Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்குப் பெயர் பக்தியா?

Featured Replies

55 minutes ago, மல்லிகை வாசம் said:

மூடத்தனம் மூடத்தனம் என்று மீண்டும் மீண்டும் கூறுவதால் மூடத்தனமாக முடியாது. 

நான் முன்னர் எழுதியது போல் எனது நம்பிக்கையில் நான் தெளிவாக உள்ளேன். பிறர் நம்பிக்கையை அவமதிப்பது ஒரு மனநோய். ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கும் உங்களுக்கும் வெகுதாரம். எனவே உங்களுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இனியும் எனக்கில்லை. நன்றி

உண்மையில் வரி வரி மூடத்தனத்தை ஆதரித்து தமிழ் மொழி அழிந்தாலும் பரவாயில்லை கலாச்சாரம்  என்ற போர்வையுடனான மூடத்தனமும் காட்டுமிராண்டித்தனமும் காப்பாற்றப்பட்டால் மட்டும்  போதும் என்று  வெட்கமின்றி  எழுதிய  உங்கள் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பல முற்போக்காளர்கள் இவ்விவாதத்தில் இணைந்தது எனக்கு மகழ்ச்சியை  தந்தது. பல காலம் மெளனமாக  இருந்த கோசன் சே போன்ற முற்போக்கு கருத்தாளர்களையே  உங்களது பழமைவாத மூடக்கருத்துகள்  கருத்துக்கள் தூண்டி விட்டது. அந்த வகையில் மகிழ்ச்சியே

கடவுள் நம்பிக்கை வேறு மதத்தின் பெயரால் பரப்படும் பைத்தியக்காரத்தனங்கள் வேறு என்பதைக் கூட புரியும் ஆற்றல் உங்களுக்கு இல்லை. இந்து மதம் பரப்பிய நச்சு விதைகளான மூடபழக்கங்கள் என்று நான் தெளிவாக எழுதியும. அதை வாசித்து கிரகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது உங்கள் நிலமை மற்றும் புரிதல் . 

 

Edited by tulpen

  • Replies 186
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருக்கின்றது. அது பல்வேறு வடிவங்களில்......

 

 

23 hours ago, குமாரசாமி said:

அதல்லாம் எனக்கு சரிவராது.நான் நம்பமாட்டன். எனக்கு வெள்ளைக்காரன் சொல்லோணும்.கேம்பிரிஜ் யூனிவசிற்றி சொல்லோணும்.வெள்ளைக்கார அமெரிக்கன் சொல்லோணும். அப்பதான் நம்புவன்.😎
 

என்ன செய்ய அறிவியல் விடயங்களில் வெள்ளைகார அறிஞர்களும் பல்கலை கழகங்களும் சொல்வதை கேட்கவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்கள் எம் முன்னோர்கள். யோசிக்காதேங்கோ இட்லி, வடை,  சாம்பார், புளியோதரை எப்படி எப்படி செய்வது என்பதற்கு வெள்ளைகாரன் சொல்வதை  கடைசிவரை கேட்கமாட்டோம். எமது முன்னோர்கள் சொன்னதை மட்டும் தான் கேட்போம். 🤣🤣

இப்ப நாம் திருந்தினோம் என்றால் எதிர்கால சந்த‍தியாவது அறிவியல் விடயல்களில்  இந்த தலைமுறை சொன்னதை கேட்கும். இல்லை என்றால் அது தொடர்கதை தான்.

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 

. இந்து மதம் பரப்பிய நச்சு விதைகளான மூடபழக்கங்கள்

 

இந்த மூடப் பழக்க வழக்கங்கள் எவை என்று தயவு செய்து பட்டியலிட்டு தர முடியுமா ( நீங்கள் முன்னரே பட்டியலிட்டிருந்தாலும் நான் தவற விட்டுவிட்டேன் போலிருக்கிறது )

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

உடுக்கடித்து, பூசை செய்வது நாத்திகரான உங்களுக்கு இழிவாகத் தோன்றலாம். நமக்கு அப்படி அல்ல. உங்கள் எழுத்து இன்னொருவரின் நம்பிக்கை மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

இவ்வாறான காழ்ப்புணர்ச்சியை வைத்துக்கொண்டு சக கருத்தாளரை மதிக்கிறீர்கள் என்பது வேடிக்கையான பேச்சு. 

