Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நான் களைப்படைந்துவிட்டேன் எதிர்காலம் ஆன்மீகத்திலேயே' - ஞானசார தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் என பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

60956276_2349135995410871_29032785650196

விடுதலை பெற்ற பின்னர் ருக்மல்கம விகாரைக்கு  சென்றிந்தபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

http://www.virakesari.lk/article/56622

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201710

'நான் களைப்படைந்துவிட்டேன் எதிர்காலம் ஆன்மீகத்திலேயே' - ஞானசார தேரர்

கடந்தகாலம் கூட ஆன்மீகத்திலேயே இருந்திருந்தால் ...

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களும் கூட ஆன்மீகத்திலேயே இருப்பின் இலங்கை அமைதியாக இருக்க நிச்சயம் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தை அடைச்சு வைச்சுட்டு, நாட்டையே சின்னாபின்னமாகிட்டாங்களே !!!

3 hours ago, Nathamuni said:

சிங்கத்தை அடைச்சு வைச்சுட்டு, நாட்டையே சின்னாபின்னமாகிட்டாங்களே !!!

இப்ப வெளில விடுறதுக்காக தான் அடைச்சு வைச்சிருந்தார்களோ தெரியேல்லை.

ஆளை பார்த்தால் களைப்புற்ற ஆள் மாதிரி தெரியேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யோ மெய்யோ4500 சிங்கள பெண்களுக்கு முஸ்லீம் வைத்தியர் கர்ப்பத்தடை செய்த விடயத்தை யாராவது இந்த மகானின் காதில் ஊதி விட்டால் நாளைக்கே கராட்டி பழகிக்கொண்டு அறிக்கை விடுவார் மாற்றி பேசுவதில் வல்லவர் .சிறையில் இருந்து அவசரமாக  விடுதலை செய்ததே ஏன் என்பது அவருக்கு தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் 

சிங்கள மக்கள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்😆

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nunavilan said:

 

சிங்கள மக்கள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்😆

இவ்வளவு பெரிய ஆளுமை....வீணாகப் போவதில்.....எனக்கும் உடன்பாடில்லை!🤩

Edited by புங்கையூரன்

11 hours ago, பிழம்பு said:

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்

இதுவரை சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தை முன்னெடுத்த நான் இனி .....பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

மாறிச் சொல்லிப் போட்டார். 

மியான்மாரில் இருந்து, தீவிரவாத பிக்கரை கொண்டாந்து மகாநாடு நடாத்திய ஆள்.

உண்மையில், ஆன்மீகத்தில் களைத்து விட்டார்.

எடுறா அந்த கத்திய, எங்கப்பா, ரிசாத் என்று கிளம்ப போகுது சிங்கம்.

எத்தனை தல உருளப்போகுதோ?

Edited by Nathamuni

23 minutes ago, Nathamuni said:

மாறிச் சொல்லிப் போட்டார். 

மியான்மாரில் இருந்து, தீவிரவாத பிக்கரை கொண்டாந்து மகாநாடு நடாத்திய ஆள்.

உண்மையில், ஆன்மீகத்தில் களைத்து விட்டார்.

எடுறா அந்த கத்திய, எங்கப்பா, ரிசாத் என்று கிளம்ப போகுது சிங்கம்.

எத்தனை தல உருளப்போகுதோ?

சிறையாலை வெளிலை வந்த பிறகு பயங்கரவாதத்தை அடக்க வேணும் என்று சொன்னவராம் என்று ஒரு சிங்களவர் twitter இல் எழுதியிருந்தார். உண்மையோ பொய்யோ என்று தெரியாததாலை நான் அதை இங்கு இணைத்திருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/23/2019 at 5:48 PM, பிழம்பு said:

எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன்

அப்போ இதுக்கு முன் ஆன்மீகத்தில் இருக்கவில்லை என்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது - ஞானசார தேரர்

(எம்.மனோசித்ரா)

நான் களைப்படைந்து விட்டேன். இனி போராடப்போவதில்லை என்று கூறினாலும் இளைஞர்களது கோரிக்கைக்கு இணங்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

IMG-20190526-WA0018.jpg

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மாகாநாயக்க தேரர்களை நேற்யை தினம் சந்தித்ததன் கண்டி - தலதா மாளிக்கைக்கு விஜயம் செய்த அவர், விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, 

IMG-20190526-WA0013.jpg

நான் சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து ஒரு நாளைக் கூட நிம்மதியாகக் கழிக்க முடியாதளவிற்கு தற்போது நாட்டின் நிலைமை மிக மோசமாகக் காணப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கான எமது சுக துக்கங்களை துறக்க வேண்டியுள்ளது. எனவே வெகுவிரைவாக பௌத்த சங்க சம்மேளனத்தைக் கூட்டி இதற்கான தீர்வினை காணப்பதற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஏனைய பௌத்த மதகுரமார்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். 

இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதையும், ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதையும் நிறுத்த வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினைக் காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

 

http://www.virakesari.lk/article/56841

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.