Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தானே நீங்கள் அப்ப நல்லாட்சி எண்ட புட்டுக்கு மா குழைச்சுக்கொண்டிருக்கேக்கை சொன்னம்.....எதையும் எழுத்து மூலத்திலை வாங்கிக்கொண்டு குழைக்கத்தொடங்குங்கோ எண்டு......

சொன்ன எங்களுக்கு உங்கடை எல்லாம் தெரிஞ்சவர் தந்த பட்டம் "புலம்பெயர் கோஷ்டி"

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

சொன்ன எங்களுக்கு உங்கடை எல்லாம் தெரிஞ்சவர் தந்த பட்டம் "புலம்பெயர் கோஷ்டி"

அந்த, வெள்ளைவேட்டிக் கள்வர், அவர்தானே... இப்ப அவிஞ்சு போய் நிக்கிற அவர்தானே? ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, Nathamuni said:

அந்த, வெள்ளைவேட்டிக் கள்வர், அவர்தானே... இப்ப அவிஞ்சு போய் நிக்கிற அவர்தானே? ?

அந்த பெயரை வேறை என்ரைவாயாலை சொல்லோணுமாக்கும் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு...

ஒன்றுக்கு இரண்டு தரம் இந்தியாவைக் கேட்டிடிட்டீங்களோ?

52 minutes ago, Nathamuni said:

அந்த, வெள்ளைவேட்டிக் கள்வர், அவர்தானே... இப்ப அவிஞ்சு போய் நிக்கிற அவர்தானே? ?

 

19 minutes ago, குமாரசாமி said:

அந்த பெயரை வேறை என்ரைவாயாலை சொல்லோணுமாக்கும் :grin:

வெக்கப்படாம சொல்லுங்கோ 

அந்த முருகன்தானே அவர்.

Bildet kan inneholde: 1 person

  • கருத்துக்கள உறவுகள்

எழுதினாலும் அதற்கு வலுவான சாட்சியும் வேண்டும் என்பதை மறந்திடாதீங்கோ. எழுதிக் கையெழுத்திட்டவரை மாத்திவிட்டால் அல்லது அவர் மாறிவிட்டால் எல்லாம் நாறிவிடும். தேர்தலும் வருகுது. 

  • கருத்துக்கள உறவுகள்

"உங்கள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது": மஹிந்தவிடம் கூறிய சம்பந்தன்

இலங்கை அரசியல் சர்ச்சை: ராஜபக்‌ஷவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

"நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது" என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

 

இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

"பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றத்தை தள்ளிப்போடுவது சட்டத்திற்கு முரணானது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவளிக்க வேண்டும். அதன்பின்னர் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம்" என்று பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்

முன்னதாக தமிழ் மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்ற கோரிக்கைகளை மகிந்த ராஐபக்ஷவோ அல்லது ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளாமல் விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், "கடந்த நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்கி எதனைச் சாதித்திருக்கின்றதென்ற கேள்வி இருக்கின்றது. இவ்வாறு கடந்த நான்கு வருடமாக நல்லாட்சி அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் அல்லது முடிவுகளும் கைநழுவிப் போயுள்ள சூழலையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது."

"ஆகவே தமிழ் மக்களைப் பொறுத்தரைவயில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இறுக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்தே இதனை அனுக வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய தமிழ் மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்."

"இந்த விடயத்தில் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத இரண்டு தரப்பிற்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. அவ்வாறு ஆதரவளிப்பதால் எந்த பயனும் இல்லை. ஆகவே நடுநிலை வகிப்பதுதான் சிறந்தது." என்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டதால் இலங்கை அரசியலில் சர்ச்சைகள் எழுந்தன. நேற்று அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46027827

 

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒன்றுக்கு இரண்டு தரம் இந்தியாவைக் கேட்டிடிட்டீங்களோ?

கடவுளே எண்டு கும்புட்டு கேக்கிறன்.....

தயவு செய்து கிந்தியாவை மட்டும் சாட்சிக்கையெழுத்து போட கூப்பிடாதையுங்கோ......

கடைசியிலை இருக்கிற கொஞ்சநஞ்ச நலன்களுக்கும் நாசம்

10 hours ago, குமாரசாமி said:

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தரும் கட்சிக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு

இதில் மீண்டுமொருமுறை சம்மந்தனின், சம்மந்தன் கும்பலின் அரைவேக்காட்டுத் தனமும் முட்டாள் தனமும் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.  

