Jump to content

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?


Recommended Posts

money.jpg

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 618 மில்லியன் ரூபாய்,
  2. பிரமாண கொடைக்காக 195 மில்லியன் ரூபாய்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 310 மில்லியன் ரூபாயும்,
  4. யுனிசெப் திட்டத்தில் 188.05 மில்லியன் ரூபாயும்,
  5. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 28 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2014 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 908 மில்லியன் ரூபா,
  2. பிரமாண கொடைக்காக 1280 மில்லியன் ரூபாய்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 286.47 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 180 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 50.98 மில்லியன் ரூபாயும்,
  6. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2015 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 1440 மில்லியன் ரூபா,
  2. பிரமாண கொடைக்காக 400 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 335.61 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 355 மில்லியன் ரூபாயும்
  5. யுனிசெப் 16.43 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2016 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 1800 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 437 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 289 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 365 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
  6. சிறந்த பாடசாலை 685.35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2017 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 3620.50 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 605.70 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 252 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 360 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
  6. அருகிலுள்ள சிறந்த பாடசாலை ஆயிரத்து 153 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2018 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 1300.00 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 350 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 79 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 324.80 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வாறு 17 ஆயிரத்து 256. 15 மில்லியன் ரூபாய் வடக்கு மாகாணத்தின் கடந்த ஜந்தாண்டு கால அபிவிருத்திக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத் தகவல்கள் யாவும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் ஊடாக மாகாண திறைசேரி தகவல் அலுவலரிடமிருந்து தகவலறியும் உரிமை சட்டம் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகும்.

இதேவேளை, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு தருவதாக அறிவிக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி நிதி வழங்கப்படுவதில்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கு-மாகாண-சபைக்கு-மத்/

Link to comment
Share on other sites

இவ்வளவு பணத்தை பெற்றும் ஒன்றும் செய்யாமல் வெற்று அறிக்கைகளை விட்டதும், ஒன்றுக்கும் உதவாத நூற்றுக்கணக்கான பிரேரணைகளை நிறைவேற்றியதும், மாகாணசபை உறுப்பினர்களுடன் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டியதும் தான் வடக்கு மாகாணசபையினதும் விக்கி ஐயாவினதும் சாதனை.

கொடுத்த நிதியில் ஒரு பகுதிஅயை திருப்பி அனுப்ப வேண்டி வந்தது ஒன்றே போதும் விக்கி ஐயாவின் செயற்திறன் அற்ற திறமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதி ஒதுக்கப்பட்டாலும்.. திட்டங்கள் ஆளுநரால்.. மத்திய அரசால்... ஒப்புக்கொள்ளப்படாமல் திரும்பிய நிதி தான் அதிகம். இது விக்கி ஐயாவின் செயற்திறனின்மையை காட்டவில்லை.. மாகாண சபைகள் என்பது உப்புச்சப்பற்றவை என்பதை மீண்டும் காட்டி நிற்கின்றன.

அதுபோக..யாழில்... தீவகத்தில்... சதுப்பு நிலத்தில் வீட்டுத்திட்டம் அமைப்பு.. கடலுக்குள் தாவரம் வளர்ப்பு.. கடலை மறித்து இராணுவத்துக்கு தடாகம் அமைப்பு.. என்று டக்கி அங்கிள் எவ்வளத்தை அநாவசியமாகச் செலவு செய்தும் சுருட்டியும் உள்ளார் என்பதை அங்கு போய் பார்த்தால் தெரியும்.

தெருக்கள்.. கூட.. மகிந்தர் கட்சிக்கு அல்லது அவரின் கூட்டாளிக்கட்சிகளுக்கு ஆதரவான இடங்களில் திருத்தப்பட்டும்.. மற்றவை பராமரிப்பற்றும் இருக்கக் காணலாம். இதில் மாகாண அரசு தலையிடவே முடியாது.

பண்ணை கடலில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம்.. சிதைந்து போய் கிடக்கிறது. படகுகள்.. கடலுக்குள் செயற்பாடற்று.. உக்குகிறது.

எந்தத் திட்டமும்.. நீண்ட கால தேவைகள்.. பராமரிப்புக்கள் குறித்த அக்கறையற்று.. குறும் அரசியல்.. நோக்கோடும்.. காசு கொள்ளை அடிக்கும் நோக்கடுமே செய்யப்படுகிறது.

