Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானுக்கு... கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தர à®®à¯à®à®¿à®¯à®¾à®¤à¯ à®à®°à¯à®®à¯à®ªà¯ விவà®à®¾à®¯à®¿

மெழுகுவர்த்தி கிடைக்கல.. கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு.. சீமானுக்கு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

வரப்போகும் தேர்தலில் கமலும், சீமானும் தனித்து போட்டியிடுவதாக சொல்லி விட்டனர். இதில், கமலுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால் சீமானுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இதுபோலவேதான் நாம் தமிழர் கட்சி தனித்து போடடியிட்டது. அப்போது அக்கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். அதனால் இந்த முறையும் அதே சின்னத்தை வேண்டும் என சீமான் கேட்டார்.

ஆனால், போன வருட கடைசியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக முன்னணி (People's Democratic Front) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டதுடன், அக்கட்சிக்கு மெழுகுவத்தி சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

அதனால் அதே சின்னம் உங்களுக்கு தர முடியாது என்று ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனை ஏற்ற நாம் தமிழர் கட்சியும், அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

அதன்படி, தற்போது நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.

சின்னம் எதுவானால் என்ன... இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தேர்தலை சந்திக்க உள்ளார் சீமான்.. நிச்சயம் அவருக்கு அனுகூலமான முடிவுகளையே இந்த தேர்தல் பெற்றுத்தரும்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-thamilar-party-symbol-344021.html

எப்படியும் இந்த முறையும் கட்டுப்பணத்தை எல்லா தொகுதிகளிலும் இழக்கப் போகின்றார். அதற்கு முதல் இனிப்பான கரும்பு கிடைத்தமைக்கு சந்தோசப்படட்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சின்னம்துவானால் என்ன... இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தேர்தலை சந்திக்க உள்ளார் சீமான்.. நிச்சயம் அவருக்கு அனுகூலமான முடிவுகளையே இந்த தேர்தல் பெற்றுத்தரும்!

 

5 minutes ago, நிழலி said:

எப்படியும் இந்த முறையும் கட்டுப்பணத்தை எல்லா தொகுதிகளிலும் இழக்கப் போகின்றார். அதற்கு முதல் இனிப்பான கரும்பு கிடைத்தமைக்கு சந்தோசப்படட்டும்.
 

கடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை விட கூடுதலாக கிடைக்கும்.
அப்படி கிடைத்தால் அதுவே பெரிய வெற்றி தான்.
அதேயளவோ அல்லது குறைத்து எடுத்தாலோ தான் பிரச்சனையே.

10 minutes ago, ஈழப்பிரியன் said:

 

கடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை விட கூடுதலாக கிடைக்கும்.
அப்படி கிடைத்தால் அதுவே பெரிய வெற்றி தான்.
அதேயளவோ அல்லது குறைத்து எடுத்தாலோ தான் பிரச்சனையே.

சீமானின் சில அரசியல் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவரது சில கருத்துகள் நல்ல கருத்துகள். ஐயப்ப கோவில் தொடர்பாகவும் பெண்களின் மாதவிடாய் தொடர்பாகவும் அவர் பேசிய காணொளிகளை பார்த்தனான். தமிழகத்தில் இவ்வளவு துணிவாக bold ஆக எந்த அரசியல் தலைவர்களும் கதைத்து இருக்கவில்லை.

ஆனால் சீமான் தனித்து போட்டியிட முனைந்தால் கட்டுப்பணமும் கிடைக்க போவதில்லை. தமிழகத்தில் கூட்டணி அரசியல் தான் இப்போதைக்கு சரிவரும். கூட்டணி அமைத்து சில இடங்களில் வென்று பின் அதை பயனபடுத்தி வளர்ந்தால் மட்டுமே அவராலும் அவரது கட்சியாலும் அரசியல் அதிகாரங்களை நோக்கி நகரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலாவது இரட்டை மெழுகுவர்த்தியை தக்க வைக்கனும். ஹிந்திய தேசம்.. ஒரு தமிழக தமிழ் மக்கள் கட்சி பலமடைவதை விரும்பாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

ஆனால் சீமான் தனித்து போட்டியிட முனைந்தால் கட்டுப்பணமும் கிடைக்க போவதில்லை. தமிழகத்தில் கூட்டணி அரசியல் தான் இப்போதைக்கு சரிவரும். கூட்டணி அமைத்து சில இடங்களில் வென்று பின் அதை பயனபடுத்தி வளர்ந்தால் மட்டுமே அவராலும் அவரது கட்சியாலும் அரசியல் அதிகாரங்களை நோக்கி நகரமுடியும்.

முதலில் அவருக்குள்ள பலத்தை வெளியே கொண்டுவந்தால்த் தான் கூட்டணிக்கே கூப்பிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

சீமானின் சில அரசியல் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவரது சில கருத்துகள் நல்ல கருத்துகள். ஐயப்ப கோவில் தொடர்பாகவும் பெண்களின் மாதவிடாய் தொடர்பாகவும் அவர் பேசிய காணொளிகளை பார்த்தனான். தமிழகத்தில் இவ்வளவு துணிவாக bold ஆக எந்த அரசியல் தலைவர்களும் கதைத்து இருக்கவில்லை.

