Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன்

E.Saravanapavan.jpg

தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை எமது மக்கள் நிராகரித்தார்கள். 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் மாற்றுக் கட்சிகளை அவர்கள் நிராகரித்தார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மாற்றுக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கின. ஆனால், களத்தில் நின்ற எமது மக்கள், மாற்றுக் கட்சிகளைத் தோற்கடித்தன. இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்.

விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரைக் கொண்டுவந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைதான் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினார்கள். கூட்டமைப்பில் இருந்தவர்கள் பலரும் அதனை அன்றே எதிர்த்தார்கள்.

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது எவரினது சொல்லையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார்” – என்று தெரிவித்தார்.

 

http://athavannews.com/தமிழ்-மக்களின்-செல்வாக்க/

 

 

2 hours ago, கிருபன் said:

நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம்.

2 hours ago, கிருபன் said:

வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை

சரவணபவனின் உளறலில் எத்தனை முரண்பாடு!
2வது, 3வது, ..... பிழைகளையும் சொல்லியிருக்கலாமே.


அரசியல் சூனியமான சரவணபவன் அரசியல் பற்றி கதைப்பது "குரங்கின் கைப் பூமாலை" போலத் தான்.

தமிழின படுகொலைகாரர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டுவதே சரவணபவன் செய்த ஒரேயொரு சாதனை. 

 

நீங்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும் .....உள்ளுராட்சி தேர்தலில் தெரியவில்லையோ அண்ணருக்கு ..
பொறுங்கள் அடுத்த தேர்தல் சொல்லும் .......
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் நீங்கள் எதைத்தான் சரியாகச் செய்துள்ளீர்கள்?

9 hours ago, போல் said:

 

தமிழின படுகொலைகாரர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டுவதே சரவணபவன் செய்த ஒரேயொரு சாதனை. 

 

சிங்கள மக்களுடன் சேர்ந்து, கேக் சாப்பிடுவதும் தப்பா?

யாழில் பெரும்பாலும் உணவுப் பொருள்களாக இருப்பது, சிங்களவர்களின் உற்பத்திதான்.

யாழ் மக்களுக்கு அவைகளை புறக்கணிக்கச் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக்கடைக்கு எதிர்கடை இல்லை என்கிற துணிவு அவரை இப்படி பேச வைக்கிறது ஆனால் எல்லா நேரமும் அவர்களுக்கான காலமாய் இருக்காது விக்கினேஸ்வரனுக்கு அரசியல் தெரியாமல் இருக்கலாம் ஆனால் மக்களின் விருப்பு வாக்கில் முன்னணியில் இருந்தவர் .

3 minutes ago, thulasie said:

சிங்கள மக்களுடன் சேர்ந்து, கேக் சாப்பிடுவதும் தப்பா?

யாழில் பெரும்பாலும் உணவுப் பொருள்களாக இருப்பது, சிங்களவர்களின் உற்பத்திதான்.

யாழ் மக்களுக்கு அவைகளை புறக்கணிக்கச் செய்யுங்கள்.

அது என்ன வகையான உணவு பொருள்கள் ?

21 minutes ago, பெருமாள் said:

 

22 minutes ago, பெருமாள் said:

அது என்ன வகையான உணவு பொருள்கள் ?

Cake

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரைக் கொண்டுவந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைதான் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினார்கள்.

தன்ர தலைமைக்கும் அது தெரியாது என்று ஒத்துக்கொள்றார்!

19 minutes ago, ஏராளன் said:

தன்ர தலைமைக்கும் அது தெரியாது என்று ஒத்துக்கொள்றார்!

தங்களுக்கு தெரிந்த ஒன்று,  கூட்டமைப்பிற்கு தெரியாமல் போனது, அவர்களின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையாக காட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, thulasie said:

தங்களுக்கு தெரிந்த ஒன்று,  கூட்டமைப்பிற்கு தெரியாமல் போனது, அவர்களின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையாக காட்டுது 

கூட்டமைப்ப சொல்லல துளசி, அதன் தலைமையை சொன்னேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

Cake

 

1 hour ago, thulasie said:

யாழில் பெரும்பாலும் உணவுப் பொருள்களாக இருப்பது, சிங்களவர்களின் உற்பத்திதான்.

cake மட்டும்தான் சிங்களவர்களின் உற்பத்தி பொருள்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

 

cake மட்டும்தான் சிங்களவர்களின் உற்பத்தி பொருள்கள் ?

சிங்களவரின் உற்பத்திப் பொருட்கள் களத்தில் கருத்துக்களையும் எழுதுவதை நீங்கள் கவனிக்கவில்லையா....? 

3 hours ago, thulasie said:

சிங்கள மக்களுடன் சேர்ந்து, கேக் சாப்பிடுவதும் தப்பா?

நீங்கள் அதை தானே செய்கிறீர்கள் போல இருக்கு!
தெளியுது! தெளியட்டும்.

1 hour ago, Paanch said:

சிங்களவரின் உற்பத்திப் பொருட்கள் களத்தில் கருத்துக்களையும் எழுதுவதை நீங்கள் கவனிக்கவில்லையா....? 

சிங்களவரின் உற்பத்திப் பொருள்களில், கேக்கும் ஒன்று.

சுவைத்துப் பாருங்கள், யாழில்.

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்... சரவணபவன் என்பவர்,  
தனது,  வளர்ந்த மகளுக்கு....  ஜனாதிபதி  மைத்திரி பாலாவை....
தனது வீட்டிற்கு கூப்பிட்டு.. கேக் வெட்டி...  "கும்மி"  அடித்தவர்.
இதைப்  பார்த்த பிறகு.... மக்களிடம், செல்வாக்கு குறையவில்லை என்று சொல்வது.. வேடிக்கையாக உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

சிங்களவரின் உற்பத்திப் பொருள்களில், கேக்கும் ஒன்று.

சுவைத்துப் பாருங்கள், யாழில்.

சிங்களவரின் உற்பத்தி பொருள்களில் கேக்கு தானா உங்களுக்கு கிடைத்தது சுவைத்துப்பார்க்க....... 😉 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த உள்ளூராட்சி தேர்த்தலில் ஈபிடிபியுடனும் , கஜேந்திரன் பொன்ம்பலத்துடனும் சேர்ந்தே  நகரசபைகளின் ஆட்சி அமைக்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டதை எப்படி இவர் இலகுவாக மறந்து விட்டார்?? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

சிங்களவரின் உற்பத்தி பொருள்களில் கேக்கு தானா உங்களுக்கு கிடைத்தது சுவைத்துப்பார்க்க....... 😉 

அதில் என்ன சந்தேகம்.....?:103_point_down:

Quellbild anzeigen

'ஒருமித்த நாட்டின்'  கேக்.

14 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

Bildergebnis für à®à®°à®µà®£à®ªà®µà®©à¯  à®®à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்... சரவணபவன் என்பவர்,  
தனது,  வளர்ந்த மகளுக்கு....  ஜனாதிபதி  மைத்திரி பாலாவை....
தனது வீட்டிற்கு கூப்பிட்டு.. கேக் வெட்டி...  "கும்மி"  அடித்தவர்.
.


 

கேக் வெட்டுவது, சாப்பிடுவதற்கு.

கும்மியடிப்பதற்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:


 

கேக் வெட்டுவது, சாப்பிடுவதற்கு.

கும்மியடிப்பதற்கு அல்ல.

அட நான் இவ்வளவு நாளும் மாறி நினைத்துகொண்டு இருந்துவிட்டன்  நன்றி அரிய விளக்கத்துக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.