வீடமைப்பு திட்டத்துக்கு வீட்டுக்கு 7 இலச்சம் ஒதுக்கப்பட்டும்.. 3.5 இலட்சத்தில் அரைகுறை வீடுகளை கட்டி மக்களிடம் கையளித்துவிட்டு.. மிகுதி 50% ஐ அரசியல்வாதிகளும் அலுவர்களுக்கும் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டது தான் நடந்திருக்கிறது.

இப்படி.. சொறீலங்கா எங்கனும்.. ஊழலும்.. சுருட்டலும்.. அரசியல் செல்வாக்கும்.. சட்ட ஒழுங்கின்மைகளும் தலைவிரித்தாடுகிறது. இதில் விக்கி ஐயா வின் பக்களிப்பு என்பது 1% கூட அமையாது. ஆனால்.. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விக்கி ஐயாவை நோக்கி பாய்வது தான் வேடிக்கை.  🙄

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

நிதி ஒதுக்கப்பட்டாலும்.. திட்டங்கள் ஆளுநரால்.. மத்திய அரசால்... ஒப்புக்கொள்ளப்படாமல் திரும்பிய நிதி தான் அதிகம். இது விக்கி ஐயாவின் செயற்திறனின்மையை காட்டவில்லை.. மாகாண சபைகள் என்பது உப்புச்சப்பற்றவை என்பதை மீண்டும் காட்டி நிற்கின்றன.

அதுபோக..யாழில்... தீவகத்தில்... சதுப்பு நிலத்தில் வீட்டுத்திட்டம் அமைப்பு.. கடலுக்குள் தாவரம் வளர்ப்பு.. கடலை மறித்து இராணுவத்துக்கு தடாகம் அமைப்பு.. என்று டக்கி அங்கிள் எவ்வளத்தை அநாவசியமாகச் செலவு செய்தும் சுருட்டியும் உள்ளார் என்பதை அங்கு போய் பார்த்தால் தெரியும்.

தெருக்கள்.. கூட.. மகிந்தர் கட்சிக்கு அல்லது அவரின் கூட்டாளிக்கட்சிகளுக்கு ஆதரவான இடங்களில் திருத்தப்பட்டும்.. மற்றவை பராமரிப்பற்றும் இருக்கக் காணலாம். இதில் மாகாண அரசு தலையிடவே முடியாது.

பண்ணை கடலில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம்.. சிதைந்து போய் கிடக்கிறது. படகுகள்.. கடலுக்குள் செயற்பாடற்று.. உக்குகிறது.

எந்தத் திட்டமும்.. நீண்ட கால தேவைகள்.. பராமரிப்புக்கள் குறித்த அக்கறையற்று.. குறும் அரசியல்.. நோக்கோடும்.. காசு கொள்ளை அடிக்கும் நோக்கோருமே செய்யப்படுகிறது.

வீடமைப்பு திட்டத்துக்கு வீட்டுக்கு 7 இலச்சம் ஒதுக்கப்பட்டும்.. 3.5 இலட்சத்தில் அரைகுறை வீடுகளை கட்டி மக்களிடம் கையளித்துவிட்டு.. மிகுதி 50% ஐ அரசியல்வாதிகளும் அலுவர்களுக்கும் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டது தான் நடந்திருக்கிறது.

இப்படி.. சொறீலங்கா எங்கனும்.. ஊழலும்.. சுருட்டலும்.. அரசியல் செல்வாக்கும்.. சட்ட ஒழுங்கின்மைகளும் தலைவிரித்தாடுகிறது. இதில் விக்கி ஐயா வின் பக்களிப்பு என்பது 1% கூட அமையாது. ஆனால்.. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விக்கி ஐயாவை நோக்கி பாய்வது தான் வேடிக்கை.  🙄

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

கிழக்கில் தமிழர் பகுதிகளில் நடந்த அபிவிருத்தி அல்லது நல்ல திட்டங்கள் என்ன..??!

கிழக்கு சவுதி பணத்தில்.. திட்டமிட்ட.. இஸ்லாமிய மயமாக்களின் கீழ் தான் திட்டங்கள் அமுலாக்க காண முடிகிறது.