ஆனால் சீமான் தனித்து போட்டியிட முனைந்தால் கட்டுப்பணமும் கிடைக்க போவதில்லை. தமிழகத்தில் கூட்டணி அரசியல் தான் இப்போதைக்கு சரிவரும். கூட்டணி அமைத்து சில இடங்களில் வென்று பின் அதை பயனபடுத்தி வளர்ந்தால் மட்டுமே அவராலும் அவரது கட்சியாலும் அரசியல் அதிகாரங்களை நோக்கி நகரமுடியும்.

அவர் தேசிய திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லை என்று சொல்கிறாரே?!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சீமானின் சில அரசியல் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவரது சில கருத்துகள் நல்ல கருத்துகள். ஐயப்ப கோவில் தொடர்பாகவும் பெண்களின் மாதவிடாய் தொடர்பாகவும் அவர் பேசிய காணொளிகளை பார்த்தனான். தமிழகத்தில் இவ்வளவு துணிவாக bold ஆக எந்த அரசியல் தலைவர்களும் கதைத்து இருக்கவில்லை.

ஆனால் சீமான் தனித்து போட்டியிட முனைந்தால் கட்டுப்பணமும் கிடைக்க போவதில்லை. தமிழகத்தில் கூட்டணி அரசியல் தான் இப்போதைக்கு சரிவரும். கூட்டணி அமைத்து சில இடங்களில் வென்று பின் அதை பயனபடுத்தி வளர்ந்தால் மட்டுமே அவராலும் அவரது கட்சியாலும் அரசியல் அதிகாரங்களை நோக்கி நகரமுடியும்.

சீமானின் வேறு கருத்துக்களையும் கேட்டால் அவரது தெளிவான  நிலைப்பாடு புரியக்கூடும். 

கூட்டணி சேர்வது தற்காலிக வெற்றி, நிரந்தர தோல்வி. 

அவர் வெல்வதற்காக தேர்தலில் நிற்கவில்லை. தனக்குரிய காலம் வரும் வரை களத்தில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்.

ஸ்டாலினும், அன்புமணியும், வாசனும், ராகுல் காந்தியும், பரம்பரையாக அரசியல் பண்ணுபவர்கள்.  

அன்புமணியும், சீமானும் எதிர்காலத்தில் சிறந்த அரசியலை தருவார்கள் என எதிர்பார்க்கப் பட்டவர்கள். கூட்டணி என அன்புமணி சிக்கிக் கொள்ள, அவரது இடத்தினை இப்போது கமல் பிடித்திருக்கிறார். 

சிறையில் இருந்து வந்த வைகோ, சிறை வைத்த அம்மாவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று இருந்தால், இன்று அவர் தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்திருப்பார்.

இப்போது கூட பாருங்கள், தனது வெற்றி  மீது நம்பிக்கை இல்லாமல், கிடைத்த ஈரோடு தொகுதியில், அவரது கைத்தடியை நிறுத்துகிறார்.

திமுக வெல்ல 17 ஆண்டுகள் சென்றன. இம்ரான் கான்  பிரதமராக 22 ஆண்டுகள் சென்றன.

பிரேமதாச பல ஆண்டுகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆக இருந்தே, பிரதான அரசியல் நீரோட்டத்தினுள் வந்தார்.

ஆரம்பகாலத்தில் சீமானின் கருத்துக்கள் ஆவேசம் மிக்கதாகவும், விஜயகாந்த், வைகோ போன்றவர்கள் மீதான தனிமனித தாக்குதல் கொண்டதாகவும் இருந்தன. அப்போது அவற்றுள் எனக்கும் உடன்பாடு இருக்கவில்லை.

இப்போது அவரது கருத்துக்கள் முதிர்வினை வெளிப்படுத்துகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

நான் முன்னே சொன்னேன், அடுத்த தேர்தலில் வரை, சீமான் தனித்து நின்று தாக்குப் பிடித்தால் வெற்றி கைகொடுக்கும்.

வர இருக்கும் 21 தொகுதி இடைத்தேர்தல்களில் தோல்வியுடன்  எடப்பாடி பதவி இறங்க நேரிடும். இரு பகுதியும் பணம் வீசி விளையாடுவர்.

இன்று உள்ள தமிழகத்  தலைவர்களில், மிக தெளிவாக, அறிவார்த்தமாக, போல்ட் ஆக பேசும் ஒரு தலைவர் சீமான் தான்.

கரு பழனியப்பன் சொன்னார், தலைவர்கள் பேச விட்டு பார்க்கும் போது தான் அவர்களின் பூராயம் புரியும். ரஜனி வாயை திறந்தபோது தான், அட இவ்வளவுதானா இவர்களின் அறிவு இருப்பு என புரிந்தது. அதனால் இப்போது அவரும் வாயை மூடிக் கொண்டு விட்டார்.

அரசியலில் பேச்சு வன்மை சக்தி மிக்க ஒரு ஆயுதம். அண்ணாவும், கலைஞரும் அதனாலேயே முதல்வரானார்.

