Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்

எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள் என்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் இடம் பெற்ற நிகழ்வில் பேசும்போது தொல் திருமாளவன் இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து தாம் போராட்டம் நடத்தியதையும் அவர்கள் கண்டித்ததாகவும், இந்திய அரசை எதிர்த்து தம்மால் தீர்வை பெற முடியாதென்றும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுமென்றால் அவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும்படி புலிகள் குறிப்பிட்டார்கள் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள்..

நீங்கள் ஓட்டு வாங்க நாங்கள் பலியாக வேண்டுமா’ எனக் கேட்டு திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார்.

நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம்.

உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“ என தெரிவித்தார்.

 

https://www.tamilwin.com/srilanka/01/224223?ref=home-latest

  • Replies 76
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஆஹக!

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாக இருப்பினும், வரலாறும், அனுபவவும் காங்கிரஸ் ஈழதது தமிழரிடர்க்கு ஆதரவில்லை  என்பது மட்டுமல்ல, எதிரானதும் எனப்து மட்டுமல்லாமல்,  காங்கிரஸ்  வரலாற்று அடிப்படையில் எழுந்த இனப் பிரச்சனைகளை தீர்ப்பதில் கையகலாதவர்கள் என்பதை வரலாறு காட்டி விட்டது.

நான் பிஜேபி மற்றும் கிந்தியா இற்கு வக்காலத்து வாங்கவில்லை.

ஆனால், எவர் எதை சொன்னாலும், பிஜேபி, இலங்கைத்தீவை பொறுத்தவரையிலான ஈழத்தமிழரின் பிரச்சனையை வரலாற்று அடிப்படையில் நன்றாக புரிந்துள்ளது.  அந்த சரியான புரிதலை, வெளிப்படையாக, ஆணித்தரமாக, ஈழத்தமிழர் பிரச்சனையின் எதிர் சாராரான சிங்களத்துக்கு அதிகாரத் தொனியில் வெளிப்படையாக அறிவுறுத்தவும் தயங்கவில்லை.

ஈழத்தமிழரின் வரலாற்றையே இல்லாதாக்கியது காங்கிரஸ், சிவ் சங்கர் மேனனின் நேரடியான statement, தமிழர் இலங்கையில் வந்தேறு குடிகள்.

வரலாற்ற்றில் உண்டாக்கிய, உருவாக்கிய  தவறுகளால் பாதிக்கப்பட்டோரை, வரலாற்றின் அடிப்படியில் பின்னோக்கிப் பார்க்காமல், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு பிஜேபி யே ஜம்மு-காஷ்மீர் இல் தீர்த்தும் வைத்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை , அன்மையில் காவேரி தொலைக் காட்சியில்   திருமாள‌வ‌னால் , நெரியாள‌ர் மத‌ன் கேட்ட‌ கேள்விக்கு இந்த‌  திருமாள‌வ‌னால்  ச‌ரிய ப‌தில் அளிக்க‌ முடியாம‌ கோவ‌த்தின் உச்சிக்கே போன‌வ‌ர் / 

2013ம் ஆண்டு கூடா ந‌ட்பு கேடாய் முடியும் என்று கொலைஞ‌ர் க‌ருணாநிதி காங்கிர‌ஸ்சை விட்டு வெளிய வ‌ந்த‌  போது இந்த‌ திருமாள‌வ‌ன் என்ன‌ சொன்னார் 😁😉 /  

2009ம் ஆண்டு ஈழ‌த்தில் போர் யார் செய்தார்கள் என்று எம் வ‌ன்னி த‌லைமைக்கு  ந‌ல்லாவே தெரியும் /
அண்ண‌ன் சீமானை 2009ம் ஆண்டு க‌ருணாநிதி கைது செய்து சிறையில் அடைக்கும் போது உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் வ‌ன்னி த‌லைமைக்கு அறிவிக்க‌ ப‌ட்ட‌து /

( இன்றில் இருந்து திருமாள‌வ‌ன் ஒரு  பொய்ய‌ன் ம‌ற்றும் நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாறும் கேவ‌ல‌மான‌ ம‌னித‌ர் 😠
 

 