அதென்ன மொட்டையாக "தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம்"?

முதலாவது, தமிழ் மக்களுக்கு எப்படியான தீர்வு அவர்களின் அடிப்படை, சுயநிர்ணய உரிமைகளை உறுதிப்படுத்தும் என்ற விபரங்கள் சம்மந்தனுக்கும், சம்மந்தன் கும்பலுக்கும் தெரியாது. இது இவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் மூலம் அறியப்பட்ட ஒன்று.    

இரண்டாவது, சம்மந்தனும், சம்மந்தன் கும்பலும் (மாவை, சுமந்திரன், சரவணபவன், ....) தேர்தலில் வெல்வதற்காக போலி வாக்குறுதிகளை மக்கள் முன்வைப்பவர்கள் என்பது காணொளி ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

எனவே, எந்தவொரு எழுத்துப்பூர்வ உத்தரவாத ஆவணங்களிலும், எப்படியான தீர்வை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் (தீர்வுகள் விபரங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்), எவ்வளவு காலத்துக்குள் செய்து முடிக்க உடன்படுகிறார்கள், அவ்வாறு வழங்கிய உத்தரவாதங்களை அவர்களால் முழுமையாக செய்ய முடியாவிட்டால், தமிழீழ தனிநாடு அமைவதை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இந்த உத்தரவாதத்தை ஒரு கடதாசிலை எழுதி கையெழுத்து வைச்சி எடுத்துகொண்டுபோய் உங்க கக்கூசிலை வைச்சி அவசரத்துக்கு ------ துடைக்க பாவிச்சுட்டு எப்படியிருக்கேண்டு வந்து சனங்களிட்டை சொல்லுங்க. அரசியல் கட்சி மட்டுமல்ல சர்வ அதிகார வல்லமைகொண்ட ஜனாதிபதிகூட அப்படியான ஒரு உத்தரவாதத்தை தர முடியாது. அப்படி தங்தாலும் அது உத்தரவாதமாக கொள்ளப்படமுடியாது. இது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு உத்தி. 

வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு உசிதமான அப்படி ஒரு தீர்வை ( இன்றய தருணத்தில் அது சிறிலங்காவின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றாலும் கூட) தமிழருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இதயசுத்தியுடன் முயற்சி செய்வோம் என்று சிங்களத்தலைவர்களின் கையெழுத்திட்டு ஒரு ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டாலும் விசயம் முடிந்தவுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் தொடரும். அப்படி ஒரு உத்தரவாதம் வெறும் செல்லாக்காசு.

உத்தரவாதம் எழுத்து மூலம் பெறப்பட்டால் அந்த ஒப்பந்தத்தை மீறுபவர் எப்படியான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்பதையும் ஆணித்தரமாகவும் விளக்கமாகவும் அதே ஒப்பந்தத்தில் வெளிப்படுத்தவேண்டும். இப்படியான ஒப்பந்தத்தில் இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய எந்த நாடுகளும் உள்வாங்கப்படக்கூடாது.

சட்டத்தை கரைச்சி குடிச்ச நம்ப  பிரிலியண்ட் எக்ஸ்பர்ட்  சுமந்திரன் அவர்களை  கொஞ்ச நாட்களா காணலை.. இப்பவே கண்ணை கட்டுதே எண்டு சொல்லி அடங்கிட்டாரா அல்லது  வாழ்க்கை வெறுத்து போதி மரத்துக்குகீழ் போய் குந்திட்டாரா. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

ஆமா இந்த உத்தரவாதத்தை ஒரு கடதாசிலை எழுதி கையெழுத்து வைச்சி எடுத்துகொண்டுபோய் உங்க கக்கூசிலை வைச்சி அவசரத்துக்கு ------ துடைக்க பாவிச்சுட்டு எப்படியிருக்கேண்டு வந்து சனங்களிட்டை சொல்லுங்க. அரசியல் கட்சி மட்டுமல்ல சர்வ அதிகார வல்லமைகொண்ட ஜனாதிபதிகூட அப்படியான ஒரு உத்தரவாதத்தை தர முடியாது. அப்படி தங்தாலும் அது உத்தரவாதமாக கொள்ளப்படமுடியாது. இது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு உத்தி. 

வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு உசிதமான அப்படி ஒரு தீர்வை ( இன்றய தருணத்தில் அது சிறிலங்காவின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றாலும் கூட) தமிழருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இதயசுத்தியுடன் முயற்சி செய்வோம் என்று சிங்களத்தலைவர்களின் கையெழுத்திட்டு ஒரு ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டாலும் விசயம் முடிந்தவுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் தொடரும். அப்படி ஒரு உத்தரவாதம் வெறும் செல்லாக்காசு.

உத்தரவாதம் எழுத்து மூலம் பெறப்பட்டால் அந்த ஒப்பந்தத்தை மீறுபவர் எப்படியான எதிர்விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்பதையும் ஆணித்தரமாகவும் விளக்கமாகவும் அதே ஒப்பந்தத்தில் வெளிப்படுத்தவேண்டும். இப்படியான ஒப்பந்தத்தில் இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய எந்த நாடுகளும் உள்வாங்கப்படக்கூடாது.

சட்டத்தை கரைச்சி குடிச்ச நம்ப  பிரிலியண்ட் எக்ஸ்பர்ட்  சுமந்திரன் அவர்களை  கொஞ்ச நாட்களா காணலை.. இப்பவே கண்ணை கட்டுதே எண்டு சொல்லி அடங்கிட்டாரா அல்லது  வாழ்க்கை வெறுத்து போதி மரத்துக்குகீழ் போய் குந்திட்டாரா. 

ஆமா! இந்த வல்லரசுக்கு வல்லரசுகளான அமெரிக்க, ருசிய அணு ஒப்பந்தத்திவிருந்து விலகப்போவதாக சனாதிபதி டிரம் சொன்னதாக ஒரு செய்தி.... ☺️

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

6-DA435-AB-2851-45-A8-9179-5-F2273-EE3-E

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம்.. மகிந்தரோடு 10 வட்டம்.. பின்னம்..மைத்திரி ரணில் சந்திரிக்காவோடு 20 வட்டம் பேசினியள்... அப்ப எல்லாம் சும்மா வாய் மூலம் தான் உத்தரவாதம் எடுத்தியளோ. எனித்தான்.. சாணக்கியமாக எழுத்து மூலம் வாங்கப் போறியளாக்கும்.  பெரிய சட்டாம்பிகளுக்கு அடிப்படை சட்டாம்பி அம்சமே விளங்காமல் தான் இவ்வளவு காலமும் சாணக்கியம் பண்ணினேளோ..?!

உங்களையும் உங்கட பேச்சையும் நம்பி ஏமாற ஒரு சனக்கூட்டம் இருக்கும் வரை உங்கள் காட்டில் ஒரே சாணக்கிய மழைதான். ?

3 hours ago, nedukkalapoovan said:

முன்னம்.. மகிந்தரோடு 10 வட்டம்.. பின்னம்..மைத்திரி ரணில் சந்திரிக்காவோடு 20 வட்டம் பேசினியள்... அப்ப எல்லாம் சும்மா வாய் மூலம் தான் உத்தரவாதம் எடுத்தியளோ. எனித்தான்.. சாணக்கியமாக எழுத்து மூலம் வாங்கப் போறியளாக்கும்.  பெரிய சட்டாம்பிகளுக்கு அடிப்படை சட்டாம்பி அம்சமே விளங்காமல் தான் இவ்வளவு காலமும் சாணக்கியம் பண்ணினேளோ..?!

உங்களையும் உங்கட பேச்சையும் நம்பி ஏமாற ஒரு சனக்கூட்டம் இருக்கும் வரை உங்கள் காட்டில் ஒரே சாணக்கிய மழைதான். ?

இந்த சாணக்கிய மழையை நாங்களும் 30 வருசமா பாத்தமே 

போகும் பாதை பிழை என்று சொன்னவற்றில் இருந்து அதை எதிர்த்தவர்கள்வரை போட்டுத்தள்ளி, கடைசியில் கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு என்று சொல்லி எமக்காக மரணிக்க தயாரா இருந்தவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள்வரை சாவிற்கு அழைத்து சென்ற சாணக்கியத்தையும் அனைவரும் அறிவர்.

உங்களையும் உங்கட பேச்சையும் நம்பி ஏமாற ஒரு சனக்கூட்டம் இருக்கும் வரை உங்கள் காட்டில் ஒரே சாணக்கிய மழைதான். ?

donald duck laughing GIF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.