ஆஸ்த்ரிய நாட்டுக் காரரான  ஹிட்லரின் நாவன்மை அவரை ஜெர்மனியின் தலைமைத்துவத்துக்கு அனுப்பியது.

கறுப்பரான, பராக் ஹுசேன் ஒபாமா என்னும் இஸ்லாமிய பெயரையும் கொண்ட ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியானது நாவன்மை.

ஆனால் நாவன்மை மட்டும் போதாது... விசயமும் அதிலே இருக்க வேண்டும். அதுவே வெற்றி க்கு வழி. 

சீமானின் நாவன்மை ஒன்றே இலங்கை தமிழர் மத்தியிலும் சீமானை பிரபலப்படுத்தி வைத்துள்ளது.

அவர் ஈழம் பிடித்து தருவார் என்று நம்பும் முட்டாள்களாக  நாமும் இல்லை.

என்னைப் பொறுத்த வரையில், ஒரு தமிழனாக,  பெருமையாக உணர வைத்த அவரது நாவன்மைதான்  என்று சொல்வதில் பெருமை.

# குறிப்பு: வயிரவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

தமிழகத்திலாவது இரட்டை மெழுகுவர்த்தியை தக்க வைக்கனும். ஹிந்திய தேசம்.. ஒரு தமிழக தமிழ் மக்கள் கட்சி பலமடைவதை விரும்பாது. 

இரட்டை கரும்புடன் உள்ள விவசாயி தான்  கிடைத்துள்ளது  

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் கரும்பின் பின்னணியில் நிற்கும் விவசாயியின் சின்னம் தவறாமல் சீமானுக்கு வெற்றி வாய்ப்பைத் தரும்.    இன்று மனச்ச்சாட்சியோடு பார்க்கும் யாரும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை தனித்து நின்று முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஒரே கட்சி  நாம்தமிழர் கட்சி என்பதையும், அதனைத் துணிவோடு வழிநடத்தும் தலைவன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பதையும் மறுக்க மாட்டார்கள்.

பாக்கு நீரிணையின் வடக்கிலும் தெற்கிலுமுள்ள நிலத்தொடர்பாலிணைந்த தமிழர் தேசம் தெற்காசியாவின் பலம் மிக்க, தமிழ்த் தேசிய இனத்தின் தாயகமாக  வளர்ச்சியடைய வேண்டுமானால் நாம்தமிழர் கட்சியினதும், சீமானினதும் கரங்கள் வலுப்படுத்தப்படவேண்டும்.

ஈழத்தமிழர்கள் அதற்கான செயற் திட்டங்களை வகுத்து நாம் தமிழர் கட்சியினர் பொருளாதார பலம் பெற உதவ வேண்டும்.    “நிதி மிகுந்தவர்பொற்குவை தாரீர்..........எதுவுமற்றவர் வாய்ச்சொல்லருளீர்....ஆகக்குறைந்தது அக்கட்சியையும் தலைமையையும் காரணமற்றுத் திட்டுவதை அல்லது இழிவு செய்வதையாவது தவிர்த்து விடுமாறு வேண்டுகிறேன். 

எமக்கு இன்றுள்ள ஒரே பற்றுக்கோல் நாம் தமிழர் கட்சியே.sugar-farmer-symbol-1552622001.jpg

Edited by karu

17 minutes ago, karu said:

 

எமக்கு இன்றுள்ள ஒரே பற்றுக்கோல் நாம் தமிழர் கட்சியே.

ஒரு போதும் எமக்கு தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி பற்றுகோலாக இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

தமிழகத் தமிழர்களால் தார்மீக ஆதரவையும் கலை கலாச்சார ரீதியிலான உதவிகளை மட்டுமே அவர்களால் செய்ய முடியும். இந்திய இறையாமையை மீறி சீமானால் மட்டுமல்ல, எவராலும் ஈழத்தமிழர்களின் விடிவுக்கு எதுவுமே செய்ய முடியாது. சீமான் ஒரு வேளை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது முதலமைசாராகவோ ஆனால் கூட அவரால் எதனையுமே இந்திய இறையாமைய மீறி செய்ய முடியாது என்பது தான் உண்மை.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் ஒரே ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தமிழகத்து அரசியல் சகதிக்குள் மாட்டுப்படக் கூடாது. எமக்கு சீமானும் வேண்டும், ஸ்டாலினும் வேண்டும், எடப்பாடியாரும் வேண்டும்.............................ராகுலும் வேண்டும் எம் பொருளாதார முன்னேற்றத்துக்கு (கவனிக்க, அரசியல் விடுதலைக்கு அல்ல)

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு  காலமும் நாம் பொருளாதார விடுதலைக்கு முன் இன விடுதலையே முக்கியமென்றோம், இப்போது மாற்றிச் சொல்ல ஆரம்பித்து விட்டோம்.  இதுவரை காலமும் வெட்டிக்கொள்ள முடியாத பிணைப்புகளை நாம் திராவிடக் கட்சிகளுடனும் தமிழகத் தமிழ்த் தேசிய வாதிகளுடனும் ஏற்படுத்திக் கொண்டுள்ளதால் நாம் தமிழர் கட்சி போன்ற புதிய வருகைகளை வரவேற்கவும் ஆதரிக்கவும் சற்றுத் தடுமாறுகிறோம்.  அதனால் நமக்கு வசதியாக எதையாவது கூற வேண்டியிருக்கிறது.  