 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ன்னியில் இப்ப‌ எம்ம‌வ‌ர்க‌ள் இல்லை தானே , அத‌ன் துனிவு தான் திருமாவை இப்ப‌டி பேச‌ வைக்குது , திருமாவின் கேவ‌ல‌மான‌ அர‌சிய‌லுக்காக‌ இத போல‌ ப‌ல‌ க‌தை சொன்னாலும் புலம் பெய‌ர் நாட்டில் உண்மை என்று ந‌ம்ம‌ எம்ம‌வ‌ர்க‌ள் சில‌ர் இருக்கின‌ம் / 

க‌ருணாநிதி வைக்கோவோட‌ ப‌ய‌ணிச்சு   அவ‌ர்க‌ளின்   ந‌ரி புத்தியும் ந‌ரி குன‌மும் திருமாள‌வ‌னிலும் தொத்திட்டு /

இன்னும் நிறைய‌ பொய்யை அவுட்டு விடு திருமா ,  த‌லைவ‌ரை உயிருக்கு உயிரா நேசித்த‌ பிள்ளைக‌ள் ல‌ச்ச‌ க‌ண‌க்கில் இருக்கிறோம் அவ‌ர்க‌ளுக்கு தெரியும் எது பொய் எது உண்மை என்று   /

இவ‌ரை விட‌
அண்ண‌ன் சீமான் ம‌ற்றும் அண்ண‌ன் வேல்முருக‌ன் , எவ‌ள‌வோ வெற்ற‌ர் / 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

2009 காலப்பகுதியில்( முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் ) ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போ இந்தியாவின் அரசியல் ,தமிழ் நாட்டு அரசியல் பற்றியெல்லாம் பேசினார். அப்போ மேல் கூறிய கூற்றை பற்றி கூறாதவர் இப்போ கூறுவது பொய் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளால் அதிக‌ம் நேசித்த‌ , த‌மிழ் செல்வ‌ன் அண்ணா , 2006ம் ஆண்டு இந்தியா அர‌சுக்கு புரியும் ப‌டியாய் ஒரு உண்மையை சொன்ன‌வ‌ர் ( முந்தி செய்த‌ பிழையை மீண்டும் இந்தியா செய்ய‌க் கூடாது என்று /

இந்தியா சமாதான‌ கால‌த்தில் இல‌ங்கை அர‌சாங்க‌த்துக்கு குடுத்த‌ டாட‌ர் ம‌ற்றும் , போராளிக‌ளின் ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை க‌ண் அறியும்  க‌ருவிக‌ள்  , அதை தாக்கி அழிக்கும் வெடி பொருட்க‌ள் இல‌ங்கை அர‌சுக்கு இந்தியா குடுத்த‌து , இது எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் , 

2006ம் ஆண்டில் இந்தியா உத‌வின‌த‌ விட‌ 2008 ம‌ற்றும் 2009ம் ஆண்டு உத‌வின‌து அதிக‌ம் /

 க‌ணிமொழி , திருமாள‌வ‌ன் , ராம‌தாஸ்  , இவ‌ர்க‌ளிட‌ம் கேட்ட‌து போரை நிப்பாட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுங்கோ , எங்க‌ள் ம‌க்க‌ள் செத்து ம‌டியின‌ம் என்று , வ‌ன்னியில் இருந்து அழைப்பு வ‌ர‌ 2ஜீ ஊழ‌லுக்கு சொந்க‌க் காரியான‌ க‌னிமொழி ரெலிபோனை எடுக்க‌ வில்லை , 

2009ம் ஆண்டு ராம‌தாஸ்சின் கேலி கூத்தை பின்னாளில் , அண்ண‌ன் மேல் முருக‌ன் ஆதார‌த்தோடு சொன்ன‌வ‌ர் /

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

Image may contain: 2 people, people sitting

கூட்டத்தில்   வெறும் கதிரைகள்தான்... அதிகம் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

2009 காலப்பகுதியில்( முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் ) ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போ இந்தியாவின் அரசியல் ,தமிழ் நாட்டு அரசியல் பற்றியெல்லாம் பேசினார். அப்போ மேல் கூறிய கூற்றை பற்றி கூறாதவர் இப்போ கூறுவது பொய் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.

