்

தன்ற வாள்வெட்டு குஞ்சுகளை மறந்திடாரோ?

முகப்புத்தக பலாத்காரங்களையும் மறந்திடாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் தமிழ்விழாக்கள் என்று கொண்டாட ஆசையிருந்தால், அதனை மட்டகளப்பில்  முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படும் ஊர்களில்,மற்றும்  அம்பாறை ,மணலாறு...திருமலையில் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள், அதுவே எம் இருப்பை இறுமாப்பை பிற இனங்களுக்கு உணர்த்தும்...

அதைவிடுத்து யாழ்நகரத்துக்குள்ளயே சுற்றி சுற்றி தமிழ்விழா என்று பொங்குவது வெறும் ஏமாற்று வித்தை...

நீங்கள்  இப்போ செய்வதை  சிங்களவன்கூட விரும்புவான் ஒரு வட்டத்துக்குள்ளயே நீங்கள் இருங்கோ என்ற அவன் ஆசையை நீங்கள் நிறைவேற்றுவதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

தோணியைக் கவிழ்த்தது போன்ற தலைப்பாகை அணிந்த ஆண்களே சிங் என்ற இனத்தை அடையாளப்படுத்துகின்றனர். அங்கு பெண்களைக்கொண்டு சிங் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

இடுப்பை மறைத்து சேலை அணியும் பெண்களே தமிழினத்தை அடையாளப்படுத்துகின்றனர். இங்கு ஆண்களைக்கொண்டு தமிழ் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இடுப்பில் ஒட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு கலாச்சாரத்தைக் காப்பாத்திறம் எனவும் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

அவையள் கோட்டு சூட்டோடைதான் பிறந்து வளர்ந்தவையள்.....:cool:

எண்டாலும் பட்டுவேட்டி திலகங்களுக்கும்  தமிழ்க்கலாச்சாரம் பெரிசாய்..tw_tounge: tw_tounge_xd: tw_thumbsdown:

Link to comment
Share on other sites

13 hours ago, நவீனன் said:

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது! 

வரும் காலங்களில் மேலும் மேலும் சிறப்படையும் என்ற எதிர்பார்ப்பு உண்டு! 

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழ் வளர்வதை பார்க்கையில் பெருமையே- கலைஞர் புகழேந்தி!!

 
 
625.0.560.320.160.600.053.800.700.160.90
 
 
 

தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி தெரி­வித்­தார்.

இலங்­கை­யி­லுள்ள 15 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் மாபெ­ரும் தமிழ் விழா பல்­க­லைக் கழக மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­தா­வது:

தமி­ழீழ மண்­ணில் எனக்­குப் பல அனு­ப­வங்­கள் உள்­ளன. நான் இங்கு பல தட­வை­கள் வந்­துள்­ளேன். நாம் ஒரு வர­லாற்­றுக் கால­கட்­டத்­தில் உள்­ளோம். கடந்த காலத்­தில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளோம்.

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் நிகழ்­வாக அமைந்­துள்­ளது. தமி­ழர்க் கலை என்­பது உல­கின் மூத்த குடி­க­ளின் கலை­யா­கும். நாங்­கள் பல­வற்றை இழந்து விட்­டோம். அது­மட்­டு­மல்­லாது இருப்­ப­தை­யும் இழந்து கொண்­டி­ருக்­கின்­றோம்.

தமி­ழர் கலையை மீட்­டெ­டுக்­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­றோம். தமிழ் நாட்­டில் தமிழ் அழிந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் தமி­ழீ­ழத்­திலே தமிழ் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதற்­காக முத­லில் தமி­ழீழ மக்­க­ளுக்கு நன்­றி­க­ளைக் கூற­வேண்­டும்.உல­கெங்­கும் தமிழ் பர­வி­யுள்­ளது.

அதற்கு மூல கார­ணம் ஈழத்­துத் தமி­ழர்­களே. ஏனெ­னில் அவர்­கள் கடந்த காலங்­க­ளில் இடப்­பெ­யர்­வு­க­ளைச் சந்­தித்து உல­கின் பல நாடு­க­ளில் வாழ்­கின்­ற­னர். இத­னால் உல­கம் முழு­வ­தும் தமிழ் பர­வி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது தமி­ழ­ரின் கலை, கலா­சா­ர­மும் பர­வி­யுள்­ளது. இதன் விளை­வாக தமி­ழ­ரின் வாழ்­வி­யல் அர­சி­யல் அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