நமது பொருளாதார விடுதலைக்கு தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது?  வேண்டுமானால் நம்மிடமுள்ள காசை வைத்து அங்கு சினிமா எடுக்கலாம்.  அதைவிட வேறென்ன உள்ளது.    மீனைக்கூட அவர்கள் நமது கடலெல்லைக்குள் வந்துதான் பிடிக்கிறார்கள்.  அவர்களது படங்களைச் சந்தைப்படுத்த நம்மைத்தான் பெரிதும் நம்புகிறார்கள்.  புலம்பெயர் நாடடுகளில் ஓடித்தான் அச்சினிமாக்கள் பெரிய இலாபமூட்டுகின்றன.  ஆகவே பொருளாதார விடுதலை எமக்கு அவர்களாற்தான் கிடைக்குமென்பததை தலைகீழ் வாதமாகவே கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

இங்கே நான் குறிப்பிட்டது  தெற்காசியாவில் நாம் வளர்த்தெடுக்கவேண்டிய தமிழர்தாயகம், தேசியம் பற்றியாகும்.  இந்தக் குறிக்கோளோடு செயற்படும் நாம் தமிழர் கட்சி, மத்தியிலே கூட்டாட்சி , மாநிலத்தில் சுயாட்சியென்ற அரசியல் நோக்கோடு பயணிக்கிறது.  அதற்குத் துணைபோக வேண்டியது தனித்தமிழீழம் கேட்டுப் போராடிய தமிழீழ மக்களது தார்மீகக்கடமை.  இன்று கூட த் தேசியத்தலைவரை முகநூலில்இழிவுபடுத்திய (அவன் பாஜக காரனாயிருக்கக் கூடும்) ஒருவன்மீது தாங்க முடியாத ஆத்திரத்துடன் பல தமிழ்த்தேசிய வாதிகள் பாய்வதைக் கண்டேன்..   அவர்களுள் அநேகர் நாதக வைச் சேர்ந்தவர்கள்.  அங்கு அந்த உணர்ச்சியை நீறு பூத்த நெருப்பாக அணைய விடாமல் வைத்திருப்பவர்கள் சீமானைப் போன்ற தமிழ்த்தேசிய வாதிகளே.    அவர்களுள் முதன்மையானவராகவும் மிகவும் வெளிப்படையானவராகவும் அரசியல் நடத்தி ஓர் புரட்சிகர அரசியலைத் தூரநோக்கோடு முன்னெடுத்துச் செல்லும் சீமானை ஆதரிக்க வேண்டியது  தமிழீழத் தேசிய வாதிகளது கடமை என்பதை இங்கே வலியுறுத்தியே ஆகவேண்டும்.  வென்றாலும் தோற்றாலும் நாம்தமிழர் என்னும் சுலோகம் தமிழர் மனதில் நிரந்தரமாகப் பதிந்து திராவிட பாரம்பரியத்தைத் தொடர்ந்த தமிழ்த் தேசிய வாதமாக மலர அனைவரும் ஒன்று படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஒரு போதும் எமக்கு தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி பற்றுகோலாக இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

தமிழகத் தமிழர்களால் தார்மீக ஆதரவையும் கலை கலாச்சார ரீதியிலான உதவிகளை மட்டுமே அவர்களால் செய்ய முடியும். இந்திய இறையாமையை மீறி சீமானால் மட்டுமல்ல, எவராலும் ஈழத்தமிழர்களின் விடிவுக்கு எதுவுமே செய்ய முடியாது. சீமான் ஒரு வேளை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது முதலமைசாராகவோ ஆனால் கூட அவரால் எதனையுமே இந்திய இறையாமைய மீறி செய்ய முடியாது என்பது தான் உண்மை.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் ஒரே ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தமிழகத்து அரசியல் சகதிக்குள் மாட்டுப்படக் கூடாது. எமக்கு சீமானும் வேண்டும், ஸ்டாலினும் வேண்டும், எடப்பாடியாரும் வேண்டும்.............................ராகுலும் வேண்டும் எம் பொருளாதார முன்னேற்றத்துக்கு (கவனிக்க, அரசியல் விடுதலைக்கு அல்ல)

அப்படி நான் பார்க்கவில்லை.

தமிழ்நாடு, டெல்லியை மீறி, எமக்கு உதவும் என்ற எண்ணமே இல்லை, இருக்கவும் கூடாது. அதே வேளை, கடந்த தேர்தலில், மோடி அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் இருந்து, அம்மாவும் இருந்திருந்தால், 37 பேருடன்,  நமக்கு ஏதாவது செய்திருப்பார்.

அவ்வாறான நிலையில் கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்பதே குற்றச்சாட்டாக இருந்தது. 