உண்மை தான் நுனா அண்ணா , இவ‌ருக்கு இர‌ண்டு நாக்கு இருக்கு , இவ‌ர் என்ன‌ ம‌னித‌ பிற‌ப்பு என்று என‌க்கு தெரியாது , இவ‌ர் போட்டி இட்ட‌ தொகுதியிலும் ம‌க்க‌ளுக்கு காசு குடுக்க‌ ப‌ட்ட‌து /

காசு குடுத்து ஓட்டை வாங்கும் பிராடுக‌ளுட‌ன் கூட்ட‌னி வைச்சு கொண்டு எப்ப‌டி தான் இவ‌ரால் வெளியில் த‌ல‌ காட்ட‌ முடியுது  / 

ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது வேறு பேச்சு , திமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா பிற‌க்கு இன்னொரு பேச்சு 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை, தன் சாவுக்குப் பின், தன்னை கொன்ற ராஜபக்சேவுக்கு, பொன்னாடை போர்த்தும் படி பிரபாகரன் நடேசன் மூலம் அறிவித்தார் என்று சொல்லாமல் விட்டாரே😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

நல்லவேளை, தன் சாவுக்குப் பின், தன்னை கொன்ற ராஜபக்சேவுக்கு, பொன்னாடை போர்த்தும் படி பிரபாகரன் நடேசன் மூலம் அறிவித்தார் என்று சொல்லாமல் விட்டாரே😂

பிரோ , திருமான்ட‌ ந‌ல்ல‌ நேர‌ம் இந்த‌ செய்தியை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து சொன்ன‌து , இத‌  த‌மிழ் நாட்டு ஊட‌கத்தில் சொல்லி இருக்க‌னும் , இன் நேர‌ம்  திருமாவள‌னை  க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்பின‌ம் /

உண்மையில்  இவ‌ருக்கு  வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை கொஞ்ச‌மும் இல்லையா பிரோ 🤔😁 /

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

பிரோ , திருமான்ட‌ ந‌ல்ல‌ நேர‌ம் இந்த‌ செய்தியை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து சொன்ன‌து , இத‌  த‌மிழ் நாட்டு ஊட‌கத்தில் சொல்லி இருக்க‌னும் , இன் நேர‌ம்  திருமாவள‌னை  க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்பின‌ம் /

உண்மையில்  இவ‌ருக்கு  வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை கொஞ்ச‌மும் இல்லையா பிரோ 🤔😁 /

2009 தோடு திருமாவளவன் இன்னுமொரு பக்கா அரசியல்வாதி என்பது நிருபணமாயீற்று. 

இவரை சீமான் முதல்வராக தகுதி உள்ளவர்னு சொல்றாரே? இனி சீமானின் திருமா பற்றிய பார்வையில் மாற்றம் வருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, பையன்26 said:

பிரோ , திருமான்ட‌ ந‌ல்ல‌ நேர‌ம் இந்த‌ செய்தியை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து சொன்ன‌து , இத‌  த‌மிழ் நாட்டு ஊட‌கத்தில் சொல்லி இருக்க‌னும் , இன் நேர‌ம்  திருமாவள‌னை  க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்பின‌ம் /

உண்மையில்  இவ‌ருக்கு  வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை கொஞ்ச‌மும் இல்லையா பிரோ 🤔😁 /

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேச்சையும் சனம் கேட்டுக்கொண்டிருக்கிறதே

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

2009 தோடு திருமாவளவன் இன்னுமொரு பக்கா அரசியல்வாதி என்பது நிருபணமாயீற்று. 

இவரை சீமான் முதல்வராக தகுதி உள்ளவர்னு சொல்றாரே? இனி சீமானின் திருமா பற்றிய பார்வையில் மாற்றம் வருமா?

பிரோ , அண்ண‌ன் சீமான் , திருமாவோட‌ நீண்ட‌ கால‌ம் ப‌ய‌ணிச்ச‌வ‌ர் , ஏதோ அவ‌ர் மேல் க‌ட‌ந்த‌ கால‌ பாச‌த்தை ம‌ன‌தில் வைச்சு சொல்லி இருக்க‌லாம் ,

இப்போது அண்ண‌ன் சீமான் , பெரிசா திருமாள‌வ‌ன் ப‌ற்றி வாய் திற‌ப்ப‌து இல்லை , 
பாராள‌ம‌ன்ற‌  தேர்த‌லில் வென்ற‌துக்கு வாழ்த்து சொன்ன‌வ‌ர் போல‌ / 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