நான் எனது அபிப்பிராயத்தை ஏற்கனவே பல முறை எழுதிவிட்டேன். மேலே கிருபனுக்கும் ஏற்கனவே மீண்டும் பதிலளித்தாயிற்று. 

எனது கருத்தைத் திரித்து நீங்கள் உங்கள் முற்போக்கு வாதத்தை நிலைநாட்ட முயல்கிறீர்கள். மேலும், குழந்தைகளை விலங்குகளுடன் ஒப்பிட்டு நீங்கள் எழுதிய கருத்துக்கான பதிலைத் தான் அப்படி எழுதினேன்.

முடிந்தால் - மீண்டும் இந்த திரியில் நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்கேயும் நான் நாத்திகன் என்று எழுதியதில்லை. நீங்களாக என்னை அப்படி கற்பனை செய்து கொண்டு எழுதினால் அது உங்கள் விளக்கவீனம்.

எப்படி நான் மனித நேயம்/சிறுவர்கள் நலம் பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது. 

இந்த திரியில் நான் எங்கேயும் இந்து மதத்தை பற்றியோ அதன் சடங்குகள் பற்றியோ கதைக்கவே இல்லை. நான் சொன்ன 2 விடயம்கள்.

1. நம்பிக்கையின் பெயரால் எந்த மதமாயினும் - வன்முறையை சிறுவர் மீது ஏவுவது தப்பு

2. இங்கே யாழில் இந்த விடயத்தை குழுமனநிலையில் அணுகின்றார்கள்.   

இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு? இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன்?

சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

விலங்கு-குழந்தை, ஒன்றில் உங்களுக்கு நான் எழுதியதை வாசித்து கிரகிக்க முடியாமல் உள்ளது, அல்லது வேணுமெண்டே பிழையாகன விளக்கத்தை முன்வைக்கிரீகள்.

மாட்டுக்கு “கூட” என்பதில் தொனிக்கும் அர்த்தம் யாது என்பது, எல்லாருக்கும் தெரியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பிகு:   திரியை மீளாய்வு செய்ததில்:

மல்லிகை,

நீங்கள் துல்பென் எழுதியவற்றை என் தலையில் கட்டி, எனக்கும் சேர்த்து பயான் ஓதுகிறீர்கள் (கவனிக்க: தனியே உடுக்கடித்தல் என்ற சொல்லாடலை மட்டும் பாவிக்கவில்லை 😂).

துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது.

ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது.

அதுதான் துல்பெனுக்கு எழுத வேண்டியதை எனக்கு பதிலாக எழுதிக் கொண்டிருகிறீர்கள்.  

காலக்கொடுமடா சாமி 🤦‍♂️

56 minutes ago, goshan_che said:

பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது. 

அவ்வாறான தேவை எனக்கில்லை. எனது நம்பிக்கையை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையும் இல்லை. 

1 hour ago, goshan_che said:

இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு? இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன்?

சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

உங்கள் கருத்துக்களை நன்கு வாசித்தே அதற்கான விளக்கத்தை அதுவும் தெளிவாக quote பண்ணி தான் பதில் தந்துள்ளேன். மீண்டும் முழுமையாக வாசித்துப் பாருங்கள். புரியும்.

50 minutes ago, goshan_che said:

துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது.

அது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் இருவரும் எழுதிய கருத்துக்களுக்கு தனித்தனியாக தெளிவான பதில்களையே தந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

என்ன செய்ய அறிவியல் விடயங்களில் வெள்ளைகார அறிஞர்களும் பல்கலை கழகங்களும் சொல்வதை கேட்கவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்கள் எம் முன்னோர்கள். யோசிக்காதேங்கோ இட்லி, வடை,  சாம்பார், புளியோதரை எப்படி எப்படி செய்வது என்பதற்கு வெள்ளைகாரன் சொல்வதை  கடைசிவரை கேட்கமாட்டோம். எமது முன்னோர்கள் சொன்னதை மட்டும் தான் கேட்போம்🤣🤣

இப்ப நாம் திருந்தினோம் என்றால் எதிர்கால சந்த‍தியாவது அறிவியல் விடயல்களில்  இந்த தலைமுறை சொன்னதை கேட்கும். இல்லை என்றால் அது தொடர்கதை தான்.

