Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்

Asylum-seekers-in-Sri-Lanka-300x198.jpgசிறிலங்காவில் அடைக்கலம் கோரியுள்ள ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று குடியமர்த்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர்.

இவர்கள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் 35 வெளிநாட்டு அகதிகள் வவுனியா பூந்தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 அகதிகள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன் இவர்கள், யாழ்ப்பாணத்தில் வெறுமையாக உள்ள வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2019/05/21/news/38079

தங்கள் செயல்களில் தாங்கள் மிருகங்கள் என்பதை  சிறிலங்கா,மக்களுக்கு சொல்லாமல் சொல்லி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து, ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

May 21, 2019

 

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து தனியார் வீடுகளில் தங்க வைக்க தனியார் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கையை வடமாகாண ஆளுனர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆளுனரின் முடிவையடுத்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் குடும்பம், வவுனியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டு அகதிகளிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, அவர்களை வடக்கில் தங்க வைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. வவுனியா கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் ஒரு தொகை அகதிகளை தங்க வைப்பதுடன், யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை அகதிகளை பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும்இ உள்ளூரில் இதற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பையும் மீறி வவுனியாவிற்கு அகதிகள் ஒரு பகுதினர் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 உறுப்பினர்களை கொண்ட குடும்பமொன்றை யாழிற்கு அழைத்துச் சென்று, யாழ் நகரிலுள்ள வீடொன்றில் தனி நபர் ஒருவர் தங்க வைத்தார். குறித்த நபர் அமெரிக்க குடியுரிமையை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தனியார் வீட்டில் அகதிகளை தங்க வைப்பது பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்துமென்பதை யாழ்ப்பாணக் காவற்துறையினர்  புரிய வைக்க முயன்றும், அகதிகளை அழைத்துச் சென்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து இந்த விவகாரம் வடக்கு ஆளுனரின் கவனத்திற்கு சென்றது. அகதிகளை வடக்கிற்கு அழைத்துச் சென்று, அரச பராமரிப்பில் வைப்பதற்கு ஆளுனர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை சிக்கலில்லாமல் முடிக்கவே ஆளுனர் முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தனியார் வீடுகளில் அகதிகளை தங்க வைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற விடயத்தை, வீட்டு உரிமையாளரை அழைத்து ஆளுனர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அகதிகளை உடனடியாக வவுனியாவிற்கே அனுப்பி வைத்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டு உரிமையாளரான குறித்த நபர் காலஅவகாசம் கோரியுள்ளார். பாதுகாப்பு விவகாரங்களில் காலஅவகாசம் வழங்க முடியாதென இறுக்கமாக தெரிவித்த ஆளுனர், உடனடியாக அரசாங்கத்தின் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டார். இதையடுத்து நேற்று திங்கட்கிழமை இரவு ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. #Vavunia #Jaffna #

 

http://globaltamilnews.net/2019/122338/

 

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க அகதிகளே, வாங்க

இந்தோனேசியாவில், எம்மவரை பராமரிக்கும் அதே ஜநா அமைப்பே இங்கே உங்களை பராமரிக்கின்றதாகையால், நாமும் உங்களை வரவேற்க்கிறோம்.

உங்கள் வலி எமக்கும் புரியும்.

 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு வந்த ஆப்பான் அகதிகளைத் திருப்பி அனுப்பியதால் எழுந்த ஒரு ஆறுதல் அலை.... பூந்தோட்டத்திற்கு அகதிகள் அனுப்பப்பட்டபோது எழுந்த எதிர்ப்புப் பேரலையின் சீற்றத்தை அடக்கி அமைதியடைய வைத்து விட்டது போன்ற ஒரு உணர்வு.😑 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

யாழ்ப்பாணத்திற்கு வந்த ஆப்பான் அகதிகளைத் திருப்பி அனுப்பியதால் எழுந்த ஒரு ஆறுதல் அலை.... பூந்தோட்டத்திற்கு அகதிகள் அனுப்பப்பட்டபோது எழுந்த எதிர்ப்புப் பேரலையின் சீற்றத்தை அடக்கி அமைதியடைய வைத்து விட்டது போன்ற ஒரு உணர்வு.😑 

ஜநாவிடம் பெரும் தொகை வாடகையாக பெற அவர் போட்டிருந்த திட்டம் தடுக்கப்பட்டது நல்லது. இல்லாவிடில் லோக்கல் ஆக்களுக்கே வீடு கிடைக்காது.

அரச ஏற்பாட்டில் மட்டுமே தங்கவேண்டும் என்ற ஆளுனர் முடிவு சரியானது.

 

அகதிகள் நிம்மதியாக வாழ்வதை எதிர்க்குமளவுக்கு தமிழினம் கேவலமான இனமாக இருக்குமானால் தமிழினத்துக்கு விடுதலை சாத்தியமல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதிகளை வைச்சிருந்தால் கொஞ்ச காசு வருமாமே மெய்யே?????