 

என்ன‌ தாத்தா , இப்ப‌டி ஒரு வ‌ர‌வேற்பை திருமாள‌வ‌ன் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டார் 😁😂/

அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா இற‌ந்த‌ போது திருமாள‌வ‌ன் ல‌ண்ட‌னுக்கு வ‌ந்து  அஞ்ச‌லி செலுத்தி விட்டு ம‌க்க‌ள் முன் உரை ஆற்றினார் , அப்போது இப்ப‌டி நில‌மை இல்லை , ம‌க்க‌ள் அன்போடு தான் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

2009 தோடு திருமாவளவன் இன்னுமொரு பக்கா அரசியல்வாதி என்பது நிருபணமாயீற்று. 

இவரை சீமான் முதல்வராக தகுதி உள்ளவர்னு சொல்றாரே? இனி சீமானின் திருமா பற்றிய பார்வையில் மாற்றம் வருமா?

13.09.2012 அன்றைய ஆனந்த விகடன் இதழில் இயக்குனர் சீமான் அவர்களின் பேட்டியில்,

விகடன் : ஈழத்தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

சீமான் : முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதிய கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப்பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பையன்26 said:

என்ன‌ தாத்தா , இப்ப‌டி ஒரு வ‌ர‌வேற்பை திருமாள‌வ‌ன் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டார் 😁😂/

அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா இற‌ந்த‌ போது திருமாள‌வ‌ன் ல‌ண்ட‌னுக்கு வ‌ந்து  அஞ்ச‌லி செலுத்தி விட்டு ம‌க்க‌ள் முன் உரை ஆற்றினார் , அப்போது இப்ப‌டி நில‌மை இல்லை , ம‌க்க‌ள் அன்போடு தான் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏

எனக்கு திருமாளவன் மீது நல்லதொரு மரியாதை இருந்தது. ஆனால் 2009க்கு பின் எதுவுமே இல்லை.😡

2008 ம் ஆண்டு நடுப்பகுதிக்கு பின்னர் தமிழக அரசியல்வாதிகள் விரும்பி இருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.  இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழருக்கு எதிரான மனோநிலையே என்றுமே இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் சிங்களவரை விட தமிழர் மீது அதிக வெறுப்பை கொண்டவர்களாக இந்திய ஆளும் வர்க்கமே இருந்தது.  அதை விட இணைத்தலைமை நாடுகளும் எமது போராட்டத்திற்கு பாதகமான முடிவுகளையே தொடரந்து  எடுத்தான.  போராட்ட தோல்விக்கான பல்வேறு காரணங்களை புறந்தள்ளி தமிழக அரசியல்வாதிகள் மீதோ திமுக மீதோ முழுப்பழியையும் போடுவதும் ஒரு மிகைப்படுத்தல் தான். அவர்கள் சுயநல அரசியல்வாதிகள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களில் அரசியலை 1986 ம் ஆண்டிலேயே  புரிந்து கொண்டு தமது விடுதலைப் போரட்ட இராணுவ அரசியல்  திட்டங்களை சிறப்பாக திட்டமிட்ட எமது தரப்பால் பிற்காலத்தில் உலக அரசியலைப் புரிந்து   சரிவர அரசியல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது எமது துரதிஷ்ரம்.

எமது தோல்விக்கு ஒன்றுக்கு  மேற்ப்பட்ட பல அக/ புறக்காரணிகள் இருந்தும்  தவறுகளை சுயவிமர்சனம் செய்ய இப்போதும்  தவறுதோடு  அவற்றை கண்டும் காணாமல் மறைக்கவும் மறக்கவும்  முற்படும் நிலையில்  நாம் இருக்கிறோம். இந்திலையில்  தமிழக அரசியல்வாதிகளின் மீது மட்டும்  அகோர கோபவெறியுடன் சிலர்  பாய்வதும் அவர்கள் தான் அவர்களை முழுப்பழிகாரர்களாக காட்ட முனைவதும்  தமக்கு   தேசியப்பற்று இருப்பதாக  விளம்பரப்படுத்த அவர்கள்   செய்யும்  ஒரு வித நடிப்பாகவே எனக்கு  தெரிகிறது. இவ்வாறு செய்பவர்கள் 2009 ம் ஆண்டின் பின்னர் தமக்குள் கொள்கையளவில் கூட  புரிந்துணர்வுடன்   ஒற்றுமையாக அரசியல் செய்யாதவர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, tulpen said:

2008 ம் ஆண்டு நடுப்பகுதிக்கு பின்னர் தமிழக அரசியல்வாதிகள் விரும்பி இருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.  இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழருக்கு எதிரான மனோநிலையே என்றுமே இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் சிங்களவரை விட தமிழர் மீது அதிக வெறுப்பை கொண்டவர்களாக இந்திய ஆளும் வர்க்கமே இருந்தது.  அதை விட இணைத்தலைமை நாடுகளும் எமது போராட்டத்திற்கு பாதகமான முடிவுகளையே தொடரந்து  எடுத்தான.  போராட்ட தோல்விக்கான பல்வேறு காரணங்களை புறந்தள்ளி தமிழக அரசியல்வாதிகள் மீதோ திமுக மீதோ முழுப்பழியையும் போடுவதும் ஒரு மிகைப்படுத்தல் தான். அவர்கள் சுயநல அரசியல்வாதிகள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களில் அரசியலை 1986 ம் ஆண்டிலேயே  புரிந்து கொண்டு தமது விடுதலைப் போரட்ட இராணுவ அரசியல்  திட்டங்களை சிறப்பாக திட்டமிட்ட எமது தரப்பால் பிற்காலத்தில் உலக அரசியலைப் புரிந்து   சரிவர அரசியல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது எமது துரதிஷ்ரம்.

எமது தோல்விக்கு ஒன்றுக்கு  மேற்ப்பட்ட பல அக/ புறக்காரணிகள் இருந்தும்  தவறுகளை சுயவிமர்சனம் செய்ய இப்போதும்  தவறுதோடு  அவற்றை கண்டும் காணாமல் மறைக்கவும் மறக்கவும்  முற்படும் நிலையில்  நாம் இருக்கிறோம். இந்திலையில்  தமிழக அரசியல்வாதிகளின் மீது மட்டும்  அகோர கோபவெறியுடன் சிலர்  பாய்வதும் அவர்கள் தான் அவர்களை முழுப்பழிகாரர்களாக காட்ட முனைவதும்  தமக்கு   தேசியப்பற்று இருப்பதாக  விளம்பரப்படுத்த அவர்கள்   செய்யும்  ஒரு வித நடிப்பாகவே எனக்கு  தெரிகிறது. இவ்வாறு செய்பவர்கள் 2009 ம் ஆண்டின் பின்னர் தமக்குள் கொள்கையளவில் கூட  புரிந்துணர்வுடன்   ஒற்றுமையாக அரசியல் செய்யாதவர்கள். 

நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் இந்த அத்திவரதர் சயனநிலைதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு சமனாக இருந்தது.

Bildergebnis für à®à®°à¯à®£à®¾à®¨à®¿à®¤à®¿ à®à®£à¯à®£à®¾à®µà®¿à®°à®¤à®®à¯

1 minute ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் இந்த அத்திவரதர் சயனநிலைதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு சமனாக இருந்தது.

Bildergebnis für à®à®°à¯à®£à®¾à®¨à®¿à®¤à®¿ à®à®£à¯à®£à®¾à®µà®¿à®°à®¤à®®à¯

இது கருணாநிதியின் வழமையான அரசியல் ஸரண்ட்.  இதற்கும் எமது போராட்டத்தோல்விக்கும் தொடர்பு இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, tulpen said:

இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழருக்கு எதிரான மனோநிலையே என்றுமே இருந்து வந்துள்ளது.

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் இந்தியாவால் அளிக்கப்பட்டதே அது ஏன்?

7 minutes ago, குமாரசாமி said:

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் இந்தியாவால் அளிக்கப்பட்டதே அது ஏன்?