 

அறிவியல் வளர்ச்சியையும் மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் அனுபவ ஆதாரங்களையும்  ஒன்றாக்கிச் சிலர் குழப்பமடைந்து மற்றவர்களையும் குழப்ப முயல்கினறனர்
இப்போது வளர்ந்திருக்கும் அறிவியல் எல்லாம் எமது முன்னோர்களின் நம்பிக்கையின்   ஆதாரத்தின்படிதான் வளர்த்துக்கொண்டு வருகின்றது

எமது முன்னோர்கள் அன்றே சூரிய மண்டலத்தையும் கிரகங்களையும்
அறிந்திருந்தார்கள்.
சமுதாயத்தில் சுகாதாரம் பேணுதல் நலமான வாழ்க்கை
எனப்பலவற்றையும் பேணி வந்துள்ளார்கள்

கருவிலே குழந்தை எப்போது ,  எப்படி வளர்ச்சியடையும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர்
அதற்கு ஒரு உதாரணம்
 இந்த உடலும், உயிரும்
எப்போது எப்படித் தோன்றுகின்றன?
எது முதலில் உருவாகிறது?, உடலா?,
உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர்
தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற
தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய் இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம் சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்  -அகத்தியர்.

-முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே. -அகத்தியர்

இதைவிட இன்னும்பல விடையங்களை நமது முன்னோர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளார்கள்.

ஆகவே பொதுவாக நமது முன்னோர்களையும் அவர்களது அனுபவ ஆதாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டந்தட்டுவதை நிறுத்துங்கள்


  

52 minutes ago, goshan_che said:

ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது.

அதை இத் திரியை வாசிப்பவர்கள் முடிவு செய்வார்கள். 😊

நான் பொதுவாக இவ்வாறான விவாதங்களைத் தவிர்ப்பவன்.  இந்து மத நம்பிக்கைகளை அனாவசியமாகக் கேவலப்படுத்த முனையும் பல திரிகளை கண்டும் கருத்து எதுவும் எழுதாமல் கடந்து சென்றிருக்கிறேன். இங்குள்ள பலரும் இதைை அறிவர். ஆனால் எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க முடியும்? 

ஆகவே இத்திரியில் எழுத வேண்டியதாயிற்று. தலைப்பை விட்டு விலகிச் செல்லும் வாதங்கள் முன் வைக்கப்பட்டதால். அதற்கும் பதில் தர வேண்டி இருந்தது. 

28 minutes ago, வாத்தியார் said:

அறிவியல் வளர்ச்சியையும் மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் அனுபவ ஆதாரங்களையும்  ஒன்றாக்கிச் சிலர் குழப்பமடைந்து மற்றவர்களையும் குழப்ப முயல்கினறனர்
இப்போது வளர்ந்திருக்கும் அறிவியல் எல்லாம் எமது முன்னோர்களின் நம்பிக்கையின்   ஆதாரத்தின்படிதான் வளர்த்துக்கொண்டு வருகின்றது

எமது முன்னோர்கள் அன்றே சூரிய மண்டலத்தையும் கிரகங்களையும்
அறிந்திருந்தார்கள்.
சமுதாயத்தில் சுகாதாரம் பேணுதல் நலமான வாழ்க்கை
எனப்பலவற்றையும் பேணி வந்துள்ளார்கள்

கருவிலே குழந்தை எப்போது ,  எப்படி வளர்ச்சியடையும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர்
அதற்கு ஒரு உதாரணம்
 இந்த உடலும், உயிரும்
எப்போது எப்படித் தோன்றுகின்றன?
எது முதலில் உருவாகிறது?, உடலா?,
உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர்
தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற
தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய் இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம் சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்  -அகத்தியர்.

-முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே. -அகத்தியர்

இதைவிட இன்னும்பல விடையங்களை நமது முன்னோர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளார்கள்.

ஆகவே பொதுவாக நமது முன்னோர்களையும் அவர்களது அனுபவ ஆதாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டந்தட்டுவதை நிறுத்துங்கள்


  

வாத்தியார் எம் முன்னோர்கள் மட்டுமல்ல இந்த உலகில் வாழ்ந்தஅனைத்து முன்னோர்களும் இதுபற்றி அறிந்தே இருந்தார்கள். எம் முன்னோரின்  வாழ்வியலில் இந்து மதமே இருக்கவில்லை என்று கீழடி அகழ்வாராய்ய்ச்சி கூறுகிறது. இங்கு  விவாதம் அதுவல்ல. முன்னோர்களை மதிக்கும் அவ்வேளை அவர்கள் கைக்கொண்ட மூடத்தனங்களை தூக்கி எறிந்துவிட்டு நல்லவைகளை மட்டும் ஏற்றுக்கொள்வது பற்றியே இந்த விவாதம். நான் பல முறை சொன்னது போல முன்னோர்களும்  எம்மைப் போல் சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம்  எமக்கும் இல்லை. நாம் கூறியதை ஆரயாமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எமது பிள்ளைகளுக்கும் இல்லை. உலகத்தின. பாதை எப்போதும் forward தான். Backward இல்லை.

நீங்களே வாத்தியார் உங்களுக்கு இந்த விடயங்கள் தெரியாததல்ல. இருந்தாலும் subject மாறி வகுப்பு எடுக்கும் போது சில விடயங்கள் மறப்பது மனித இயல்பு. 🙏

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மல்லிகை வாசம் said:

அதை இத் திரியை வாசிப்பவர்கள் முடிவு செய்வார்கள். 😊

நான் பொதுவாக இவ்வாறான விவாதங்களைத் தவிர்ப்பவன்.  இந்து மத நம்பிக்கைகளை அனாவசியமாகக் கேவலப்படுத்த முனையும் பல திரிகளை கண்டும் கருத்து எதுவும் எழுதாமல் கடந்து சென்றிருக்கிறேன். இங்குள்ள பலரும் இதைை அறிவர். ஆனால் எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க முடியும்? 

ஆகவே இத்திரியில் எழுத வேண்டியதாயிற்று. தலைப்பை விட்டு விலகிச் செல்லும் வாதங்கள் முன் வைக்கப்பட்டதால். அதற்கும் பதில் தர வேண்டி இருந்தது. 

அதெல்லாம் சரி, துல்பெனின்ன்கருத்துக்கும் என் கருத்துக்கும் தனித்தனியே quote பண்ணித்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனால் எனது quote ற்கு கீழே நான் சொல்லாத விடயங்களுக்கு, துல்பென் சொல்லும் விடயங்களுக்கு பதில் சொல்லுவதோடு, சும்மா இருக்கும் எனக்கு இந்து சமயத்தை அகெளரவ படுத்தியதாக கதை வேறு கட்டுகிறீர்கள்.

மறுபடியும் திரியை வாசியுங்கள், நான் இங்கே குழந்தைநலன்-வன்முறை மற்றும் குழுநிலை மனோநிலை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். அப்புறம் அக்குபஞ்சருக்கும் அலகு குத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினேன். பகிரப்பட்ட படத்தைப் பார்த்து அதில் உள்ள குழந்தையின் மனோநிலை எப்படி இருக்கும் என்று என் மனதில் பட்டதை எழுதினேன்.

இதில் எங்கே இந்து மத விரோதத்தை கண்டீர்கள்? இருந்தால் ஆதாரம் தாருங்கள். இல்லை என்றால், இந்து மதவிரோத, அகெளரவம் பற்றி என்னை quote செய்து எழுதியது அதிகபிரசிங்கித்தனம் என்றுதான் கொள்ளப்படவேண்டும்.