நேற்றைய செய்தி : "யாழ்.மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது."

இன்றைய செய்தி "அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன் இவர்கள், யாழ்ப்பாணத்தில் வெறுமையாக உள்ள வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்."

அகதிகளை குடியமர்த்தும் நாங்கள் எங்கள் மக்களையும் கவனிக்கலாமே !

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2019 at 9:12 AM, Nathamuni said:

ஜநாவிடம் பெரும் தொகை வாடகையாக பெற அவர் போட்டிருந்த திட்டம் தடுக்கப்பட்டது நல்லது. இல்லாவிடில் லோக்கல் ஆக்களுக்கே வீடு கிடைக்காது.

அரச ஏற்பாட்டில் மட்டுமே தங்கவேண்டும் என்ற ஆளுனர் முடிவு சரியானது.

 

"அவர்" யார் என்று தெரியுமா Mr.கூல் , தென்னிந்தியாவை சேர்ந்த ஓர் திருச்சபையின் உதவியுடன் தான் அவர் திட்டமிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஓர் யாழ் மேட்டுக்குடியை சேர்ந்தவர். ரட்ண ஜீவன் ஹூல். ஒரு கல்விமான் பல நாடுகளில் வேலை செய்தவர். இவர் அமெரிக்க குடிடியுரிமை பெற்ற இலங்கையர்.

தென்னிந்திய திருச்சபை என யாழிலில் உள்ள ஓர் சபையை சேர்ந்தவர் என நினக்கின்றேன். (சுமந்திரனும் இந்த சபையை சேர்ந்தவரே) வெள்ளவத்தை பிரான்சிஸ் வீதியிலும் இவர்களுக்கு ஓர் ஆலயமுண்டு.  இவர் கிறிஸ்தவ மிசனெரி நடவடிக்கையிலும் ஈடுபடுவார்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, colomban said:

இவர் ஓர் யாழ் மேட்டுக்குடியை சேர்ந்தவர். ரட்ண ஜீவன் ஹூல். ஒரு கல்விமான் பல நாடுகளில் வேலை செய்தவர். இவர் அமெரிக்க குடிடியுரிமை பெற்ற இலங்கையர்.

தென்னிந்திய திருச்சபை என யாழிலில் உள்ள ஓர் சபையை சேர்ந்தவர் என நினக்கின்றேன். (சுமந்திரனும் இந்த சபையை சேர்ந்தவரே) வெள்ளவத்தை பிரான்சிஸ் வீதியிலும் இவர்களுக்கு ஓர் ஆலயமுண்டு.  இவர் கிறிஸ்தவ மிசனெரி நடவடிக்கையிலும் ஈடுபடுவார்

நன்றி தகவலுக்கு கொழும்பான் .

  • கருத்துக்கள உறவுகள்
On 5/23/2019 at 3:55 AM, போல் said:

அகதிகள் நிம்மதியாக வாழ்வதை எதிர்க்குமளவுக்கு தமிழினம் கேவலமான இனமாக இருக்குமானால் தமிழினத்துக்கு விடுதலை சாத்தியமல்ல!

'தான்போக வழியில்லை மூஞ்சூறு விளக்குமாத்தையும் கட்டிக்கொண்டதாம்...' 🤔 

நிம்மதியாக வாழ தமிழினத்துக்கே வழியில்லை. இதில் அகதிகளையும் கட்டிக்கொண்டால்...!! 😲 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நீர்கொழும்பில் இருந்து வவுனியா - பூந்தோட்டம் முகாமுக்கு அழைத்துவரப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளில் ஒரு குடும்பத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல், தனது பொறுப்பில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று (19)  அழைத்து வந்துள்ளார்.

தென்னிந்திய திருச்சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவே, அவர் அந்தக்  குடும்பத்தைப் பொறுபு்பேற்று, தனது  பொறுப்பில் தங்க வைத்துள்ளார்.

இது குறித்து, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ரட்ணஜீவன் கூல், இந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி உட்பட்ட நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் அந்தக் குடும்பத்தை, ஐ. நா பொறுப்பெடுக்கும் வரை, தனது பொறுப்பில் தங்க வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில், சபாநாயகர், பிரதி பொலிஸ்மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பாகிஸ்தான்-குடும்பத்தை-பொறுப்பேற்ற-உறுப்பினர்/71-233329

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

'தான்போக வழியில்லை மூஞ்சூறு விளக்குமாத்தையும் கட்டிக்கொண்டதாம்...' 🤔 

நிம்மதியாக வாழ தமிழினத்துக்கே வழியில்லை. இதில் அகதிகளையும் கட்டிக்கொண்டால்...!! 😲 

தமிழினம் இந்த அகதிகளை கட்டி கொள்ளவில்லை. இலங்கை அரசு தான் தமிழினத்துக்கு மேலதிகமாக தன்னோடு இந்த அகதிகளையும் கட்டி. கொண்டு உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.