தமது கூலிப்படையாக தமிழ் இளைஞரை பாவிக்க என்பதை உணர்ந்து கொண்டதாக விடுதலைப்புலிகளே தெரிவித்திருந்தார்கள். அதை உணர்ந்து தான் புலிகள் தமது தளத்தை சென்னையில்  இருந்து தாயகத்திற்கு நகர்த்தினார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு த‌மிழ் உண‌ர்வு உள்ள‌ நேர்மையான‌ த‌மிழ‌ன் 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருக்க‌னும் , இந்திய‌த்தை ஒரு நொடியில் ஆட்ட‌ம் காண‌ வைச்சு இருக்க‌லாம் ,

போரை நிப்பாட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிறீங்க‌ளா , அல்ல‌து இந்தியா என்ற‌ நாட்டுட‌ன் இருந்து  த‌மிழ் நாடு த‌னியாக‌ போர‌த‌ விரும்புகிறீர்க‌ளா என்று கேட்டு இருந்தா , அது ச‌ர்வ‌தேச‌ பிர‌ச்ச‌னையாய் மாறி இருக்கும் ,

முதுகெலும்பு இல்லா திருட்டு ர‌யில் நாதாரியின் குடும்ப‌ம்  செய்த‌ ஊழ‌ல் தான் 2009ம் ஆண்டு அவ‌ர்க‌ள் இவ‌ள‌வு வேச‌ம் போட‌ கார‌ண‌ம் , 

போராடின‌ ம‌க்க‌ள் வ‌ழ‌க்க‌றிய‌ர்க‌ள் என்று ப‌ல‌ரும் க‌ருணாநிதியின் உத்த‌ர‌வில் தாக்க‌ ப‌ட்டார்க‌ள் / அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு சிறையை விட்டு வெளிய‌ வார‌தும் வ‌ந்து ஒரு சில‌ கிழ‌மைக‌ளில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார் /

க‌ருணாநிதி இற‌ந்த‌ போது ,
ப‌ல‌ருக்கு அது பெரிய‌ தாக்க‌த்தை உண்டு ப‌ண்ண‌ வில்லை /
த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் க‌ட்டு ம‌ர‌ம் எப்ப‌ பாடையில் போகும் என்று கார்த்து இருந்தார்க‌ள் , கார‌ண‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ துரோக‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஒரு த‌மிழ் உண‌ர்வு உள்ள‌ நேர்மையான‌ த‌மிழ‌ன் 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருக்க‌னும் , இந்திய‌த்தை ஒரு நொடியில் ஆட்ட‌ம் காண‌ வைச்சு இருக்க‌லாம் ,

போரை நிப்பாட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிறீங்க‌ளா , அல்ல‌து இந்தியா என்ற‌ நாட்டுட‌ன் இருந்து  த‌மிழ் நாடு த‌னியாக‌ போர‌த‌ விரும்புகிறீர்க‌ளா என்று கேட்டு இருந்தா , அது ச‌ர்வ‌தேச‌ பிர‌ச்ச‌னையாய் மாறி இருக்கும் ,

முதுகெலும்பு இல்லா திருட்டு ர‌யில் நாதாரியின் குடும்ப‌ம்  செய்த‌ ஊழ‌ல் தான் 2009ம் ஆண்டு அவ‌ர்க‌ள் இவ‌ள‌வு வேச‌ம் போட‌ கார‌ண‌ம் , 

போராடின‌ ம‌க்க‌ள் வ‌ழ‌க்க‌றிய‌ர்க‌ள் என்று ப‌ல‌ரும் க‌ருணாநிதியின் உத்த‌ர‌வில் தாக்க‌ ப‌ட்டார்க‌ள் / அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு சிறையை விட்டு வெளிய‌ வார‌தும் வ‌ந்து ஒரு சில‌ கிழ‌மைக‌ளில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார் /

க‌ருணாநிதி இற‌ந்த‌ போது ,
ப‌ல‌ருக்கு அது பெரிய‌ தாக்க‌த்தை உண்டு ப‌ண்ண‌ வில்லை /
த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் க‌ட்டு ம‌ர‌ம் எப்ப‌ பாடையில் போகும் என்று கார்த்து இருந்தார்க‌ள் , கார‌ண‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ துரோக‌ம் 

பையன்,

தமிழகத்து அரசியல் பலமென்பது மத்தியை ஆட்டம்காண வைக்கும் ஒரு ஆயுதம் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. எம் ஜி ஆர் காலத்திலேயே, அவரின் கைக்கு மீறி காரியங்கள் நடந்தபோது, அவர் தலைவரை மீண்டும் ஈழத்துக்கே திரும்புங்கள், தமிழகத்தில் இருப்பது உங்களுக்கு ஆபத்து என்று சொன்னாரே ஒழிய, மத்தியைக் கட்டுப்படுத்த முயலவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், புலிகளின் மிகப்பெரும் ஆதரவாளராக இருந்த எம் ஜி ஆருக்கே கைகள் கட்டப்பட்டுத்தான் இருந்தன.