சகதமிழர்கள் என்ற வகையில், அவர்களுக்கு இதுவே சரியான தேர்வாக இருக்கும் என்ற ஒரு கரிசனை தான்.

அவர்கள் சினிமாவுக்கும் நாம் தான் முக்கிய சந்தை.

பட்டு சேலை, துணிமணிகள், தங்கநகை... நாமும் தான் முக்கிய சந்தை. அதே வேளை எமது 90% மளிகைத் தேவை அணைத்தும் இந்தியாவில் இருந்தே வருகிறது.

அண்மையில் லண்டணில் தீவிர வியாபார முயல்வில் மலையாளிகள்.

ஆகவே... யாருக்கு யார் பொருளாதார ரீதியில் தேவை?

Edited by Nathamuni

நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஒரு எதிர்மறை அரசியல். எம்மிடையே உள்ள பிரச்சணைகளுக்கு மற்றவர்களை குற்றம் சாட்டி தமிழர் அல்லாதோரை எதிரிகளாக சித்திரித்து அதன்மூலம் கட்சியின் பிரபல்யத்தை தக்க வைக்கும் முயற்சி.

இது நீண்ட கால நோக்கில் தமிழர் நலனைப் பேண துணைபோகாது

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, manimaran said:

நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஒரு எதிர்மறை அரசியல். எம்மிடையே உள்ள பிரச்சணைகளுக்கு மற்றவர்களை குற்றம் சாட்டி தமிழர் அல்லாதோரை எதிரிகளாக சித்திரித்து அதன்மூலம் கட்சியின் பிரபல்யத்தை தக்க வைக்கும் முயற்சி.

இது நீண்ட கால நோக்கில் தமிழர் நலனைப் பேண துணைபோகாது

நாம் தமிழீழப்போராட்டத்தைச் சிங்கள தேசியத்துக்கு எதிராகத் தொடங்கி இறுதியில் முஸ்லீம்களையும் பகைத்துக்கொண்டபோது வராத ஞானம் தற்போது தமிழ்நாட்டில் நாம்தமிழர்  தமிழகத்தைத் தமிழர்களே ஆளவேண்டுமென்று கோஷமிடும்போது வந்திருப்பது நகைப்புக்கிடமானது.   திராவிடக் கொள்கையினால் ஆரிய வட இந்தியர்களைப் பகைத்துக் கொண்டவர்கள் தமிழகத் தமிழர்கள்.  

கட்சியின் பிரபல்யத்தைத் தக்க வைப்பதற்காகச் செய்யும் முயற்சியாயின் அது தற்காலிகமான முயற்சி.  ஆனால் இங்கு கட்சியின் அடிப்படைக் கொள்கையே தமிழ்த் தேசியம்.  ஆகவே இத்தகைய  வாதங்கள் பெரிய அர்த்தமுள்ளவையாகவில்லை.

நீண்ட கால நோக்கில் தமிழர் (குறிப்பாக இலங்கைத் தமிழர்) நலனைப் பாதுகாக்க  வேண்டுமாயின் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டுச் சரணாகதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதே மேலானது என்று சொல்லி இலகுவாக விடயத்தை முடித்துவிடலாமே.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி அமைத்தால் அதிகாரத்தின் பக்கம் சற்று அருகாமையில் போகலாம். ஆனால் அதனை பயன்படுத்த முடியாது. வாக்கு சதவீதத்தை அதிகரித்து செல்வதே நிலையான வெற்றியாக அமையும்.

தமிழ் தேசிய சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்தக் கட்சிகள்கூட திராவிட / இந்திய கட்சிகளை ஒட்டியே அரசியலை நடத்துகிறார்கள். அவர்களுடன் கூட்டணி என்பதும் சிக்கல் நிறைந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது இருக்கும் தலைவர்களில் தமிழர்கள் சார்ந்த மற்றும் இயற்கை பராமரிப்புகள் சார்ந்த கொள்கைகளுக்கு சீமான் மட்டுமே சரிவருகின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, manimaran said:

நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஒரு எதிர்மறை அரசியல். எம்மிடையே உள்ள பிரச்சணைகளுக்கு மற்றவர்களை குற்றம் சாட்டி தமிழர் அல்லாதோரை எதிரிகளாக சித்திரித்து அதன்மூலம் கட்சியின் பிரபல்யத்தை தக்க வைக்கும் முயற்சி.

இது நீண்ட கால நோக்கில் தமிழர் நலனைப் பேண துணைபோகாது

திமுகாவும்,அதிமுகாவும் செய்யும் அரசியல் சரியென சொல்ல வருகின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, manimaran said:

நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஒரு எதிர்மறை அரசியல். எம்மிடையே உள்ள பிரச்சணைகளுக்கு மற்றவர்களை குற்றம் சாட்டி தமிழர் அல்லாதோரை எதிரிகளாக சித்திரித்து அதன்மூலம் கட்சியின் பிரபல்யத்தை தக்க வைக்கும் முயற்சி.

இது நீண்ட கால நோக்கில் தமிழர் நலனைப் பேண துணைபோகாது

என்ன சொல்லுகிறீர்கள்?