கிழக்கில்.. சேலையும்.. தலையில்.. ஒரு துண்டும் போட்டுத் திரிந்த இஸ்லாமியப் பெண்கள் எல்லாம்.. இப்போ கண் மட்டும் தெரியும் அளவுக்கு உடுப்புகளோடு.. இப்படி பல திட்டங்கள் இஸ்லாமிய கடும் சட்டங்கள் அமுலாகி இருப்பதோடு சவுதி மற்றும் சில முஸ்லீம் நாடுகளின் உதவியுடன்.. நிதிக் கடன் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும்.. இவை எல்லா முஸ்லீம் மாவட்டங்களையும் அடைவதில்லை. தமிழர் பிராந்தியத்தை அண்டிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பை நோக்கோடு கொண்டு அமையும் திட்டங்களே பல.🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

சந்திரகாந்தன் மகிந்தவின் ஆசியோடு செயற்பட்டதை சுலபமாக மறக்கின்றீர்களே!

Quote

கொடுத்த நிதியில் ஒரு பகுதிஅயை திருப்பி அனுப்ப வேண்டி வந்தது ஒன்றே போதும் விக்கி ஐயாவின் செயற்திறன் அற்ற திறமைக்கு.

மேலே எங்கும் வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லையே.

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

கிழக்கில் தமிழர் பகுதிகளில் நடந்த அபிவிருத்தி அல்லது நல்ல திட்டங்கள் என்ன..??!

கிழக்கு சவுதி பணத்தில்.. திட்டமிட்ட.. இஸ்லாமிய மயமாக்களின் கீழ் தான் திட்டங்கள் அமுலாக்க காண முடிகிறது.

கிழக்கில்.. சேலையும்.. தலையில்.. ஒரு துண்டும் போட்டுத் திரிந்த இஸ்லாமியப் பெண்கள் எல்லாம்.. இப்போ கண் மட்டும் தெரியும் அளவுக்கு உடுப்புகளோடு.. இப்படி பல திட்டங்கள் இஸ்லாமிய கடும் சட்டங்கள் அமுலாகி இருப்பதோடு சவுதி மற்றும் சில முஸ்லீம் நாடுகளின் உதவியுடன்.. நிதிக் கடன் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும்.. இவை எல்லா முஸ்லீம் மாவட்டங்களையும் அடைவதில்லை. தமிழர் பிராந்தியத்தை அண்டிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பை நோக்கோடு கொண்டு அமையும் திட்டங்களே அமையும்.🙄

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

1 minute ago, ஏராளன் said:

சந்திரகாந்தன் மகிந்தவின் ஆசியோடு செயற்பட்டதை சுலபமாக மறக்கின்றீர்களே!

புரியவில்லை. சந்திரகாந்தன் பிள்ளையான் மகிந்தவின் துணையுடன் கிழக்கை அபிவிருத்தி செய்தார் என்று சொல்கின்றீர்களா? (இதே போன்ற ஒரு கருத்தை ரதியும் இன்னொரு திரியில் வைத்து இருந்தார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

கிழக்கை இஸ்லாமிய மயப்படுத்தி.... இயன்ற வரை சிங்கள மயப்படுத்தி தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கனும் என்ற வகையில்.. அங்கு சிங்கள அரசும்.. இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கூட்டிணைந்து செயற்படுவது.. ஹிஸ்புல்லா.. ஆளுநராக நியமிக்கப்பட்ட வகையில் இருந்து மிகவும் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால்.. உண்மையில் நிலை இவை எல்லாம் அங்கு நன்கு திட்டமிட்டு சிக்கல் தன்மைகளோடு.. நடைமுறையாகிறது.

அதேவேளை.. வடக்கில்.. தமிழர்களின் ஆட்சி அமைந்தாலும்.. அது தீர்க்கமாக இருக்கக் கூடாது என்பதிலும் இதே சக்திகள் இருக்கும் போது. வடக்கிலோ.. கிழக்கிலோ தமிழர் தரப்பால்.. எதை உருப்படியாக செய்ய முடியும்... செய்ய நினைத்தாலும்..??! 🙄

Link to comment
Share on other sites

சரி, அப்படி என்றால் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு என்ன வழிகள் இருக்கு என நினைக்கின்றீர்கள்? அவ் வழிகளில் ஏன் விக்கி ஐயா தொடக்கம் எவரும் முயற்சிக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கவில்லை என்பது தவறு. முயற்சித்தார்கள் தடைகள் போடப்பட்டு.. முடக்கப்பட்டார் என்பதே யதார்த்தம். இதனை முன்னாள் ஆளுநர் குரோ இதய சுத்தி உள்ளவராக இருந்தார்.. பகிரங்கமாக ஒப்புக் கொள்ளலாம்.