நீங்கள் இங்கே அதிகம் எழுதுபவரா இல்லையா என்பதெல்லாம் என் கவனத்துக்குரியது அல்ல. என் கருத்தை பற்றி கருத்துச் சொல்வதாயின் என் கருத்து பற்றி மட்டும் எழுதுங்கள். நான் நாத்திகனா, மாடு தின்னியா? முற்போக்குப் படம் காட்டுகிறேனா? நேரடி வர்ணனை செய்கிறேனா? என்பது உங்களுக்கும், திரிக்கும் தேவையில்லாத வெற்று அலம்பல்.

அதை விட மோசமான செயல் ஒரு ஆதாரமும் இல்லாமல் என்னை இந்து மத விரோதியாக சித்தரித்தது. 

பரவாயில்லை இப்போதானே அதிகம் எழுத தொடங்கியுள்ளீர்கள். போக போக கண்ணியமாக, பொறுப்பாக, உண்மைக்கு புறம்பாக அல்லாமல் கருத்தாடுவது எப்படி என்ற பக்குவம் தானாய் வரும். 

Edited by goshan_che

2 hours ago, goshan_che said:

அதெல்லாம் சரி, துல்பெனின்ன்கருத்துக்கும் என் கருத்துக்கும் தனித்தனியே quote பண்ணித்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனால் எனது quote ற்கு கீழே நான் சொல்லாத விடயங்களுக்கு, துல்பென் சொல்லும் விடயங்களுக்கு பதில் சொல்லுவதோடு, சும்மா இருக்கும் எனக்கு இந்து சமயத்தை அகெளரவ படுத்தியதாக கதை வேறு கட்டுகிறீர்கள்

மீண்டும் வாசித்துப் பாருங்கள். யாரை quote பண்ணினேனோ அவரது கருத்துக்குத் தான் அந்த quoted பகுதிக்குக் கீழே எனது பதிலை எழுதியுள்ளேன். ஒன்றுக்கு மேற்பட்ட quoted sections ஒரே பதிலில் merged reply ஆக வருவது தானே. 

2 hours ago, goshan_che said:

நீங்கள் இங்கே அதிகம் எழுதுபவரா இல்லையா என்பதெல்லாம் என் கவனத்துக்குரியது அல்ல. என் கருத்தை பற்றி கருத்துச் சொல்வதாயின் என் கருத்து பற்றி மட்டும் எழுதுங்கள். நான் நாத்திகனா, மாடு தின்னியா? முற்போக்குப் படம் காட்டுகிறேனா? நேரடி வர்ணனை செய்கிறேனா? என்பது உங்களுக்கும், திரிக்கும் தேவையில்லாத வெற்று அலம்பல்.

நீங்கள் தான்  முதலில் விலங்கு வதையுடன்/கொலையுடன் அலகு குத்துதலை ஒப்பிட்டு எழுதினீர்கள். அதற்கான பதிலில் நானும் நீங்கள் vegetarianஆ என்று கேட்டேன்.

இங்கு பகிரப்பட்ட படத்துக்கு வீர வசனம் பேசுவதை விட உரிய இடத்தில் விசாரித்து ஆலோசனை வழங்குவதே சரி என்று கூறினேன். அதைப் புரிந்து கொள்ளாமல் என்னைக் இரக்கமில்லாதவனாகச் சித்தரித்தீர்கள். ஒரு போலி முற்போக்குவாதி / போலி சமூகப் போராளி போல உங்கள் எழுத்துக்கள் இருந்தன. அதனால தான் நேரடி வர்ணனை செய்வதாக எழுதினேன். இவற்றில் தவறேதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துப் பார்த்த படியால்தான் எழுதுகிறேன். நான் சொல்லாத விடயங்களுக்கு எனக்கு பதில் எழுதுவதில் எந்த இயல்புமில்லை. அதைவிடக் காமெடி கருத்தாளர் மச்சம் சாப்பிடுபவரா இல்லையா என்ற தனிமனிதக் கேள்விகளும். என்னை நாத்திகனாக அறிவித்துகொண்ட அவசரக்குடுக்கைத்தனமும்.