நாம் இன்று தோற்­றி­ருக்­க­லாம் பின்­ன­டை­வு­ க­ளைச் சந்­தித்­தி­ருக்­க­லாம். இவை அனைத்­தும் நாம் முன்­னோக்­கிப் பய­ணிப்­ப­தற்­கான பாட­மா­கவே நாங்­கள் பார்க்க வேண்­டும். நான் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கிளி­நொச்சி மாவ­ட­டத்­துக்கு வந்­தி­ருந்­தேன். அங்கு எத்­த­னையோ நிகழ்­வு­கள் உணர்வு பூர்­வ­மா­க­வும் இடம்­பெற்­றி­ருந்­தது. நான் இப்­போ­தும் அதே உணர்­வி­னைப் பார்க்­கின்­றேன் -– என்­றார்.

இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­ம­னற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன், சி.சிறி­த­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவா­ஜி­லிங்­கம் சயந்­தன், கஜ­தீ­பன் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­உள்­ளிட்ட பலர் கலந்­து­ கொண்­ட­னர்.

IMG_20180917_103524.jpgIMG_20180917_094019.jpgIMG_20180917_090712.jpgIMG_20180917_104220.jpg

IMG_20180917_093906.jpg

https://newuthayan.com/story/09/ஈழத்தில்-தமிழ்-வளர்வதை-பார்க்கையில்-பெருமையே-கலைஞர்-புகழேந்தி.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நவீனன் said:

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

41934093_10217383826413995_2071856047080

                                         :101_point_up:                                           :102_point_up_2:

 

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Paanch said:

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

 

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி இல்லை. மக்கள் ஆட்சி என்று சொல்கிறார்கள். அப்படியாயின் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என எண்ணுவதில் தவறில்லையே தேசிகரே.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது.

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎18‎/‎2018 at 7:28 AM, nedukkalapoovan said:

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

நான் அவரை மட்டும் சொல்லவில்லை....தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற .

நூலகத்திற்கு நூல் வழங்குதல் அது,இது என்று அவர்கள் காலடி எடுத்து வைப்பது  மிச்ச சொச்ச போராடடத்தையும் மழுங்கடிக்க செய்வதாகும்....என்ன மாதிரியான நூல்களை அன்பளிப்பு செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்பவே கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது என்று தொடங்கி இருக்குது...எழுத இன்னும் கனக்க இருக்கு...இது இப்படியே போனால் தமிழ்நாடடை விட தமிழீழம் சீரழிந்து போகும்...

அதே நேரத்தில்  தமிழ்நாட்டில் எமக்காக உயிர் நீத்த/தியாகம்  செய்தவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்  

 

 

 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற . 

குறைந்தது 6 வேறுபாடுகளை கூற முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
    • ஏன் இந்த‌ ச‌ந்தேக‌ம் 😁 போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் எழுதின‌து ந‌ட‌ந்து விட்ட‌து அண்ணா தென் ஆபிரிக்க‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு என்று எழுதினேன்  அதோட‌ இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி குறைந்த‌ ஸ்கோர் அடிச்சும் தென் ஆபிரிக்காவுக்கு இல‌ங்கை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சிர‌ம‌த்தை கொடுத்தவை இலங்கை இன்னொரு விளையாட்டில் தோத்தா இவ‌ர்க‌ள் வெளிய‌ யாழில் ப‌ல‌ர் இல‌ங்கையால் புள்ளிக‌ளை இழ‌க்க‌ கூடும் எல்லா குருப்பிலும் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணி என்ற‌ கேள்விக்கு க‌ண்டிப்பாய் அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்காவை ம‌ற்றும் இல‌ங்கையை தான் தெரிவு செய்து இருப்பின‌ம்.............................. இல‌ங்கை குருப் 8க்கை வ‌ந்தாலும் க‌ட‌சி இட‌த்துக்கு தான் வ‌ர‌க் கூடும்......................................... 2014க்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌ அனைத்து உல‌க‌ கோப்பையிலும் இல‌ங்கை அணியின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்.......................................
    • ஓமோம் கந்தையர்! நீங்கள் இருக்கிற இடங்களிலை ஒரு ஜேர்மன்காரரை காணேலாது....எல்லாம் துருக்கி மற்றும் அரபு வசந்தக்காரர்கள் எல்லோ......அவையள் வேலை வெட்டிக்கு போகமாட்டினம். சாப்பிடுறதை தவிர வேறை வேலையும் இல்லை.....எனவே😛
    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.