குரோ செய்த செயல்கள்.... வாள் வெட்டுக்கும்பலை இராணுவத்தின் தயவோடு உருவாக்கி.. விசேட அதிரடிப்படையை யாழ் கோட்டைக்கு அருகில் முகாமிட வைத்தது தான்.

இப்படி ஆளுநரிடம் அதிகாரங்கள் பொதிந்த நிலையில்.. மாகாண சபை என்பது.. ஒரு உப்புச்சப்பற்றது.

சர்வதேச நிதிகளில் அமைந்த திட்டங்களில் கூட காசு சுருட்டல் நிகழ்ந்துள்ளதே தவிர திட்டங்கள் முறையாக அமுலாகாத நிலையில்..

பல சர்வதேச நிதிகளும்.. நாடுகளும் திட்டங்களில் இருந்து பின்வாங்கி உள்ளன.

நோர்வே கூட கொண்டு வர இருந்த சில திட்டங்களுக்கு மகிந்த கொம்பனி.. 10% தொடக்கம்.. 20% கையூட்டு கேட்ட நிலையில்.. நோர்வே பின்வாங்கிச் சென்றிருக்கிறது.

இப்படிப் பல. இந்த நிலையில் விக்கி ஐயா.. தமிழருக்கு என்ன செய்ய முடியுமோ.. அதை தன்னால் இயன்ற வரை செய்ய முற்பட்டிருக்கிறார் என்பது தான் யதார்த்தம். ஆனால்.. அவரால்.. எதையும் பூரணமாகச் செய்ய முடியவில்லை. அதற்கு இடமளிக்கப்படவில்லை. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கடந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் எங்கள் ஊரின் வீதி ஜனவரி மாதம் முடிய முன்னர் புனரமைக்கப்பட்டது, மத்திய அரசு நிதியை உடனுக்குடன் வழங்க தாமதமானதாலேயே.
இது போலவே முதலமைச்சரின் காலத்திலும் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மீதியை வருட இறுதியில்  வழங்கிவிட்டு செலவு செய்யவில்லை( உண்மையில் வருட இறுதியில் அவசரமாக செலவளிக்கப்பட்டது)
என்று மத்திய அரசும் அதனோடு ஒத்தோடுபவர்களும் வாதித்தனர், ஆனால் விக்கி ஐயா வந்த நிதி எதுவும் செலவளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவில்லை என பல தடவை அறிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

புரியவில்லை. சந்திரகாந்தன் பிள்ளையான் மகிந்தவின் துணையுடன் கிழக்கை அபிவிருத்தி செய்தார் என்று சொல்கின்றீர்களா? (இதே போன்ற ஒரு கருத்தை ரதியும் இன்னொரு திரியில் வைத்து இருந்தார்)

ரதி எங்கே சொன்னார்?... பிள்ளையான் திரும்பவும் முதலமைச்சராய் வரக் கூடாது என்பதற்காகத் தான் தூக்கி உள்ளே  வைத்து இருக்கிறார்கள்...வந்தால் தமிழர்களுக்கு நல்லது செய்து போடுவார்...இங்கே யாழில் எழுதுபவர்களுக்கு கிழக்கில் தமிழ் சனம் எப்படிப் போனாலும் பரவாயில்லை அவர்கள்[பிள்ளையான்] உள்ளே இருந்தால் சரி.

வெட்கமில்லாமல் இங்கே சிலர்  சீவிக்கு சப்போட் பண்ணுவதை பார்த்தால் அவரே அனந்த கண்ணீர் வடிப்பார் 
  

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை செய்திருக்கக் கூடிய பலவற்றை செய்யவில்லை என்பதுவும், மக்கள் நலன்கள் தொடர்பாக வெளிப்படையாக தெரியாத பலவற்றையும் செய்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.

வட மாகாணசபையின் பதவிக் காலத்தில், சுமந்திரன் - மாவை - ஸ்ரீதரன் - சரவணபவன் - சிவஞானம் போன்றவர்கள் ரணிலுடன் - ஆளுநர்களுடன் - சேர்ந்து போட்ட முட்டுக்கட்டைகள் வட மாகாணசபையின் செயற்திறனை 40% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் கையாளுதல் அனுபவமின்மையும், அவருடன் கூடவிருந்த குள்ளநரிகள் போன்றவர்களின் செயற்பாடுகளும் வட மாகாணசபையின் செயற்திறனை 10% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

மாகாண சபையின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் அதிகாரம் திட்டமிட்ட தமிழின அழிப்பை செய்துவரும் சிங்கள-பௌத்த பயங்கரவாத இயந்திரத்தின் கைகளில் இருப்பதையும் எவரும் மறுக்க முடியாது. இது தமிழின விரோத ஹிந்திய கயவர்களால் ஏற்படுத்தப்பட்ட பொறி!   