கருனாநிதிபற்றிக் கேட்கத் தேவையில்லை. 2008 / 2009 களில் அவர் மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும்கூட, அவரால் எதுவுமே செய்திருக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. கனிமொழியினதும், ராஜாவினதும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செயற்பாடுகளைக் காரணம் காட்டி, சோனியா கருனாநிதியின் வாலை ஒட்ட நறுக்கி வைத்திருந்தது அவர் பேசாமல் இருந்ததிற்கு ஒரு காரணம். அடுத்தது, இலங்கையில் போரை நிறுத்துங்கள், அல்லது தமிழ்நாடு பிரியும் என்று கருனாநிதி கேட்டிருந்தால், மறுகணமே அவரின் மகளும், வளர்ப்பு மகனும் சிறைப்பிடிக்கப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஆளுனராட்சி அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவை எதற்குமே கருனாநிதி உடன்படப்போவதில்லை. கருனாநிதி இடத்தில் எவர் இருந்தாலும், இதுதான் நடந்திருக்கும்.

அடுத்தது திருமாவளவன் போன்றவர்கள்மேல் நாம் வைத்திருந்த அளவுக்கதிகமான நம்பிக்கையும், அவர்களின் அரசியல் செல்வாக்கும், அதனோடு நாம் அடைந்த ஏமாற்றங்களும். ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளே தமது பதவிகளைத் துறக்காது, அரசுக்கு மாறி மாறி முண்டுகொடுத்துவரும்போது, திருமாவளவன் போன்றோரை எங்களுக்காக குரல் கொடுங்கள், பதவி துறவுங்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? அடுத்தது, இவர் தனது சாதிமக்களுக்காக கேட்டுப் பெற்றுக்கொள்ளும் பதவியை தூக்கியெறிவதென்பதோ, அல்லது மத்திய அரசுக்கெதிராகச் செயற்படுவதென்பதோ தனது மக்களுக்கு எதுவித நண்மையையும் செய்யப்போவதில்லையென்றானபின், அவர் அதை ஏன் செய்யவேண்டும்? எங்களுக்காக தனது அரசியல் எதிர்காலத்தை வீணடிப்பதால் எமக்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை, மத்திய அரசையும் ஆட்டம் காண வைக்கப்போவதில்லை, அவரது மக்களும் நண்மை அடையப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரை தமிழக அரசியல் வாதிகள் அனைவருமே வெத்துவேட்டுக்கள். இப்படிச் சொல்வது அவர்களை அவமானப்படுத்தவல்ல, மாறாக அவரகளது அரசியல் பலத்தின்மூலம் எமக்கு எதையுமே செய்ய அவர்களால் இயலாது என்பதைத்தான்.

திருமா போன்றவர்கள் அவ்வப்போது எம்மிடையே உலாவருவதால் அவர்கள் மேல் எமது ஆத்திரத்தைக் காட்டுகிறோம். ஆனால், கொலைகளைச் செய்யத் திட்டமிட்டு, கனகச்சிதமாய் அரங்கேற்றிய சோனியா, நாராயணன், சிவ் சங்கர் மேனன், அந்தோனி, நம்பியார்கள், பிரணாப் முகர்ஜீ போன்ற மனித உருவில் உள்ள மிருகங்கள் எம்மிடையே ஒருபோதும் உலாவரப்போவதில்லை. இவர்கள்மேல்த்தான் எமது ஆத்திரம் திரும்பவேண்டும்.

இறுதியாக, தனது மக்களுக்கே நாளொன்றிற்கு ஒவ்வொருகதை கூறும் திருமாவும், அவரது தோழர்களும் எமக்கு அதைவிட அதிகமான புனைகதைகளைக் கூறக்கூடியவர்கள்தான் என்பதை நாம் எப்படி மறந்தோம். பேசாமல், அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிட்டு, எங்கள் வேலையைப் பார்ப்பதே மேல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.