இலங்கையராயிருந்து கொண்டு, சிங்களவர் செய்யும் எதிர்மறை அரசியலில் 70 வருடமாக வாழ்ந்து கொண்டு..... அதே அரசியல் சீமான்  செய்யும் போது சரி வராது என்று எப்படி சொல்லுவீர்கள்?

பண்டா, ஜேஆர், தமிழருக்கு எதிராக செய்த அதே நேர்மறை அரசியல் தான் என்று புரியவில்லையா?

ஆனால்  இதே அரசியல் தான் தெலுங்கு தேசமும், கர்நாடகாவும்  செய்கின்றன. மகாராஷ்ட்டிடத்தில் பால் தாக்கரேயின் சிவசேனாவும் செய்து வென்றது.

இப்போது குஜராத்தில் உள்ள பீகாரியர்களை வெளியே அனுப்பும் அதே அரசியல்..... உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் சீமான் செய்தால் தெரிகிறதா?

அந்த, அந்த இனத்துக்கு, அதன் இருப்புக்கு அதுவே சரியான அரசியல். அதுவும் இல்லாவிடில், தெலுங்கர்கள் ஆட்சி தமிழகத்தில் தொடரும். 

தமிழகத்தில் ஆண்ட தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் நேர்மையாக ஆண்டிருந்தால், சீமான் இந்த அரசியலை கையில் எடுக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது என ஏற்றுக் கொள்வீர்களா?

சிங்கள நேர்மறை அரசியல் இல்லாவிடில், சிங்கள மட்டும் சட்டம் வந்திருக்காவிடில், இலங்கையின் அரச சேவைகள் அனைத்தும் ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த தமிழர்கள் வசம் என்று சிங்கள தலைவர்கள் சொன்னது, அவர்கள் இனம் சார்ந்து தவறு என்கிறீர்களா?

சரி, டொனால்ட் டிரம்ப் செய்யும் அரசியலுக்கு பெயர் என்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 1:32 PM, நிழலி said:

ஒரு போதும் எமக்கு தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி பற்றுகோலாக இருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

தமிழகத் தமிழர்களால் தார்மீக ஆதரவையும் கலை கலாச்சார ரீதியிலான உதவிகளை மட்டுமே அவர்களால் செய்ய முடியும். இந்திய இறையாமையை மீறி சீமானால் மட்டுமல்ல, எவராலும் ஈழத்தமிழர்களின் விடிவுக்கு எதுவுமே செய்ய முடியாது. சீமான் ஒரு வேளை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது முதலமைசாராகவோ ஆனால் கூட அவரால் எதனையுமே இந்திய இறையாமைய மீறி செய்ய முடியாது என்பது தான் உண்மை.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் ஒரே ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தமிழகத்து அரசியல் சகதிக்குள் மாட்டுப்படக் கூடாது. எமக்கு சீமானும் வேண்டும், ஸ்டாலினும் வேண்டும், எடப்பாடியாரும் வேண்டும்.............................ராகுலும் வேண்டும் எம் பொருளாதார முன்னேற்றத்துக்கு (கவனிக்க, அரசியல் விடுதலைக்கு அல்ல)

தொலைநோக்கு அற்ற ஒரு பார்வை 
அதுவும் இந்தியாவில் ........
மத்தியில் அங்கு ஒட்டி இங்கு ஒட்டித்தான் இரு பிரதான கடசிகளாலும் 
ஆடசி அமைக்க முடியும்.
இந்த ஓட்டல் வேலையிலேயே நிறைய பேரம் பேச முடியும் 

இந்திய உலக பணக்கார வர்க்கத்தின் பாரிய கனவே 
பணத்தை இறைத்து பி ஜே பி யை தனிப்பெரும் கடசியாக மாற்றி 
தொடர் வெற்றி ஈட்டுவதுதான்.

இவ்வளவு பண பலம் இந்திய அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு 
இப்போ இருக்கும் மோடி கடந்து பி ஜெ பி எப்படி மாறும் என்று புரிய முடியாதது.
இப்போதைய மோடியின் சித்து விளையாடுகளுக்கு நேர் எதிரான தேசியவாதம் கொண்டது 
பி ஜே பி. மோடி ஒரு விளம்பர விரும்பி இப்படி பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரே நினைத்து இருக்கவில்லை. எல்லாம் தன சொந்த விளம்பர எண்ணத்தில்தான் அங்கும் தலையும் இங்கு வாழும் ஆட்டி வருகிறார். ராஜீவின் பின்னரான காங்கிரஸ்தான் மேற்கு நாடுகளுக்கு கதவு திறந்தது. பி ஜே பி தேசியவத்தில் 
வளர்க்கப்படும் ஒரு கடசி.