இதே இடத்தில் மாவை அல்லது சுமந்திரன் இருந்திருந்தால் விக்னேஸ்வரன் அவர்கள் சாதித்ததில் 40% ஜக் கூட செய்திருக்க மாட்டார்.

இதே இடத்தில் சம்மந்தன் இருந்திருந்தால் விக்னேஸ்வரன் அவர்கள் சாதித்ததில் 5% ஜக் கூட செய்திருக்க மாட்டார்.

வட மாகாணசபையின் பதவிக் காலத்தில், வேறுயாராலும் செய்திருக்க முடியாத ஒன்றை விக்னேஸ்வரன் அவர்கள் உறுதியாக செய்து முடித்திருந்தார். அது சிங்கள-பௌத்த அரசின் திட்டமிட்ட இனவழிப்புகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சட்டவலுவுள்ள ஆவணங்களாக தயாரித்து சர்வதேச பிரதிநிதிகள் பலரிடம் கையளித்துள்ளார்.

எனவே, இவற்றையும் மனதில் கொண்டு கருத்தெழுவது தமிழினத்தின் எதிர்காலத்துக்கு  உதவியாக இருக்கும்.

அதற்காக உண்மைகளை (விக்னேஸ்வரன் அவர்களால் செய்யமுடியாது போனவற்றை) மறைக்கத் தேவையில்லை. உண்மைகளை மறைப்பதுவும் நல்ல எதிர்காலத்துக்கு  உதவப் போவதில்லை.

தமது பலவீனங்களை விக்னேஸ்வரன் அவர்கள் தரப்பும் உணர்ந்து திருந்த வேண்டும்.

அதற்காவே இந்த தலைப்பை இங்கு இணைத்தேன்!

Link to comment
Share on other sites

7 hours ago, ரதி said:

 

வெட்கமில்லாமல் இங்கே சிலர்  சீவிக்கு சப்போட் பண்ணுவதை பார்த்தால் அவரே அனந்த கண்ணீர் வடிப்பார் 
  

இதுதான் உண்மை.

விக்கியாரின் அத்தியாயம் எப்போதோ முடிந்துவிட்டது.

இனி தலை காட்ட முடியாது.

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

 

விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் கையாளுதல் அனுபவமின்மையும், அவருடன் கூடவிருந்த குள்ளநரிகள் போன்றவர்களின் செயற்பாடுகளும் வட மாகாணசபையின் செயற்திறனை 10% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

தமது பலவீனங்களை விக்னேஸ்வரன் அவர்கள் தரப்பும் உணர்ந்து திருந்த வேண்டும்.

 



உண்மைதான்.

விக்கியார் அரசியலில் கத்துக்  குட்டி.

நீதிவானாக நீதிமன்றங்களிலும் பஞ்சாயத்து தீர்ப்புகளை, எப்படித்தான் வழங்கி இருப்பாரோ, யாமறியோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தரவுகள்  ஏற்றப்படுத்த முனையும் தோற்றதின் நிதர்சனமும், உண்மையான நிலவரத்தின் நிதர்சனத்தையும் சொல்லாடல்களையும், வரிக்கிளுக்கிடையேயும் கூர்ந்து கிரகித்தால் உண்மை புலப்படும்.

செய்தியின் சாராம்சம், பெருமளவு நிதி வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டாலும், விக்கியின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவமின்மையே நிதி பயன்படுத்தப்படாமல் போனததற்கான காரணம். ஓர்தரவுகளின் படி  சனநாயக அமைப்பிடற்கு வழங்கப்பட்டாலும், செலவு செய்யப்படாமையின்  குறையை, குற்றத்தை ஓர் தனி நபரின் மீது சுமத்துவது.

விக்கி மீது வெளிப்படையான விமர்சனம் இல்லாவிட்டாலும், அவர் மீதான குறை தொக்காக  தொனிக்கிறது.

இங்கே அதை வரிக்கு வரி மேளம் அடித்து காட்டுபவர்களும் இருக்கிறார்கள், செய்தியை விட.

தரவுகளின் படி, நிதி ஒதுக்கப்பட்டது என்றே இருக்கிறது. நிதி ஒதுக்கம் என்பது ஓர் மெலெழுந்தவரியான திட்டமிடல். இதில் எந்த விதமான இறுதியான தீர்மானமோ, ஆகக்குறைந்தது வாக்குறுதியோ இல்லை.