குறைந்த பட்சம் விட்ட தவறுகளையாவது ஏற்கும் மனப்பக்குவம் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. தொடர்ந்தும் “என்ன கையப்பிடிச்சி இழுத்தியா?” ரேஞ்சில் சுட்டிக் காட்டப் பட்ட உங்கள் தவறுகள் எதைப் பற்றியும் ஒன்றும் எழுதாமல் எதை எதையோ அடிச்சி விடுகிறீர்கள்.

ஆனால் இந்து மதப்பார்பரசர் தோரணையில் வகுப்பு எடுக்க மட்டும் தயார்.

#நினைப்புத்தான் பிழைப்பை கெடுப்பது 🤦‍♂️

2 hours ago, goshan_che said:

பரவாயில்லை இப்போதானே அதிகம் எழுத தொடங்கியுள்ளீர்கள். போக போக கண்ணியமாக, பொறுப்பாக, உண்மைக்கு புறம்பாக அல்லாமல் கருத்தாடுவது எப்படி என்ற பக்குவம் தானாய் வரும்

கண்ணியமான, பொறுப்பான கருத்தாடல் பற்றி நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அரசியல், மத விடயங்களை வாசிப்பவன் நான். இருந்தும் இங்குள்ள கருத்தாடல்களால் என்ன பயன் என்று ஒதூங்கியே இருந்துள்ளேன். மற்றய திரிகளில் நேரம் கிடைக்கும் போது எழுதியுள்ளேன். யாழ் களம் எனக்குப் புதிதல்ல. 😊

இந்த அறிவுரையை உங்களுக்கே சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் தான்  முதலில் விலங்கு வதையுடன்/கொலையுடன் அலகு குத்துதலை ஒப்பிட்டு எழுதினீர்கள். அதற்கான பதிலில் நானும் நீங்கள் vegetarianஆ என்று கேட்டேன்.

இங்கு பகிரப்பட்ட படத்துக்கு வீர வசனம் பேசுவதை விட உரிய இடத்தில் விசாரித்து ஆலோசனை வழங்குவதே சரி என்று கூறினேன். அதைப் புரிந்து கொள்ளாமல் என்னைக் இரக்கமில்லாதவனாகச் சித்தரித்தீர்கள். ஒரு போலி முற்போக்குவாதி / போலி சமூகப் போராளி போல உங்கள் எழுத்துக்கள் இருந்தன. அதனால தான் நேரடி வர்ணனை செய்வதாக எழுதினேன். இவற்றில் தவறேதும் இல்லை. 

ஒமோம் நீங்கள் தனிமனிதக் கேள்விகளும் தாக்குதலும் செய்யலாம் தவறேதும் இல்லை. ஆனால் இன்னொருவர், தன் மதத்தை பற்றி தானே சுய விமர்சனம் செய்தால் - குய்யோ முறையோ என்று குத்தி முறிவீர்கள். 

நீங்கள் யாரய்யா என் மதம் பற்றி நான் சொல்லுவதை எனக்கே வகுப்பெடுக்க? நவீன ஆதி சங்கரரா?

போலி முற்போக்குவாதிகளளை விட பச்சை திடுடர்களும், காமாந்தகர்களும், குழந்தைகளை பாலியல் துஸ்பிரயோகிகம் செய்பவர்களும் போலி மதவாதிகளாக, இந்து சமயத்யின் காப்பர்களாக தம்மை காட்டி, உடுக்கடிப்பதை நாமும் பார்க்கத்தான் செய்கிறோம்.

4 minutes ago, goshan_che said:

அதைவிடக் காமெடி கருத்தாளர் மச்சம் சாப்பிடுபவரா இல்லையா என்ற தனிமனிதக் கேள்விகளும். என்னை நாத்திகனாக அறிவித்துகொண்ட அவசரக்குடுக்கைத்தனமும்.

இவை நீங்கள் கொடுத்த விளக்கத்தை வைத்து எழுந்த கேள்விகள் / எடுகோல்கள். இதில் ஒரு தவறுமில்லை. 