யாரும் எதிர்ப்பாராத விதமாக ஒரு மூன்றாம் தரப்பு ஒன்று கூடுமாக இருந்தால் 
இந்திய ஒட்டுமொத்த அரசியலே மாறிப்போகும் 
வங்கம் கர்நாட கேரளா (தமிழ்நாடு மக்கள் மனதில் என்றாலும்) இரண்டு கட்சியலும் வெறுப்புடன்தான் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் ஒரு தீவிர போட்டியில் சரிக்கு சம்மம் என்று ஆக்கினால் 
மூன்றாம் தரப்புக்கு வங்கம் கர்நாட கேரளா தமிழ்நாடே போதுமானது ... இதில் பஞ்சாப் இணைய நிறைய சாத்தியமும் உண்டு. 

லோக்சபாவில் மூன்றாம் தரப்பு பெரும்பான்மை பெரும் எனில் 
இந்தியாவின் போக்கு மாறிவிடும் 
விரும்பியோ விரும்பாமலோ சீனாவின் நகர்வினால் 
ஈழத்தை எட்டி பார்க்க வேண்டிய ஒரு தேவை 
ஒரு இந்தியனுக்கு எப்போதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சுமப்பரணிய சுவாமி .... இந்துராம் போன்றவரின் தளத்துக்கு 
ஆடும் நிலை இந்தியாவில் இனி இருக்க போவதில்லை 
கஸ்மீரே சுதந்திரம் அடைய கூடிய சூழல் உருவாக்கி கொண்டு இருக்கிறது 
2025-2035 காலத்து இந்திய பிரதமர்கள் மோடி போல ஆடினால் ...
இந்தியாவை சீனா குதத்தைக்கு எடுத்துக்கொள்ளும் 
ஆடாமல் இந்திய எதிர்காலம் பற்றி சிந்திப்பார்கள் என்றால் 
இப்போதைய போக்கு முற்றுமாக விரும்பியோ விரும்பாமலோ மாற்றியே ஆகவேண்டும். 

இந்த ஆறு நிமிட வீடீயோவை பாருங்கள் 
சிறீலங்காவுக்கு எப்படி ஆப்பு இறுக்கியது சீனா என்று தெரியும்.
நிறைய நீண்ட கட்டுரைகள் இருக்கின்றது பொருளாதாரம் சார்ந்து 
திரி திசை மாறிவிடும்....

ஹுவெய் சி எவ் ஓ உங்கள் கனடாவில் இருந்து எப்படி அமெரிக்காவிற்கு வந்தார்?
இங்கு சிறை செல்வார் என்று நினைக்கிறீர்களா? 
பொருளாதார சிக்கல்களுக்காக வளைந்து கொடுப்பதை தவிர இனி வேறு வழி  இல்லை.

 

6 hours ago, குமாரசாமி said:

திமுகாவும்,அதிமுகாவும் செய்யும் அரசியல் சரியென சொல்ல வருகின்றீர்களா?

 

6 hours ago, Nathamuni said:

என்ன சொல்லுகிறீர்கள்?

இலங்கையராயிருந்து கொண்டு, சிங்களவர் செய்யும் எதிர்மறை அரசியலில் 70 வருடமாக வாழ்ந்து கொண்டு..... அதே அரசியல் சீமான்  செய்யும் போது சரி வராது என்று எப்படி சொல்லுவீர்கள்?

 

 

http://www.puthinappalakai.net/2018/05/12/news/30831

 

திரு.உதயகுமாரன் இதற்கு மிகச் சிறப்பாக பதிலளிக்கின்றார்.

நம் எதிர்காலம் நமது கையிலேயே உள்ளது. மற்றவர்களின் கையில் அல்ல. 

சீமான் தமிழீழ விடுதலைப் புலிகளை உதாரணமாக பரப்புரைத் தேவைகளுக்காக தாராளமாகப் பயன்படுத்துவார். ஆனால் அவர்களால் பின்பற்றப்பட்ட அறிவார்ந்த அரசியல் அவரிடம் இருப்பதாகத் தென்படவில்லை. 

அப்பாவித் தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதனில் கூதல் காயும் ஒருவராகவே சீமான் உள்ளார். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கடிவாளமில்லாது செயல்படுகின்ற தாந்தோன்றி அரசுகள் மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களை அனுசரித்தே செல்லவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள் காரணம் பதவியில் இருக்கும்போது சேர்த்த ஊழல்ப்பணத்தின் அளவு அப்படி காரணம் அவர்கள் பதவிக்கு வருவதற்கு செலவுசெய்யும் மூலதனத்தின் அளவும் அதிகம் அதை ஒன்றுக்கு நூறுமடங்காக ஆயிரம் மடங்காக சம்பாதிக்கவேண்டும் 

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில்பேசப்பட்ட விடையம், வார்டு கவும்சிலர் ஒருவர் அவரது பகுதியில் உள்ள குளம் உட்பட அனைத்தையும் வளைத்துப்போட்டுள்ளார் பதவிக்கு வரமுன்பு எதுவுமே இல்லாத அவர் பலகோடி சொத்துகளுக்கு அதிபதி.

ஈழ அரசியல் அது இது என எதையுமே தமிழக மக்கள் கவனிக்கவேண்டிய அவசியம் இல்லை ஈழம் பெறுவது உரிமை பெறுவது ஈழத்தவர்களது வேலை இதில் தமிழகத்தவர் ஒரு துரும்பையும் போடத்தேவையில்லை போடவும் முடியாது.