ஒதுக்கப்பட்ட நிதி, அனுப்பப்பட்டதா (அதாவது திரை சேரியின் மத்திய வங்கி கணக்கில் இருந்து) என்பதாய் யாரவது உறுதி படுத்த முடியுமா?

அப்படி அது அனுப்பப்பட்டிருந்தால், அது ஆளுநரின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கி
கணக்கிற்கு வந்தடைந்திருக்கும்.  ஆனாலும், அந்த நிதி எப்போது வந்தடைந்தது என்பது தெரியாது. நிதியாண்டின் இறுதி வாரத்தில் வந்தாலும் வந்தடைந்தது என்பதே அர்த்தம், ஆனால் நடைமுறையில் ஒன்றுமே செய்யதிருக்கமுடியாது, ஆளுநரால் கூட.

அப்படி ஆளுநர் வங்கிகணக்கில் நிதி வந்தடைந்திருந்தால், வடமாகாணசபையின் பாதீடு மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஆளுநர் வங்கி கணக்கில் இருந்து, உரிய ஆவணங்களில் ஆளுநர் மற்றும் திறைசேரியின் ஒப்புதல் ஒப்பத்துடன், உரிய நேரத்தில்,வடமாகாண சபையின் வங்கி கணக்கிற்க்கு விடுவிக்கப்பட்டதா (funds released) ?

வடமாகாண சபையின் வங்கி கண்ணக்கு கூட, திறைசேரியால் முடக்க  அல்லது தடுக்க முடியும், அப்படி நிதி வடமாகாணசபை வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டாலும்.

இது public finance இல் உள்ள சாதாரண கட்டுப்பட்டு முனைகளும், அதிகார  மையங்களும்.

சொறி லங்கா, இதை விட அதிகார கட்டுப்பட்டு முனைகளை, வடமாகாண சபையை பொறுத்தவரை உருவாக் கியிருந்தால், அதில் ஒன்றும் வியப்பில்லை.

மேலே சொல்லியவற்றை மனதில் இருத்தி, தரவுகளை மீண்டும் வாசியுங்கள்.

உங்களுக்கே, செய்தியின் தரவுகள் ஏற்ப்படுத்த முனையும் தோற்றத்தின் விம்பம், யாரை தாக்குவதற்கு என்பது புரியும்.

மறுவளமாக, யாரையும் குறைக்கவோ அல்லது கூட்டுவதத்திற்கோ இதை நான் இங்கு எழுதவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

இவ்வளவு பணத்தை பெற்றும் ஒன்றும் செய்யாமல் வெற்று அறிக்கைகளை விட்டதும், ஒன்றுக்கும் உதவாத நூற்றுக்கணக்கான பிரேரணைகளை நிறைவேற்றியதும், மாகாணசபை உறுப்பினர்களுடன் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டியதும் தான் வடக்கு மாகாணசபையினதும் விக்கி ஐயாவினதும் சாதனை.

 

20 hours ago, ஏராளன் said:

மேலே எங்கும் வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லையே.

செய்தியின் தரவுகள் ஏற்றப்படுத்த முனைந்த தோற்றத்தை நீங்களே ஏற்றுக்கொண்டு விட்டீர்கள், ஓர் மறு கேள்வியுமின்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம்

அர்த்தம் உங்களுக்கு புரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை.இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 😧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை.இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 😧

மட்டக்களப்பில் பிள்ளையானின் அபிவிருத்தி ( நீங்கள் கூறும்) எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

அவர் அதைச் செய்திருக்கலாம் என்பது தான் என் அபிப்பிராயம். மேலும், மாகாண சபையின் தற்போதைய குறைபாடுகள் நிவர்த்திக்கும் வரை அபிவிருத்தி இயலாது என்பதும் ஒரு நொண்டிச்சாட்டு எனக் கருதுகிறேன். ஆளுனரோடு ஆளுனரின் செயலாளரோடு (அவரோடும் மோதல் இருந்ததாக தகவல்?) working relationship ஆவது வைத்திருந்து பணியார்றியிருக்கலாம். கடஞ்சா சொல்வது போல ஒதுக்கியதும் வந்ததும் வெவ்வேறாக இருக்க இந்த உராய்வுள்ள உறவுகள் தான் காரணமோ தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.