நீங்கள் தேவையில்லாமல் விலங்குகளை இதற்குள் இழுத்ததன் விளைவு இது. இனிமேலாவது விவாதத்துடன் தொடர்பான விளக்கத்தை தர முயலுங்கள்.

3 minutes ago, goshan_che said:

நீங்கள் யாரய்யா என் மதம் பற்றி நான் சொல்லுவதை எனக்கே வகுப்பெடுக்க? நவீன ஆதி சங்கரரா?

இந்தக் கேள்வியைத் தான் நானும் உங்களிடமும், என் நம்பிக்கையை அல்லது இந்து மதத்தை இழிவு படுத்துபவர்களிடமும் கேட்கிறேன். பதில் இன்னும் இல்லை. எங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்??? 

6 minutes ago, goshan_che said:

போலி முற்போக்குவாதிகளளை விட பச்சை திடுடர்களும், காமாந்தகர்களும், குழந்தைகளை பாலியல் துஸ்பிரயோகிகம் செய்பவர்களும் போலி மதவாதிகளாக, இந்து சமயத்யின் காப்பர்களாக தம்மை காட்டி, உடுக்கடிப்பதை நாமும் பார்க்கத்தான் செய்கிறோம்.

போலி முற்போக்கு வாதிகளுக்கும், மேலே நீங்கள் குறிப்பிட்டோருக்கும் நன்கு ஒத்துப் போகுமே! 

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர், உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை -அதனால் ஒரு முட்டாள்தனமான எடுகோளாக, “நான் ஆத்திகன், நான் சொல்லுவது இவர் சொல்லுவற்கு எதிராக இருக்கிறது, எனவே இவர் நாத்திகன்” எனும் அரிவரி பிள்ளைகளின் “black or white”  logic ஐ கைக்கொண்டு என்னை நாத்திகன் என்றதும் மட்டுமல்லாமல், அது சரி எனவும் தொடர்ந்து வாதாடுகிறீர்கள் 🤦‍♂️.

மாட்டுக்கு “கூட” தீமை நேர்ந்தால் தட்டி கேட்க ஆளுண்டு, குழந்தைகளுக்கு இல்லையே - என்ற ஆதங்கத்திக்கும், நான் மச்சம் சாப்பிடுவதற்க்கும் இப்படி ஒரு முட்டாள்தனமான லாஜிக் இருக்கும் போல.

 

9 minutes ago, goshan_che said:

ஒமோம் நீங்கள் தனிமனிதக் கேள்விகளும் தாக்குதலும் செய்யலாம் தவறேதும் இல்லை. ஆனால் இன்னொருவர், தன் மதத்தை பற்றி தானே சுய விமர்சனம் செய்தால் - குய்யோ முறையோ என்று குத்தி முறிவீர்கள். 

நான் தனிமனித தாக்குதல் நடத்தவில்லை. உங்கள் கற்பனைக்கு வந்ததை எழுதி எனது நேரத்தை விரயமாக்க வேண்டாம். 

நன்றி

வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:

 

இந்தக் கேள்வியைத் தான் நானும் உங்களிடமும், என் நம்பிக்கையை அல்லது இந்து மதத்தை இழிவு படுத்துபவர்களிடமும் கேட்கிறேன். பதில் இன்னும் இல்லை. எங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்??? 

உங்கள் விளக்கமின்மைக்கு இந்த ஒரு கேள்வி - ஒரு சோறு பதம்.

இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? இதை உங்கள் மதத்தை இழிவு படுத்துபவரிடம் கேளுங்கள். 

நான் மத நம்பிக்கை பற்றியோ, அலகு குத்துவது மூடநம்பிக்கையா இல்லையா என்று எதுவுமே எழுதவில்லை. என் கருத்து பூராவும் குழந்தைகள் நலன், குழந்தைகள் உடல் மீது பெற்றாருக்கு இருக்கும் உரிமை பற்றியதாகவே இருந்ததது.

உங்கள் நம்பிக்கையை நான் எங்கேயும் கேள்வி கேட்காதபோது, எல்லா கருத்தாளரையும் ஒரே சட்டியில் போட்டு வறுப்பது ஏன்?