முதலில் தமிழகம் தற்போதைய அரசியல்வாதிகளிடமிருந்தும் அண்டைய மாநில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் விடுபடவேண்டும் அதற்கு ஒரு சுத்திகரிப்புச்செய்யக்கூடிய அரசியல் சித்தாந்தம் தேவை சீமானது அரசியல் சித்தாந்தம் அதற்குச் சரியாகுமா அல்லது எதிர்பார்ப்பை ஈடுசெய்யுமா என்பது சந்தேகமெனிலும் இனிவரும் காலங்களில் தமிழனைத் தமிழனே ஆளவேண்டும் எனும் எண்ணம் எல்லாத் தமிழர்க்கும் ஏற்பட சீமான் காரணமாக இருக்கலாம் சீமான் எதிர்காலத்திலும் யாருடனும் கூட்டணியோ சமரசமோ செய்யாது கொள்கைபிடிப்புடன் அரசியல் வேலைகளை முன்னெடுத்தால் தமிழக அரசியலில் சீமான் தவிர்க்கமுடியாத சக்தியாக காணப்படுவார்.

ஆனால் சீமான் ஈழத்தமிழர் மத்தியில் உள்ள ஒரு சந்தேகத்துக்கு பதிலளிக்கவேண்டியவராக இருக்கிறார்

பிரான்ஸில் பரிதியின் கொலையுடன் நேரடித்தொடர்பிலிருப்பவர் இப்போது சீமானுடன் காணப்படுகிறார் எனும் குற்றச்சாட்டு ஆணித்தரமாக வைக்கப்படுகிறது அதற்கான பதிலை இவ்விணையத்தில் அவருடன் நேரடியாகத் தொடர்பிலிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் கேட்டுச்சொல்லவும்.

இக்குற்றச்சாடை வைகோ மட்டும் சொல்லவில்லை ஈழத்தமிழ் மக்களில் தேசிய செயல்பாட்டாளர்கள் எனக்கூறிக்கொள்வோரும் கூறுகிறார்கள். ஆனால் அப்படிப் பகிரங்கப்படுத்தப்பட்ட விடையத்தைப்பற்றி சீமானைப் பேட்டிகாணும் எந்த ஒரு செய்தி ஊடகமும் கேள்வியாக இதுவரை முன்வைக்கவில்லை  அதன் காரணம் எது யாரிடமிருந்து கட்டளை வந்தது இதுசம்பந்தப்பட்ட கேள்விகளை சீமானிடம் முன்வைக்கக்கூடாதென இங்கிருந்துதான் சீமானில் சந்தேக நிழல் ஆரம்பிக்கிறது சீமான் யார் சீமான் பாம்பா இல்லை பழுதா என.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, manimaran said:

ஆனால் அவர்களால் பின்பற்றப்பட்ட அறிவார்ந்த அரசியல் அவரிடம் இருப்பதாகத் தென்படவில்லை. 

அப்பாவித் தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதனில் கூதல் காயும் ஒருவராகவே சீமான் உள்ளார். 

நீங்களும், புலிகள் பெயர்கள் பயன்படுத்துகிறார் என்ற தாபத்தில் தான் உங்கள் பார்வையினை செலுத்துகிறீர்கள் போலுள்ளது.

தமிழகத்தின், சாதிய சாபக்கேடு, வெளியார் யார் வந்தாலும் ஏற்றுக்  கொள்வது. தமிழர்கள் யார் வந்தாலும் சாதி பார்த்து நிராகரிப்பது.

இதனால் தான், எந்த தமிழ் அமைப்பும், கூட்டனி என்று போக வேண்டிய தேவை உருவாகிறது. ரஜனி, விஷால் போன்றவர்களுக்கு ஒரு எண்ணம் வருகிறது. 

சீமான், வெளியராயினும் தமிழர் என்கிற வகையில், பிரபாகரனை முன்னிறுத்துவது, தமிழகத்தில், சாதியம் கடந்து, பலரால், ஏற்றுக்  கொள்ளப் படுகின்றது.

ஆனாலும், நம்மில் சிலருக்கு பிடிக்கவில்லை.

இரு கேள்விகள்?

  1. புலிகள் பயன்படுத்தியது அறிவார்ந்த அரசியலா, வீரம் செறிந்த போரா?
  2. திராவிடம் என்று கூறி, தமிழகத்தில் கூதல் காய்ந்தது, காய்வது யார்? அந்த தமிழர்கள் மீட்கப் படக் கூடாது, சீமான் முயற்சி தவறு என்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட , கேரள , முக்கியமாக தெலுங்கு திராவிட செம்புகளுக்கு ஆப்பு வைக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கு என்ர ஒட்டு 😍

14891.jpg

HQ.jpg

கடவுளே கலர் விடயத்தில் கன்பியூஸ் ஆகும் இன்றைய கட்சிகளின் அலப்பறையில் கரை வேட்டி அறிமுகம் செய்யாத ஒரே காரணத்திற்கே வோட்டு போடலாம் .. 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.