விளக்க குறைவா? 

குழு மனோநிலை கண்ண மறைக்கிறதா?

இந்து மத ஆபந்தாண்டவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பா?

அல்லது மேற்சொன்ன எல்லாமுமேயா?

 

 

6 minutes ago, goshan_che said:

மாட்டுக்கு “கூட” தீமை நேர்ந்தால் தட்டி கேட்க ஆளுண்டு, குழந்தைகளுக்கு இல்லையே - என்ற ஆதங்கத்திக்கும், நான் மச்சம் சாப்பிடுவதற்க்கும் இப்படி ஒரு முட்டாள்தனமான லாஜிக் இருக்கும் போல.

இது உங்கள் ஆதங்கம் அல்ல. நீலிக்கண்ணீர்.

உண்மையான ஆதங்கம் இருந்தால் இங்கு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. அதனால் ஒரு பயனுமில்லை. உங்களைச் சூழ உள்ள இடத்தில் உள்ள அநீதிகளை தட்டிக்கேளுங்கள்.

உங்கள் வீரசாகசங்களை / மனுநீதி சோழன் நடிப்பை காட்டும் இடமல்ல யாழ் களம். சொல்லை விட செயல் தான்  முக்கியம்.

நன்றி

மேலும் உங்களுடன் கருத்தாடி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மல்லிகை வாசம் said:

இது உங்கள் ஆதங்கம் அல்ல. நீலிக்கண்ணீர்.

உண்மையான ஆதங்கம் இருந்தால் இங்கு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. அதனால் ஒரு பயனுமில்லை. உங்களைச் சூழ உள்ள இடத்தில் உள்ள அநீதிகளை தட்டிக்கேளுங்கள்.

உங்கள் வீரசாகசங்களை / மனுநீதி சோழன் நடிப்பை காட்டும் இடமல்ல யாழ் களம். சொல்லை விட செயல் தான்  முக்கியம்.

நன்றி

மேலும் உங்களுடன் கருத்தாடி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 

தனிமனித தாக்குதல் செய்யாது கருத்தாடுவது என்பது இதுதான் போலும்.😂

நீங்கள் எழுதுவதும் விடுவதும் உங்கள் முடிவு.

ஆனால் தேவையில்லாமல் எனக்கு, நாத்திகன், இந்து மதவிரோதி இப்படி பொய்பட்டங்கள் கட்ட முனைந்தால் அதுக்கு தக்க பதில் எப்போதும் தரப்படும்.

23 hours ago, சாமானியன் said:

இந்த மூடப் பழக்க வழக்கங்கள் எவை என்று தயவு செய்து பட்டியலிட்டு தர முடியுமா ( நீங்கள் முன்னரே பட்டியலிட்டிருந்தாலும் நான் தவற விட்டுவிட்டேன் போலிருக்கிறது )

 

அவைகள் முழுவதையும. எழுதினால் யாழ் இணைய சேர்வரில் இடப்பற்றாக்குறை ஏற்படும். அந்தளவுக்கு  மூடத்தனம் இந்து மதத்தால் தன்னைப்பின்பற்றும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவைகளின் ஆரம்பப்புள்ளியான சிறிய துளியை மட்டும் இணைக்கிறேன். 

சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்.
கீதை. அத்தியாயம் 4, சுலோகம் 13

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

"யாதயாமம் கதரசம் பூதி பர்யுஷிதம் ச யத்; உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமச்ப்ரியம்"; 

யாமம் கழிந்த, சுவையற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு சூத்திரர்களுக்கு பிரியமானது. " அத்தியாயம் 17, சுலோகம் 9

"க்ருஷிகொரஷயவாநிஜயம் வைச்ய கர்ம ஸ்வபாவஜம்; பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்;" 

உழவும், கால்நடை காத்தலும், வாணிபமும் வைசியர்கள் செய்யவேண்டியது. இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டாகிய கர்மம்." 
கீதை. அத்தியாயம் 18, சுலோகம் 44

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.